| 1 | ராஜாவாகிய எசேக்கியா அதைக்கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டு உடுத்திக்கொண்டு, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து, | 2இரா 19:1-19 |
| 2 | அரமனை விசாரிப்புக்காரனாகிய எலியாக்கீமையும், சம்பிரதியாகிய செப்னாவையும், ஆசாரியர்களின் மூப்பரையும், ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசியினிடத்திற்கு இரட்டு உடுத்தவர்களாக அனுப்பினான். | ஏசா 37:14 ஏசா 36:3 2இரா 18:18 2இரா 19:2 2இரா 22:12-14 2நாளா 20:20 யோவே 1:13 |
| 3 | இவர்கள் அவனை நோக்கி: இந்த நாள் நெருக்கமும், கண்டிதமும், தூஷணமும் அநுபவிக்கிற நாள்; பிள்ளைப்பேறு நோக்கியிருக்கிறது; பெறவோ பெலன் இல்லை. | ஏசா 25:8 ஏசா 33:2 2இரா 19:3 2நாளா 15:4 சங் 50:15 சங் 91:15 சங் 116:3 சங் 116:4 எரே 30:7 ஓசி 5:15 ஓசி 6:1 வெளிப் 3:19 |
| 4 | ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படி, அசீரியா ராஜாவாகிய தன் ஆண்டவனால் அனுப்பப்பட்ட ரப்சாக்கே சொன்ன வார்த்தைகளை உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிறார்; உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிற வார்த்தைகளினிமித்தம் தண்டனை செய்வார்; ஆகையால், இன்னும் மீதியாயிருக்கிறவர்களுக்காக விண்ணப்பஞ்செய்வீராக என்று எசேக்கியா சொல்லச்சொன்னார் என்றார்கள். | யோசு 14:12 1சாமு 14:6 2சாமு 16:12 ஆமோ 5:15 |
| 5 | இவ்விதமாய் எசேக்கியா ராஜாவின் ஊழியக்காரர் ஏசாயாவினிடத்தில் வந்து சொன்னார்கள். |
| 6 | அப்பொழுது ஏசாயா அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவின் ஊழியக்காரர் என்னைத் தூஷித்ததும் நீர் கேட்டதுமான வார்த்தைகளினாலே பயப்படாதேயும். | 2இரா 19:5-7 2இரா 22:15-20 |
| 7 | இதோ, அவன் ஒரு செய்தியைக் கேட்டு, தன் தேசத்துக்குத் திரும்புவதற்கான ஆவியை நான் அவனுக்குள் அனுப்பி, அவனை அவன் தேசத்திலே பட்டயத்தால் விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்பதை உங்கள் ஆண்டவனிடத்தில் சொல்லுங்கள் என்றான். | ஏசா 10:16-18 ஏசா 10:33-18 ஏசா 10:34-18 ஏசா 17:13 ஏசா 17:14 ஏசா 29:5-8 ஏசா 30:28-33 ஏசா 31:8 ஏசா 31:9 ஏசா 33:10-12 2இரா 7:6 யோபு 4:9 யோபு 15:21 சங் 58:9 |
| 8 | அசீரியா ராஜா லாகீசை விட்டுப்புறப்பட்டான் என்று கேள்விப்பட்டு, ரப்சாக்கே திரும்பிப்போய், அவன் லிப்னாவின்மேல் யுத்தம்பண்ணுகிறதைக் கண்டான். | 2இரா 19:8 2இரா 19:9 எண் 33:20 எண் 33:21 |
| 9 | அப்பொழுது, எத்தியோப்பியாவின் ராஜாவாகிய திராக்கா உம்மோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அதைக் கேட்டபோது அவன் எசேக்கியாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: | 1சாமு 23:27 1சாமு 23:28 |
| 10 | நீங்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னை எத்தவொட்டாதே. | ஏசா 36:4 ஏசா 36:15 ஏசா 36:20 2இரா 18:5 2இரா 19:10-13 2நாளா 32:7 2நாளா 32:8 2நாளா 32:15-19 சங் 22:8 மத் 27:43 |
