இணை வசன வேதாகமம்

Click to Subscribe

யோபு 9

                   
புத்தகங்களைக் காட்டு
1அதற்கு யோபு பிரதியுத்தரமாக:யோபு 4:17 யோபு 14:3 யோபு 14:4 யோபு 25:4 யோபு 32:2 யோபு 33:9 யோபு 34:5 1இரா 8:46 சங் 130:3 சங் 143:2 ரோம 3:20
2ஆம், காரியம் இப்படியிருக்கிறது என்று அறிவேன்; தேவனுக்கு முன்பாக மனுஷன் நீதிமானாயிருப்பதெப்படி?
3அவர் அவனோடே வழக்காடச் சித்தமாயிருந்தால், ஆயிரத்தில் ஒன்றுக்காகிலும் அவருக்கு உத்தரவு சொல்லமாட்டானே.யோபு 9:20 யோபு 9:32 யோபு 9:33 யோபு 10:2 யோபு 23:3-7 யோபு 31:35-37 யோபு 33:13 யோபு 34:14 யோபு 34:15 யோபு 40:2 ஏசா 57:15 ஏசா 57:16 ரோம 9:20
4அவர் இருதயத்தில் ஞானமுள்ளவர், பெலத்தில் பராக்கிரமமுள்ளவர்; அவருக்கு விரோதமாகத் தன்னைக் கடினப்படுத்தி வாழ்ந்தவன் யார்?யோபு 9:19 யோபு 36:5 சங் 104:24 சங் 136:5 தானி 2:20 தானி 4:34-37 ரோம 11:33 எபே 1:8 எபே 1:19 எபே 3:10 எபே 3:20 யூதா 1:24 யூதா 1:25
5அவர் பர்வதங்களைச் சடிதியாய்ப் பேர்க்கிறார்; தம்முடைய கோபத்தில் அவைகளைப் புரட்டிப்போடுகிறார்.யோபு 28:9 சங் 46:2 சங் 68:8 சங் 114:6 ஏசா 40:12 ஆபகூ 3:6 ஆபகூ 3:10 சகரி 4:7 மத் 21:21 1கொரி 13:2 வெளிப் 6:14 வெளிப் 11:13
6பூமியின் தூண்கள் அதிரத்தக்கதாய் அதை அதின் ஸ்தானத்தினின்று அசையப்பண்ணுகிறார்.ஏசா 2:19 ஏசா 2:21 ஏசா 13:13 ஏசா 13:14 ஏசா 24:1 ஏசா 24:19 ஏசா 24:20 ஆகா 2:6 ஆகா 2:21 எபிரெ 12:26 வெளிப் 20:11
7அவர் சூரியனுக்குக் கட்டளையிட அது உதிக்காதிருக்கும்; அவர் நட்சத்திரங்களை மறைத்துப்போடுகிறார்.யாத் 10:21 யாத் 10:22 யோசு 10:12 தானி 4:35 ஆமோ 4:13 ஆமோ 8:9 மத் 24:29
8அவர் ஒருவரே வானங்களை விரித்து, சமுத்திர அலைகளின்மேல் நடக்கிறவர்.யோபு 37:18 ஆதி 1:6 ஆதி 1:7 சங் 33:6 சங் 104:2 சங் 104:3 ஏசா 40:22 ஏசா 42:5 ஏசா 44:24 எரே 10:11 சகரி 12:1
9அவர் துருவச்சக்கர நட்சத்திரங்களையும், மிருகசீரிஷத்தையும், அறுமீனையும், தட்சண மண்டலங்களையும் உண்டாக்கினவர்.யோபு 38:31 யோபு 38:32-41 ஆதி 1:16 சங் 147:4 ஆமோ 5:8
10ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணி முடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.யோபு 5:9 யோபு 26:12-14 யோபு 37:23 சங் 71:15 சங் 72:18 பிரச 3:11 ஏசா 40:26-28 ரோம 11:33 எபே 3:20
