| 1 | இஸ்ரவேலென்னும் பெயர்பெற்று, யூதாவின் நீருற்றிலிருந்து சுரந்தவர்களும், கர்த்தருடைய நாமத்தின்மேல் ஆணையிட்டு உண்மையும் நீதியும் இல்லாமல் இஸ்ரவேலின் தேவனை அறிக்கையிடுகிறவர்களுமான யாக்கோபின் வம்சத்தாரே, கேளுங்கள். | ஆதி 32:28 ஆதி 35:10 2இரா 17:34 யோவா 1:47 ரோம 2:17 ரோம 2:28 ரோம 2:29 ரோம 9:6 ரோம 9:8 வெளிப் 2:9 வெளிப் 3:9 |
| 2 | அவர்கள் தங்களைப் பரிசுத்த நகரத்தார் என்று சொல்லி, சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள இஸ்ரவேலின் தேவன்மேல் பற்றுதலாயிருக்கிறார்கள். | ஏசா 52:1 ஏசா 64:10 ஏசா 64:11 நெகே 11:1 நெகே 11:18 சங் 48:1 சங் 87:3 தானி 9:24 மத் 4:5 மத் 27:53 வெளிப் 11:2 வெளிப் 21:2 வெளிப் 22:19 |
| 3 | பூர்வகாலத்தில் நடந்தவைகளை ஆதிமுதல் அறிவித்தேன், அவைகள் என் வாயிலிருந்து பிறந்தன, அவைகளை வெளிப்படுத்தினேன்; அவைகளைச் சடிதியாய்ச் செய்தேன், அவைகள் நடந்தன. | ஏசா 41:22 ஏசா 42:9 ஏசா 43:9 ஏசா 44:7 ஏசா 44:8 ஏசா 45:21 ஏசா 46:9 ஏசா 46:10 |
| 4 | நீ கடினமுள்ளவனென்றும், உன் பிடரி நரம்பு இரும்பென்றும், உன் நெற்றி வெண்கலமென்றும் அறிந்திருக்கிறேன். | ஏசா 46:12 சங் 78:8 சகரி 7:11 சகரி 7:12 |
| 5 | ஆகையால்: என் விக்கிரகம் அவைகளைச் செய்ததென்றும், நான் செய்த சுரூபமும், நான் வார்ப்பித்த விக்கிரகமும் அவைகளைக் கட்டளையிட்டதென்றும் நீ சொல்லாதபடிக்கு, நான் அவைகளை முன்னமே உனக்குஅறிவித்து, அவைகள் வராததற்கு முன்னே உனக்கு வெளிப்படுத்தினேன். | ஏசா 48:3 ஏசா 44:7 ஏசா 46:10 லூக் 1:70 அப் 15:18 |
| 6 | அவைகளைக் கேள்விப்பட்டாயே, அவைகளையெல்லாம் பார், இப்பொழுது நீங்களும் அவைகளை அறிவிக்கலாமல்லவோ? இதுமுதல் புதியவைகளானவைகளையும், நீ அறியாத மறைபொருளானவைகளையும் உனக்குத் தெரிவிக்கிறேன். | சங் 107:43 எரே 2:31 மீகா 6:9 |
| 7 | அவைகள் ஆதிமுதற்கொண்டு அல்ல, இப்பொழுதே உண்டாக்கப்பட்டன; இதோ, அவைகளை அறிவேன் என்று நீ சொல்லாதபடிக்கு, இந்நாட்களுக்கு முன்னே நீ அவைகளைக் கேள்விப்படவில்லை. |
| 8 | நீ கேள்விப்படவுமில்லை, அறியவுமில்லை; ஆதிமுதல் உன் செவி திறந்திருக்கவுமில்லை; நீ துரோகம் பண்ணுவாயென்பதையும், தாயின் கர்ப்பந்தொடங்கி நீ மீறுகிறவனென்று பெயர் பெற்றதையும் அறிந்திருக்கிறேன். | ஏசா 6:9 ஏசா 6:10 ஏசா 26:11 ஏசா 29:10 ஏசா 29:11 ஏசா 42:19 ஏசா 42:20 எரே 5:21 மத் 13:13-15 யோவா 12:39 யோவா 12:40 |
| 9 | என் நாமத்தினிமித்தம் என் கோபத்தை நிறுத்திவைத்தேன்; உன்னைச் சங்கரிக்காதபடிக்கு நான் என் புகழ்ச்சியினிமித்தம் உன்மேல் பொறுமையாயிருப்பேன். | ஏசா 48:11 ஏசா 37:35 ஏசா 43:25 யோசு 7:9 1சாமு 12:22 சங் 25:11 சங் 79:9 சங் 106:8 சங் 143:11 எரே 14:7 எசே 20:9 எசே 20:14 எசே 20:22 எசே 20:44 தானி 9:17-19 |
| 10 | இதோ, உன்னைப் புடமிட்டேன்; ஆனாலும் வெள்ளியைப்போலல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன். | ஏசா 1:25 ஏசா 1:26 யோபு 23:10 சங் 66:10 நீதி 17:3 எரே 9:7 எசே 20:38 எசே 22:18-22 சகரி 13:8 சகரி 13:9 மல்கி 3:2 மல்கி 3:3 எபிரெ 12:10 எபிரெ 12:11 1பேது 1:7 1பேது 4:12 வெளிப் 3:19 |