| 11 | இதோ, அசீரியா ராஜாக்கள் சகல தேசங்களையும் சங்கரித்த செய்தியை நீ கேள்விப்பட்டிருக்கிறாய்; நீ தப்புவாயோ? | ஏசா 37:18 ஏசா 37:19 ஏசா 10:7-14 ஏசா 14:17 ஏசா 36:18-20 2இரா 17:4-6 2இரா 18:33-35 |
| 12 | என் பிதாக்கள் அழித்துவிட்ட கோசானையும், ஆரானையும், ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் புத்திரரையும் அவர்களுடைய தேவர்கள் தப்புவித்ததுண்டோ? | ஏசா 36:20 ஏசா 46:5-7 |
| 13 | ஆமாத்தின் ராஜாவும், அர்பாத்தின் ராஜாவும், செப்பர்வாயீம் ஏனா ஈவா பட்டணங்களின் ராஜாவும் எங்கே என்று சொல்லுங்கள் என்றார். | ஏசா 10:9 ஏசா 36:19 எரே 49:23 |
| 14 | எசேக்கியா ஸ்தானாபதிகளின் கையிலிருந்த நிருபத்தை வாங்கி வாசித்தான்; பின்பு எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்திற்குப் போய் அதைக் கர்த்தருக்கு முன்பாக விரித்து, | 2இரா 19:14 |
| 15 | கர்த்தரை நோக்கி: | 1சாமு 7:8 1சாமு 7:9 2சாமு 7:18-29 2இரா 19:15-19 2நாளா 14:11 2நாளா 20:6-12 தானி 9:3 தானி 9:4 பிலிப் 4:6 பிலிப் 4:7 யாக் 5:13 |
| 16 | சேனைகளின் கர்த்தாவே, கேருபீன்களின் மத்தியில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர். | ஏசா 6:3 ஏசா 8:13 2சாமு 7:26 சங் 46:7 சங் 46:11 |
| 17 | கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்துக்கேளும்; கர்த்தாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும், சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படிக்குச் சொல்லியனுப்பின வார்த்தைகளையெல்லாம் கேளும். | 2நாளா 6:40 யோபு 36:7 சங் 17:6 சங் 71:2 சங் 130:1 சங் 130:2 தானி 9:17-19 1பேது 3:12 |
| 18 | கர்த்தாவே, அசீரியா ராஜாக்கள் அந்த ஜாதிகளையும், அவர்கள் தேசத்தையும் நாசமாக்கி, | 2இரா 15:29 2இரா 16:9 2இரா 17:6 2இரா 17:24 1நாளா 5:26 நாகூ 2:11 நாகூ 2:12 |
| 19 | அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது மெய்தான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனுஷர் கைவேலையான மரமும் கல்லுந்தானே; ஆகையால் அவைகளை நிர்த்தூளியாக்கினார்கள். | ஏசா 10:9-11 ஏசா 36:18-20 ஏசா 46:1 ஏசா 46:2 யாத் 32:20 2சாமு 5:21 |
| 20 | இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்களெல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம் பண்ணினான். | ஏசா 42:8 யாத் 9:15 யாத் 9:16 யோசு 7:8 யோசு 7:9 1சாமு 17:45-47 1இரா 8:43 1இரா 18:36 1இரா 18:37 சங் 46:10 சங் 59:13 சங் 67:1 சங் 67:2 சங் 83:17 சங் 83:18 எசே 36:23 மல்கி 1:11 |
