இணை வசன வேதாகமம்

Click to Subscribe

ஏசாயா 2

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா யூதாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட தரிசனம்.ஏசா 1:1 ஏசா 13:1 ஆமோ 1:1 மீகா 1:1 மீகா 6:9 ஆபகூ 1:1
2கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள்.மீகா 4:1-3
3திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார்; நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.எரே 31:6 எரே 50:4 எரே 50:5 சகரி 8:20-23
4அவர் ஜாதிகளுக்குள் நியாயந்தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்து கொள்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.ஏசா 11:3 ஏசா 11:4 1சாமு 2:10 சங் 82:8 சங் 96:13 சங் 110:6 யோவா 16:8-11 அப் 17:31 வெளிப் 19:11
5யாக்கோபின் வம்சத்தாரே, கர்த்தரின் வெளிச்சத்திலே நடப்போம் வாருங்கள்.ஏசா 2:3 ஏசா 50:10 ஏசா 50:11 ஏசா 60:1 ஏசா 60:19 சங் 89:15 லூக் 1:79 யோவா 12:35 யோவா 12:36 ரோம 13:12-14 எபே 5:8 1தெச 5:5 1தெச 5:6 1யோவா 1:7 வெளிப் 21:23 வெளிப் 21:24
6யாக்கோபின் வம்சத்தாராகிய உம்முடைய ஜனத்தைக் கைநெகிழ்ந்தீர்; அவர்கள் கீழ்த்திசையாரின் போதகத்தால் நிறைந்து, பெலிஸ்தரைப்போல் நாள்பார்க்கிறவர்களாயிருந்து, அந்நிய புத்திரர்மேல் பிரியப்படுகிறார்களே.உபா 31:16 உபா 31:17 2நாளா 15:2 2நாளா 24:20 புலம் 5:20 ரோம 11:1 ரோம 11:2 ரோம 11:20
7அவர்கள் தேசம் வெள்ளியினாலும் பொன்னினாலும் நிறைந்திருக்கிறது; அவர்கள் பொக்கிஷங்களுக்கு முடிவில்லை; அவர்கள் தேசம் குதிரைகளாலும் நிறைந்திருக்கிறது; அவர்கள் இரதங்களுக்கும் முடிவில்லை.உபா 17:16 உபா 17:17 1இரா 10:21-27 2நாளா 9:20-25 எரே 5:27 எரே 5:28 யாக் 5:1-3 வெளிப் 18:3 வெளிப் 18:11-17
8அவர்கள் தேசம் விக்கிரகங்களாலும் நிறைந்திருக்கிறது; தங்கள் கைகளின் கிரியையையும், தங்கள் விரல்கள் உண்டுபண்ணினதையும் பணிந்துகொள்ளுகிறார்கள்.ஏசா 57:5 2நாளா 27:2 2நாளா 28:2-4 2நாளா 28:23-25 2நாளா 33:3-7 எரே 2:28 எரே 11:13 எசே 16:23-25 ஓசி 12:11 அப் 17:16
9சிறியவனும் குனிகிறான், பெரியவனும் பணிகிறான்; ஆகையால் அவர்களுக்கு மன்னியாதிருப்பீர்.ஏசா 5:15 சங் 49:2 எரே 5:4 எரே 5:5 ரோம 3:23 வெளிப் 6:15-17
10கர்த்தரின் பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, நீ கன்மலையில் ஒதுங்கி, மண்ணில் ஒளித்துக்கொள்.ஏசா 2:19-21 ஏசா 10:3 ஏசா 42:22 நியா 6:1 நியா 6:2 யோபு 30:5 யோபு 30:6 ஓசி 10:8 லூக் 23:30 வெளிப் 6:15 வெளிப் 6:16
