| 1 | அப்பொழுது தேமானியனான எலிப்பாஸ் பிரதியுத்தரமாக: |
| 2 | ஒரு மனுஷன் விவேகியாயிருந்து, தனக்குத்தான் பிரயோஜனமாயிருக்கிறதினால் தேவனுக்குப் பிரயோஜனமாயிருப்பானோ? | யோபு 35:6-8 சங் 16:2 லூக் 17:10 |
| 3 | நீர் நீதிமானாயிருப்பதினால் சர்வவல்லவருக்கு நன்மையுண்டாகுமோ? நீர் உம்முடைய வழிகளை உத்தமமாக்குகிறது அவருக்கு ஆதாயமாயிருக்குமோ? | 1நாளா 29:17 சங் 147:10 சங் 147:11 நீதி 11:1 நீதி 11:20 நீதி 12:22 நீதி 15:8 மல்கி 2:17 பிலிப் 4:18 |
| 4 | அவர் உமக்குப் பயந்து உம்மோடே வழக்காடி, உம்மோடே நியாயத்துக்கு வருவாரோ? | சங் 39:11 சங் 76:6 சங் 80:16 வெளிப் 3:19 |
| 5 | உம்முடைய பொல்லாப்பு பெரியதும், உம்முடைய அக்கிரமங்கள் முடிவில்லாதவைகளுமாய் இருக்கிறதல்லவோ? | யோபு 4:7-11 யோபு 11:14 யோபு 15:5 யோபு 15:6 யோபு 15:31-34 யோபு 21:27 யோபு 32:3 |
| 6 | முகாந்தரமில்லாமல் உம்முடைய சகோதரர் கையில் அடகுவாங்கி, ஏழைகளின் வஸ்திரங்களைப் பறித்துக்கொண்டீர். | யோபு 24:3 யோபு 24:9 யாத் 22:26 உபா 24:10-18 எசே 18:7 எசே 18:12 எசே 18:16 ஆமோ 2:8 |
| 7 | விடாய்த்தவனுக்குத் தாகத்துக்குத் தண்ணீர் கொடாமலும், பசித்தவனுக்கு போஜனம் கொடாமலும் போனீர். | யோபு 31:17 உபா 15:7-11 சங் 112:9 நீதி 11:24 நீதி 11:25 நீதி 19:17 ஏசா 58:7 ஏசா 58:10 எசே 18:7 எசே 18:16 மத் 25:42 ரோம 12:20 |
| 8 | பலவானுக்கே தேசத்தில் இடமுண்டாயிற்று; கனவான் அதில் குடியேறினான். | யோபு 29:7-17 யோபு 31:34 1இரா 21:11-15 சங் 12:8 மீகா 7:3 |
| 9 | விதவைகளை வெறுமையாய் அனுப்பிவிட்டீர்; தாய்தகப்பன் இல்லாதவர்களின் புயங்கள் முறிக்கப்பட்டது. | யோபு 24:3 யோபு 24:21 யோபு 29:12 யோபு 29:13 யோபு 31:16-18 யோபு 31:21-18 யாத் 22:21-24 உபா 27:19 சங் 94:6 ஏசா 1:17 ஏசா 1:23 ஏசா 10:2 எசே 22:7 மல்கி 3:5 லூக் 18:3-5 |
| 10 | ஆகையால் கண்ணிகள் உம்மைச் சூழ்ந்திருக்கிறது; அசுப்பிலே உமக்கு வந்த பயங்கரம் உம்மைக் கலங்கப்பண்ணுகிறது. | யோபு 18:8-10 யோபு 19:6 சங் 11:6 |
| 11 | நீர் பார்க்கக்கூடாதபடிக்கு இருள் வந்தது, ஜலப்பிரவாகம் உம்மை மூடுகிறது. | யோபு 18:6 யோபு 18:18 யோபு 19:8 நீதி 4:19 ஏசா 8:22 புலம் 3:2 யோவே 2:2 யோவே 2:3 மத் 8:12 |
| 12 | தேவன் பரலோகத்தின் உன்னதங்களிலிருக்கிறார் அல்லவோ? நட்சத்திரங்களின் உயரத்தைப் பாரும், அவைகள் எத்தனை உயரமாயிருக்கிறது. | சங் 115:3 சங் 115:16 பிரச 5:2 ஏசா 57:15 ஏசா 66:1 |
| 13 | நீர்: தேவன் எப்படி அறிவார், அந்தகாரத்துக்கு அப்புறத்திலிருக்கிறவர் நியாயம் விசாரிக்கக்கூடுமோ? | சங் 10:11 சங் 59:7 சங் 73:11 சங் 94:7-9 எசே 8:12 எசே 9:9 செப் 1:12 |
| 14 | அவர் பாராதபடிக்கு மேகங்கள் அவருக்கு மறைவாயிருக்கிறது; பரமண்டலங்களின் சக்கரத்திலே அவர் உலாவுகிறார் என்று சொல்லுகிறீர். | யோபு 34:22 சங் 33:14 சங் 97:2 சங் 139:1 சங் 139:2 சங் 139:11 சங் 139:12 எரே 23:24 லூக் 12:2 லூக் 12:3 |
| 15 | அக்கிரம மாந்தர் பூர்வத்தில் நடந்த மார்க்கத்தைக் கவனித்துப் பார்த்தீரோ? | ஆதி 6:5 ஆதி 6:11-13 லூக் 17:26 லூக் 17:27 |
