இணை வசன வேதாகமம்

Click to Subscribe

ஏசாயா 49

                   
புத்தகங்களைக் காட்டு
1தீவுகளே, எனக்குச் செவிகொடுங்கள்; தூரத்திலிருக்கிற ஜனங்களே, கவனியுங்கள்; தாயின் கர்ப்பத்திலிருந்ததுமுதல் கர்த்தர் என்னை அழைத்து, நான் என் தாயின் வயிற்றில் இருக்கையில் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தினார்.ஏசா 41:1 ஏசா 42:1-4 ஏசா 42:12-4 ஏசா 45:22 ஏசா 51:5 ஏசா 60:9 ஏசா 66:19 செப் 2:11
2அவர் என் வாயைக் கூர்மையான பட்டயமாக்கி, தமது கரத்தின் நிழலினால் என்னை மறைத்து, என்னைத் துலக்கமான அம்பாக்கி, என்னைத் தமது அம்பறாத்தூணியிலே மூடிவைத்தார்.ஏசா 11:4 சங் 45:2-5 ஓசி 6:5 எபிரெ 4:12 வெளிப் 1:16 வெளிப் 2:12 வெளிப் 19:15
3அவர் என்னை நோக்கி: நீ என் தாசன்; இஸ்ரவேலே, நான் உன்னில் மகிமைப்படுவேன் என்றார்.ஏசா 42:1 ஏசா 43:21 ஏசா 44:23 ஏசா 52:13 ஏசா 53:10 சகரி 3:8 மத் 17:5 லூக் 2:10-14 யோவா 12:28 யோவா 13:31 யோவா 13:32 யோவா 15:8 யோவா 17:1 யோவா 17:4 எபே 1:6 பிலிப் 2:6-11 1பேது 2:9
4அதற்கு நான்: விருதாவாய் உழைக்கிறேன், வீணும் வியர்த்தமுமாய் என் பெலனைச் செலவழிக்கிறேன்; ஆகிலும் என் நியாயம் கர்த்தரிடத்திலும், என் பலன் என் தேவனிடத்திலும் இருக்கிறது என்று சொன்னேன்.ஏசா 65:2 எசே 3:19 மத் 17:17 மத் 23:37 யோவா 1:11 ரோம 10:21 கலா 4:11
5யாக்கோபைத் தம்மிடத்தில் திருப்பும்படி நான் தாயின் கர்ப்பத்திலிருந்ததுமுதல் கர்த்தர் தமக்குத் தாசனாக என்னை உருவாக்கினார்; இஸ்ரவேலோ சேராதேபோகிறது; ஆகிலும் கர்த்தருடைய பார்வையில் கனமடைவேன், என் தேவன் என் பெலனாயிருப்பார்.ஏசா 56:8 மத் 15:24 அப் 10:36 ரோம 15:8
6யாக்கோபின் கோத்திரங்களை எழுப்பவும், இஸ்ரவேலில் காக்கப்பட்டவர்களைத் திருப்பவும், நீர் எனக்குத் தாசனாயிருப்பது அற்பகாரியமாயிருக்கிறது; நீர் பூமியின் கடைசிபரியந்தமும் என்னுடைய இரட்சிப்பாயிருக்கும்படி, உம்மை ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைப்பேன் என்கிறார்.2இரா 3:18 2இரா 20:10
7இஸ்ரவேலின் மீட்பரும் அதின் பரிசுத்தருமாகிய கர்த்தர், மனுஷரால் அசட்டைபண்ணப்பட்டவரும், ஜாதியாரால் அருவருக்கப்பட்டவரும், அதிகாரிகளுக்கு ஊழியக்காரனுமாயிருக்கிறவரை நோக்கி, உண்மையுள்ள கர்த்தர் நிமித்தமும், உம்மைத் தெரிந்துகொண்ட இஸ்ரவேலின் பரிசுத்தர்நிமித்தமும், ராஜாக்கள் கண்டு எழுந்திருந்து, பிரபுக்கள் பணிந்துகொள்வார்கள் என்று சொல்லுகிறார்.ஏசா 48:7 வெளிப் 3:7
8பின்னும் கர்த்தர்: அநுக்கிரககாலத்திலே நான் உமக்குச் செவிகொடுத்து, இரட்சணிய நாளிலே உமக்கு உதவி செய்தேன்; நீர் பூமியைச் சீர்ப்படுத்தி, பாழாய்க்கிடக்கிற இடங்களைச் சுதந்தரிக்கப்பண்ணவும்;சங் 69:13 யோவா 11:41 யோவா 11:42 2கொரி 6:2 எபே 1:6 எபிரெ 5:7
