இணை வசன வேதாகமம்

Click to Subscribe

மீகா 7

                   
புத்தகங்களைக் காட்டு
1ஐயோ! உஷ்ணகாலத்துக் கனிகளைச் சேர்த்து, திராட்சபழங்களை அறுத்தபின்பு வருகிறவனைப்போல் இருக்கிறேன்; புசிக்கிறதற்கு ஒரு திராட்சக்குலையும் என் ஆத்துமா இச்சித்த முதல் அறுப்பின் கனியும் இல்லை.சங் 120:5 ஏசா 6:5 ஏசா 24:16 எரே 4:31 எரே 15:10 எரே 45:3
2தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப்போனான்; மனுஷரில் செம்மையானவன் இல்லை; அவர்களெல்லாரும் இரத்தஞ்சிந்தப் பதிவிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் சகோதரனை வலையிலே பிடிக்க வேட்டையாடுகிறான்.சங் 12:1 சங் 14:1-3 ஏசா 57:1 ரோம 3:10-18
3பொல்லாப்புச் செய்ய அவர்கள் இரண்டு கைகளும் நன்றாய்க் கூடும்; அதிபதி கொடு என்கிறான்; நியாயாதிபதி கைக்கூலி கேட்கிறான்; பெரியவன் தன் துராசையைத் தெரிவிக்கிறான்; இவ்விதமாய்ப் புரட்டுகிறார்கள்.நீதி 4:16 நீதி 4:17 எரே 3:5 எசே 22:6
4அவர்களில் நல்லவன் முட்செடிக்கொத்தவன், செம்மையானவன் நெரிஞ்சிலைப்பார்க்கக் கடுங்கூர்மையானவன்; உன் காவற்காரர் அறிவித்த உன் தண்டனையின் நாள் வருகிறது; இப்பொழுதே அவர்களுக்குக் கலக்கம் உண்டு.2சாமு 23:6 2சாமு 23:7 ஏசா 55:13 எசே 2:6 எபிரெ 6:8
5சிநேகிதனை விசுவாசிக்கவேண்டாம், வழிகாட்டியை நம்பவேண்டாம்; உன் மடியிலே படுத்துக்கொள்ளுகிறவளுக்கு முன்பாக உன் வாயைத் திறவாமல் எச்சரிக்கையாயிரு.யோபு 6:14 யோபு 6:15 சங் 118:8 சங் 118:9 எரே 9:4 மத் 10:16
6மகன் தகப்பனைக் கனவீனப்படுத்துகிறான்; மகள் தன் தாய்க்கு விரோதமாகவும், மருமகள் தன் மாமிக்கு விரோதமாகவும் எழும்புகிறார்கள்; மனுஷனுடைய சத்துருக்கள் அவன் வீட்டார்தானே.ஆதி 9:22-24 ஆதி 49:4 2சாமு 15:10-12 2சாமு 16:11 2சாமு 16:21-23 நீதி 30:11 நீதி 30:17 எசே 22:7 மத் 10:21 மத் 10:35 மத் 10:36 லூக் 12:53 லூக் 21:16 2தீமோ 3:2 2தீமோ 3:3
7நானோவென்றால் கர்த்தரை நோக்கிக்கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன்; என் தேவன் என்னைக் கேட்டருளுவார்.சங் 34:5 சங் 34:6 சங் 55:16 சங் 55:17 சங் 109:4 சங் 142:4 சங் 142:5 ஏசா 8:17 ஏசா 45:22 ஆபகூ 3:17-19 லூக் 6:11 லூக் 6:12
8என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்.யோபு 31:29 சங் 13:4-6 சங் 35:15 சங் 35:16 சங் 35:19 சங் 35:24-26 சங் 38:16 நீதி 24:17 நீதி 24:18 எரே 50:11 புலம் 4:21 புலம் 4:22 எசே 25:6 எசே 35:15 ஒபதி 1:12 யோவா 16:20 வெளிப் 11:10-12
9நான் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்; அவர் எனக்காக வழக்காடி என் நியாயத்தை விசாரிக்குமட்டும் அவருடைய கோபத்தைச் சுமப்பேன்; அவர் என்னை வெளிச்சத்திலே கொண்டுவருவார், அவருடைய நீதியைப் பார்ப்பேன்.லேவி 26:41 1சாமு 3:18 2சாமு 16:11 2சாமு 16:12 2சாமு 24:17 யோபு 34:31 யோபு 34:32 புலம் 1:18 புலம் 3:39-42 லூக் 15:18 லூக் 15:19 எபிரெ 12:6 எபிரெ 12:7
10உன் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று என்னோடே சொல்லுகிற என் சத்துருவானவள் அதைப் பார்க்கும்போது வெட்கம் அவளை மூடும்; என் கண்கள் அவளைக் காணும்; இனி வீதிகளின் சேற்றைப்போல மிதிக்கப்படுவாள்.சங் 137:8 சங் 137:9 ஏசா 47:5-9 எரே 50:33 எரே 50:34 எரே 51:8-10 எரே 51:24-10 நாகூ 2:1-3 வெளிப் 17:1-7
