| 1 | பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்துபாடு; கர்ப்பவேதனைப்படாதவளே, கெம்பீரமாய்ப் பாடி ஆனந்த சத்தமிடு; வாழ்க்கைப்பட்டவளுடைய பிள்ளைகளைப் பார்க்கிலும், அநாத ஸ்திரீயினுடைய பிள்ளைகள் அதிகம் என்று கர்த்தர் சொல்லுகிறார். | ஏசா 62:4 உன்ன 8:8 கலா 4:27 |
| 2 | உன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு; உன் வாசஸ்தலங்களின் திரைகள் விரிவாகட்டும்; தடைசெய்யாதே; உன் கயிறுகளை நீளமாக்கி, உன் முளைகளை உறுதிப்படுத்து. | ஏசா 33:20 ஏசா 49:19 ஏசா 49:20 எரே 10:20 |
| 3 | நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய்; உன் சந்ததியார் ஜாதிகளைச் சுதந்தரித்துக்கொண்டு, பாழாய்க்கிடந்த பட்டணங்களைக் குடியேற்றுவிப்பார்கள். | ஏசா 2:2-4 ஏசா 11:9-12 ஏசா 35:1 ஏசா 35:2 ஏசா 42:1-12 ஏசா 43:5 ஏசா 43:6 ஏசா 49:12 ஏசா 60:3-11 ஆதி 49:10 சங் 72:8-11 ரோம 9:25 ரோம 9:26 ரோம 10:18 ரோம 11:12 கொலோ 1:23 |
| 4 | பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை; நாணாதே, நீ இலச்சையடைவதில்லை; உன் வாலிபத்தின் வெட்கத்தை நீ மறந்து, உன் விதவையிருப்பின் நிந்தையை இனி நினையாதிருப்பாய். | ஏசா 41:10 ஏசா 41:14 ஏசா 45:16 ஏசா 45:17 ஏசா 61:7 1பேது 2:6 |
| 5 | உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம், இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வபூமியின் தேவன் என்னப்படுவார். | சங் 45:10-17 எரே 3:14 எசே 16:8 ஓசி 2:19 ஓசி 2:20 யோவா 3:29 2கொரி 11:2 2கொரி 11:3 எபே 5:25-27 எபே 5:32-27 |
| 6 | கைவிடப்பட்டு மனம்நொந்தவளான ஸ்திரீயைப்போலவும், இளம்பிராயத்தில் விவாகஞ்செய்து தள்ளப்பட்ட மனைவியைப்போலவும் இருக்கிற உன்னைக் கர்த்தர் அழைத்தார் என்று உன் தேவன் சொல்லுகிறார். | ஏசா 49:14 ஏசா 62:4 ஓசி 2:1 ஓசி 2:2 ஓசி 2:14 ஓசி 2:15 மத் 11:28 2கொரி 7:6 2கொரி 7:9 2கொரி 7:10 |
| 7 | இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன். | ஏசா 26:20 ஏசா 60:10 சங் 30:5 2கொரி 4:17 2பேது 3:8 |
| 8 | அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார். | ஏசா 47:6 ஏசா 57:16 ஏசா 57:17 சகரி 1:15 |
| 9 | இது எனக்கு நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம்போலிருக்கும்; நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம் இனி பூமியின்மேல் புரண்டுவருவதில்லை என்று நான் ஆணையிட்டதுபோல, உன்மேல் நான் கோபங்கொள்வதில்லையென்றும், உன்னை நான் கடிந்துகொள்வதில்லையென்றும் ஆணையிட்டேன். | ஏசா 12:1 ஏசா 55:11 ஆதி 8:21 ஆதி 9:11-16 சங் 104:9 எரே 31:35 எரே 31:36 எரே 33:20-26 எசே 39:20 எபிரெ 6:16-18 |
| 10 | மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார். | ஏசா 51:6 ஏசா 51:7 சங் 46:2 மத் 5:18 மத் 16:18 மத் 24:35 ரோம 11:29 2பேது 3:10-13 |
| 11 | சிறுமைப்பட்டவளே, பெருங்காற்றில் அடிபட்டவளே, தேற்றரவற்றவளே, இதோ, நான் உன் கல்லுகளைப் பிரகாசிக்கும்படி வைத்து, நீலரத்தினங்களை உன் அஸ்திபாரமாக்கி, | ஏசா 54:6 ஏசா 49:14 ஏசா 51:17-19 ஏசா 51:23-19 ஏசா 52:1-5 ஏசா 60:15 யாத் 2:23 யாத் 3:2 யாத் 3:7 உபா 31:17 சங் 34:19 சங் 129:1-3 எரே 30:17 யோவா 16:20-22 யோவா 16:33-22 அப் 14:22 வெளிப் 11:3-10 வெளிப் 12:13-17 |
| 12 | உன் பலகணிகளைப் பளிங்கும், உன் வாசல்களை மாணிக்கக் கற்களும், உன் மதில்களையெல்லாம் உச்சிதமான கற்களுமாக்குவேன். |
| 13 | உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும். | ஏசா 2:3 ஏசா 11:9 சங் 25:8-12 சங் 71:17 எரே 31:34 மத் 11:25-29 மத் 16:17 லூக் 10:21 லூக் 10:22 லூக் 24:45 யோவா 6:45 யோவா 14:26 1கொரி 2:10 எபே 4:21 1தெச 4:9 எபிரெ 8:10 1யோவா 2:20 1யோவா 2:27 |
| 14 | நீதியினால் ஸ்திரப்பட்டிருப்பாய்; கொடுமைக்குத் தூரமாவாய்; பயமில்லாதிருப்பாய்; திகிலுக்குத் தூரமாவாய், அது உன்னை அணுகுவதில்லை. | ஏசா 1:26 ஏசா 45:24 ஏசா 52:1 ஏசா 60:21 ஏசா 61:10 ஏசா 61:11 ஏசா 62:1 எரே 31:23 எசே 36:27 எசே 36:28 எசே 37:23-26 யோவே 3:17-21 சகரி 8:3 2பேது 3:13 |
| 15 | இதோ, உனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடினால், அது என்னாலே கூடுகிற கூட்டமல்ல; எவர்கள் உனக்கு விரோதமாய்க் கூடுகிறார்களோ, அவர்கள் உன் பட்சத்தில் வருவார்கள். | எசே 38:8-23 யோவே 3:9-14 வெளிப் 16:14 வெளிப் 19:19-21 வெளிப் 20:8 வெளிப் 20:9 |
| 16 | இதோ, கரிநெருப்பை ஊதி, தன் கிரியைக்கான ஆயுதத்தை உண்டுபண்ணுகிற கொல்லனையும் நான் சிருஷ்டித்தேன்; கெடுத்து நிக்கிரகமாக்குகிறவனையும் நான் சிருஷ்டித்தேன். | ஏசா 10:5 ஏசா 10:6 ஏசா 10:15 ஏசா 37:26 ஏசா 46:11 யாத் 9:16 நீதி 16:4 தானி 4:34 தானி 4:35 யோவா 19:11 |
| 17 | உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோகும்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும், என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்லுகிறார். | ஏசா 54:15 சங் 2:1-6 எசே 38:9 எசே 38:10 மத் 16:18 யோவா 10:28-30 ரோம 8:1 ரோம 8:28-39 |