| 1 | கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார். | ஓசி 5:15 ஓசி 14:1 ஏசா 2:3 ஏசா 55:7 எரே 3:22 எரே 50:4 புலம் 3:40 புலம் 3:41 செப் 2:1 |
| 2 | இரண்டுநாளுக்குப்பின்பு அவர் நம்மை உயிர்ப்பிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்புவார்; அப்பொழுது நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருப்போம். | ஓசி 13:14 2இரா 20:5 சங் 30:4 ஏசா 26:19 எசே 37:11-13 1கொரி 15:4 |
| 3 | அப்பொழுது நாம் அறிவடைந்து, கர்த்தரை அறியும்படி தொடர்ந்து போவோம்; அவருடைய புறப்படுதல் அருணோதயம்போல ஆயத்தமாயிருக்கிறது; அவர் மழையைப்போலவும், பூமியின்மேல் பெய்யும் முன்மாரி பின்மாரியைப்போலவும் நம்மிடத்தில் வருவார். | ஓசி 2:20 ஏசா 54:13 எரே 24:7 மீகா 4:2 யோவா 17:3 |
| 4 | எப்பிராயீமே, உனக்கு என்ன செய்வேன்? யூதாவே, உனக்கு என்ன செய்வேன்? உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் தோன்றும் பனியைப்போலவும் ஒழிந்துபோகிறது. | ஓசி 11:8 ஏசா 5:3 ஏசா 5:4 எரே 3:19 எரே 5:7 எரே 5:9 எரே 5:23 எரே 9:7 லூக் 13:7-9 லூக் 19:41 லூக் 19:42 |
| 5 | ஆகையால் தீர்க்கதரிசிகளைக்கொண்டு அவர்களை வெட்டினேன்; என் வாய்மொழிகளைக்கொண்டு அவர்களை அதம்பண்ணினேன்; உன்மேல் வரும் தண்டனைகள் வெளிச்சத்தைப்போல் வெளிப்படும். | 1சாமு 13:13 1சாமு 15:22 1இரா 14:6 1இரா 17:1 1இரா 18:17 2இரா 1:16 2நாளா 21:12 ஏசா 58:1 எரே 1:10 எரே 1:18 எரே 5:14 எரே 13:13 எசே 3:9 எசே 43:3 அப் 7:31 |
| 6 | பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப்பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன். | 1சாமு 15:22 சங் 50:8 நீதி 21:3 பிரச 5:1 ஏசா 1:11 ஏசா 58:6 எரே 7:22 தானி 4:27 ஆமோ 5:21 மீகா 6:6 மத் 5:7 மத் 9:13 மத் 12:7 |
| 7 | அவர்களோ ஆதாமைப்போல் உடன்படிக்கையை மீறி, அங்கே எனக்கு விரோதமாய்த் துரோகம் பண்ணினார்கள். | ஆதி 3:6 ஆதி 3:11 யோபு 31:33 |
| 8 | கீலேயாத் அக்கிரமம் செய்கிறவர்களின் பட்டணம்; அது இரத்தக்காலடிகளால் மிதிக்கப்பட்டிருக்கிறது. | ஓசி 12:11 யோசு 21:38 |
| 9 | பறிகாரரின் கூட்டங்கள் ஒருவனுக்குக் காத்திருக்கிறதுபோல, சீகேமுக்குப் போகிற வழியிலே கொலைசெய்கிற ஆசாரியரின் கூட்டம் காத்திருக்கிறது; தோஷமான காரியங்களையே செய்கிறார்கள். | ஓசி 7:1 எஸ்றா 8:31 யோபு 1:15-17 நீதி 1:11-19 |
| 10 | பயங்கரமான காரியத்தை இஸ்ரவேல் வம்சத்தாரில் கண்டேன்; அங்கே எப்பிராயீமின் வேசித்தனம் உண்டு; இஸ்ரவேல் தீட்டுப்பட்டுப்போயிற்று. | எரே 2:12 எரே 2:13 எரே 5:30 எரே 5:31 எரே 18:13 எரே 23:14 |
| 11 | யூதாவே, உனக்கு ஒரு அறுப்புக்காலம் நியமிக்கப்பட்டிருக்கிறது. | எரே 51:33 யோவே 3:13 மீகா 4:12 வெளிப் 14:15 |