இணை வசன வேதாகமம்

Click to Subscribe

பிரசங்கி 5

                   
புத்தகங்களைக் காட்டு
1நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன் நடையைக் காத்துக்கொள்; மூடர் பலியிடுவதுபோலப் பலியிடுவதைப்பார்க்கிலும் செவிகொடுக்கச் சேர்வதே நலம். தாங்கள் செய்கிறது தீமையென்று அறியாதிருக்கிறார்கள்.ஆதி 28:16 ஆதி 28:17 யாத் 3:5 லேவி 10:3 யோசு 5:15 2நாளா 26:16 சங் 89:7 ஏசா 1:12-20 1கொரி 11:22 எபிரெ 12:28 எபிரெ 12:29
2தேவசமுகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு; தேவன் வானத்திலிருக்கிறார்; நீ பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக.ஆதி 18:27 ஆதி 18:30 ஆதி 18:32 ஆதி 28:20 ஆதி 28:22 எண் 30:2-5 நியா 11:30 1சாமு 14:24-45 மாற் 6:23
3தொல்லையின் திரட்சியினால் சொப்பனம் பிறக்கிறதுபோல, வார்த்தைகளின் திரட்சியினால் மூடனுடைய சத்தம் பிறக்கும்.பிரச 10:12-14 நீதி 10:19 நீதி 15:2
4நீ தேவனுக்கு ஒரு பொருத்தனை பண்ணிக்கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே; அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை; நீ நேர்ந்துகொண்டதைச் செய்.ஆதி 28:20 ஆதி 35:1 ஆதி 35:3 எண் 30:2 உபா 23:21-23 சங் 50:14 சங் 76:11 சங் 119:106 ஏசா 19:21 மத் 5:33
5நீ நேர்ந்துகொண்டதைச் செய்யாமற் போவதைப்பார்க்கிலும், நேர்ந்துகொள்ளாதிருப்பதே நலம்.உபா 23:22 நீதி 20:25 அப் 5:4
6உன் மாம்சத்தைப் பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடங்கொடாதே; அது புத்திபிசகினால் செய்தது என்று தூதனுக்குமுன் சொல்லாதே; தேவன் உன் வார்த்தைகளினாலே கோபங்கொண்டு, உன் கைகளின் கிரியையை அழிப்பானேன்?பிரச 5:1 பிரச 5:2 யாக் 1:26 யாக் 3:2
7அநேக சொப்பனங்கள் மாயையாயிருப்பதுபோல, அநேக வார்த்தைகளும், வியர்த்தமாயிருக்கும்; ஆகையால் நீ தேவனுக்குப் பயந்திரு.பிரச 5:3 மத் 12:36
8ஒரு தேசத்தில் ஏழைகள் ஒடுக்கப்படுகிறதையும், நியாயமும் நீதியும் புரட்டப்படுகிறதையும் நீ காண்பாயானால், அதைக்குறித்து ஆச்சரியப்படாதே; உயர்ந்தவன்மேல் உயர்ந்தவன் காவலாளியாயிருக்கிறான்; அவர்கள்மேல் உயர்ந்தவரும் ஒருவருண்டு.பிரச 3:16 பிரச 4:1 சங் 12:5 சங் 55:9 சங் 58:11 நீதி 8:17 ஆபகூ 1:2 ஆபகூ 1:3 ஆபகூ 1:13
9பூமியில் விளையும் பலன் யாவருக்குமுரியது; ராஜாவும் வயலின் பலனால் ஆதரிக்கப்படுகிறான்.ஆதி 1:29 ஆதி 1:30 ஆதி 3:17-19 சங் 104:14 சங் 104:15 சங் 115:16 நீதி 13:23 நீதி 27:23-27 நீதி 28:19 எரே 40:10-12
10பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே.பிரச 4:8 பிரச 6:7 சங் 52:1 சங் 52:7 சங் 62:10 நீதி 30:15 நீதி 30:16 ஆபகூ 2:5-7 மத் 6:19 மத் 6:24 லூக் 12:15 1தீமோ 6:10
11பொருள் பெருகினால் அதைத் தின்கிறவர்களும் பெருகுகிறார்கள்; அதை உடையவர்கள் தங்கள் கண்களினால் அதைக் காண்பதேயன்றி அவர்களுக்குப் பிரயோஜனம் என்ன?ஆதி 12:16 ஆதி 13:2 ஆதி 13:5-7 1இரா 4:22 1இரா 4:23 1இரா 5:13-16 நெகே 5:17 நெகே 5:18 சங் 119:36 சங் 119:37
12வேலைசெய்கிறவன் கொஞ்சமாய்ப் புசித்தாலும், அதிகமாய்ப் புசித்தாலும் அவன் நித்திரை இன்பமாயிருக்கும்; செல்வனுடைய பெருக்கோ அவனைத் தூங்கவொட்டாது.சங் 4:8 சங் 127:2 நீதி 3:24 எரே 31:26
13சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு கொடிய தீங்குமுண்டு; அதாவது, ஐசுவரியமானது அதை உடையவர்களுக்கே கேடுண்டாகும்படி சேகரித்து வைக்கப்படுவதாம்.பிரச 4:8 பிரச 6:1 பிரச 6:2
14அந்த ஐசுவரியம் விக்கினத்தால் அழிந்துபோகிறது; அவன் ஒரு புத்திரனைப் பெறுகிறான்; அவன் கையில் யாதொன்றும் இல்லை.பிரச 2:26 யோபு 5:5 யோபு 20:15-29 யோபு 27:16 யோபு 27:17 சங் 39:6 நீதி 23:5 ஆகா 1:9 ஆகா 2:16 ஆகா 2:17 மத் 6:19 மத் 6:20
15தன் தாயின் கர்ப்பத்திலிருந்து நிர்வாணியாய் வந்தான்; வந்ததுபோலவே நிர்வாணியாய்த் திரும்பப் போவான்; அவன் தன் பிரயாசத்தினால் உண்டான பலனொன்றையும் தன் கையிலே எடுத்துக் கொண்டுபோவதில்லை.யோபு 1:21 சங் 49:17 லூக் 12:20 1தீமோ 6:7
16அவன் வந்த பிரகாரமே போகிறான், இதுவும் கொடுமையான தீங்கு; அவன் காற்றுக்குப் பிரயாசப்பட்டதினால் அவனுக்கு லாபம் என்ன?பிரச 5:13 பிரச 2:22 பிரச 2:23
17அவன் தன் நாட்களிலெல்லாம் இருளிலே புசித்து, மிகவும் சலித்து, நோயும் துன்பமும் அடைகிறான்.ஆதி 3:17 1இரா 17:12 யோபு 21:25 சங் 78:33 சங் 102:9 சங் 127:2 எசே 4:16 எசே 4:17
18இதோ, உயிரோடிருக்கும்படி தேவன் அருளிச்செய்த நாளெல்லாம் மனுஷன் புசித்துக் குடித்து, சூரியனுக்குக் கீழே தான் படும் பிரயாசம் அனைத்தின் பலனையும் அநுபவிப்பதே நலமும் உத்தமுமான காரியமென்று நான் கண்டேன், இதுவே அவன் பங்கு.பிரச 2:24 பிரச 3:12 பிரச 3:13 பிரச 3:22 பிரச 8:15 பிரச 9:7 பிரச 11:9 1தீமோ 6:17
19தேவன் ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன்அதிலே புசிக்கவும், தன் பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.பிரச 2:24 பிரச 3:13 பிரச 6:2 உபா 8:18 1இரா 3:13
20அவனுடைய இருதயத்திலே மகிழும்படி தேவன் அவனுக்கு அநுக்கிரகம் பண்ணுகிறபடியினால், அவன் தன் ஜீவனுள்ள நாட்களை அதிகமாய் நினையான்.சங் 37:16
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.