இணை வசன வேதாகமம்

Click to Subscribe

ஏசாயா 26

                   
புத்தகங்களைக் காட்டு
1அக்காலத்திலே யூதாதேசத்தில் பாடப்படும் பாட்டாவது: பெலனான நகரம் நமக்கு உண்டு; இரட்சிப்பையே அதற்கு மதிலும் அரணுமாக ஏற்படுத்துவார்.ஏசா 2:11 ஏசா 2:20 ஏசா 12:1 ஏசா 24:21-23 ஏசா 25:9
2சத்தியத்தைக் கைக்கொண்டுவருகிற நீதியுள்ள ஜாதி உள்ளே பிரவேசிப்பதற்காக வாசல்களைத் திறவுங்கள்.ஏசா 60:11 ஏசா 62:10 சங் 118:20 எசே 48:31-34 சகரி 8:20 அப் 2:47 வெளிப் 21:24
3உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.ஏசா 9:6 ஏசா 9:7 ஏசா 57:19-21 சங் 85:7 சங் 85:8 மீகா 5:5 யோவா 14:27 யோவா 16:33 ரோம 5:1 எபே 2:14-16 பிலிப் 4:7
4கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்.ஏசா 12:2 ஏசா 50:10 2நாளா 20:20 2நாளா 32:8 சங் 55:22 சங் 62:8 நீதி 3:5 நீதி 3:6
5அவர் உயரத்திலே வாசமாயிருக்கிறவர்களையும் கீழே தள்ளுகிறார்; உயர்ந்த நகரத்தையும் தாழ்த்துகிறார்; அவர் தரைமட்டும் தாழ்த்தி அது மண்ணாகுமட்டும் இடியப்பண்ணுவார்.ஏசா 2:12 ஏசா 13:11 ஏசா 14:13 ஏசா 25:11 யோபு 40:11-13
6கால் அதை மிதிக்கும், சிறுமையானவர்களின் காலும் எளிமையானவர்களின் அடிகளுமே அதை மிதிக்கும்.ஏசா 25:10 ஏசா 37:25 ஏசா 60:14 யோசு 10:24 எரே 50:45 தானி 7:27 செப் 3:11 மல்கி 4:3 லூக் 1:51-53 லூக் 10:19 ரோம 16:20 1கொரி 1:26 யாக் 2:5 வெளிப் 2:26 வெளிப் 3:9
7நீதிமானுடைய பாதை செம்மையாயிருக்கிறது; மகா நீதிபரராகிய நீர் நீதிமானுடைய பாதையைச் செம்மைப்படுத்துகிறீர்.ஏசா 35:8 1நாளா 29:17 யோபு 27:5 யோபு 27:6 சங் 18:23-26 நீதி 20:7 2கொரி 1:12 எபே 2:10 1யோவா 3:7 1யோவா 3:10
8கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளின் வழியிலே உமக்குக் காத்திருக்கிறோம்; உமது நாமமும், உம்மை நினைக்கும் நினைவும் எங்கள் ஆத்துமவாஞ்சையாயிருக்கிறது.ஏசா 64:4 ஏசா 64:5 எண் 36:13 யோபு 23:10-12 சங் 18:23 சங் 44:17 சங் 44:18 சங் 65:6 சங் 106:3 மல்கி 4:4 லூக் 1:6
9என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது; எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.சங் 63:6 சங் 63:7 சங் 77:2 சங் 77:3 சங் 119:62 சங் 130:6 உன்ன 3:1-4 உன்ன 5:2-8 லூக் 6:12
10துன்மார்க்கனுக்குத் தயைசெய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான்; நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதேபோகிறான்.ஏசா 63:9 ஏசா 63:10 யாத் 8:15 யாத் 8:31 யாத் 8:32 யாத் 9:34 உபா 32:15 1சாமு 15:17 சங் 106:43 நீதி 1:32 பிரச 3:16 ஓசி 13:6 ரோம 2:4 ரோம 2:5 வெளிப் 2:21
11கர்த்தாவே, உமது கை ஓங்கியிருக்கிறது; அவர்கள் அதைக் காணாதிருக்கிறார்கள்; ஆனாலும் உமது ஜனத்துக்காக நீர் கொண்ட வைராக்கியத்தைக்கண்டு வெட்கப்படுவார்கள்; அக்கினி உம்முடைய சத்துருக்களைப் பட்சிக்கும்.சங் 10:12 மீகா 5:9
12கர்த்தாவே, எங்களுக்குச் சமாதானத்தைக் கட்டளையிடுவீர்; எங்கள் கிரியைகளையெல்லாம் எங்களுக்காக நடத்திவருகிறவர் நீரே.ஏசா 57:10 சங் 29:11 எரே 33:6 யோவா 14:27
13எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உம்மையல்லாமல் வேறே ஆண்டவன்மார் எங்களை ஆண்டார்கள்; இனி உம்மை மாத்திரம் சார்ந்து உம்முடைய நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்துவோம்.ஏசா 51:22 2நாளா 12:8 யோவா 8:32 ரோம 6:22
14அவர்கள் செத்தவர்கள், ஜீவிக்கமாட்டார்கள்; மாண்ட இராட்சதர் திரும்ப எழுந்திரார்கள்; நீர் அவர்களை விசாரித்துச் சங்கரித்து, அவர்கள் பேரையும் அழியப்பண்ணினீர்.ஏசா 26:19 ஏசா 8:19 ஏசா 51:12 ஏசா 51:13 யாத் 14:30 சங் 106:28 ஆபகூ 2:18-20 மத் 2:20 வெளிப் 18:2 வெளிப் 18:3 வெளிப் 19:19-21 வெளிப் 20:5
15இந்த ஜாதியைப் பெருகப்பண்ணினீர்; கர்த்தாவே, இந்த ஜாதியைப் பெருகப்பண்ணினீர்; நீர் மகிமைப்பட்டீர், தேசத்தின் எல்லை எல்லாவற்றையும் நெடுந்தூரத்தில் தள்ளிவைத்தீர்.ஏசா 9:3 ஏசா 10:22 ஆதி 12:2 ஆதி 13:16 எண் 23:10 உபா 10:22 நெகே 9:23 எரே 30:19
16கர்த்தாவே, நெருக்கத்தில் உம்மைத் தேடினார்கள்; உம்முடைய தண்டனை அவர்கள் மேலிருக்கையில் அந்தரங்க வேண்டுதல்செய்தார்கள்.உபா 4:29 உபா 4:30 நியா 10:9 நியா 10:10 2நாளா 6:37 2நாளா 6:38 2நாளா 33:12 2நாளா 33:13 சங் 50:15 சங் 77:1 சங் 77:2 சங் 91:15 எரே 22:23 ஓசி 5:15 ஓசி 7:14 வெளிப் 3:19
17கர்த்தாவே, பேறுகாலம் சமீபித்திருக்கையில் வேதனைப்பட்டு, தன் அம்பாயத்தில் கூப்பிடுகிற கர்ப்பவதியைப்போல, உமக்கு முன்பாக இருக்கிறோம்.ஏசா 13:8 ஏசா 21:3 சங் 48:6 எரே 4:31 எரே 6:24 எரே 30:6 யோவா 16:21 1தெச 5:3
18நாங்கள் கர்ப்பமாயிருந்து வேதனைப்பட்டு, காற்றைப் பெற்றவர்களைப்போல் இருக்கிறோம்; தேசத்தில் ஒரு இரட்சிப்பையும் செய்யமாட்டாதிருக்கிறோம்; பூச்சக்கரத்துக்குடிகள் விழுகிறதுமில்லை.ஏசா 37:3 2இரா 19:3 ஓசி 13:13
19மரித்த உம்முடையவர்கள் பிரேதமான என்னுடையவர்களோடேகூட எழுந்திருப்பார்கள்; மண்ணிலே தங்கியிருக்கிறவர்களே, விழித்துக் கெம்பீரியுங்கள்; உம்முடைய பனி பூண்டுகளின்மேல் பெய்யும் பனிபோல் இருக்கும்; மரித்தோரைப் பூமி புறப்படப்பண்ணும்.ஏசா 25:8 எசே 37:1-14 ஓசி 6:2 ஓசி 13:14 யோவா 5:28 யோவா 5:29 அப் 24:15 1கொரி 15:22 1கொரி 15:23 1தெச 4:14 1தெச 4:15 வெளிப் 20:5 வெளிப் 20:6 வெளிப் 20:12
20என் ஜனமே, நீ போய் உன் அறைகளுக்குள்ளே பிரவேசித்து, உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு, சினம் கடந்துபோகுமட்டும் கொஞ்சநேரம் ஒளித்துக்கொள்.ஏசா 51:4 ஏசா 51:16 எரே 7:23 எரே 31:14
21இதோ, பூமியினுடைய குடிகளின் அக்கிரமத்தினிமித்தம் அவர்களை விசாரிக்கும்படி கர்த்தர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து புறப்பட்டுவருவார்; பூமி தன் இரத்தப்பழிகளை வெளிப்படுத்தி, தன்னிடத்தில் கொலை செய்யப்பட்டவர்களை இனி மூடாதிருக்கும்.ஏசா 18:4 சங் 50:2 சங் 50:3 எசே 8:6 எசே 9:3-6 எசே 10:3-5 எசே 10:18-5 எசே 10:19-5 ஓசி 5:14 ஓசி 5:15 மீகா 1:3-8 2தெச 1:7-10 யூதா 1:14 யூதா 1:15
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.