| 1 | உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய். | உபா 15:7-11 நீதி 11:24 நீதி 11:25 நீதி 22:9 ஏசா 32:8 |
| 2 | ஏழுபேருக்கும் எட்டுபேருக்கும் பங்கிட்டுக்கொடு; பூமியின்மேல் என்ன ஆபத்து நேரிடுமோ உனக்குத் தெரியாது. | நெகே 8:10 எஸ்தர் 9:19 எஸ்தர் 9:22 சங் 112:9 லூக் 6:30-35 1தீமோ 6:18 1தீமோ 6:19 |
| 3 | மேகங்கள் நிறைந்திருந்தால் மழையைப் பூமியின்மேல் பொழியும்; மரமானது தெற்கே விழுந்தாலும் வடக்கே விழுந்தாலும், விழுந்த இடத்திலேயே மரம் கிடக்கும். | 1இரா 18:45 சங் 65:9-13 ஏசா 55:10 ஏசா 55:11 1யோவா 3:17 |
| 4 | காற்றைக் கவனிக்கிறவன் விதைக்கமாட்டான்; மேகங்களை நோக்குகிறவன் அறுக்கமாட்டான். | நீதி 3:27 நீதி 20:4 நீதி 22:13 |
| 5 | ஆவியின் வழி இன்னதென்றும், கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாதிருக்கிறதுபோலவே, எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறியாய். | யோவா 3:8 |
| 6 | காலையிலே உன் விதையை விதை; மாலையிலே உன் கையை நெகிழவிடாதே; அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும், இரண்டும் சரியாய்ப் பயன்படுமோ என்றும் நீ அறியாயே. | பிரச 9:10 ஏசா 55:10 ஓசி 10:12 மாற் 4:26-29 யோவா 4:36-38 2கொரி 9:6 2தீமோ 4:2 |
| 7 | வெளிச்சம் இன்பமும், சூரியனைக் காண்பது கண்களுக்குப் பிரியமுமாமே. | யோபு 33:28 யோபு 33:30 சங் 56:13 நீதி 15:30 நீதி 29:13 |
| 8 | மனுஷன் அநேக வருஷம் ஜீவித்து, அவைகளிலெல்லாம் மகிழ்ச்சியாயிருந்தாலும், அவன் இருளின் நாட்களையும் நினைக்கவேண்டும்; அவைகள் அநேகமாயிருக்கும்; வந்து சம்பவிப்பதெல்லாம் மாயையே. | பிரச 6:6 பிரச 8:12 |
| 9 | வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி. | 1இரா 18:27 1இரா 22:15 லூக் 15:12 லூக் 15:13 |
| 10 | நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் மாம்சத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு; இளவயதும் வாலிபமும் மாயையே. | பிரச 12:1 யோபு 13:26 சங் 25:7 2பேது 3:11-14 |