| 1 | பாபிலோன் குமாரத்தியாகிய கன்னிகையே, நீ இறங்கி மண்ணிலே உட்காரு; கல்தேயரின் குமாரத்தியே, தரையிலே உட்காரு; உனக்குச் சிங்காசனமில்லை; நீ செருக்குக்காரியும் சுகசெல்வியும் என்று இனி அழைக்கப்படுவதில்லை. | ஏசா 3:26 ஏசா 26:5 ஏசா 52:2 யோபு 2:8 யோபு 2:13 சங் 18:27 எரே 13:18 எரே 48:18 புலம் 2:10 புலம் 2:21 எசே 26:16 எசே 28:17 ஒபதி 1:3 ஒபதி 1:4 யோனா 3:6 |
| 2 | ஏந்திரத்தை எடுத்து மாவரை; உன் முக்காட்டை நீக்கிவிடு; வெறுங்காலும் அம்மணத்தொடையுமாய் ஆறுகளைக் கடந்துபோ. | யாத் 11:5 நியா 16:21 யோபு 31:10 எரே 27:7 புலம் 5:13 மத் 24:41 லூக் 17:35 |
| 3 | உன் நிர்வாணம் வெளிப்படும்; உன் இலச்சை காணப்படும்; நான் ஒருவனையும் பாராமல் நீதியைச் சரிக்கட்டுவேன். | ஏசா 34:1-8 ஏசா 59:17 ஏசா 59:18 ஏசா 63:4-6 உபா 32:35 உபா 32:41-43 சங் 94:1 சங் 94:2 சங் 137:8 சங் 137:9 எரே 13:22 எரே 13:26 எரே 50:27 எரே 50:28 எரே 51:4 எரே 51:11 எரே 51:20-24 எரே 51:34-36 எரே 51:56-36 ரோம 12:19 எபிரெ 10:30 எபிரெ 10:31 நாகூ 3:5 வெளிப் 6:9 வெளிப் 6:10 வெளிப் 16:19 வெளிப் 18:5-8 வெளிப் 18:20-8 |
| 4 | எங்கள் மீட்பருடைய நாமம் இஸ்ரவேலின் பரிசுத்தராகிய சேனைகளுடைய கர்த்தர் என்பது. | ஏசா 41:14 ஏசா 43:3 ஏசா 43:14 ஏசா 44:6 ஏசா 49:26 ஏசா 54:5 எரே 31:11 எரே 50:33 எரே 50:34 |
| 5 | கல்தேயரின் குமாரத்தியே, நீ அந்தகாரத்துக்குள் பிரவேசித்து மவுனமாய் உட்காரு; இனி நீ ராஜ்யங்களின் நாயகியென்று அழைக்கப்படுவதில்லை. | ஏசா 13:20 ஏசா 14:23 1சாமு 2:9 சங் 31:17 சங் 46:10 எரே 25:10 புலம் 1:1 ஆபகூ 2:20 சகரி 2:13 மத் 22:12 மத் 22:13 யூதா 1:13 வெளிப் 18:21-24 |
| 6 | நான் என் ஜனத்தின்மேல் கடுங்கோபமடைந்து, என் சுதந்தரத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்கி, அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; நீ அவர்கள்மேல் இரக்கம்வையாமல், முதிர்வயதுள்ளவர்களின்மேல் உன் நுகத்தை மகா பாரமாக்கி, | ஏசா 10:6 ஏசா 42:24 ஏசா 42:25 2சாமு 24:14 2நாளா 28:9 சங் 69:26 சகரி 1:15 |
| 7 | என்றென்றைக்கும் நாயகியாயிருப்பேனென்று சொல்லி, இந்தக் காரியங்களை இதுவரைக்கும் உன் மனதிலே வையாமலும், அதின் முடிவை நினையாமலும்போனாய். | ஏசா 47:5 எசே 28:2 எசே 28:12-14 எசே 29:3 தானி 4:29 தானி 5:18-23 |
