| 1 | பெத்துவேலின் குமாரனாகிய யோவேலுக்கு உண்டான கர்த்தருடைய வசனம். | எரே 1:2 எசே 1:3 ஓசி 1:1 2பேது 1:21 |
| 2 | முதியோரே, இதைக் கேளுங்கள்; தேசத்தின் சகல குடிகளே, செவிகொடுங்கள்; உங்கள் நாட்களிலாவது உங்கள் பிதாக்களின் நாட்களிலாவது இப்படிப்பட்டது சம்பவித்ததுண்டா? | சங் 49:1 ஏசா 34:1 எரே 5:21 ஓசி 5:1 ஆமோ 3:1 ஆமோ 4:1 ஆமோ 5:1 மீகா 1:2 மீகா 3:1 மீகா 3:9 மத் 13:9 வெளிப் 2:7 |
| 3 | இதின் செய்தியை உங்கள் பிள்ளைகளுக்குத் தெரிவியுங்கள்; இதை உங்கள் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளுக்கும், அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் சந்ததியாருக்கும் தெரிவிக்கக்கடவர்கள். | யாத் 10:1 யாத் 10:2 யாத் 13:14 உபா 6:7 யோசு 4:6 யோசு 4:7 யோசு 4:21 யோசு 4:22 சங் 44:1 சங் 71:18 சங் 78:3-8 சங் 145:4 ஏசா 38:19 |
| 4 | பச்சைப்புழு விட்டதை வெட்டுக்கிளி தின்றது; வெட்டுக்கிளி விட்டதைப் பச்சைக்கிளி தின்றது; பச்சைக்கிளி விட்டதை முசுக்கட்டைப்பூச்சி தின்றது. | யோவே 2:25 ஆமோ 4:9 யாத் 10:4 |
| 5 | வெறியரே, விழித்து அழுங்கள்; திராட்சரசம் குடிக்கிற சகல ஜனங்களே, புது திராட்சரசத்தினிமித்தம் அலறுங்கள்; அது உங்கள் வாயினின்று விலக்கப்பட்டது. | ஏசா 24:7-11 ஆமோ 6:3-7 லூக் 21:34-36 ரோம 13:11-14 |
| 6 | எண்ணிமுடியாத ஒரு பலத்த ஜாதி என் தேசத்தின்மேல் வருகிறது; அதின் பற்கள் சிங்கத்தின் பற்கள்; துஷ்ட சிங்கத்தின் கடைவாய்ப்பற்கள் அதற்கு உண்டு. | யோவே 2:2-11 யோவே 2:25-11 நீதி 30:25-27 |
| 7 | அது என் திராட்சச்செடியை அழித்து, என் அத்திமரத்தை உரித்து, அதின் பட்டையை முற்றிலும் தின்றுபோட்டது; அதின் கிளைகள் வெண்மையாயிற்று. | யோவே 1:12 யாத் 10:15 சங் 105:33 ஏசா 5:6 ஏசா 24:7 எரே 8:13 ஓசி 2:12 ஆபகூ 3:17 |
| 8 | தன் பாலியவயதின் புருஷனுக்காக இரட்டுடுத்தியிருக்கிற பெண்ணைப்போலப் புலம்பு. | யோவே 1:13-15 யோவே 2:12-14 ஏசா 22:12 ஏசா 24:7-12 ஏசா 32:11 எரே 9:17-19 யாக் 4:8 யாக் 4:9 யாக் 5:1 |
| 9 | போஜனபலியும் பானபலியும் கர்த்தருடைய ஆலயத்தை விட்டு அற்றுப்போயின; கர்த்தரின் ஊழியக்காரராகிய ஆசாரியர்கள் துக்கிக்கிறார்கள். | யோவே 1:13 யோவே 1:16 யோவே 2:14 ஓசி 9:4 |
| 10 | வயல்வெளி பாழாயிற்று, பூமி துக்கங்கொண்டாடுகிறது; விளைச்சல் அழிக்கப்பட்டது; புது திராட்சரசம் வற்றிப்போயிற்று; எண்ணெய் மாண்டுபோயிற்று. | யோவே 1:17-20 லேவி 26:20 ஏசா 24:3 ஏசா 24:4 எரே 12:4 எரே 12:11 எரே 14:2-6 ஓசி 4:3 |