| 21 | அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா, எசேக்கியாவுக்குச் சொல்லியனுப்பினது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், அசீரியா ராஜாவாகிய சனகெரிபினிமித்தம் நீ என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணினாயே. | ஏசா 38:3-6 ஏசா 58:9 ஏசா 65:24 2சாமு 15:31 2சாமு 17:23 2இரா 19:20 2இரா 19:21 யோபு 22:27 சங் 91:15 தானி 9:20-23 அப் 4:31 |
| 22 | அவனைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிற வசனமாவது: சீயோன் குமாரத்தியாகிய கன்னியாஸ்திரீ உன்னை இகழ்ந்து, உன்னைப் பரிகாசம்பண்ணுகிறாள்; எருசலேம் குமாரத்தி உன் பின்னாலே தலையைத் துலுக்குகிறாள். | ஏசா 23:12 எரே 14:17 புலம் 1:15 புலம் 2:13 ஆமோ 5:2 |
| 23 | யாரை நிந்தித்துத் தூஷித்தாய்? யாருக்கு விரோதமாய் உன் சத்தத்தை உயர்த்தினாய்? நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாய் அல்லவோ உன் கண்களை மேட்டிமையாய் ஏறெடுத்தாய். | ஏசா 37:10-13 யாத் 5:2 2இரா 19:4 2இரா 19:22 2நாளா 32:17 சங் 44:16 சங் 73:9 சங் 74:18 சங் 74:23 வெளிப் 13:1-6 |
| 24 | உன் ஊழியக்காரரைக்கொண்டு நீ ஆண்டவரை நிந்தித்து: என் இரதங்களின் திரளினாலே நான் மலைகளின் கொடுமுடிகளுக்கும் லீபனோனின் சிகரங்களுக்கும் வந்து ஏறினேன்; அதின் உயரமான கேதுருமரங்களையும், உச்சிதமான தேவதாரு விருட்சங்களையும் நான் வெட்டி, உயர்ந்த அதின் கடைசி எல்லைமட்டும், அதின் செழுமையான வனமட்டும் வருவேன் என்றும், | ஏசா 37:4 ஏசா 36:15-20 2இரா 19:22 2இரா 19:23 |
| 25 | நான் கிணறு வெட்டித் தண்ணீர் குடித்தேன்; என் உள்ளங்காலினால் அரணிப்பான இடங்களின் அகழிகளையெல்லாம் வறளவும்பண்ணினேன் என்றும் சொன்னாய். | ஏசா 36:12 1இரா 20:10 2இரா 19:23 2இரா 19:24 |
| 26 | நான் வெகுகாலத்துக்குமுன் அதை நியமித்து, பூர்வநாட்கள்முதல் அதைத் திட்டம்பண்ணினேன் என்பதை நீ கேட்டதில்லையோ? இப்பொழுது நீ அரணான பட்டணங்களைப் பாழான மண்மேடுகளாக்கும்படி நானே அதைச் சம்பவிக்கப்பண்ணினேன். | ஏசா 10:5 ஏசா 10:6 ஏசா 10:15 ஏசா 45:7 ஏசா 46:10 ஏசா 46:11 ஆதி 50:20 சங் 17:13 சங் 76:10 ஆமோ 3:6 அப் 2:23 அப் 4:27 அப் 4:28 1பேது 2:8 யூதா 1:4 |
| 27 | அதினாலே அவைகளின் குடிகள் கையிளைத்தவர்களாகி, கலங்கி வெட்கப்பட்டு, வெளியின் பூண்டுக்கும், பச்சிலைக்கும், வீடுகளின்மேல் முளைக்கும் புல்லுக்கும், ஓங்கி வளருமுன் தீய்ந்துபோகும் பயிருக்கும் சமானமானார்கள். | ஏசா 19:16 எண் 14:9 2இரா 19:26 சங் 127:1 சங் 127:2 எரே 5:10 எரே 37:10 |
| 28 | உன் இருப்பையும், உன் போக்கையும், உன் வரவையும், நீ எனக்கு விரோதமாய்க் கொந்தளிக்கிறதையும் அறிவேன். | சங் 139:2-11 நீதி 5:21 நீதி 15:3 எரே 23:23 எரே 23:24 வெளிப் 2:13 |
| 29 | நீ எனக்கு விரோதமாய்த் கொந்தளித்து, வீரியம்பேசினது என் செவிகளில் ஏறினபடியினாலே, நான் என் துறட்டை உன் மூக்கிலும் என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு, நீ வந்த வழியே உன்னைத் திரும்பப்பண்ணுவேன். | ஏசா 37:10 ஏசா 36:4 ஏசா 36:10 2இரா 19:27 2இரா 19:28 யோபு 15:25 யோபு 15:26 சங் 2:1-3 சங் 46:6 சங் 93:3 சங் 93:4 நாகூ 1:9-11 யோவா 15:22 யோவா 15:23 அப் 9:4 |
