| 1 | யோபு பிரதியுத்தரமாக: | யோபு 4:1 |
| 2 | என் சஞ்சலம் நிறுக்கப்பட்டு, என் நிர்ப்பந்தம் எல்லாம் தராசிலே வைக்கப்பட்டால் நலமாயிருக்கும். | யோபு 4:5 யோபு 23:2 |
| 3 | அப்பொழுது அது கடற்கரை மணலைப்பார்க்கிலும் பாரமாயிருக்கும்; ஆகையால் என் துக்கம் சொல்லிமுடியாது. | நீதி 27:3 மத் 11:28 |
| 4 | சர்வவல்லவரின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது; அவைகளின் விஷம் என் உயிரைக் குடிக்கிறது; தேவனால் உண்டாகும் பயங்கரங்கள் எனக்கு முன்பாக அணியணியாய் நிற்கிறது. | யோபு 16:12-14 உபா 32:23 உபா 32:42 சங் 7:13 சங் 18:14 சங் 21:12 சங் 38:2 சங் 45:5 புலம் 3:12 புலம் 3:13 |
| 5 | புல்லிருக்கிற இடத்திலே காட்டுக்கழுதை கத்துமோ? தனக்குத் தீவனமிருக்கிற இடத்திலே எருது கதறுமோ? | சங் 104:14 |
| 6 | ருசியில்லாத பதார்த்தத்தை உப்பில்லாமல் சாப்பிடக்கூடுமோ? முட்டையின் வெள்ளைக்கருவில் சுவை உண்டோ? | யோபு 6:25 யோபு 16:2 லேவி 2:13 லூக் 14:34 கொலோ 4:6 |
| 7 | உங்கள் வார்த்தைகளை என் ஆத்துமா தொடமாட்டேன் என்கிறது; அவைகள் அரோசிகமான போஜனம்போல் இருக்கிறது. | 1இரா 17:12 1இரா 22:27 சங் 102:9 எசே 4:14 எசே 4:16 எசே 12:18 எசே 12:19 தானி 10:3 |
| 8 | ஆ, என் மன்றாட்டு எனக்கு அருளப்பட்டு, நான் வாஞ்சிப்பதை தேவன் எனக்குத் தந்து, | யோபு 6:11-13 யோபு 17:14-16 சங் 119:81 |
| 9 | தேவன் என்னை நொறுக்கச் சித்தமாய், தம்முடைய கையை நீட்டி என்னைத் துண்டித்துப்போட்டால் நலமாயிருக்கும். | யோபு 3:20-22 யோபு 7:15 யோபு 7:16 யோபு 14:13 எண் 11:14 எண் 11:15 1இரா 19:4 யோனா 4:3 யோனா 4:8 வெளிப் 9:6 |
| 10 | அப்பொழுதாவது எனக்கு ஆறுதல் இருக்குமே; அப்பொழுது என்னைத் தப்பவிடாத நோவிலே மரத்திருப்பேன்; பரிசுத்தருடைய வார்த்தைகளை நான் மறைத்துவைக்கவில்லை, அவர் என்னைத் தப்பவிடாராக. | யோபு 3:22 யோபு 21:33 |
| 11 | நான் காத்துக்கொண்டிருக்க என் பெலன் எம்மாத்திரம்? என் ஜீவனை நீடித்திருக்கப்பண்ண என் முடிவு எப்படிப்பட்டது? | யோபு 7:5-7 யோபு 10:20 யோபு 13:25 யோபு 13:28 யோபு 17:1 யோபு 17:14-16 சங் 39:5 சங் 90:5-10 சங் 102:23 சங் 103:14-16 |
| 12 | என் பெலன் கற்களின் பெலனோ? என் மாம்சம் வெண்கலமோ? | யோபு 40:18 யோபு 41:24 |
| 13 | எனக்கு உதவியானது ஒன்றும் இல்லையல்லவோ? சகாயம் என்னைவிட்டு நீங்கிற்றே. | யோபு 19:28 2கொரி 1:12 கலா 6:4 |
| 14 | உபாதிக்கப்படுகிறவனுக்கு அவனுடைய சிநேகிதனால் தயை கிடைக்கவேண்டும்; அவனோ சர்வவல்லவருக்குப் பயப்படாதே போகிறான். | யோபு 4:3 யோபு 4:4 யோபு 16:5 யோபு 19:21 நீதி 17:17 ரோம 12:15 1கொரி 12:26 2கொரி 11:29 கலா 6:2 எபிரெ 13:3 |
| 15 | என் சகோதரர் காட்டாறுபோல மோசம்பண்ணுகிறார்கள்; ஆறுகளின் வெள்ளத்தைப்போலக் கடந்து போகிறார்கள். | யோபு 19:19 சங் 38:11 சங் 41:9 சங் 55:12-14 சங் 88:18 எரே 9:4 எரே 9:5 எரே 30:14 மீகா 7:5 மீகா 7:6 யோவா 13:18 யோவா 16:32 |
