| 1 | இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை. | ஏசா 50:2 ஆதி 18:14 எண் 11:23 எரே 32:17 |
| 2 | உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப்பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது. | ஏசா 50:1 உபா 32:19 யோசு 7:11 நீதி 15:29 எரே 5:25 |
| 3 | ஏனென்றால், உங்கள் கைகள் இரத்தத்தாலும், உங்கள் விரல்கள் அக்கிரமத்தாலும், கறைப்பட்டிருக்கிறது; உங்கள் உதடுகள் பொய்யைப் பேசி, உங்கள் நாவு நியாயக்கேட்டை வசனிக்கிறது. | ஏசா 1:15 ஏசா 1:21 எரே 2:30 எரே 2:34 எரே 22:17 எசே 7:23 எசே 9:9 எசே 22:2 எசே 35:6 ஓசி 4:2 மீகா 3:10-12 மீகா 7:2 மத் 27:4 |
| 4 | நீதியைத் தேடுகிறவனுமில்லை, சத்தியத்தின்படி வழக்காடுகிறவனுமில்லை; மாயையை நம்பி, அபத்தமானதைப் பேசுகிறார்கள்; தீமையைக் கர்ப்பந்தரித்து, அக்கிரமத்தைப் பெறுகிறார்கள். | ஏசா 59:16 எரே 5:1 எரே 5:4 எரே 5:5 எசே 22:29-31 மீகா 7:2-5 |
| 5 | கட்டுவிரியனின் முட்டைகளை அடைகாத்து, சிலந்தியின் நெசவுகளை நெய்கிறார்கள்; அவைகளின் முட்டைகளைச் சாப்பிடுகிறவன் சாவான்; அவைகள் நெருக்கப்பட்டதேயானால் விரியன் புறப்படும். | ஏசா 14:29 நீதி 23:32 |
| 6 | அவைகளின் நெசவுகள் வஸ்திரங்களுக்கேற்றவைகள் அல்ல; தங்கள் கிரியைகளாலே தங்களை மூடிக்கொள்ளமாட்டார்கள்; அவர்கள் கிரியைகள் அக்கிரமக்கிரியைகள்; கொடுமையான செய்கை அவர்கள் கைகளிலிருக்கிறது. | ஏசா 28:18-20 ஏசா 30:12-14 யோபு 8:14 யோபு 8:15 |
| 7 | அவர்கள் கால்கள் பொல்லாப்புச் செய்ய ஓடி, குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தத் தீவிரிக்கிறது; அவர்கள் நினைவுகள் அக்கிரமநினைவுகள்; பாழ்க்கடிப்பும் அழிவும் அவர்கள் வழிகளிலிருக்கிறது. | நீதி 1:16 நீதி 6:17 ரோம 3:15 |
| 8 | சமாதான வழியை அறியார்கள்; அவர்கள் நடைகளில் நியாயமில்லை; தங்கள் பாதைகளைத் தாங்களே கோணலாக்கிக்கொண்டார்கள்; அவைகளில் நடக்கிற ஒருவனும் சமாதானத்தை அறியான். | நீதி 3:17 லூக் 1:79 ரோம 3:17 |
| 9 | ஆதலால், நியாயம் எங்களுக்குத் தூரமாயிருக்கிறது; நீதி எங்களைத் தொடர்ந்து பிடிக்காது; வெளிச்சத்துக்குக் காத்திருந்தோம், இதோ, இருள்; பிரகாசத்துக்குக் காத்திருந்தோம், ஆனாலும் அந்தகாரத்திலே நடக்கிறோம். | புலம் 5:16 புலம் 5:17 ஆபகூ 1:13 |
| 10 | நாங்கள் குருடரைபோல் சுவரைப்பிடித்து, கண்ணில்லாதவர்களைப்போல் தடவுகிறோம்; இரவில் இடறுகிறதுபோலப் பட்டப்பகலிலும் இடறுகிறோம்; செத்தவர்களைப்போல் பாழிடங்களில் இருக்கிறோம். | உபா 28:29 யோபு 5:14 நீதி 4:19 எரே 13:16 புலம் 4:14 ஆமோ 8:9 யோவா 11:9 யோவா 11:10 யோவா 12:35 யோவா 12:40 1யோவா 2:11 |
| 11 | நாங்கள் அனைவரும் கரடிகளைப்போல உறுமி, புறாக்களைப்போலக் கூவிக்கொண்டிருக்கிறோம், நியாயத்துக்குக் காத்திருந்தோம், அதைக் காணோம்; இரட்சிப்புக்குக் காத்திருந்தோம், அது எங்களுக்குத் தூரமாயிற்று. | ஏசா 51:20 சங் 32:3 சங் 32:4 சங் 38:8 ஓசி 7:14 |
| 12 | எங்கள் மீறுதல்கள் உமக்கு முன்பாக மிகுதியாயிருந்து, எங்கள் பாவங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சி சொல்லுகிறது; எங்கள் மீறுதல்கள் எங்களோடே இருக்கிறது; எங்கள் அக்கிரமங்களை அறிந்திருக்கிறோம். | ஏசா 1:4 எஸ்றா 9:6 எரே 3:2 எரே 5:3-9 எரே 5:25-29 எரே 7:8-10 எசே 5:6 எசே 7:23 எசே 8:8-16 எசே 16:51 எசே 16:52 எசே 22:2-12 எசே 22:24-30 எசே 23:2-49 எசே 24:6-14 ஓசி 4:2 மத் 23:32 மத் 23:33 1தெச 2:15 1தெச 2:16 |
