| 1 | சத்தமிட்டுக் கூப்பிடு; அடக்கிக்கொள்ளாதே; எக்காளத்தைப்போல் உன் சத்தத்தை உயர்த்தி, என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி. | ஏசா 56:10 சங் 40:9 சங் 40:10 எரே 1:7-10 எரே 1:17-19 எரே 7:8-11 எரே 15:19 எரே 15:20 எசே 2:3-8 எசே 3:5-9 எசே 3:17-21 எசே 20:4 எசே 22:2 மீகா 3:8-12 மத் 3:7-9 அப் 7:51 அப் 7:52 அப் 20:26 அப் 20:27 தீத் 2:15 வெளிப் 14:9 வெளிப் 14:10 |
| 2 | தங்கள் தேவனுடைய நியாயத்தை விட்டு விலகாமல் நீதியைச் செய்துவருகிற ஜாதியாரைப்போல் அவர்கள் நாடோறும் என்னைத் தேடி, என் வழிகளை அறிய விரும்புகிறார்கள்; நீதிநியாயங்களை என்னிடத்தில் விசாரித்து, தேவனிடத்தில் சேர விரும்புகிறார்கள். | ஏசா 1:11-15 ஏசா 29:13 ஏசா 48:1 ஏசா 48:2 உபா 5:28 உபா 5:29 1சாமு 15:21-25 நீதி 15:8 எசே 33:30-33 மத் 15:7-9 மாற் 4:16 மாற் 4:17 மாற் 6:20 யோவா 5:35 தீத் 1:16 எபிரெ 6:4-6 |
| 3 | நாங்கள் உபவாசம்பண்ணும்போது நீர் நோக்காமலிருக்கிறதென்ன? நாங்கள் எங்கள் ஆத்துமாக்களை ஒடுக்கும்போது நீர் அதை அறியாமலிருக்கிறதென்ன என்கிறார்கள்; இதோ, நீங்கள் உபவாசிக்கும் நாளிலே உங்கள் இச்சையின்படி நடந்து, உங்கள் வேலைகளையெல்லாம் கட்டாயமாய்ச் செய்கிறீர்கள். | எண் 23:4 மீகா 3:9-11 சகரி 7:5-7 மல்கி 3:14 மத் 20:11 மத் 20:12 லூக் 15:29 லூக் 18:9-12 |
| 4 | இதோ, வழக்குக்கும் வாதுக்கும் துஷ்டத்தனத்தையுடைய கையினால் குத்துகிறதற்கும் உபவாசிக்கிறீர்கள்; நீங்கள் உங்கள் கூக்குரலை உயரத்திலே கேட்கப்பண்ணும்படியாய், இந்நாளில் உபவாசிக்கிறதுபோல் உபவாசியாதிருங்கள். | 1இரா 21:9-13 நீதி 21:27 மத் 6:16 மத் 23:14 லூக் 20:47 யோவா 18:28 |
| 5 | மனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும், தலைவணங்கி நாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும், எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமோ? இதையா உபவாசமென்றும் கர்த்தருக்குப் பிரியமான நாளென்றும் சொல்லுவாய்? | 2நாளா 20:3 எஸ்றா 10:6 நெகே 9:1 நெகே 9:2 எஸ்தர் 4:3 எஸ்தர் 4:16 தானி 9:3-19 சகரி 7:5 |
| 6 | அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப் போடுகிறதும், | நெகே 5:10-12 எரே 34:8-11 மீகா 3:2-4 |
| 7 | பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம். | ஏசா 58:10 யோபு 22:7 யோபு 31:18-21 சங் 112:9 நீதி 22:9 நீதி 25:21 நீதி 28:27 பிரச 11:1 பிரச 11:2 எசே 18:7 எசே 18:16 தானி 4:27 மத் 25:35-40 லூக் 11:41 லூக் 19:8 ரோம 12:20 ரோம 12:21 2கொரி 9:6-10 1தீமோ 5:10 பிலேமோ 1:7 யாக் 2:15 யாக் 2:16 1யோவா 3:17 1யோவா 3:18 |
| 8 | அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும். | ஏசா 58:10 ஏசா 58:11 யோபு 11:17 சங் 37:6 சங் 97:11 சங் 112:4 நீதி 4:18 ஓசி 6:3 மல்கி 4:2 |
| 9 | அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார். நுகத்தடியையும், விரல் நீட்டுதலையும், நிபச்சொல்லையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி, | ஏசா 1:15 ஏசா 30:19 ஏசா 65:24 சங் 34:15-17 சங் 37:4 சங் 50:15 சங் 66:18 சங் 66:19 சங் 91:15 சங் 118:5 எரே 29:12 எரே 29:13 மத் 7:7 மத் 7:8 1யோவா 3:21 1யோவா 3:22 |
| 10 | பசியுள்ளவனிடத்தில் உன் ஆத்துமாவைச் சாய்த்து, சிறுமைப்பட்ட ஆத்துமாவைத் திருப்தியாக்கினால், அப்பொழுது இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் அந்தகாரம் மத்தியானத்தைப் போலாகும். | ஏசா 58:7 உபா 15:7-10 சங் 41:1 சங் 112:5-9 நீதி 11:24 நீதி 11:25 நீதி 14:31 நீதி 28:27 லூக் 18:22 |
| 11 | கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய். | ஏசா 49:10 சங் 25:9 சங் 32:8 சங் 48:14 சங் 73:24 யோவா 16:13 1தெச 3:11 |
| 12 | உன்னிடத்திலிருந்து தோன்றினவர்கள் பூர்வமுதல் பாழாய்க்கிடந்த ஸ்தலங்களைக் கட்டுவார்கள்; தலைமுறை தலைமுறையாக இருக்கும் அஸ்திபாரங்கள்மேல் நீ கட்டுவாய்; திறப்பானதை அடைக்கிறவன் என்றும், குடியிருக்கும்படி பாதைகளைத் திருத்துகிறவன் என்றும் நீ பெயர் பெறுவாய். | ஏசா 61:4 நெகே 2:5 நெகே 2:17 நெகே 4:1-6 எரே 31:38 எசே 36:4 எசே 36:8-11 எசே 36:33-11 ஆமோ 9:14 |
| 13 | என் பரிசுத்த நாளாகிய ஓய்வு நாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வு நாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால், | ஏசா 56:2-6 யாத் 20:8-11 யாத் 31:13-17 யாத் 36:2 யாத் 36:3 உபா 5:12-15 நெகே 13:15-22 எரே 17:21-27 |
| 14 | அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்; பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படிபண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று. | யோபு 22:26 யோபு 27:10 யோபு 34:9 சங் 36:8 சங் 37:4 சங் 37:11 ஆபகூ 3:18 பிலிப் 4:4 1பேது 1:8 |