இணை வசன வேதாகமம்

Click to Subscribe

யோபு 7

                   
புத்தகங்களைக் காட்டு
1பூமியிலே போராட மனுஷனுக்குக் குறிக்கப்பட்ட காலம் உண்டல்லவோ? அவன் நாட்கள் ஒரு கூலிக்காரன் நாட்களைப்போல் இருக்கிறதல்லவோ?யோபு 14:5 யோபு 14:13 யோபு 14:14 சங் 39:4 ஏசா 38:5 யோவா 11:9 யோவா 11:10
2ஒரு வேலையாள் நிழலை வாஞ்சித்து, ஒரு கூலிக்காரன் தன் கூலியை வரப்பார்த்திருக்கிறதுபோல,சங் 119:131 சங் 143:6
3மாயையான மாதங்கள் என்னுடைய சுதந்தரமாகி, சஞ்சலமான இராத்திரிகள் எனக்குக் குறிக்கப்பட்டது.யோபு 29:2 சங் 6:6 சங் 39:5 பிரச 1:14
4நான் படுத்துக்கொள்ளுகிறபோது, எப்பொழுது எழுந்திருப்பேன்? இராக்காலம் எப்பொழுது முடியும் என்று சொல்லி, கிழக்கு வெளுக்குமட்டும் அரண்டு புரளுகிறதினால் எனக்குப் போதுமென்றுபோகிறது.யோபு 7:13 யோபு 7:14 யோபு 17:12 யோபு 30:17 உபா 28:67 சங் 6:6 சங் 77:4 சங் 130:6
5என் மாம்சம் பூச்சிகளினாலும், அடைபற்றின புழுதியினாலும் மூடப்பட்டிருக்கிறது; என் தோல் வெடித்து அருவருப்பாயிற்று.யோபு 2:7 யோபு 2:8 யோபு 17:14 யோபு 19:26 யோபு 24:20 யோபு 30:18 யோபு 30:19 சங் 38:5-7 ஏசா 1:6 ஏசா 14:11 அப் 12:23
6என் நாட்கள் நெய்கிறவன் எறிகிற நாடாவிலும் தீவிரமாய் ஓடுகிறது; அவைகள் நம்பிக்கையில்லாமல் முடிந்துபோகும்.யோபு 9:25 யோபு 16:22 யோபு 17:11 சங் 90:5 சங் 90:6 சங் 102:11 சங் 103:15 சங் 103:16 சங் 144:4 ஏசா 38:12 ஏசா 38:13 ஏசா 40:6 ஏசா 40:7 யாக் 1:11 யாக் 4:14 1பேது 1:24
7என் பிராணன் காற்றைப்போலிருக்கிறதென்றும், என் கண்கள் இனி நன்மையைக் காணப்போகிறதில்லையென்றும் நினைத்தருளும்.யோபு 10:9 ஆதி 42:36 நெகே 1:8 சங் 74:18 சங் 74:22 சங் 89:47 சங் 89:50 எரே 15:15
8இப்போது என்னைக் காண்கிறவர்களின் கண்கள் இனி என்னைக் காண்பதில்லை; உம்முடைய கண்கள் என்மேல் நோக்கமாயிருக்கிறது; நானோ இல்லாமற்போகிறேன்.யோபு 20:9 சங் 37:36
9மேகம் பறந்துபோகிறதுபோல, பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரான்.யோபு 37:11
10இனி தன் வீட்டுக்குத் திரும்பான், அவன் ஸ்தலம் இனி அவனை அறியாது.யோபு 8:18 யோபு 20:9 சங் 103:16
11ஆகையால் நான் என் வாயை அடக்காமல், என் ஆவியின் வேதனையினால் பேசி, என் ஆத்துமத்தின் கசப்பினால் அங்கலாய்ப்பேன்.யோபு 6:26 யோபு 10:1 யோபு 13:13 யோபு 16:6 யோபு 21:3 சங் 39:3 சங் 40:9
12தேவரீர் என்மேல் காவல் வைக்கிறதற்கு நான் சமுத்திரமோ? நான் ஒரு திமிங்கிலமோ?யோபு 7:17 யோபு 38:6-11 புலம் 3:7
13என் கட்டில் எனக்கு ஆறுதல் கொடுக்கும் என்றும், என் படுக்கை என் தவிப்பை ஆற்றும் என்றும் நான் சொல்வேனாகில்,யோபு 7:3 யோபு 7:4 யோபு 9:27 யோபு 9:28 சங் 6:6 சங் 77:4
14நீர் சொப்பனங்களால் என்னைக் கலங்கப்பண்ணி, தரிசனங்களால் எனக்குத் திகிலுண்டாக்குகிறீர்.ஆதி 40:5-7 ஆதி 41:8 நியா 7:13 நியா 7:14 தானி 2:1 மத் 27:19
15அதினால் என் ஆத்துமா, நெருக்குண்டு சாகிறதையும், என் எலும்புகளோடே உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும், மரணத்தையும் விரும்புகிறது.2சாமு 17:23 மத் 27:5
16இப்படியிருக்கிறதை அரோசிக்கிறேன்; எந்நாளும் உயிரோடிருக்க விரும்பேன், என்னை விட்டுவிடும்; என் நாட்கள் மாயைதானே.யோபு 3:20-22 யோபு 6:9 யோபு 10:1 ஆதி 27:46 1இரா 19:4 யோனா 4:3 யோனா 4:8
17மனுஷனை நீர் ஒரு பொருட்டாக எண்ணுகிறதற்கும், அவன்மேல் சிந்தை வைக்கிறதற்கும்,சங் 8:4 சங் 144:3 எபிரெ 2:6
18காலைதோறும் அவனை விசாரிக்கிறதற்கும், நிமிஷந்தோறும் அவனைச் சோதிக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்?யாத் 20:5 யாத் 32:34 ஏசா 26:14 ஏசா 38:12 ஏசா 38:13
19நான் என் உமிழ்நீரை விழுங்காதபடி எத்தனைகாலம் என்னை நெகிழாமலும், என்னை விடாமலும் இருப்பீர்.யோபு 9:18 சங் 6:3 சங் 13:1-3 சங் 94:3 வெளிப் 6:10
20மன்னுயிரைக்காப்பவரே, பாவஞ்செய்தேனானால் உமக்கு நான் செய்யவேண்டியது என்ன? நான் எனக்குத்தானே பாரமாயிருக்கும்படிக்கு, நீர் என்னை உமக்கு இலக்காக வைத்தது என்ன?யோபு 9:29-31 யோபு 13:26 யோபு 14:16 யோபு 22:5 யோபு 31:33 யோபு 33:9 யோபு 33:27 சங் 80:4
21என் மீறுதலை நீர் மன்னியாமலும், என் அக்கிரமத்தை நீக்காமலும் இருக்கிறது என்ன? இப்பொழுதே மண்ணில் படுத்துக்கொள்வேன்; விடியற்காலத்திலே என்னைத் தேடுவீரானால் நான் இரேன் என்றான்.யோபு 10:14 யோபு 13:23 யோபு 13:24 ஏசா 64:9 புலம் 3:42-44 புலம் 5:20-22
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.