| 1 | இதற்குப்பின்பு நான் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் கொடுமைகளையெல்லாம் சிந்தித்துப்பார்த்தேன்; இதோ, ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைக் கண்டேன், அவர்களைத் தேற்றுவாரில்லை; ஒடுக்குகிறவர்கள் பட்சத்தில் பெலம் இருந்தது, அப்படியிருந்தும் தேற்றுவாரில்லை. | யோபு 6:29 மல்கி 3:18 |
| 2 | ஆதலால் இன்னும் உயிரோடிருந்து பிழைக்கிறவர்களைப்பார்க்கிலும் முன்னமே காலஞ்சென்று மரித்தவர்களையே பாக்கியவான்கள் என்றேன். | பிரச 2:17 பிரச 9:4-6 யோபு 3:17-21 |
| 3 | இவ்விருதிறத்தாருடைய நிலைமையைப்பார்க்கிலும் இன்னும் பிறவாதவனுடைய நிலைமையே வாசி; அவன் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் துர்ச்செய்கைகளைக் காணவில்லையே. | பிரச 6:3-5 யோபு 3:10-16 யோபு 10:18 யோபு 10:19 எரே 20:17 எரே 20:18 மத் 24:19 லூக் 23:29 |
| 4 | மனுஷன் படும் எல்லாப் பிரயாசமும், பயன்படும் எல்லாக் கிரியையும், அயலானுடைய பொறாமைக்கு ஏதுவாயிருக்கிறதை நான் கண்டேன்; இதுவும் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது. | ஆதி 4:4-8 ஆதி 37:2-11 1சாமு 18:8 1சாமு 18:9 1சாமு 18:14-16 1சாமு 18:29-16 1சாமு 18:30-16 நீதி 27:4 மத் 27:18 அப் 7:9 யாக் 4:5 1யோவா 3:12 |
| 5 | மூடன் தன் கைகளைக் கட்டிக்கொண்டு, தன் சதையையே தின்கிறான். | நீதி 6:10 நீதி 6:11 நீதி 12:27 நீதி 13:4 நீதி 20:4 நீதி 24:33 நீதி 24:34 |
| 6 | வருத்தத்தோடும் மனச்சஞ்சலத்தோடும் இரண்டு கைப்பிடியும் நிறையக்கொண்டிருப்பதைப்பார்க்கிலும், அமைச்சலோடு ஒரு கைப்பிடி நிறையக் கொண்டிருப்பதே நலம். | சங் 37:16 நீதி 15:16 நீதி 15:17 நீதி 16:8 நீதி 17:1 |
| 7 | பின்பு நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே மாயையான வேறொரு காரியத்தைக் கண்டேன். | பிரச 4:1 சங் 78:33 சகரி 1:6 |
| 8 | ஒருவன் ஒண்டிக்காரனாயிருக்கிறான்; அவனுக்கு உடனாளியுமில்லை, அவனுக்குப் பிள்ளையும் சகோதரனுமில்லை; அப்படியிருந்தும் அவன் படும் பிரயாசத்துக்கு முடிவில்லை; அவன் கண் ஐசுவரியத்தால் திருப்தியாகிறதுமில்லை; நான் ஒரு நன்மையையும் அநுபவியாமல் யாருக்காகப் பிரயாசப்படுகிறேன் என்று அவன் சிந்திக்கிறதுமில்லை; இதுவும் மாயை, தீராத தொல்லை. | பிரச 4:9-12 ஆதி 2:18 ஏசா 56:3-5 |
| 9 | ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும். | ஆதி 2:18 யாத் 4:14-16 எண் 11:14 நீதி 27:17 ஆகா 1:14 மாற் 6:7 அப் 13:2 அப் 15:39 அப் 15:40 1கொரி 12:18-21 |
| 10 | ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே. | யாத் 32:2-4 யாத் 32:21-4 உபா 9:19 உபா 9:20 1சாமு 23:16 2சாமு 11:27 2சாமு 12:7-14 யோபு 4:3 யோபு 4:4 ஏசா 35:3 ஏசா 35:4 லூக் 22:31 லூக் 22:32 கலா 2:11-14 கலா 6:1 1தெச 4:18 1தெச 5:11 |
| 11 | இரண்டுபேராய்ப் படுத்துக்கொண்டிருந்தால் அவர்களுக்குச் சூடுண்டாகும்; ஒண்டியாயிருக்கிறவனுக்குச் சூடுண்டாவது எப்படி? | 1இரா 1:1 1இரா 1:2 |
| 12 | ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்து நிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது. | 2சாமு 23:9 2சாமு 23:16 2சாமு 23:18 2சாமு 23:19 2சாமு 23:23 தானி 3:16 தானி 3:17 எபே 4:3 |
| 13 | இனி ஆலோசனையைக் கேளாத கிழவனும் மூடனுமாகிய ராஜாவைப்பார்க்கிலும், ஏழையும் ஞானியுமாகிய இளைஞனே வாசி. | பிரச 9:15 பிரச 9:16 ஆதி 37:2 நீதி 19:1 நீதி 28:6 நீதி 28:15 நீதி 28:16 |
| 14 | அரசாளச் சிறைச்சாலையிலிருந்து புறப்படுவாருமுண்டு; ராஜாங்கத்தில் பிறந்து ஏழையாவாருமுண்டு. | ஆதி 41:14 ஆதி 41:33-44 யோபு 5:11 சங் 113:7 சங் 113:8 |
| 15 | சூரியனுக்குக்கீழே ஜீவனுள்ளோர் யாவரும் ராஜாவின் பட்டத்திற்கு வரப்போகிற பிள்ளையின் பட்சத்தில் சார்ந்திருப்பதைக் கண்டேன். | 2சாமு 15:6 |
| 16 | அவர்களுக்குமுன் அப்படிச் செய்த ஜனங்களின் இலக்கத்திற்கு முடிவில்லை; இனி இருப்பவர்கள் இவன்மேலும் பிரியம் வைக்காமற்போவார்கள்; இதுவும் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது. | 2சாமு 15:12 2சாமு 15:13 1இரா 1:5-7 1இரா 1:40-7 1இரா 12:10-16 |