9கட்டுண்டவர்களை நோக்கி: புறப்பட்டுப்போங்கள் என்றும்; இருளில் இருக்கிறவர்களை நோக்கி: வெளிப்படுங்கள் என்றும் சொல்லவும், நான் உம்மைக் காப்பாற்றி, உம்மை ஜனங்களுக்கு உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்; அவர்கள் வழியோரங்களிலே மேய்வார்கள்; சகல மேடுகளிலும் அவர்களுக்கு மேய்ச்சல் உண்டாயிருக்கும்.ஏசா 42:7 ஏசா 61:1 சங் 69:33 சங் 102:20 சங் 107:10-16 சங் 146:7 சகரி 9:11 சகரி 9:12 லூக் 4:18 கொலோ 1:13 1பேது 2:9
10அவர்கள் பசியாயிருப்பதுமில்லை, தாகமாயிருப்பதுமில்லை; உஷ்ணமாகிலும், வெயிலாகிலும் அவர்கள்மேல் படுவதுமில்லை; அவர்களுக்கு இரங்குகிறவர் அவர்களை நடத்தி, அவர்களை நீரூற்றுகளிடத்திற்குக் கொண்டுபோய்விடுவார்.மத் 5:6 யோவா 6:35 வெளிப் 7:16 வெளிப் 7:17
11என் மலைகளையெல்லாம் வழிகளாக்குவேன்; என் பாதைகள் உயர்த்தப்படும்.ஏசா 11:16 ஏசா 35:8-10 ஏசா 40:3 ஏசா 40:4 ஏசா 43:19 ஏசா 57:14 ஏசா 62:10 சங் 107:4 சங் 107:7 லூக் 3:4 லூக் 3:5 யோவா 14:6
12இதோ, இவர்கள் தூரத்திலிருந்து வருவார்கள்; இதோ, அவர்கள் வடக்கிலும் மேற்கிலுமிருந்து வருவார்கள்; இவர்கள் சீனீம் தேசத்திலுமிருந்து வருவார்கள் என்கிறார்.ஏசா 2:2 ஏசா 2:3 ஏசா 11:10 ஏசா 11:11 ஏசா 43:5 ஏசா 43:6 ஏசா 60:9-14 ஏசா 66:19 ஏசா 66:20 சங் 22:27 சங் 72:10 சங் 72:11 சங் 72:17 மீகா 4:2 சகரி 2:11 சகரி 8:20-23 மத் 8:11 லூக் 13:29 வெளிப் 7:9 வெளிப் 11:15
13வானங்களே, கெம்பீரித்துப் பாடுங்கள்; பூமியே, களிகூரு; பர்வதங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்; சிறுமைப்பட்டிருக்கிற தம்முடையவர்கள்மேல் இரக்கமாயிருப்பார்.ஏசா 42:10 ஏசா 42:11 ஏசா 44:23 ஏசா 52:9 ஏசா 55:12 சங் 96:11-13 சங் 98:4-9 லூக் 2:13 லூக் 2:14 லூக் 15:10 வெளிப் 5:8-13 வெளிப் 7:9-12
14சீயோனோ: கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்லுகிறாள்.ஏசா 40:27 சங் 22:1 சங் 31:22 சங் 77:6-9 சங் 89:38-46 ரோம 11:1-5
15ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.1இரா 3:26 1இரா 3:27 சங் 103:13 மல்கி 3:17 மத் 7:11
16இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது.யாத் 13:9 உன்ன 8:6 எரே 22:24 ஆகா 2:23
17உன் குமாரர் தீவிரித்து வருவார்கள்; உன்னை நிர்மூலமாக்கினவர்களும் உன்னைப் பாழாக்கினவர்களும் உன்னை விட்டுப் புறப்பட்டுப்போவார்கள்.ஏசா 51:18-20 ஏசா 62:5 எஸ்றா 1:5 நெகே 2:4-9 நெகே 2:17-9 எசே 28:24
18உன் கண்களை ஏறெடுத்துச் சுற்றிலும் பார்; அவர்களெல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்தில் வருகிறார்கள்; நீ அவர்களெல்லாரையும் ஆபரணமாகத் தரித்து, மணமகள் அணிந்துகொள்வதுபோல, நீ அவர்களை அணிந்துகொள்வாய் என்று, என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார்.ஏசா 60:4 ஆதி 13:14 மத் 13:41 மத் 13:42 வெளிப் 22:15