| 11 | பயிரிடுங் குடிகளே, வெட்கப்படுங்கள்; கோதுமையும், வாற்கோதுமையும் இல்லாமற்போயிற்று; திராட்சத்தோட்டக்காரரே, அலறுங்கள்; வயல்வெளியின் அறுப்பு அழிந்துபோயிற்று. | எரே 14:3 எரே 14:4 ரோம 5:5 |
| 12 | திராட்சச்செடி வதங்கி, அத்திமரம் சாரமற்றுப்போகிறது; மாதளை, பேரீச்சம், கிச்சிலி முதலிய வெளியின் செடிகள் எல்லாம் வாடிப்போயின; சந்தோஷம் மனுபுத்திரரைவிட்டு ஒழிந்துபோயிற்று. | யோவே 1:10 ஆபகூ 3:17 ஆபகூ 3:18 |
| 13 | ஆசாரியர்களே, இரட்டுடுத்திப் புலம்புங்கள்; பலிபீடத்தின் பணிவிடைக்காரரே, அலறுங்கள்; என் தேவனுடைய தொண்டரே, நீங்கள் உள்ளே பிரவேசித்து இரட்டுடுத்தவர்களாய் இராத்தங்குங்கள். உங்கள் தேவனுடைய ஆலயத்தில் போஜனபலியும் பானபலியும் செலுத்தப்படாமல் நிறுத்தப்பட்டது. | யோவே 1:8 யோவே 1:9 யோவே 2:17 எரே 4:8 எரே 9:10 எசே 7:18 |
| 14 | பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள்; விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்; மூப்பரையும் தேசத்தின் எல்லாக்குடிகளையும், உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கூடிவரச்செய்து கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள். | யோவே 2:15 யோவே 2:16 2நாளா 20:3 2நாளா 20:4 |
| 15 | அந்த நாளினிமித்தம் ஐயோ! கர்த்தருடைய நாள், சமீபமாயிருக்கிறது; அது சங்காரம்போல சர்வவல்லவரிடத்திலிருந்து வருகிறது. | யோவே 2:2 எரே 30:7 ஆமோ 5:16-18 |
| 16 | நம்முடைய கண்களைவிட்டு ஆகாரமும், நம்முடைய தேவனின் ஆலயத்தைவிட்டுச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நீக்கப்படவில்லையோ? | யோவே 1:5-9 யோவே 1:13-9 ஆமோ 4:6 ஆமோ 4:7 |
| 17 | விதையானது மண்கட்டிகளின் கீழ் மக்கிப்போயிற்று; பயிர் தீய்ந்து போகிறதினால் பண்டசாலைகள் பாழாகிக் களஞ்சியங்கள் இடிந்துபோயின. | ஆதி 23:16 |
| 18 | மிருகங்கள் எவ்வளவாய்த் தவிக்கிறது; மாட்டுமந்தைகள் தங்களுக்கு மேய்ச்சல் இல்லாததினால் கலங்குகிறது; ஆட்டுமந்தைகளும் சேதமாய்ப்போயிற்று. | யோவே 1:20 1இரா 18:5 எரே 12:4 எரே 14:5 எரே 14:6 ஓசி 4:3 ரோம 8:22 |
| 19 | கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; அக்கினி வனாந்தரத்தின் மேய்ச்சல்களைப் பட்சித்து, ஜூவாலை வெளியின் விருட்சங்களையெல்லாம் எரித்துப்போடுகிறது. | சங் 50:15 சங் 91:15 மீகா 7:7 ஆபகூ 3:17 ஆபகூ 3:18 லூக் 18:1 லூக் 18:7 பிலிப் 4:6 பிலிப் 4:7 |
| 20 | வெளியின் மிருகங்களும் உம்மை நோக்கிக் கதறுகிறது; நதிகளில் தண்ணீரெல்லாம் வற்றிப்போயிற்று; அக்கினி வனாந்தரத்தின் மேய்ச்சல்களைப் பட்சித்துப்போட்டது. | யோபு 38:41 சங் 104:21 சங் 145:15 சங் 147:9 |