| 30 | உனக்கு அடையாளமாயிருப்பது என்னவென்றால்: இந்த வருஷத்திலே தப்பிப் பயிராகிறதையும், இரண்டாம் வருஷத்திலே தானாய் விளைகிறதையும் சாப்பிடுவீர்கள்; மூன்றாம் வருஷத்திலோ விதைத்து அறுத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைப் புசிப்பீர்கள். | ஏசா 7:14 ஏசா 38:7 யாத் 3:12 1இரா 13:3-5 2இரா 19:29 2இரா 20:9 |
| 31 | யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனிகொடுப்பார்கள். | ஏசா 1:9 ஏசா 6:13 ஏசா 10:20-22 எரே 44:28 |
| 32 | மீதியாயிருக்கிறவர்கள் எருசலேமிலும், தப்பினவர்கள் சீயோன் மலையிலுமிருந்து புறப்படுவார்கள்; சேனைகளுடைய கர்த்தரின் வைராக்கியம் இதைச் செய்யும். | ஏசா 37:20 ஏசா 9:7 ஏசா 59:17 2இரா 19:31 யோவே 2:18 சகரி 1:14 |
| 33 | ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவைக்குறித்து: அவன் இந்த நகரத்துக்குள் பிரவேசிப்பதில்லை; இதின்மேல் அம்பு எய்வதுமில்லை; இதற்கு முன்பாகக் கேடகத்தோடே வருவதுமில்லை; இதற்கு எதிராகக் கொத்தளம் போடுவதுமில்லை. | ஏசா 8:7-10 ஏசா 10:32-34 ஏசா 17:12 ஏசா 17:14 ஏசா 33:20 2இரா 19:32-35 |
| 34 | அவன் இந்த நகரத்துக்குள் பிரவேசியாமல், தான் வந்தவழியே திரும்பிப்போவான். | ஏசா 37:29 நீதி 21:30 |
| 35 | என்னிமித்தமும் என் தாசனாகிய தாவீதினிமித்தமும், நான் இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு இதற்கு ஆதரவாயிருப்பேன் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லியனுப்பினான். | ஏசா 31:5 ஏசா 38:6 2இரா 20:6 |
| 36 | அப்பொழுது கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம் பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்களெல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள். | ஏசா 10:12 ஏசா 10:16-19 ஏசா 10:33-19 ஏசா 10:34-19 ஏசா 30:30-33 ஏசா 31:8 ஏசா 33:10-12 யாத் 12:23 2சாமு 24:16 2இரா 19:35 1நாளா 21:12 1நாளா 21:16 2நாளா 32:21 2நாளா 32:22 சங் 35:5 சங் 35:6 அப் 12:23 |
| 37 | அப்பொழுது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் பிராயணப்பட்டுத் திரும்பிப்போய், நினிவேயில் இருந்துவிட்டான். | ஏசா 37:7 ஏசா 37:29 ஏசா 31:9 |
| 38 | அவன் தன் தேவனாகிய நிஸ்ரோகின் கோவிலிலே பணிந்துகொள்ளுகிறபோது, அவன் குமாரராகிய அத்ரமலேக்கும் சரேத்சேரும் அவனைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டு, அரராத் தேசத்துக்குத் தப்பி ஓடிப்போனார்கள்; அவன் குமாரனாகிய எசரத்தோன் அவன் பட்டத்திற்கு வந்து அரசாண்டான். | ஏசா 37:10 ஏசா 14:9 ஏசா 14:12 ஏசா 36:15 ஏசா 36:18 2இரா 19:36 2இரா 19:37 2நாளா 32:14 2நாளா 32:19 2நாளா 32:21 |