| 1 | உன் நேசர் எங்கே போனார்? ஸ்திரீகளில் ரூபவதியே! உன் நேசர் எவ்விடம் போய்விட்டார்? உன்னோடேகூட நாங்களும் அவரைத் தேடுவோம். | உன்ன 6:4 உன்ன 6:9 உன்ன 6:10 உன்ன 1:8 உன்ன 2:2 உன்ன 5:9 உன்ன 1:4 ரூத் 1:16 ரூத் 1:17 ரூத் 2:12 ஏசா 2:5 எரே 14:8 சகரி 8:21-23 அப் 5:11-14 |
| 2 | தோட்டங்களில் மேயவும், லீலிபுஷ்பங்களைக் கொய்யவும், என் நேசர் தமது தோட்டத்துக்கும் கந்தவர்க்கப்பாத்திகளுக்கும் போனார். | உன்ன 6:11 உன்ன 4:12-16 உன்ன 5:1 ஏசா 58:11 ஏசா 61:11 மத் 18:20 மத் 28:20 |
| 3 | நான் என் நேசருடையவள், என் நேசர் என்னுடையவர்; அவர் லீலிபுஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார். | உன்ன 2:16 உன்ன 7:10 எபிரெ 8:10 வெளிப் 21:2-4 |
| 4 | என் பிரியமே! நீ திர்சாவைப் போல் செளந்தரியமும், எருசலேமைப் போல் வடிவமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமானவள். | உன்ன 6:10 உன்ன 2:14 உன்ன 4:7 உன்ன 5:2 எசே 16:13 எசே 16:14 எபே 5:27 |
| 5 | உன் கண்களை என்னைவிட்டுத் திருப்பு, அவைகள் என்னை வென்றது; உன் அளகபாரம் கீலேயாத் மலையிலே தழைமேயும் வெள்ளாட்டு மந்தையைப்போலிருக்கிறது. | ஆதி 32:26-28 யாத் 32:10 எரே 15:1 மத் 15:27 மத் 15:28 |
| 6 | உன் பற்கள் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும், ஒன்றானாலும் மலடாயிராமல் இரட்டைக் குட்டியீன்றவைகளுமான ஆட்டுமந்தையைப்போலிருக்கிறது. | உன்ன 4:2 மத் 21:19 மத் 25:30 |
| 7 | உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதளம்பழம்போலிருக்கிறது. | உன்ன 4:3 |
| 8 | ராஜஸ்திரீகள் அறுபதுபேரும், மறுமனையாட்டிகள் எண்பதுபேருமுண்டு; கன்னியருக்குத் தொகையில்லை. | 1இரா 11:1 2நாளா 11:21 சங் 45:14 வெளிப் 7:9 |
| 9 | என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே; அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை; அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள்; குமாரத்திகள் அவளைக் கண்டு, அவளை வாழ்த்தினார்கள்; ராஜஸ்திரீகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் போற்றினார்கள். | உன்ன 2:14 உன்ன 5:2 |
| 10 | சந்திரனைப்போல் அழகும், சூரியனைப்போல் பிரகாசமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமுள்ளவளாய், அருணோதயம் போல் உதிக்கிற இவள் யார்? | உன்ன 3:6 உன்ன 8:5 ஏசா 63:1 வெளிப் 21:10 வெளிப் 21:11 |
| 11 | பள்ளத்தாக்கிலே பழுத்த கனிகளைப் பார்க்கவும், திராட்சச்செடிகள் துளிர்விட்டு, மாதளஞ்செடிகள் பூத்ததா என்று அறியவும், வாதுமைத் தோட்டத்துக்குப் போனேன். | உன்ன 6:2 உன்ன 4:12-15 உன்ன 5:1 ஆதி 2:9 சங் 92:12-15 யோவா 15:16 |
| 12 | நினையாததுக்குமுன்னே என் ஆத்துமா என்னை அம்மினதாபின் இரதங்களுக்கு ஒப்பாக்கிற்று. | எரே 31:18-20 ஓசி 11:8 ஓசி 11:9 லூக் 15:20 |
| 13 | திரும்பிவா, திரும்பிவா, சூலமித்தியே! நாங்கள் உன்னைப் பார்க்கும்படிக்கு, திரும்பிவா, திரும்பிவா. சூலமித்தியில் நீங்கள் என்னத்தைப் பார்க்கிறீர்கள்? அவள் இரண்டு சேனையின் கூட்டத்துக்குச் சமானமானவள். | உன்ன 2:14 எரே 3:12-14 எரே 3:22-14 ஓசி 14:1-4 |