| 8 | இப்பொழுதும் சுகசெல்வியே, விசாரமில்லாமல் வாழ்கிறவளே: நான்தான், என்னைத்தவிர ஒருவருமில்லை; நான் விதவையாவதில்லை, நான் சந்தான சேதத்தை அறிவதில்லையென்று உன் இருதயத்திலே சொல்லுகிறவளே, நான் சொல்லுகிறதைக் கேள். | ஏசா 21:4 ஏசா 21:5 ஏசா 22:12 ஏசா 22:13 ஏசா 32:9 நியா 18:7 நியா 18:27 எரே 50:11 தானி 5:1-4 தானி 5:30-4 செப் 2:15 வெளிப் 18:3-8 |
| 9 | சந்தான சேதமும் விதவையிருப்பும் ஆகிய இவ்விரண்டும் உனக்குச் சடிதியாக ஒரேநாளில் வரும்; உன் திரளான சூனியங்களினிமித்தமும், உன் வெகுவான ஸ்தம்பன வித்தைகளினிமித்தமும் அவைகள் பூரணமாய் உன்மேல் வரும். | ஏசா 51:18 ஏசா 51:19 ரூத் 1:5 ரூத் 1:20 லூக் 7:12 லூக் 7:13 |
| 10 | உன் துன்மார்க்கத்திலே நீ திடநம்பிக்கையாயிருந்து: என்னைப் பார்க்கிறவர் ஒருவரும் இல்லையென்றாய். உன் ஞானமும் உன் அறிவுமே உன்னைக் கெடுத்தது; நான்தான், என்னைத் தவிர ஒருவருமில்லையென்று உன் இருதயத்தில் எண்ணினாய். | ஏசா 28:15 ஏசா 59:4 சங் 52:7 சங் 62:9 |
| 11 | ஆகையால் தீங்கு உன்மேல் வரும், அது எங்கேயிருந்து உதித்ததென்று நீ அறியாய்; விக்கினம் உன்மேல் வரும், நீ அதை நிவிர்த்தியாக்கமாட்டாய்; நீ அறியாதபடிக்குச் சடிதியாய் உண்டாகும் பாழ்க்கடிப்பு உன்மேல் வரும். | ஏசா 37:36 யாத் 12:29 யாத் 12:30 நெகே 4:11 வெளிப் 3:3 |
| 12 | நீ உன் சிறுவயதுமுதல் பிரயாசப்பட்டுப் பழகிவருகிற உன் ஸ்தம்பன வித்தைகளையும், உன் திரளான சூனியங்களையும் நீ அநுசரித்து நில்; அவைகளால் உனக்குப் பிரயோஜனம் உண்டோ, பலன் உண்டோ, பார்ப்போம். | ஏசா 47:9 ஏசா 47:10 ஏசா 8:19 ஏசா 19:3 ஏசா 44:25 யாத் 7:11 யாத் 8:7 யாத் 8:18 யாத் 8:19 யாத் 9:11 எரே 2:28 தானி 5:7-9 நாகூ 3:4 அப் 13:8-12 2தெச 2:9-12 வெளிப் 17:4-6 |
| 13 | உன் திரளான யோசனைகளினால் நீ இளைத்துப்போனாய்; இப்பொழுதும் ஜோசியரும், நட்சத்திரம் பார்க்கிறவர்களும், அமாவாசி கணிக்கிறவர்களும் எழும்பி, உனக்கு நேரிடுகிறவைகளுக்கு உன்னை விலக்கி இரட்சிக்கட்டும். | ஏசா 57:10 எசே 24:12 ஆபகூ 2:13 |
| 14 | இதோ, அவர்கள் தாளடியைப்போல் இருப்பார்கள், நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும்; அவர்கள் தங்கள் பிராணனை அக்கினிஜூவாலையினின்று விடுவிப்பதில்லை; அது குளிர்காயத்தக்க தழலுமல்ல; எதிரே உட்காரத்தக்க அடுப்புமல்ல. | ஏசா 40:24 ஏசா 41:2 எசே 15:7 சங் 83:13-15 யோவே 2:5 ஒபதி 1:18 நாகூ 1:10 மல்கி 4:1 |
| 15 | உன் சிறுவயதுமுதல் நீ பிரயாசப்பட்டு எவர்களுடன் வியாபாரம்பண்ணினாயோ, அவர்களும் அப்படியே இருப்பார்கள்; அவரவர் தங்கள் போக்கிலே போய் அலைவார்கள்; உன்னை இரட்சிப்பார் இல்லை. | ஏசா 56:11 எசே 27:12-25 வெளிப் 18:11-19 |