11இதோ, அவர் என் அருகில் போகிறார், நான் அவரைக் காணேன்; அவர் கடந்துபோகிறார், நான் அவரை அறியேன்.யோபு 23:8 யோபு 23:9 யோபு 35:14 சங் 77:19 1தீமோ 6:16
12இதோ, அவர் பறித்துக்கொண்டுபோகிறார், அவரை மறிப்பவன் யார்? நீர் என்ன செய்கிறீர் என்று அவரைக் கேட்பவன் யார்?யோபு 23:13 யோபு 34:29 தானி 4:35 எபே 1:11
13தேவன் தம்முடைய கோபத்தைத் திருப்பமாட்டார்; ஒருவருக்கொருவர் துணைநிற்கிற அகங்காரிகள் அவருக்கு அடங்கவேண்டும்.யோபு 26:12 யோபு 40:9-11 ஏசா 30:7 ஏசா 31:2 ஏசா 31:3 யாக் 4:6 யாக் 4:7
14இப்படியிருக்க, அவருக்கு மறுமொழி கொடுக்கவும், அவரோடே வழக்காடும் வார்த்தைகளைத் தெரிந்து கொள்ளவும் நான் எம்மாத்திரம்?யோபு 4:19 யோபு 25:6 1இரா 8:27
15நான் நீதிமானாயிருந்தாலும் அவரோடே வழக்காடாமல், என் நியாயாதிபதியினிடத்தில் இரக்கத்துக்குக் கெஞ்சுவேன்.யோபு 10:15 1கொரி 4:4
16நான் கெஞ்ச. அவர் எனக்கு உத்தரவு அருளினாலும், அவர் என் விண்ணப்பத்துக்குச் செவிகொடுத்தார் என்று நம்பேன்.சங் 18:6 சங் 66:18-20 சங் 116:1 சங் 116:2
17அவர் புசலினால் என்னை முறிக்கிறார்; முகாந்தரமில்லாமல் அநேகம் காயங்களை எனக்கு உண்டாக்குகிறார்.யோபு 16:14 சங் 29:5 சங் 42:7 சங் 83:15 ஏசா 28:17 எரே 23:19 எசே 13:13 மத் 7:27 மத் 12:20
18நான் மூச்சுவிட எனக்கு இடங்கொடாமல், கசப்பினால் என்னை நிரப்புகிறார்.யோபு 7:19 சங் 39:13 சங் 88:7 சங் 88:15-18 புலம் 3:3 புலம் 3:18
19பெலத்தைப் பார்த்தால், அவரே பெலத்தவர்; நியாயத்தைப் பார்த்தால் என் பட்சத்தில் சாட்சி சொல்லுகிறவன் யார்?யோபு 9:4 யோபு 36:17-19 யோபு 40:9 யோபு 40:10 சங் 62:11 மத் 6:13 1கொரி 1:25 1கொரி 10:22
20நான் என்னை நீதிமானாக்கினாலும் என் வாயே என்னைக் குற்றவாளியாக்கும்; நான் உத்தமன் என்று சொன்னாலும், நான் மாறுபாடானவன் என்று அது சாட்சிகொடுக்கும்.யோபு 9:2 யோபு 4:17 யோபு 32:1 யோபு 32:2 சங் 130:3 சங் 143:2 லூக் 10:29 லூக் 16:15
21நான் உத்தமனென்றாலும் என் உள்ளத்தை நான் அறியேன்; என் ஜீவனை அரோசிப்பேன்.சங் 139:23 சங் 139:24 நீதி 28:26 எரே 17:9 எரே 17:10 1கொரி 4:4 1யோவா 3:20
22ஒரு காரியம் உண்டு, அதைச் சொல்லுகிறேன்; சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் அவர் அழிக்கிறார்.பிரச 9:1-3 எசே 21:3 எசே 21:4 லூக் 13:2-4
23சவுக்கானது அசுப்பிலே வாதித்துக் கொல்லும்போது, அவர் குற்றமில்லாதவர்களின் சோதனையைப் பார்த்து நகைக்கிறார்.யோபு 1:13-19 யோபு 2:7