11நரரின் மேட்டிமையான கண்கள் தாழ்த்தப்படும், மனுஷரின் வீறாப்பும் தணியும்; கர்த்தர் ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார்.ஏசா 2:17 ஏசா 5:15 ஏசா 5:16 ஏசா 13:11 ஏசா 24:21 யோபு 40:10-12 சங் 18:27 எரே 50:31 எரே 50:32 மல்கி 4:1 லூக் 18:14 1பேது 5:5
12எல்லாம் தாழ்த்தப்படும்பொருட்டு சேனைகளுடைய கர்த்தரின் நாளானது பெருமையும் மேட்டிமையுமானவை எல்லாவற்றின்மேலும், உயர்ந்தவை எல்லாவற்றின்மேலும்,ஏசா 13:6 ஏசா 13:9 எரே 46:10 எசே 13:5 ஆமோ 5:18 மல்கி 4:5 1கொரி 5:5 1தெச 5:2
13லீபனோனிலுள்ள உயரமும் ஓங்கலுமான எல்லாக் கேதுருக்களின்மேலும், பாசானிலுள்ள எல்லாக் கர்வாலி மரங்களின்மேலும்,ஏசா 10:33 ஏசா 10:34 ஏசா 14:8 ஏசா 37:24 எசே 31:3-12 ஆமோ 2:5 சகரி 11:1 சகரி 11:2
14உன்னதமான எல்லாப் பர்வதங்களின்மேலும், உயரமான எல்லா மலைகளின்மேலும்,ஏசா 30:25 ஏசா 40:4 சங் 68:16 சங் 110:5 சங் 110:6 2கொரி 10:5
15உயர்ந்த எல்லாக் கோபுரத்தின்மேலும், அரணான எல்லா மதிலின்மேலும்,
16தர்ஷீசின் கப்பல்கள் எல்லாவற்றின்மேலும், எல்லாச் சித்திர விநோதங்களின்மேலும் வரும்.ஏசா 23:1 1இரா 10:22 1இரா 22:48 1இரா 22:49 சங் 47:7 வெளிப் 18:17-19
17அப்பொழுது நரரின் மேட்டிமை தாழ்ந்து, மனுஷரின் வீறாப்புத் தணியும்; கர்த்தர் ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார்.ஏசா 2:11 ஏசா 13:11 எரே 48:29 எரே 48:30 எசே 28:2-7
18விக்கிரகங்கள் கட்டோடே ஒழிந்துபோம்.ஏசா 27:9 எசே 36:25 எசே 37:23 ஓசி 14:8 செப் 1:3 சகரி 13:2
19பூமியைத் தத்தளிக்கப்பண்ணக் கர்த்தர் எழும்பும்போது, அவருடைய பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, கன்மலைகளின் கெபிகளிலும், பூமியின் குகைகளிலும் புகுந்துகொள்வார்கள்.ஏசா 2:10 ஏசா 2:21 1சாமு 13:6 1சாமு 14:11 எரே 16:16 ஓசி 10:8 மீகா 7:17 லூக் 23:30 எபிரெ 11:38 வெளிப் 6:15 வெளிப் 9:6
20பூமியைத் தத்தளிக்கப்பண்ணக் கர்த்தர் எழும்பும் அந்நாளிலே, அவருடைய பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, கன்மலைகளின் வெடிப்புகளிலும் குன்றுகளின் சந்துக்களிலும் புகுந்துகொள்ளும்படிக்கு,ஏசா 30:22 ஏசா 31:7 ஏசா 46:1 ஓசி 14:8 பிலிப் 3:7 பிலிப் 3:8
21மனுஷன் பணிந்துகொள்ளத் தனக்கு உண்டாக்கியிருந்த தன் வெள்ளி விக்கிரகங்களையும், தன் பொன் விக்கிரகங்களையும், மூஞ்சூறுகளுக்கும் துரிஞ்சில்களுக்கும் எறிந்துவிடுவான்.ஏசா 2:10 ஏசா 2:19 யாத் 33:22 யோபு 30:6 உன்ன 2:14
22நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதை விட்டுவிடுங்கள்; எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்.சங் 62:9 சங் 146:3 எரே 17:5
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.