| 1 | யோபு பிரதியுத்தரமாக: |
| 2 | என் வசனத்தைக் கவனமாய்க் கேளுங்கள்; இது நீங்கள் என்னைத் தேற்றரவுபண்ணுவதுபோல இருக்கும். | யோபு 13:3 யோபு 13:4 யோபு 18:2 யோபு 33:1 யோபு 33:31-33 யோபு 34:2 நியா 9:7 ஏசா 55:2 எபிரெ 2:1 |
| 3 | நான் பேசப்போகிறேன், சகித்திருங்கள்; நான் பேசினபின்பு பரியாசம்பண்ணுங்கள். | யோபு 13:13 யோபு 33:31-33 |
| 4 | நான் மனுஷனைப்பார்த்தா அங்கலாய்க்கிறேன்? அப்படியானாலும் என் ஆவி விசனப்படாதிருக்குமா? | யோபு 7:11-21 யோபு 10:1 யோபு 10:2 1சாமு 1:16 சங் 22:1-3 சங் 77:3-9 சங் 102:1 சங் 142:2 சங் 142:3 மத் 26:38 |
| 5 | என்னைக் கவனித்துப்பாருங்கள், அப்பொழுது நீங்கள் பிரமித்து, உங்கள் வாயைக் கையால் பொத்திக்கொள்வீர்கள். | யோபு 2:12 யோபு 17:8 யோபு 19:20 யோபு 19:21 |
| 6 | இதை நான் நினைக்கையில் கலங்குகிறேன்; நடுக்கம் என் மாம்சத்தைப் பிடிக்கும். | சங் 77:3 சங் 88:15 சங் 119:120 புலம் 3:19 புலம் 3:20 ஆபகூ 3:16 |
| 7 | துன்மார்க்கர் ஜீவித்து விருத்தராகி, வல்லவராவானேன்? | யோபு 12:6 சங் 17:10 சங் 73:3-12 எரே 12:1-3 ஆபகூ 1:15 ஆபகூ 1:16 |
| 8 | அவர்களோடுங்கூட அவர்கள் சந்ததியார் அவர்களுக்கு முன்பாகவும், அவர்கள் பிள்ளைகள் அவர்கள் கண்களுக்கு முன்பாகவும் திடப்படுகிறார்கள். | யோபு 5:3 யோபு 5:4 யோபு 18:19 யோபு 20:10 யோபு 20:28 நீதி 17:6 |
| 9 | அவர்கள் வீடுகள் பயமில்லாமல் பத்திரப்பட்டிருக்கும்; தேவனுடைய மிலாறு அவர்கள்மேல் வருகிறதில்லை. | யோபு 15:21 யோபு 18:11 சங் 73:19 ஏசா 57:19-21 |
| 10 | அவர்களுடைய எருது பொலிந்தால், வீணாய்ப்போகாது; அவர்களுடைய பசு சினை அழியாமல் ஈனுகிறது. | யாத் 23:26 உபா 7:13 உபா 7:14 உபா 28:11 சங் 144:13 சங் 144:14 பிரச 9:1 பிரச 9:2 லூக் 12:16-21 லூக் 16:19 |
| 11 | அவர்கள் தங்கள் குழந்தைகளை ஒரு மந்தையைப்போல வெளியே போகவிடுகிறார்கள்; அவர்கள் பிள்ளைகள் குதித்து விளையாடுகிறார்கள். | சங் 107:41 சங் 127:3-5 |
| 12 | அவர்கள் தம்புரையும் சுரமண்டலத்தையும் எடுத்துப் பாடி, கின்னரத்தின் ஓசைக்குச் சந்தோஷப்படுகிறார்கள். | ஆதி 4:21 ஆதி 31:27 ஏசா 5:12 ஏசா 22:13 ஆமோ 6:4-6 |
| 13 | அவர்கள் செல்வவான்களாய்த் தங்கள் நாட்களைப் போக்கி, ஒரு க்ஷணப்பொழுதிலே பாதாளத்தில் இறங்குகிறார்கள். | யோபு 36:11 சங் 73:4 மத் 24:38 மத் 24:39 லூக் 12:19 லூக் 12:20 லூக் 17:28 லூக் 17:29 |
| 14 | அவர்கள் தேவனை நோக்கி: எங்களைவிட்டு விலகியிரும், உம்முடைய வழிகளை அறிய விரும்போம்; | யோபு 22:17 சங் 10:4 சங் 10:11 லூக் 8:28 லூக் 8:37 ஆபகூ 1:15 யோவா 15:23 யோவா 15:24 ரோம 8:7 |
| 15 | சர்வவல்லவரை நாம் சேவிக்க அவர் யார்? அவரை நோக்கி ஜெபம்பண்ணுவதினால் நமக்குப் பிரயோஜனம் என்ன என்கிறார்கள். | யாத் 5:2 சங் 12:4 நீதி 30:9 ஓசி 13:6 |
| 16 | ஆனாலும் அவர்கள் வாழ்வு அவர்கள் கையிலிராது; துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக. | யோபு 1:21 யோபு 12:9 யோபு 12:10 சங் 49:6 சங் 49:7 சங் 52:5-7 பிரச 8:8 லூக் 16:2 லூக் 16:25 |