24உலகம் துன்மார்க்கர் கையில் விடப்பட்டிருக்கிறது; அதிலிருக்கிற நியாயாதிபதிகளின் முகத்தை மூடிப்போடுகிறார்; அவர் இதைச் செய்கிறதில்லையென்றால், பின்னை யார் இதைச் செய்கிறார்.யோபு 12:6-10 யோபு 21:7-15 சங் 17:14 சங் 73:3-7 எரே 12:1 எரே 12:2 தானி 4:17 தானி 5:18-21 தானி 7:7-28 ஆபகூ 1:14-17
25என் நாட்கள் அஞ்சற்காரர் ஓட்டத்திலும் தீவிரமாயிருக்கிறது; அவைகள் நன்மையைக் காணாமல் பறந்துபோம்.யோபு 7:6 யோபு 7:7 எஸ்தர் 8:14
26அவைகள் வேகமாய் ஓடுகிற கப்பல்களைப்போலவும், இரையின்மேல் பாய்கிற கழுகைப்போலவும் கடந்துபோகிறது.யோபு 39:27-30 2சாமு 1:23 நீதி 23:5 எரே 4:13 புலம் 4:19 ஆபகூ 1:8
27என் அங்கலாய்ப்பை நான் மறந்து, என் முகத்தின் துக்கத்தை மாற்றி, திடன்கொள்வேன் என்று சொன்னால்,யோபு 7:13 சங் 77:2 சங் 77:3 எரே 8:18
28என் வருத்தங்களைப்பற்றிப் பயமாயிருக்கிறேன்; என்னைக் குற்றமில்லாதவனாக எண்ணமாட்டீர் என்று அறிவேன்.யோபு 21:6 சங் 88:15 சங் 88:16 சங் 119:120
29நான் பொல்லாதவனாயிருந்தால், விருதாவாய்ப் போராடவேண்டியது என்ன?யோபு 9:22 யோபு 10:7 யோபு 10:14-17 யோபு 21:16 யோபு 21:17 யோபு 21:27 யோபு 22:5-30 சங் 73:13 எரே 2:35
30நான் உறைந்த மழைத் தண்ணீரில் முழுகி, என் கைகளைச் சவுக்காரத்தினால் சுத்தம்பண்ணினாலும்,சங் 26:6 நீதி 28:13 ஏசா 1:16-18 எரே 2:22 எரே 4:14 ரோம 10:3 1யோவா 1:8
31நீர் என்னைச் சேற்றுப்பள்ளத்திலே அமிழ்த்துவீர். அப்பொழுது என் வஸ்திரமே என்னை அருவருக்கும்.யோபு 9:20 யோபு 15:6
32நான் அவருக்குப் பிரதியுத்தரம் சொல்லுகிறதற்கும், நாங்கள் கூடி நியாயத்திற்கு வருகிறதற்கும், அவர் என்னைப்போல மனுஷன் அல்லவே.யோபு 33:12 யோபு 35:5-7 எண் 23:19 1சாமு 16:7 பிரச 6:10 ஏசா 45:9 எரே 49:19 ரோம 9:20 1யோவா 3:20
33எங்கள் இருவர்மேலும் தன் கையை வைக்கத்தக்க மத்தியஸ்தன் எங்களுக்குள் இல்லையே.யோபு 9:19 1சாமு 2:25 சங் 106:23 1யோவா 2:1 1யோவா 2:2
34அவர் தமது மிலாற்றை என்னைவிட்டு அகற்றுவாராக; அவருடைய பயங்கரம் என்னைக் கலங்கப்பண்ணாதிருப்பதாக.யோபு 13:11 யோபு 13:20-22 யோபு 23:15 யோபு 31:23 யோபு 33:7 யோபு 37:1 சங் 39:10 சங் 90:11
35அப்பொழுது நான் அவருக்குப் பயப்படாமல் பேசுவேன்; இப்பொழுதோ அப்படிச் செய்ய இடமில்லை.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.