இணை வசன வேதாகமம்

Click to Subscribe

ஏசாயா 24

                   
புத்தகங்களைக் காட்டு
1இதோ, கர்த்தர் தேசத்தை வெறுமையும் பாழுமாக்கி, அதைக் கவிழ்த்து, அதின் குடிகளைச் சிதறடிப்பார்.ஏசா 1:7-9 ஏசா 5:6 ஏசா 6:11 ஏசா 6:12 ஏசா 7:17-25 ஏசா 27:10 ஏசா 32:13 ஏசா 32:14 ஏசா 42:15 எரே 4:7 எசே 5:14 எசே 6:6 எசே 12:20 எசே 24:11 எசே 35:14 நாகூ 2:10 லூக் 21:24
2அப்பொழுது, ஜனத்துக்கு எப்படியோ அப்படியே ஆசாரியனுக்கும் வேலைக்காரனுக்கு எப்படியோ அப்படியே எஜமானுக்கும், வேலைக்காரிக்கு எப்படியோ அப்படியே எஜமானிக்கும், கொண்டவனுக்கு எப்படியோ அப்படியே விற்றவனுக்கும், கடன் கொடுத்தவனுக்கு எப்படியோ அப்படியே கடன்வாங்கினவனுக்கும், வட்டிவாங்கினவனுக்கு எப்படியோ அப்படியே வட்டிகொடுத்தவனுக்கும் எல்லாருக்கும் சரியாக நடக்கும்.ஏசா 2:9 ஏசா 3:2-8 ஏசா 5:15 ஏசா 9:14-17 2நாளா 36:14-17 2நாளா 36:20-17 எரே 5:3-6 எரே 23:11-13 எரே 41:2 எரே 42:18 எரே 44:11-13 எரே 52:24-30 புலம் 4:13 புலம் 5:12-14 எசே 7:12 எசே 7:13 எசே 14:8-10 தானி 9:5-8 ஓசி 4:9 எபே 6:8 எபே 6:9
3தேசம் முழுதும் கொள்ளையாகி, முற்றிலும் வெறுமையாகும்; இது கர்த்தர் சொன்ன வார்த்தை.ஏசா 24:1 ஏசா 6:11 லேவி 26:30-35 உபா 29:23 உபா 29:28 2நாளா 36:21 எசே 36:4
4தேசம் புலம்பி வாடும்; பூமி சத்துவமற்று உலர்ந்துபோகும்; தேசத்து ஜனத்திலே உயர்ந்தவர்கள் தவிப்பார்கள்.ஏசா 3:26 ஏசா 28:1 ஏசா 33:9 ஏசா 64:6 எரே 4:28 எரே 12:4 ஓசி 4:3
5தேசம் தன் குடிகளின் மூலமாய் தீட்டுப்பட்டது; அவர்கள் நியாயப்பிரமாணங்களை மீறி, கட்டளையை மாறுபாடாக்கி, நித்திய உடன்படிக்கையை முறித்தார்கள்.ஆதி 3:17 ஆதி 3:18 ஆதி 6:11-13 லேவி 18:24-28 லேவி 20:22 எண் 35:33 எண் 35:34 2நாளா 33:9 சங் 106:36-39 எரே 3:1 எரே 3:2 எசே 7:20-24 எசே 22:24-31 மீகா 2:10 ரோம 8:20 ரோம 8:21
6இதினிமித்தம் சாபம் தேசத்தைப் பட்சித்தது, அதின் குடிகள் தண்டிக்கப்பட்டார்கள்; தேசத்தார் தகிக்கப்பட்டார்கள், சிலர்மாத்திரம் மீந்திருக்கிறார்கள்.ஏசா 42:24 ஏசா 42:25 உபா 28:15-20 உபா 29:22-28 உபா 30:18 உபா 30:19 யோசு 23:15 யோசு 23:16 சகரி 5:3 சகரி 5:4 மல்கி 2:2 மல்கி 3:9 மல்கி 4:1 மல்கி 4:6 மத் 27:25
7திராட்சரசம் துக்கங்கொண்டாடும், திராட்சச்செடி வதங்கும்; மனக்களிப்பாயிருந்தவர்கள் எல்லாரும் பெருமூச்சுவிடுவார்கள்.ஏசா 16:8 ஏசா 16:10 ஏசா 32:9-13 ஓசி 9:1 ஓசி 9:2 யோவே 1:10-12
