| 1 | ஆசாரியர்களே, இதைக் கேளுங்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, கவனியுங்கள்; ராஜாவின் வீட்டாரே, செவிகொடுங்கள்; இந்த நியாயவிசாரிப்பு உங்கள்மேல் செல்லும்; நீங்கள் மிஸ்பாவில் கண்ணியும் தாபோரின்மேல் விரிக்கப்பட்ட வலையுமானீர்கள். | ஓசி 4:1 ஓசி 4:6 ஓசி 4:7 ஓசி 6:9 மல்கி 1:6 மல்கி 2:1 |
| 2 | நெறிதவறினவர்கள் மிகுதியும் வதைசெய்கிறார்கள்; அவர்கள் எல்லாரையும் நான் தண்டிப்பேன். | ஓசி 6:9 ஓசி 9:15 எரே 6:28 |
| 3 | எப்பிராயீமை நான் அறிவேன், இஸ்ரவேல் எனக்கு மறைவானதல்ல; எப்பிராயீமே, இப்போது நீ சோரம்போனாயே, இஸ்ரவேல் தீட்டுப்பட்டதே. | ஆமோ 3:2 எபிரெ 4:13 வெளிப் 3:15 |
| 4 | அவர்கள் தங்கள் தேவனிடத்துக்குத் திரும்புவதற்குத் தங்கள் கிரியைகளைச் சீர்திருத்தமாட்டார்கள், வேசித்தன ஆவி அவர்கள் உள்ளத்தில் இருக்கிறது; கர்த்தரை அறியார்கள். | சங் 36:1-4 சங் 78:8 யோவா 3:19 யோவா 3:20 2தெச 2:11 2தெச 2:12 |
| 5 | இஸ்ரவேலின் அகந்தை அவர்கள் முகத்துக்கு முன்பாகச் சாட்சியிடுகிறது; ஆகையால் இஸ்ரவேலும் எப்பிராயீமும் தங்கள் அக்கிரமத்தினால் இடறுண்டு விழுவார்கள்; அவர்களோடே யூதாவும் இடறுண்டு விழுவான். | ஓசி 7:10 நீதி 30:13 ஏசா 3:9 ஏசா 9:9 ஏசா 9:10 ஏசா 28:1-3 |
| 6 | அவர்கள் கர்த்தரைத் தேடும்படி தங்கள் ஆடுகளோடும் தங்கள் மாடுகளோடும் போவார்கள்; அவரைக் காணமாட்டார்கள்; அவர் அவர்களை விட்டு விலகினார். | யாத் 10:9 யாத் 10:24-26 நீதி 15:8 நீதி 21:27 எரே 7:4 மீகா 6:6 மீகா 6:7 |
| 7 | கர்த்தருக்கு விரோதமாக துரோகம்பண்ணினார்கள்; அந்நியபிள்ளைகளைப் பெற்றார்கள்; இப்போதும் ஒரு மாதத்துக்குள்ளாக அவர்கள் தங்கள் பங்குகளோடே பட்சிக்கப்படுவார்கள். | ஓசி 6:7 ஏசா 48:8 ஏசா 59:13 எரே 3:20 எரே 5:11 |
| 8 | கிபியாவிலே எக்காளத்தையும், ராமாவிலே பூரிகையையும் ஊதுங்கள்; பெத்தாவேனிலே கதறுங்கள்; பென்யமீனே உன்னைப் பின்தொடருகிறார்கள். | ஓசி 8:1 எரே 4:5 எரே 6:1 யோவே 2:1 யோவே 2:15 |
| 9 | தண்டிப்பின் நாளிலே எப்பிராயீம் பாழாவான்; நிச்சயமாய் வரப்போகிறதை இஸ்ரவேலின் கோத்திரங்களுக்குள்ளே அறிவிக்கிறேன். | ஓசி 5:12 ஓசி 5:14 ஓசி 8:8 ஓசி 9:11-17 ஓசி 11:5 ஓசி 11:6 ஓசி 13:1-3 ஓசி 13:15-3 ஓசி 13:16-3 யோபு 12:14 ஏசா 28:1-4 ஆமோ 3:14 ஆமோ 3:15 ஆமோ 7:9 ஆமோ 7:17 |
| 10 | யூதாவின் பிரபுக்கள் எல்லைகளை ஒதுக்குகிறவர்களுக்கு ஒப்பானார்கள்; அவர்கள்மேல் என் உக்கிரகோபத்தைத் தண்ணீரைப்போல ஊற்றுவேன். | உபா 19:14 உபா 27:17 2இரா 16:7-9 2நாளா 28:16-22 நீதி 17:14 நீதி 22:28 |
| 11 | எப்பிராயீம் தகாத கற்பனையை மனதாரப் பின்பற்றிப்போனபடியால் அவன் ஒடுங்குண்டு, நியாயவிசாரணையில் நொறுக்கப்பட்டுப்போகிறான். | உபா 28:33 2இரா 15:16-20 2இரா 15:29-20 ஆமோ 5:11 ஆமோ 5:12 |
| 12 | நான் எப்பிராயீமுக்குப் பொட்டரிப்பைப்போலவும், யூதாவின் வீட்டுக்கு உளுப்பைப்போலவும் இருப்பேன். | யோபு 13:28 ஏசா 50:9 ஏசா 51:8 |
| 13 | எப்பிராயீம் தன் வியாதியையும், யூதா தன் காயத்தையும் கண்டபோது, எப்பிராயீம் அசீரியனண்டைக்குப் போய் யாரேப் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பினான்; ஆனாலும் உங்களைக் குணமாக்கவும் உங்களில் இருக்கிற காயத்தை ஆற்றவும் அவனால் கூடாமற்போயிற்று. | எரே 30:12 எரே 30:14 மீகா 1:9 |
| 14 | நான் எப்பிராயீமுக்குச் சிங்கம்போலவும், யூதாவின் வம்சத்தாருக்குப் பாலசிங்கம்போலவும் இருப்பேன்; நான் நானே பீறிவிட்டுப் போய்விடுவேன்; தப்புவிப்பார் இல்லாமல் எடுத்துக்கொண்டு போவேன். | ஓசி 13:7 ஓசி 13:8 யோபு 10:16 சங் 7:2 புலம் 3:10 ஆமோ 3:4-8 |
| 15 | அவர்கள் தங்கள் குற்றங்களை உணர்ந்து, என் முகத்தைத் தேடுமட்டும் நான் என் ஸ்தானத்துக்குத் திரும்பிப் போய்விடுவேன்; தங்கள் ஆபத்தில் என்னைக் கருத்தாய்த் தேடுவார்கள். | ஓசி 5:6 யாத் 25:21 யாத் 25:22 1இரா 8:10-13 சங் 132:14 ஏசா 26:21 எசே 8:6 எசே 10:4 எசே 11:23 மீகா 1:3 |