| 1 | பரிமளதைலத்தைப்பார்க்கிலும் நற்கீர்த்தியும், ஒருவனுடைய ஜனனநாளைப்பார்க்கிலும் மரணநாளும் நல்லது. | நீதி 15:30 நீதி 22:1 ஏசா 56:5 லூக் 10:20 எபிரெ 11:2 எபிரெ 11:39 |
| 2 | விருந்து வீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம்; இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்; உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான். | ஆதி 48:1-22 ஆதி 49:2-33 ஆதி 50:15-17 யோபு 1:4 யோபு 1:5 ஏசா 5:11 ஏசா 5:12 ஏசா 22:12-14 ஆமோ 6:3-6 மத் 5:4 மத் 14:6-12 1பேது 4:3 1பேது 4:4 |
| 3 | நகைப்பைப் பார்க்கிலும் துக்கிப்பு நலம்; முகதுக்கத்தினாலே இருதயம் சீர்ப்படும். | சங் 119:67 சங் 119:71 சங் 126:5 சங் 126:6 எரே 31:8 எரே 31:9 எரே 31:15-20 எரே 50:4 எரே 50:5 தானி 9:3-19 தானி 10:2 தானி 10:3 தானி 10:19 சகரி 12:10-14 லூக் 6:21 லூக் 6:25 யோவா 16:20-22 2கொரி 7:9-11 யாக் 4:8-10 |
| 4 | ஞானிகளின் இருதயம் துக்கவீட்டிலே இருக்கும்; மூடரின் இருதயம் களிப்பு வீட்டிலே இருக்கும். | நெகே 2:2-5 ஏசா 53:3 ஏசா 53:4 மத் 8:14-16 மாற் 5:38-43 லூக் 7:12 லூக் 7:13 யோவா 11:31-35 |
| 5 | ஒருவன் மூடரின் பாட்டைக் கேட்பதிலும், ஞானியின் கடிந்துகொள்ளுதலைக் கேட்பது நலம். | சங் 141:5 நீதி 9:8 நீதி 13:13 நீதி 15:31 நீதி 15:32 நீதி 17:10 நீதி 27:6 வெளிப் 3:19 |
| 6 | மூடனின் நகைப்பு பானையின்கீழ் எரிகிற முள்ளுகளின் படபடப்பைப்போலிருக்கும்; இதுவும் மாயையே. | பிரச 2:2 சங் 58:9 சங் 118:12 ஏசா 65:13-15 ஆமோ 8:10 லூக் 6:25 லூக் 16:25 2பேது 2:13-17 யூதா 1:12 யூதா 1:13 |
| 7 | இடுக்கணானது ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்; பரிதானம் இருதயத்தைக் கெடுக்கும். | உபா 28:33 உபா 28:34 உபா 28:65 |
| 8 | ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் அதின் முடிவு நல்லது; பெருமையுள்ளவனைப் பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன். | சங் 126:5 சங் 126:6 ஏசா 10:24 ஏசா 10:25 ஏசா 10:28-34 லூக் 16:25 யாக் 5:11 1பேது 1:13 |
| 9 | உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும். | 1சாமு 25:21 1சாமு 25:22 2சாமு 19:43 எஸ்தர் 3:5 எஸ்தர் 3:6 நீதி 14:17 நீதி 16:32 யோனா 4:9 எபே 4:26 எபே 4:27 யாக் 1:19 |
| 10 | இந்நாட்களைப்பார்க்கிலும் முன் நாட்கள் நலமாயிருந்தது என்று சொல்லாதே; நீ இதைக்குறித்துக் கேட்பது ஞானமல்ல. | நியா 6:13 எரே 44:17-19 |
| 11 | சுதந்தரத்தோடே ஞானம் நல்லது; சூரியனைக் காண்கிறவர்களுக்கு இதினாலே பிரயோஜனமுண்டு. | பிரச 9:15-18 1இரா 3:6-9 லூக் 16:8 லூக் 16:9 1தீமோ 6:17-19 |
| 12 | ஞானம் கேடகம், திரவியமும் கேடகம்; ஞானம் தன்னை உடையவர்களுக்கு ஜீவனைத் தரும்; இதுவே அறிவின் மேன்மை. | யோபு 1:10 யோபு 22:21-25 நீதி 2:7 நீதி 2:11 நீதி 14:20 நீதி 18:10 நீதி 18:11 ஏசா 33:6 |
| 13 | தேவனுடைய செயலைக் கவனித்துப்பார்; அவர் கோணலாக்கினதை நேர்மையாக்கத்தக்கவன் யார்? | யோபு 37:14 சங் 8:3 சங் 107:43 ஏசா 5:12 |
| 14 | வாழ்வுகாலத்தில் நன்மையை அநுபவித்திரு, தாழ்வுகாலத்தில் சிந்தனைசெய்; மனுஷன் தனக்குப்பின் வருவதொன்றையும் கண்டுபிடியாதபடிக்கு தேவன் இவ்விரண்டையும் ஒன்றுக்கொன்று எதிரிடையாக வைத்திருக்கிறார். | பிரச 3:4 உபா 28:47 சங் 30:11 சங் 30:12 சங் 40:3 மத் 9:13 யோவா 16:22 யோவா 16:23 யாக் 5:13 |