11உன் மதில்களை எடுப்பிக்கும் நாள் வருகிறது; அந்நாளிலே பிரமாணம் வெகுதூரம் பரவிப்போகும்.நெகே 2:17 நெகே 3:1-16 நெகே 4:3 நெகே 4:6 தானி 9:25 ஆமோ 9:11-15
12அந்நாளிலே அசீரியா முதல் எகிப்தின் பட்டணங்கள் வரைக்கும், எகிப்து முதல் நதிவரைக்கும், ஒரு சமுத்திரமுதல் மறு சமுத்திரம்வரைக்கும், ஒரு பர்வதமுதல் மறு பர்வதம்வரைக்குமுள்ள ஜனங்கள் உன்னிடத்திற்கு வருவார்கள்.ஏசா 11:16 ஏசா 19:23-25 ஏசா 27:12 ஏசா 27:13 ஏசா 43:6 ஏசா 49:12 ஏசா 60:4-9 ஏசா 66:19 ஏசா 66:20 எரே 3:18 எரே 23:3 எரே 31:8 எசே 37:21 எசே 29:21 ஓசி 11:11
13ஆனாலும் தன் குடிகளினிமித்தமும் அவர்கள் கிரியைகளுடைய பலன்களினிமித்தமும் தேசம் பாழாயிருக்கும்.லேவி 26:33-39 ஏசா 6:11-13 ஏசா 24:3-8 எரே 25:11 தானி 4:26 தானி 4:27 லூக் 21:20-24
14கர்மேலின் நடுவிலே தனித்து வனவாசமாயிருக்கிற உமது சுதந்தரமான மந்தையாகிய உம்முடைய ஜனத்தை உமது கோலினால் மேய்த்தருளும்; பூர்வநாட்களில் மேய்ந்தது போலவே அவர்கள் பாசானிலும் கீலேயாத்திலும் மேய்வார்களாக.மீகா 5:4 சங் 23:1-4 சங் 28:9 சங் 95:7 சங் 100:3 ஏசா 40:11 ஏசா 49:10 மத் 2:6 யோவா 10:27-30
15நீ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்.சங் 68:22 சங் 78:12-72 ஏசா 11:16 ஏசா 51:9 ஏசா 63:11-15 எரே 23:7 எரே 23:8
16புறஜாதிகள் கண்டு தங்களுடைய எல்லாப் பராக்கிரமத்தையுங்குறித்து வெட்கப்படுவார்கள்; கையை வாயின்மேல் வைத்துக்கொள்வார்கள்; அவர்கள் காதுகள் செவிடாய்ப் போகும்.மீகா 5:8 சங் 126:2 ஏசா 26:11 ஏசா 66:18 எசே 38:23 எசே 39:17-21 சகரி 8:20-23 சகரி 12:9 வெளிப் 11:18
17பாம்பைப்போல மண்ணை நக்குவார்கள்; பூமியின் ஊர்வனவற்றைப்போலத் தங்கள் மறைவிடங்களிலிருந்து நடுநடுங்கிப் புறப்படுவார்கள்; நமது தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திகிலோடே சேர்ந்து, உனக்குப் பயப்படுவார்கள்.ஆதி 3:14 ஆதி 3:15 சங் 72:9 ஏசா 49:23 ஏசா 60:14 ஏசா 65:25 புலம் 3:29 வெளிப் 3:9
18தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபை செய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்.யாத் 15:11 உபா 33:26 1இரா 8:23 சங் 35:10 சங் 71:19 சங் 89:6 சங் 89:8 சங் 113:5 சங் 113:6 ஏசா 40:18 ஏசா 40:25 ஏசா 46:8 ஏசா 46:9
19அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்; நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்.உபா 30:3 உபா 32:36 எஸ்றா 9:8 எஸ்றா 9:9 சங் 90:13 சங் 90:14 ஏசா 63:15-17 எரே 31:20 புலம் 3:32 ஓசி 14:4
20தேவரீர் பூர்வநாட்கள்முதல் எங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட சத்தியத்தை யாக்கோபுக்கும், கிருபையை ஆபிரகாமுக்கும் கட்டளையிடுவீராக.ஆதி 12:2 ஆதி 12:3 ஆதி 17:7 ஆதி 17:8 ஆதி 22:16-18 ஆதி 26:3 ஆதி 26:4 ஆதி 28:13 ஆதி 28:14 சங் 105:8-10 எரே 33:25 எரே 33:26 லூக் 1:54 லூக் 1:55 லூக் 1:72-74 அப் 3:25 அப் 3:26 ரோம 11:26-31 எபிரெ 6:13-18
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.