| 1 | சேனைகளையுடைய நகரமே, இப்போது தண்டுதண்டாகக் கூடிக்கொள்; நமக்கு விரோதமாக முற்றிக்கை போடப்படும்; இஸ்ரவேலுடைய நியாயாதிபதியைக் கோலினால் கன்னத்திலே அடிப்பார்கள். | உபா 28:49 2இரா 24:2 ஏசா 8:9 ஏசா 10:6 எரே 4:7 எரே 25:9 யோவே 3:9 ஆபகூ 1:6 ஆபகூ 3:16 |
| 2 | எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது. | மத் 2:6 யோவா 7:42 |
| 3 | ஆனாலும் பிரசவிக்கிறவள் பிரசவிக்கிறமட்டும் அவர்களை ஒப்புக்கொடுப்பார்; அப்பொழுது அவருடைய சகோதரரில் மீதியானவர்கள் இஸ்ரவேல் புத்திரரோடுங்கூடத் திரும்புவார்கள். | மீகா 7:13 ஓசி 2:9 ஓசி 2:14 |
| 4 | அவர் நின்றுகொண்டு, கர்த்தருடைய பலத்தோடும் தம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்தின் மகத்துவத்தோடும் மேய்ப்பார்; ஆகையால் அவர்கள் நிலைத்திருப்பார்கள்; அவர் இனி பூமியின் எல்லைகள் பரியந்தமும் மகிமைப்படுவார். | மீகா 7:14 சங் 23:1 சங் 23:2 ஏசா 40:10 ஏசா 40:11 ஏசா 49:9 ஏசா 49:10 எசே 34:22-24 யோவா 10:27-30 |
| 5 | இவரே சமாதான காரணர்; அசீரியன் நம்முடைய தேசத்திலே வரும்போதும், நம்முடைய அரண்மனைகளை மிதிக்கும்போதும், ஏழு மேய்ப்பரையும் மனுஷரில் எட்டு அதிபதிகளையும் அவனுக்கு விரோதமாக நிறுத்துவேன். | சங் 72:7 ஏசா 9:6 ஏசா 9:7 சகரி 9:10 லூக் 2:14 யோவா 14:27 யோவா 16:33 எபே 2:14-17 கொலோ 1:20 கொலோ 1:21 |
| 6 | இவர்கள் அசீரியா தேசத்தையும், நிம்ரோதின் தேசத்தையும், அதினுடைய வாசல்களுக்கு உட்புறமாகப் பட்டயத்திற்கு இரையாக்குவார்கள்; அசீரியன் நம்முடைய தேசத்தில் வரும்போதும், நம்முடைய எல்லைகளை மிதிக்கும்போதும் அவனுக்கு நம்மைத் தப்புவிப்பார். | ஏசா 14:2 ஏசா 33:1 நாகூ 2:11-13 நாகூ 3:1-3 |
| 7 | யாக்கோபிலே மீதியானவர்கள் கர்த்தராலே வருகிற பனியைப்போலவும், மனுஷனுக்குக் காத்திராமலும், மனுபுத்திரருக்குத் தாமதியாமலும், பூண்டுகள்மேல் வருகிற மழைகளைப்போலவும், அநேக ஜனங்களின் நடுவிலே இருப்பார்கள். | மீகா 5:3 மீகா 5:8 எசே 14:22 யோவே 2:32 ஆமோ 5:15 செப் 3:13 ரோம 11:5 ரோம 11:6 |
| 8 | யாக்கோபிலே மீதியானவர்கள், சிங்கம் காட்டுமிருகங்களுக்குள்ளே இருக்கிறதற்குச் சமானமாகவும், கடந்துபோய் மிதித்துத் தப்புவிப்பார் இல்லாமல் பீறிப்போடுகிற பாலசிங்கம் ஆட்டுமந்தைகளுக்குள்ளே இருக்கிறதற்குச் சமானமாகவும் ஜாதிகளுக்குள் அநேக ஜனங்களின் நடுவிலே இருப்பார்கள். | மீகா 4:13 சங் 2:8-12 சங் 110:5 சங் 110:6 ஏசா 41:15 ஏசா 41:16 ஒபதி 1:18 ஒபதி 1:19 சகரி 9:15 சகரி 10:5 சகரி 12:3 மத் 10:14 அப் 18:6 2கொரி 2:15-17 |
| 9 | உன்னுடைய கை உன் விரோதிகளின்மேல் உயரும்; உன் சத்துருக்களெல்லாரும் சங்கரிக்கப்படுவார்கள். | சங் 21:8 சங் 106:26 ஏசா 1:25 ஏசா 11:14 ஏசா 14:2-4 ஏசா 26:11 ஏசா 33:10 ஏசா 37:36 லூக் 19:27 1கொரி 15:25 வெளிப் 19:13-21 வெளிப் 20:8 வெளிப் 20:9 |
| 10 | அந்நாளிலே நான் உன் குதிரைகளை உன் நடுவில் இராதபடிக்குச் சங்கரித்து, உன் இரதங்களை அழித்து, | சங் 20:7 சங் 20:8 சங் 33:16 சங் 33:17 எரே 3:23 ஓசி 1:7 ஓசி 14:3 சகரி 9:10 |
| 11 | உன் தேசத்துப் பட்டணங்களைச் சங்கரித்து, உன் அரண்களையெல்லாம் நிர்மூலமாக்கி, | ஏசா 2:12-17 எசே 38:11 சகரி 4:6 |
| 12 | சூனிய வித்தைகள் உன் கையில் இராதபடிக்கு அகற்றுவேன்; நாள் பார்க்கிறவர்கள் உன்னிடத்தில் இல்லாமற்போவார்கள். | ஏசா 2:6-8 ஏசா 2:18-8 ஏசா 2:20-8 ஏசா 8:19 ஏசா 8:20 ஏசா 27:9 சகரி 13:2-4 வெளிப் 19:20 வெளிப் 22:15 |
| 13 | உன் சுரூபங்களையும் உன் சிலைகளையும் உன் நடுவில் இராதபடிக்கு நிர்மூலமாக்குவேன்; உன் கையின் கிரியையை நீ இனிப் பணிந்துகொள்ளாய். | ஏசா 17:7 ஏசா 17:8 எசே 6:9 எசே 36:25 எசே 37:23 ஓசி 2:16 ஓசி 2:17 ஓசி 14:3 ஓசி 14:8 |
| 14 | நான் உன் விக்கிரகத்தோப்புகளை உன் நடுவில் இராதபடிக்குப் பிடுங்கி, உன் பட்டணங்களை அழித்து, |
| 15 | செவிகொடாத புறஜாதிகளிடத்திலே கோபத்தோடும் உக்கிரத்தோடும் நீதியைச் சரிக்கட்டுவேன் என்றார். | மீகா 5:8 சங் 149:7 2தெச 1:8 |