19அப்பொழுது உன் வனாந்தரங்களும், உன் பாழிடங்களும், நிர்மூலமான உன் தேசமும், இனிக் குடிகளின் திரளினாலே உனக்கு நெருக்கமாயிருக்கும்; உன்னை விழுங்கினவர்கள் தூரமாவார்கள்.ஏசா 49:8 ஏசா 51:3 ஏசா 54:1 ஏசா 54:2 எரே 30:18 எரே 30:19 எரே 33:10 எரே 33:11 எசே 36:9-15 ஓசி 1:10 ஓசி 1:11 சகரி 2:4 சகரி 2:11 சகரி 10:10
20பிள்ளைகளற்றிருந்த உனக்கு உண்டாயிருக்கப்போகிற பிள்ளைகள்: இடம் எங்களுக்கு நெருக்கமாயிருக்கிறது; நாங்கள் குடியிருக்கும்படிக்கு விலகியிரு என்று, உன் காதுகள் கேட்கச்சொல்லுவார்கள்.ஏசா 60:4 ஓசி 1:10 மத் 3:9 கலா 4:26-28
21அப்பொழுது நீ: இவர்களை எனக்குப் பிறப்பித்தவர் யார்? நான் பிள்ளைகளற்றும், தனித்தும், சிறைப்பட்டும், நிலையற்றும் இருந்தேனே; இவர்களை எனக்கு வளர்த்தவர் யார்? இதோ, நான் ஒன்றியாய் விடப்பட்டிருந்தேனே; இவர்கள் எங்கேயிருந்தவர்கள்? என்று உன் இருதயத்தில் சொல்லுவாய்.எரே 31:15-17 ரோம 11:11-17 ரோம 11:24-17 கலா 3:29 கலா 4:26-29
22இதோ, ஜாதிகளுக்கு நேராக என் கரத்தை உயர்த்தி, ஜனங்களுக்கு நேராக என் கொடியை ஏற்றுவேன்; அப்பொழுது உன் குமாரரைக் கொடுங்கைகளில் ஏந்திக்கொண்டு வருவார்கள்; உன் குமாரத்திகள் தோளின்மேல் எடுத்துக்கொண்டு வரப்படுவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.ஏசா 49:12 ஏசா 2:2 ஏசா 2:3 ஏசா 11:10 ஏசா 11:11 ஏசா 42:1-4 ஏசா 60:3-11 ஏசா 66:20 சங் 22:27 சங் 67:4-7 சங் 72:8 சங் 72:17 சங் 86:9 மல்கி 1:11 லூக் 13:29
23ராஜாக்கள் உன்னை வளர்க்கும் தந்தைகளும், அவர்களுடைய நாயகிகள் உன் கைத்தாய்களுமாயிருப்பார்கள்; தரையிலே முகங்குப்புறவிழுந்து உன்னைப் பணிந்து, உன் கால்களின் தூளை நக்குவார்கள்; நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்பதை அப்பொழுது அறிந்துகொள்வாய்.ஏசா 49:7 ஏசா 52:15 ஏசா 60:3 ஏசா 60:10 ஏசா 60:11 ஏசா 60:16 ஏசா 62:2 எஸ்றா 1:2-4 எஸ்றா 6:7-12 எஸ்றா 7:11-28 நெகே 2:6-10 எஸ்தர் 8:1-10 சங் 2:10-12 சங் 68:31 சங் 72:10 சங் 72:11 சங் 138:4 வெளிப் 21:24-26
24பராக்கிரமன் கையிலிருந்து கொள்ளைப்பொருளைப் பறிக்கக்கூடுமோ? அல்லது நீதியாய்ச் சிறைப்பட்டுப்போனவர்களை விடுவிக்ககூடுமோ?எசே 37:3 எசே 37:11
25என்றாலும் இதோ, பராக்கிரமனால் சிறைப்படுத்தப்பட்டவர்களும் விடுவிக்கப்படுவார்கள்; பெலவந்தனால் கொள்ளையிடப்பட்டதும் விடுதலையாக்கப்படும்; உன்னோடு வழக்காடுகிறவர்களோடே நான் வழக்காடி, உன் பிள்ளைகளை இரட்சித்துக்கொள்ளுவேன்.ஏசா 10:27 ஏசா 52:2-5 எரே 29:10 எரே 50:17-19 எரே 50:33-19 எரே 50:34-19 சகரி 9:11 எபிரெ 2:14 எபிரெ 2:15 1யோவா 3:8
26உன்னை ஒடுக்கினவர்களுடைய மாம்சத்தை அவர்களுக்கே தின்னக்கொடுப்பேன்; மதுபானத்தால் வெறிகொள்வதுபோல் தங்களுடைய இரத்தத்தினால் வெறிகொள்வார்கள்; கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.ஏசா 9:20 நியா 7:22
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.