| 11 | என்னிமித்தம், என்னிமித்தமே, அப்படிச் செய்வேன்; என் நாமத்தின் பரிசுத்தம் எப்படிக் குலைக்கப்படலாம்? என் மகிமையை நான் வேறொருவருக்குங்கொடேன். | ஏசா 52:5 எண் 14:15 எண் 14:16 உபா 32:26 உபா 32:27 எசே 20:9 எசே 20:39 ரோம 2:24 |
| 12 | யாக்கோபே, நான் அழைத்திருக்கிற இஸ்ரவேலே, எனக்குச் செவிகொடு; நான் அவரே, நான் முந்தினவரும், நான் பிந்தினவருமாமே. | ஏசா 34:1 ஏசா 46:3 ஏசா 49:1 ஏசா 51:1 ஏசா 51:4 ஏசா 51:7 ஏசா 55:3 நீதி 7:24 நீதி 8:32 |
| 13 | என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி, என் வலதுகை வானங்களை அளவிட்டது; நான் அவைகளுக்குக் கட்டளையிட, அவைகள் அனைத்தும் நிற்கும். | ஏசா 42:5 ஏசா 45:18 யாத் 20:11 சங் 102:25 எபிரெ 1:10-12 |
| 14 | நீங்களெல்லாரும் கூடிவந்து கேளுங்கள்; கர்த்தருக்குப் பிரியமானவன் அவருக்குச் சித்தமானதைப் பாபிலோனில் செய்வான்; அவன் புயம் கல்தேயரின்மேல் இருக்கும் என்பதை இவர்களில் அறிவித்தவன் யார்? | ஏசா 41:22 ஏசா 43:9 ஏசா 44:7 ஏசா 45:20 ஏசா 45:21 |
| 15 | நான், நானே அதைச் சொன்னேன்; நான் அவனை அழைத்தேன்; நான் அவனை வரப்பண்ணினேன்; அவன் வழி வாய்க்கும். | யோசு 1:8 சங் 45:4 எசே 1:2 |
| 16 | நீங்கள் என் சமீபத்தில் வந்து, நான் சொல்வதைக் கேளுங்கள்; நான் ஆதிமுதற்கொண்டு அந்தரங்கத்தில் பேசவில்லை; அது உண்டான காலந்துவக்கி அங்கே நான் இருந்தேன்; இப்பொழுதோ கர்த்தராகிய ஆண்டவரும், அவருடைய ஆவியும் என்னை அனுப்புகிறார். | ஏசா 48:3-6 ஏசா 45:19 யோவா 18:20 |
| 17 | இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே. | ஏசா 48:20 ஏசா 43:14 ஏசா 44:6-24 ஏசா 54:5 |
| 18 | ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும். | உபா 5:29 உபா 32:29 சங் 81:13-16 மத் 23:37 லூக் 19:41 லூக் 19:42 |
| 19 | அப்பொழுது உன் சந்ததி மணலத்தனையாகவும், உன் கர்ப்பப்பிறப்பு அதின் அணுக்களத்தனையாகவும் இருக்கும்; அப்பொழுது அதின் பெயர் நம்மை விட்டு அற்றுப்போகாமலும் அழிக்கப்படாமலும் இருக்கும். | ஏசா 10:22 ஆதி 13:16 ஆதி 22:17 எரே 33:22 ஓசி 1:10 ரோம 9:27 |
| 20 | பாபிலோனிலிருந்து புறப்படுங்கள்; கல்தேயரைவிட்டு ஓடிவாருங்கள்; கர்த்தர் தம்முடைய தாசனாகிய யாக்கோபை மீட்டுக்கொண்டாரென்று சொல்லுங்கள்; இதைக் கெம்பீரசத்தமாய்க் கூறிப் பிரசித்தப்படுத்துங்கள், பூமியின் கடையாந்தரமட்டும் வெளிப்படுத்துங்கள் என்கிறார். | ஏசா 52:11 எரே 50:8 எரே 51:6 எரே 51:45 சகரி 2:6 சகரி 2:7 வெளிப் 18:4 |
| 21 | அவர் அவர்களை வனாந்தரங்களில் நடத்தும்போது, அவர்களுக்குத் தாகவிடாயிருந்ததில்லை; கன்மலையிலிருந்து தண்ணீரை அவர்களுக்குச் சுரக்கப்பண்ணினார், கன்மலையைப் பிளந்தார், தண்ணீர் ஓடிவந்தது. | ஏசா 30:25 ஏசா 35:6 ஏசா 35:7 ஏசா 41:17 ஏசா 41:18 ஏசா 43:19 ஏசா 43:20 ஏசா 49:10 எரே 31:9 |
| 22 | துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார். | ஏசா 57:21 யோபு 15:20-24 லூக் 19:42 ரோம 3:17 |