இணை வசன வேதாகமம்

Click to Subscribe

எரேமியா 1

                   
புத்தகங்களைக் காட்டு
1பென்யமீன் தேசத்திலுள்ள ஆனதோத் ஊரிலிருந்த ஆசாரியர்களில் ஒருவனாகிய இல்க்கியாவின் குமாரன் எரேமியாவினுடைய வசனங்கள்:2நாளா 36:21 ஏசா 1:1 ஏசா 2:1 ஆமோ 1:1 ஆமோ 7:10
2ஆமோனுடைய குமாரனாகிய யோசியா என்கிற யூதாவுடைய ராஜாவின் நாட்களில், அவன் அரசாண்ட பதின்மூன்றாம் வருஷத்தில் இவனுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று.எரே 1:4 எரே 1:11 1இரா 13:20 ஓசி 1:1 யோனா 1:1 மீகா 1:1
3அப்புறம் யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவுடைய ராஜாவின் நாட்களிலும், யோசியாவின் குமாரனாகிய சிதேக்கியா என்கிற யூதாவுடைய ராஜாவின் பதினோராம் வருஷத்து முடிவுமட்டாகவும், எருசலேம் ஊரார் ஐந்தாம் மாதத்தில் சிறைப்பட்டுப்போகும்வரைக்கும் கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று.எரே 25:1-3 எரே 26:1-24 எரே 35:1-36 2இரா 24:1-9 2நாளா 36:5-8
4கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:எரே 1:2 எசே 1:3 எசே 3:16
5நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார்.சங் 71:5 சங் 71:6 ஏசா 49:1 ஏசா 49:5 லூக் 1:76 கலா 1:15 கலா 1:16
6அப்பொழுது நான்: ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன் என்றேன்.எரே 4:10 எரே 14:13 எரே 32:17
7ஆனாலும் கர்த்தர்: நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய், நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக.எரே 1:17 எரே 1:18 யாத் 7:1 யாத் 7:2 எண் 22:20 எண் 22:38 1இரா 22:14 2நாளா 18:13 எசே 2:3-5 எசே 3:17-21 எசே 3:27-21 மத் 28:20 மாற் 16:15 மாற் 16:16 அப் 20:27
8நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லி,எரே 1:17 ஏசா 51:7 ஏசா 51:12 எசே 2:6 எசே 2:7 எசே 3:8 எசே 3:9 மத் 10:26 லூக் 12:4 லூக் 12:5 அப் 4:13 அப் 4:29 எபே 6:20
9கர்த்தர் தமது கரத்தை நீட்டி, என் வாயைத் தொட்டு: இதோ, என் வார்த்தைகளை உன் வாயிலே வைக்கிறேன்.யாத் 4:11 யாத் 4:12 ஏசா 6:6 ஏசா 6:7 ஏசா 49:2 ஏசா 50:4 லூக் 21:15
10பார், பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும் உன்னை நான் இன்றையதினம் ஜாதிகளின்மேலும் ராஜ்யங்களின்மேலும் ஏற்படுத்தினேன் என்று கர்த்தர் என்னுடனே சொன்னார்.எரே 25:15-27 எரே 27:2-7 எரே 46:1-51 1இரா 17:1 வெளிப் 11:3-6
11பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்: எரேமியாவே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்று கேட்டார்; வாதுமை மரத்தின் கிளையைக் காண்கிறேன் என்றேன்.ஆமோ 7:8 ஆமோ 8:2 சகரி 4:2 சகரி 5:2
12அப்பொழுது கர்த்தர்: நீ கண்டது சரியே; என் வார்த்தையைத் தீவிரமாய் நிறைவேற்றுவேன் என்றார்.உபா 5:28 உபா 18:17 லூக் 10:28 லூக் 20:39
13கர்த்தருடைய வார்த்தை இரண்டாந்தரம் எனக்கு உண்டாகி, அவர்: நீ காண்கிறது என்ன என்று கேட்டார்; பொங்குகிற பானையைக் காண்கிறேன், அதின் வாய் வடக்கேயிருந்து நோக்குகிறது என்றேன்.ஆதி 41:32 2கொரி 13:1 2கொரி 13:2
14அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: வடக்கேயிருந்து தீங்கு தேசத்தினுடைய குடிகள் எல்லார்மேலும் வரும்.எரே 4:6 எரே 6:1 எரே 6:22 எரே 10:22 எரே 31:8 எரே 46:20 எரே 50:9 எரே 50:41 ஏசா 41:25 எசே 1:4
15இதோ, நான் வடதிசை ராஜ்யங்களின் வம்சங்களையெல்லாம் கூப்பிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் வந்து அவனவன் தன்தன் சிங்காசனத்தை எருசலேமின் ஒலிமுகவாசல்களுக்கும், அதின் சுற்றுமதில்கள் எல்லாவற்றிற்கும் விரோதமாகவும், யூதா தேசத்து எல்லாப் பட்டணங்களுக்கும் விரோதமாகவும் வைப்பார்கள்.எரே 5:15 எரே 6:22 எரே 10:22 எரே 10:25 எரே 25:9 எரே 25:28 எரே 25:31 எரே 25:32
16அவர்கள் என்னைவிட்டு அந்நிய தேவர்களுக்குத் தூபங்காட்டி, தங்கள் கைகளின் கிரியையைப் பணிந்துகொண்ட அவர்களுடைய சகல தீமைகளினிமித்தமும் நான் என் நியாயத்தீர்ப்புகளை அவர்களுக்கு விரோதமாகக் கூறுவேன்.எரே 4:12 எரே 4:28 எரே 5:9 எரே 5:29 எசே 24:14 யோவே 2:11 மத் 23:35 மத் 23:36
17ஆகையால் நீ உன் அரையைக் கட்டிக்கொண்டு நின்று, நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் அவர்களுக்குச் சொல்; நான் உன்னை அவர்களுக்கு முன்பாகக் கலங்கப்பண்ணாதபடிக்கு, நீ அவர்கள் முகத்துக்கு அஞ்சாதிரு.1இரா 18:46 2இரா 4:29 2இரா 9:1 யோபு 38:3 லூக் 12:35 1பேது 1:13
18இதோ, தேசமனைத்துக்கும், யூதாவின் ராஜாக்களுக்கும், அதின் பிரபுக்களுக்கும், அதின் ஆசாரியர்களுக்கும், தேசத்தின் ஜனங்களுக்கும் எதிராக நான் உன்னை இன்றையதினம் அரணிப்பான பட்டணமும், இருப்புத்தூணும், வெண்கல அலங்கமும் ஆக்கினேன்.எரே 6:27 எரே 15:20 ஏசா 50:7 எசே 3:8 எசே 3:9 மீகா 3:8 மீகா 3:9 யோவா 1:42
19அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.எரே 11:19 எரே 15:10-21 எரே 20:1-6 எரே 26:11-24 எரே 29:25-32 எரே 37:11-21 எரே 38:6-13 சங் 129:2
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.