8மேளங்களின் சந்தோஷம் ஓயும், களிகூருகிறவர்களின் சந்தடி ஒழியும், வீணையின் களிப்பு நின்றுபோகும்.ஏசா 23:15 ஏசா 23:16 எரே 7:34 எரே 16:9 எரே 25:10 எசே 26:13 ஓசி 2:11 வெளிப் 18:22
9பாடலோடே திராட்சரசம் குடியார்கள்; மதுபானம் அதைக் குடிக்கிறவர்களுக்குக் கசக்கும்.ஏசா 5:11 ஏசா 5:12 சங் 69:12 பிரச 9:7 ஆமோ 6:5-7 ஆமோ 8:3 ஆமோ 8:10 சகரி 9:15 எபே 5:18 எபே 5:19
10வெறுமையாய்ப்போன நகரம் தகர்ந்து, ஒருவரும் உள்ளே பிரவேசிக்கக்கூடாதபடி, வீடுகளெல்லாம் அடைபட்டுக்கிடக்கும்.ஏசா 24:12 ஏசா 25:2 ஏசா 27:10 ஏசா 32:14 ஏசா 34:13-15 2இரா 25:4 2இரா 25:9 2இரா 25:10 எரே 39:4 எரே 39:8 எரே 52:7 எரே 52:13 எரே 52:14 மீகா 2:13 மீகா 3:12 லூக் 19:43 லூக் 21:24
11திராட்சரசத்துக்காக வீதிகளிலே கூக்குரல் உண்டு; எல்லாச் சந்தோஷமும் மங்கி, தேசத்தின் மகிழ்ச்சி அற்றுப்போகும்.நீதி 31:6 ஓசி 7:14 யோவே 1:15
12நகரத்தில் மீதியாயிருப்பது அழிவே; வாசல்கள் இடிக்கப்பட்டுப்பாழாய்க் கிடக்கும்.ஏசா 32:14 எரே 9:11 புலம் 1:1 புலம் 1:4 புலம் 2:9 புலம் 5:18 மீகா 1:9 மீகா 1:12 மத் 22:7
13ஒலிவமரத்தை உலுக்கும்போதும், திராட்சப்பழங்களை அறுத்துத் தீரும்போதும், பின்பறிப்புக்குக் கொஞ்சம் மீந்திருப்பதுபோல, தேசத்துக்குள்ளும் இந்த ஜனங்களின் நடுவிலும் கொஞ்சம் மீந்திருக்கும்.ஏசா 1:9 ஏசா 6:13 ஏசா 10:20-22 ஏசா 17:5 ஏசா 17:6 எரே 44:28 எசே 6:8-11 எசே 7:16 எசே 9:4-6 எசே 11:16-20 எசே 14:22 எசே 14:23 மீகா 2:12 மத் 24:22 ரோம 11:2-6 வெளிப் 3:4 வெளிப் 11:2 வெளிப் 11:3
14அவர்கள் சத்தமிட்டுக் கெம்பீரிப்பார்கள்; கர்த்தருடைய மகத்துவத்தினிமித்தம் சமுத்திரத்தினின்று ஆர்ப்பரிப்பார்கள்.ஏசா 12:1-6 ஏசா 25:1 ஏசா 26:1 ஏசா 27:2 ஏசா 35:2 ஏசா 35:10 ஏசா 40:9 ஏசா 42:10-12 ஏசா 44:23 ஏசா 51:11 ஏசா 52:7-9 ஏசா 54:1 எரே 30:19 எரே 31:12 எரே 33:11 செப் 3:14-20 சகரி 2:10
15ஆகையால் கர்த்தரை, வெளுக்குந்திசையிலும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தைச் சமுத்திரத் தீவுகளிலும் மகிமைப்படுத்துங்கள்.யோபு 35:9 யோபு 35:10 ஆபகூ 3:17 ஆபகூ 3:18 சகரி 13:8 சகரி 13:9 அப் 16:25 1பேது 1:7 1பேது 3:15 1பேது 4:12-14 வெளிப் 15:2-4