| 13 | கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, பொய்பேசி, எங்கள் தேவனைவிட்டுப் பின்வாங்கினோம்; கொடுமையாகவும் கலகமாகவும் பேசினோம்; கள்ளவார்த்தைகளைக் கர்ப்பந்தரித்து, இருதயத்திலிருந்து பிறப்பிக்கப்பண்ணினோம். | ஏசா 32:6 ஏசா 48:8 ஏசா 57:11 சங் 78:36 எரே 3:10 எரே 42:20 எசே 18:25 ஓசி 6:7 ஓசி 7:13 ஓசி 11:12 அப் 5:3 அப் 5:4 |
| 14 | நியாயம் பின்னிட்டு அகன்றது; நீதி தூரமாய் நின்றது; சத்தியம் வீதியிலே இடறி, யதார்த்தம் வந்து சேரமாட்டாமற்போகிறது. | ஏசா 59:4 ஏசா 5:23 ஏசா 10:1 ஏசா 10:2 சங் 82:2-5 பிரச 3:16 எரே 5:27 எரே 5:28 எரே 5:31 ஆமோ 5:7 ஆமோ 5:11 மீகா 3:9-11 மீகா 7:3-5 ஆபகூ 1:4 செப் 3:1-3 |
| 15 | சத்தியம் தள்ளுபடியாயிற்று; பொல்லாப்பை விட்டு விலகுகிறவன் கொள்ளையாகிறான்; இதைக் கர்த்தர் பார்த்து நியாயமில்லையென்று விசனமுள்ளவரானார். | ஏசா 48:1 சங் 5:9 சங் 12:1 சங் 12:2 எரே 5:1 எரே 5:2 எரே 7:28 ஓசி 4:1 ஓசி 4:2 மீகா 7:2 |
| 16 | ஒருவரும் இல்லையென்று கண்டு, விண்ணப்பம்பண்ணுகிறவன் இல்லையென்று ஆச்சரியப்பட்டார்; ஆதலால் அவருடைய புயமே அவருக்கு இரட்சிப்பாகி, அவருடைய நீதியே அவரைத் தாங்குகிறது. | ஏசா 50:2 ஏசா 64:7 ஆதி 18:23-32 சங் 106:23 எரே 5:1 எசே 22:30 மாற் 6:6 |
| 17 | அவர் நீதியை மார்க்கவசமாக அணிந்து, இரட்சிப்பென்னும் சீராவைத் தமது சிரசில் தரித்து, நீதி சரிக்கட்டுதலென்னும் வஸ்திரங்களை உடுப்பாக உடுத்து, வைராக்கியத்தைச் சால்வையாகப் போர்த்துக்கொண்டார். | ஏசா 11:5 ஏசா 51:9 யோபு 29:14 ரோம 13:12-14 2கொரி 6:7 எபே 6:14 எபே 6:17 1தெச 5:8 வெளிப் 19:11 |
| 18 | கிரியைகளுக்குத்தக்க பலனை அளிப்பார்; தம்முடைய சத்துருக்களிடத்தில் உக்கிரத்தைச் சரிக்கட்டி, தம்முடைய பகைஞருக்குத்தக்க பலனையும், தீவுகளுக்குத்தக்க பலனையும் சரிக்கட்டுவார். | ஏசா 63:6 யோபு 34:11 சங் 18:24-26 சங் 62:12 எரே 17:10 எரே 50:29 மத் 16:27 ரோம 2:6 வெளிப் 20:12 வெளிப் 20:13 |
| 19 | அப்பொழுது சூரியன் அஸ்தமிக்குந்திசைதொடங்கி கர்த்தரின் நாமத்துக்கும், சூரியன் உதிக்குந்திசை தொடங்கி அவருடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்; வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார். | ஏசா 11:9-16 ஏசா 24:14-16 ஏசா 49:12 ஏசா 66:18-20 சங் 22:27 சங் 102:15 சங் 102:16 சங் 113:3 தானி 7:27 செப் 3:8 செப் 3:9 மல்கி 1:11 வெளிப் 11:15 |
| 20 | மீட்பர் சீயோனுக்கும், யாக்கோபிலே மீறுதலைவிட்டுத் திரும்புகிறவர்களுக்கும், வருவார் என்று கர்த்தர் சொல்லுகிறார். | ஒபதி 1:17-21 ரோம 11:26 ரோம 11:27 |
| 21 | உன்மேலிருக்கிற என் ஆவியும், நான் உன் வாயில் அருளிய என் வார்த்தைகளும், இதுமுதல் என்றென்றைக்கும் உன் வாயிலிருந்தும், உன் சந்ததியின் வாயிலிருந்தும், உன் சந்ததியினுடைய சந்ததியின் வாயிலிருந்தும் நீங்குவதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்; இது எனக்கு அவர்களோடிருக்கும் என் உடன்படிக்கையென்று கர்த்தர் சொல்லுகிறார். | ஏசா 49:8 ஏசா 55:3 எரே 31:31-34 எரே 32:38-41 எசே 36:25-27 எசே 37:25-27 எசே 39:25-29 எபிரெ 8:6-13 எபிரெ 10:16 |