| 15 | இவை எல்லாவற்றையும் என் மாயையின் நாட்களில் கண்டேன்; தன் நீதியிலே கெட்டுப்போகிற நீதிமானுமுண்டு, தன் பாவத்திலே நீடித்திருக்கிற பாவியுமுண்டு. | பிரச 2:23 பிரச 5:16 பிரச 5:17 பிரச 6:12 ஆதி 47:9 சங் 39:6 |
| 16 | மிஞ்சின நீதிமானாயிராதே, உன்னை அதிக ஞானியுமாக்காதே; உன்னை நீ ஏன் கெடுத்துக்கொள்ளவேண்டும்? | நீதி 25:16 மத் 6:1-7 மத் 9:14 மத் 15:2-9 மத் 23:5 மத் 23:23 மத் 23:24 மத் 23:29 லூக் 18:12 ரோம 10:2 பிலிப் 3:6 1தீமோ 4:3 |
| 17 | மிஞ்சின துஷ்டனாயிராதே, அதிக பேதையுமாயிராதே; உன் காலத்துக்கு முன்னே நீ ஏன் சாகவேண்டும்? | எரே 2:33 எரே 2:34 எசே 8:17 எசே 16:20 யாக் 1:21 |
| 18 | நீ இதைப் பற்றிக்கொள்வதும் அதைக் கைவிடாதிருப்பதும் நலம்; தேவனுக்குப் பயப்படுகிறவன் இவைகள் எல்லாவற்றினின்றும் காக்கப்படுவான். | பிரச 11:6 நீதி 4:25-27 நீதி 8:20 லூக் 11:42 |
| 19 | நகரத்திலுள்ள பத்து அதிபதிகளைப் பார்க்கிலும், ஞானம் ஞானியை அதிக பெலவானாக்கும். | பிரச 9:15-18 2சாமு 20:16-22 நீதி 21:22 நீதி 24:5 கொலோ 1:9-11 |
| 20 | ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை. | 1இரா 8:46 2நாளா 6:36 யோபு 15:14-16 சங் 130:3 சங் 143:2 நீதி 20:9 ஏசா 53:6 ரோம 3:23 யாக் 3:2 1யோவா 1:8-10 |
| 21 | சொல்லப்படும் எல்லா வார்த்தைகளையும் கவனியாதே; கவனித்தால் உன் வேலைக்காரன் உன்னை நிந்திப்பதைக் கேள்விப்படவேண்டியதாகும். | 2சாமு 19:19 |
| 22 | அநேகந்தரம் நீயும் பிறரை நிந்தித்தாயென்று, உன் மனதுக்குத் தெரியுமே. | 1இரா 2:44 மத் 15:19 மத் 18:32-35 யோவா 8:7-9 யாக் 3:9 |
| 23 | இவை எல்லாவற்றையும் ஞானத்தினால் சோதித்துப்பார்த்தேன்; நான் ஞானவானாவேன் என்றேன், அது எனக்குத் தூரமாயிற்று. | ஆதி 3:5 1இரா 3:11 1இரா 3:12 1இரா 11:1-8 ரோம 1:22 1கொரி 1:20 |
| 24 | தூரமும் மகா ஆழமுமாயிருக்கிறதைக் கண்டடைகிறவன் யார்? | உபா 30:11-14 யோபு 11:7 யோபு 11:8 யோபு 28:12-23 யோபு 28:28-23 சங் 36:6 சங் 139:6 ஏசா 55:8 ஏசா 55:9 ரோம 11:33 1தீமோ 6:16 |
| 25 | ஞானத்தையும், காரணகாரியத்தையும் விசாரித்து ஆராய்ந்து அறியவும், மதிகேட்டின் ஆகாமியத்தையும் புத்திமயக்கத்தின் பைத்தியத்தையும் அறியவும் என் மனதைச் செலுத்தினேன். | பிரச 1:13-17 பிரச 2:1-3 பிரச 2:12-3 பிரச 2:20-3 |
| 26 | கண்ணிகளும் வலைகளுமாகிய நெஞ்சமும், கயிறுகளுமாகிய கைகளுமுடைய ஸ்திரீயானவள், சாவிலும் அதிக கசப்புள்ளவளென்று கண்டேன்; தேவனுக்கு முன்பாக சற்குணனாயிருக்கிறவன் அவளுக்குத் தப்புவான்; பாவியோ அவளால் பிடிபடுவான். | நியா 16:18-21 நீதி 2:18 நீதி 2:19 நீதி 5:3-5 நீதி 7:21-27 நீதி 9:18 நீதி 22:14 நீதி 23:27 நீதி 23:28 |
| 27 | காரியத்தை அறியும்படிக்கு ஒவ்வொன்றாய் விசாரணைபண்ணி, இதோ, இதைக் கண்டுபிடித்தேன் என்று பிரசங்கி சொல்லுகிறான்: | பிரச 1:1 பிரச 1:2 பிரச 12:8-10 |
| 28 | என் மனம் இன்னும் ஒன்றைத் தேடுகிறது, அதை நான் கண்டுபிடிக்கவில்லை; ஆயிரம் பேருக்குள்ளே ஒரு புருஷனைக் கண்டேன்; இவர்களெல்லாருக்குள்ளும் ஒரு ஸ்திரீயை நான் காணவில்லை. | பிரச 7:23 பிரச 7:24 ஏசா 26:9 |
| 29 | இதோ, தேவன் மனுஷனைச் செம்மையானவனாக உண்டாக்கினார்; அவர்களோ அநேக உபாயதந்திரங்களைத் தேடிக்கொண்டார்கள்; இதைமாத்திரம் கண்டேன். | ஆதி 1:26 ஆதி 1:27 ஆதி 5:1 |