16நீதிபரனுக்கு மகிமை என்று பாடும் கீதங்களை பூமியின் கடையாந்தரத்திலிருந்து கேட்கிறோம்; நானோ, இளைத்துப்போனேன், இளைத்துப்போனேன்; எனக்கு ஐயோ! துரோகிகள் துரோகம் பண்ணுகிறார்கள்; துரோகிகள் மிகுதியாய்த் துரோகம்பண்ணுகிறார்கள் என்கிறேன்.ஏசா 26:15 ஏசா 45:22-25 ஏசா 52:10 ஏசா 66:19 ஏசா 66:20 சங் 2:8 சங் 22:27-31 சங் 67:7 சங் 72:8-11 சங் 98:3 சங் 107:1-43 மீகா 5:4 மாற் 13:27 அப் 13:47
17தேசத்துக் குடிகளே, திகிலும், படுகுழியும், கண்ணியும் உங்களுக்கு நேரிடும்.லேவி 26:21 லேவி 26:22 1இரா 19:17 எரே 8:3 எரே 48:43 எரே 48:44 எசே 14:21
18அப்பொழுது திகிலின் சத்தத்திற்கு விலகி ஓடுகிறவன் படுகுழியில் விழுவான்; படுகுழியிலிருந்து ஏறுகிறவன் கண்ணியில் அகப்படுவான்; உயர இருக்கும் மதகுகள் திறவுண்டு, பூமியின் அஸ்திபாரங்கள் குலுங்கும்.உபா 32:23-26 யோசு 10:10 யோசு 10:11 1இரா 20:29 1இரா 20:30 யோபு 18:8-16 யோபு 20:24 ஆமோ 5:19
19தேசம் நொறுங்கவே நொறுங்கும், தேசம் முறியவே முறியும், தேசம் அசையவே அசையும்.ஏசா 24:1-5 ஏசா 34:4-10 எரே 4:23-28 நாகூ 1:5 ஆபகூ 3:6 மத் 24:3 வெளிப் 20:11
20வெறித்தவனைப்போல தேசம் தள்ளாடி, ஒரு குடிலைப்போலப் பெயர்த்துப்போடப்படும்; அதின் பாதகம் அதின்மேல் பாரமாயிருக்கையால், அது விழுந்துபோகும், இனி எழுந்திராது.ஏசா 19:14 ஏசா 29:9 சங் 107:27
21அக்காலத்தில் கர்த்தர் உன்னதமான சேனையை உன்னதத்திலும், பூமியின் ராஜாக்களைப் பூமியிலும் விசாரிப்பார்.ஏசா 10:25-27 ஏசா 14:1 ஏசா 14:2 ஏசா 25:10-12 ஏசா 34:2-17 சங் 76:12 சங் 149:6-9 எசே 38:1-39 யோவே 3:9-17 யோவே 3:19-17 ஆகா 2:21 ஆகா 2:22 சகரி 14:12-19 வெளிப் 6:14-17 வெளிப் 17:14 வெளிப் 18:9 வெளிப் 19:18-21
22அவர்கள் கெபியில் ஏகமாய்க் கட்டுண்டவர்களாகச் சேர்ந்து, காவலில் அடைக்கப்பட்டு, அநேகநாள் சென்றபின்பு விசாரிக்கப்படுவார்கள்.ஏசா 24:17 ஏசா 2:19 யோசு 10:16 யோசு 10:17 யோசு 10:22-26
23அப்பொழுது சேனைகளின் கர்த்தர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் ஆளுகைசெய்வதால், சந்திரன் கலங்கும், சூரியன் நாணமடையும்; அவருடைய மூப்பர்களுக்கு முன்பாக மகிமை உண்டாயிருக்கும்.ஏசா 13:10 ஏசா 30:26 ஏசா 60:19 எசே 32:7 எசே 32:8 யோவே 2:31 யோவே 3:15 மாற் 13:24-26 வெளிப் 6:12-14 வெளிப் 21:23
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.