| 16 | காலம் வருமுன்னே அவர்கள் வாடிப்போனார்கள்; அவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் வெள்ளம் புரண்டது. | யோபு 15:32 சங் 55:23 சங் 102:24 பிரச 7:17 |
| 17 | தேவன் அவர்கள் வீடுகளை நன்மையால் நிரப்பியிருந்தாலும், அவர்கள் அவரை நோக்கி: எங்களைவிட்டு விலகும், சர்வவல்லவராலே எங்களுக்கு என்ன ஆகும் என்றார்கள். | யோபு 21:10 யோபு 21:14 யோபு 21:15 ஏசா 30:11 மத் 8:29 மத் 8:34 ரோம 1:28 |
| 18 | ஆகையால் துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக. | யோபு 12:6 1சாமு 2:7 சங் 17:14 எரே 12:2 அப் 14:17 அப் 15:16 |
| 19 | எங்கள் நிலைமை நிர்மூலமாகாமல், அவர்களுக்கு மீதியானதையோ அக்கினி பட்சித்ததென்பதை நீதிமான்கள் கண்டு சந்தோஷப்படுகிறார்கள். | சங் 48:11 சங் 58:10 சங் 97:8 சங் 107:42 நீதி 11:10 வெளிப் 18:20 வெளிப் 19:1-3 |
| 20 | குற்றமில்லாதவன் அவர்களைப் பார்த்து நகைக்கிறான். | யோபு 4:7 யோபு 8:3 யோபு 8:4 யோபு 15:5 யோபு 15:6 யோபு 20:18 யோபு 20:19 யோபு 21:27 யோபு 21:28 லூக் 13:1-5 |
| 21 | நீர் அவரோடே பழகி சமாதானமாயிரும்; அதினால் உமக்கு நன்மைவரும். | 1நாளா 28:9 யோவா 17:3 2கொரி 4:6 |
| 22 | அவர் வாயினின்று பிறந்த வேதப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு, அவர் வார்த்தைகளை உம்முடைய இருதயத்தில் வைத்துக்கொள்ள வேண்டுகிறேன். | உபா 4:1 உபா 4:2 நீதி 2:1-9 1தெச 4:1 1தெச 4:2 |
| 23 | நீர் சர்வவல்லவரிடத்தில் மனந்திரும்பினால், திரும்பக் கட்டப்படுவீர்; அக்கிரமத்தை உமது கூடாரத்துக்குத் தூரமாக்குவீர். | யோபு 8:5 யோபு 8:6 யோபு 11:13 யோபு 11:14 ஏசா 55:6 ஏசா 55:7 ஓசி 14:1 ஓசி 14:2 சகரி 1:3 அப் 26:20 |
| 24 | அப்பொழுது தூளைப்போல் பொன்னையும், ஆற்றுக் கற்களைப்போல் ஓப்பீரின் தங்கத்தையும் சேர்த்துவைப்பீர். | 1இரா 10:21 2நாளா 1:5 2நாளா 9:10 2நாளா 9:27 |
| 25 | அப்பொழுது சர்வவல்லவர் தாமே உமக்குப் பசும்பொன்னும், உமக்குச் சொக்கவெள்ளியுமாயிருப்பார். | ஆதி 15:1 சங் 18:2 சங் 84:11 ஏசா 41:10 ரோம 8:31 |
| 26 | அப்பொழுது சர்வவல்லவர்மேல் மனமகிழ்ச்சியாயிருந்து, தேவனுக்கு நேராக உம்முடைய முகத்தை ஏறெடுப்பீர். | யோபு 27:10 யோபு 34:9 சங் 37:4 உன்ன 2:3 ஏசா 58:14 ரோம 7:22 |
| 27 | நீர் அவரை நோக்கி விண்ணப்பம்பண்ண, அவர் உமக்குச் செவிகொடுப்பார்; அப்பொழுது நீர் உம்முடைய பொருத்தனைகளைச் செலுத்துவீர். | சங் 50:14 சங் 50:15 சங் 66:17 சங் 66:18-20 சங் 91:15 சங் 116:1 ஏசா 58:9 1யோவா 5:14 1யோவா 5:15 |
| 28 | நீர் ஒரு காரியத்தை நிருணயம்பண்ணினால், அது உமக்கு நிலைவரப்படும்; உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும். | சங் 20:4 சங் 90:17 புலம் 3:37 மத் 21:22 யாக் 4:15 |
| 29 | மனுஷர் ஒடுக்கப்படும்போது திடப்படக்கடவர்கள் என்று நீர் சொல்ல, தாழ்ந்தோர் இரட்சிக்கப்படுவார்கள். | யோபு 5:19-27 சங் 9:2 சங் 9:3 சங் 91:14-16 சங் 92:9-11 |
| 30 | குற்றமற்றிராதவனையுங்கூடத் தப்புவிப்பார்; உம்முடைய கைகளின் சுத்தத்தினிமித்தம் அவன் தப்பிப்போவான் என்றான். | யோபு 42:8 ஆதி 18:26-32 ஏசா 58:12 எரே 5:1 அப் 27:24 |