| 16 | அவைகள் குளிர்காலப் பனிக்கட்டியினாலும், அதில் விழுந்திருக்கிற உறைந்த மழையினாலும் கலங்கலாகி, |
| 17 | உஷ்ணங்கண்டவுடனே உருகி வற்றி, அனல்பட்டவுடனே தங்கள் ஸ்தலத்தில் உருவழிந்து போகின்றன. | 1இரா 17:1 |
| 18 | அவைகளுடைய வழிகளின் போக்குகள் இங்குமங்கும் பிரியும்; அவைகள் விருதாவிலே பரவி ஒன்றும் இல்லாமற்போகும். |
| 19 | தேமாவின் பயணக்காரர் தேடி, சேபாவின் பயணக்கூட்டங்கள் அவைகள்மேல் நம்பிக்கை வைத்து, | ஆதி 25:15 ஏசா 21:14 எரே 25:23 |
| 20 | தாங்கள் இப்படி நம்பினதினாலே வெட்கப்படுகிறார்கள்; அவ்விடமட்டும் வந்து கலங்கிப்போகிறார்கள். | எரே 14:3 எரே 14:4 எரே 17:13 ரோம 5:5 ரோம 9:33 |
| 21 | அப்படியே நீங்களும் இப்பொழுது ஒன்றுக்கும் உதவாமற்போனீர்கள்; என் ஆபத்தைக் கண்டு பயப்படுகிறீர்கள். | யோபு 6:15 யோபு 13:4 சங் 62:9 ஏசா 2:22 எரே 17:5 எரே 17:6 |
| 22 | எனக்கு ஏதாகிலும் கொண்டு வாருங்கள் என்றும், உங்கள் ஆஸ்தியிலிருந்து எனக்கு யாதொரு வெகுமானம் கொடுங்கள் என்றும்; | யோபு 42:11 1சாமு 12:3 அப் 20:33 |
| 23 | அல்லது சத்துருவின் கைக்கு என்னைத் தப்புவியுங்கள், வல்லடிக்காரரின் கைக்கு என்னை நீங்கலாக்கி மீட்டுவிடுங்கள் என்றும் நான் சொன்னதுண்டோ? | யோபு 5:20 லேவி 25:48 நெகே 5:8 சங் 49:7 சங் 49:8 சங் 49:15 சங் 107:2 எரே 15:21 |
| 24 | எனக்கு உபதேசம்பண்ணுங்கள், நான் மவுனமாயிருப்பேன்; நான் எதிலே தவறினேனோ அதை எனக்குத் தெரியப்படுத்துங்கள். | யோபு 5:27 யோபு 32:11 யோபு 32:15 யோபு 32:16 யோபு 33:1 யோபு 33:31-33 யோபு 34:32 சங் 32:8 நீதி 9:9 நீதி 25:12 யாக் 1:19 |
| 25 | செம்மையான வார்த்தைகளில் எவ்வளவு வல்லமை உண்டு? உங்கள் கடிந்துகொள்ளுதலினால் காரியம் என்ன? | யோபு 4:4 யோபு 16:5 நீதி 12:18 நீதி 16:21-24 நீதி 18:21 நீதி 25:11 பிரச 12:10 பிரச 12:11 |
| 26 | கடிந்துகொள்ள நீங்கள் வார்த்தைகளை யோசித்து, நம்பிக்கையற்றவனுடைய வார்த்தைகளைக் காற்றிலே விட்டுவிடுகிறீர்களோ? | யோபு 2:10 யோபு 3:3-26 யோபு 4:3 யோபு 4:4 யோபு 34:3-9 யோபு 38:2 யோபு 40:5 யோபு 40:8 யோபு 42:3 யோபு 42:7 மத் 12:37 |
| 27 | இப்படிச் செய்து திக்கற்றவன்மேல் நீங்கள் விழுந்து, உங்கள் சிநேகிதனுக்குப் படுகுழியை வெட்டுகிறீர்கள். | யோபு 22:9 யோபு 24:3 யோபு 24:9 யோபு 29:12 யோபு 31:17 யோபு 31:21 யாத் 22:22-24 சங் 82:3 நீதி 23:10 நீதி 23:11 எசே 22:7 மல்கி 3:5 யாக் 1:27 |
| 28 | இப்போதும் உங்களுக்குச் சித்தமானால் என்னை நோக்கிப் பாருங்கள்; அப்பொழுது நான் பொய்சொல்லுகிறேனோ என்று உங்களுக்குப் பிரத்தியட்சமாய் விளங்கும். | யோபு 11:3 யோபு 13:4 |
| 29 | நீங்கள் திரும்புங்கள்; அக்கிரமம் காணப்படாதிருக்கும்; திரும்புங்கள் என் நீதி அதிலே விளங்கும். | யோபு 17:10 மல்கி 3:18 |
| 30 | என் நாவிலே அக்கிரமம் உண்டோ? என் வாய் ஆகாதவைகளைப் பகுத்தறியாதோ? | யோபு 33:8-12 யோபு 42:3-6 |