| 17 | எத்தனைச் சடுதியில் துன்மார்க்கரின் விளக்கு அணைந்துபோகும்; அவர் தமது கோபத்தினால் வேதனைகளைப் பகிர்ந்துகொடுக்கையில், அவர்கள் ஆபத்து அவர்கள்மேல் வரும். | யோபு 18:5 யோபு 18:6 யோபு 18:18 நீதி 13:9 நீதி 20:20 நீதி 24:20 மத் 25:8 |
| 18 | அவர்கள் காற்றுமுகத்திலிருக்கிற துரும்பைப்போலவும், பெருங்காற்று பறக்கடிக்கிற பதரைப்போலவும் இருக்கிறார்கள். | யோபு 13:25 யாத் 15:7 சங் 1:4 சங் 35:5 சங் 83:13 ஏசா 5:24 ஏசா 17:13 ஏசா 29:5 ஏசா 40:24 ஏசா 41:15 ஏசா 41:16 எரே 13:24 ஓசி 13:3 நாகூ 1:10 மத் 3:12 |
| 19 | தேவன் அவனுடைய அக்கிரமத்தை அவன் பிள்ளைகளுக்கு வைத்து வைக்கிறார்; அவன் உணரத்தக்கவிதமாய் அதை அவனுக்குப் பலிக்கப்பண்ணுகிறார். | யோபு 22:24 உபா 32:34 மத் 6:19 மத் 6:20 ரோம 2:5 |
| 20 | அவனுடைய அழிவை அவனுடைய கண்கள் காணும், சர்வவல்லவருடைய உக்கிரத்தைக் குடிப்பான். | யோபு 27:19 லூக் 16:23 |
| 21 | அவன் மாதங்களின் தொகை குறுக்கப்படும்போது, அவனுக்குப் பிற்பாடு அவன் வீட்டைப்பற்றி அவனுக்கு இருக்கும் விருப்பமென்ன? | யோபு 14:21 பிரச 2:18 பிரச 2:19 லூக் 16:27 லூக் 16:28 |
| 22 | உயர்ந்தோரை நியாயந்தீர்க்கிற தேவனுக்கு அறிவை உணர்த்த யாராலாகும்? | யோபு 40:2 ஏசா 40:13 ஏசா 40:14 ஏசா 45:9 ரோம 11:34 1கொரி 2:16 |
| 23 | ஒருவன் நிர்வாகத்தோடும் சுகத்தோடும் வாழ்ந்து குறையற்ற பெலனுள்ளவனாய்ச் சாகிறான். | யோபு 20:22 யோபு 20:23 சங் 49:17 சங் 73:4 சங் 73:5 லூக் 12:19-21 |
| 24 | அவனுடைய பால்பாத்திரங்கள் பாலால் நிரம்பியிருக்கிறது, அவன் எலும்புகளில் ஊன் புஷ்டியாயிருக்கிறது. | யோபு 15:27 சங் 17:10 |
| 25 | வேறொருவன் ஒரு நாளாவது சந்தோஷத்தோடே சாப்பிடாமல், மனக்கிலேசத்தோடே சாகிறான். | யோபு 3:20 யோபு 7:11 யோபு 9:18 யோபு 10:1 2சாமு 17:8 நீதி 14:10 ஏசா 38:15-17 |
| 26 | இருவரும் சமமாய் மண்ணிலே படுத்துக்கொள்ளுகிறார்கள்; புழுக்கள் அவர்களை மூடும். | யோபு 3:18 யோபு 3:19 யோபு 20:11 பிரச 9:2 |
| 27 | இதோ, நான் உங்கள் நினைவுகளையும், நீங்கள் என்னைப்பற்றி அநியாயமாய்க் கொண்டிருக்கும் ஆலோசனைகளையும் அறிவேன். | யோபு 4:8-11 யோபு 5:3-5 யோபு 8:3-6 யோபு 15:20-35 யோபு 20:5 யோபு 20:29 லூக் 5:22 |
| 28 | பிரபுவினுடைய வீடு எங்கே? துன்மார்க்கருடைய கூடாரம் எங்கே? என்று சொல்லுகிறீர்கள்? | யோபு 20:7 சங் 37:36 சங் 52:5 சங் 52:6 ஆபகூ 2:9-11 சகரி 5:4 |
| 29 | வழிநடந்துபோகிறவர்களை நீங்கள் கேட்கவில்லையா, அவர்கள் சொல்லும் குறிப்புகளை நீங்கள் அறியவில்லையா? | சங் 129:8 |
| 30 | துன்மார்க்கன் ஆபத்து நாளுக்கென்று வைக்கப்படுகிறான்; அவன் கோபாக்கினையின் நாளுக்கென்று கொண்டுவரப்படுகிறான். | நீதி 16:4 நாகூ 1:2 2பேது 2:9-17 2பேது 3:7 யூதா 1:13 |
| 31 | அவன் வழியை அவன் முகத்துக்கு முன்பாகத் தூண்டிக் காண்பிக்கிறவன் யார்? அவன் செய்கைக்குத் தக்க பலனை அவனுக்குச் சரிக்கட்டுகிறவன் யார்? | 2சாமு 12:7-12 1இரா 21:19-24 சங் 50:21 எரே 2:33-35 மாற் 6:18 அப் 24:25 கலா 2:11 |
| 32 | அவன் கல்லறைக்குக் கொண்டுவரப்படுகிறான்; அவன் கோரி காக்கப்பட்டிருக்கும். | சங் 49:14 எசே 32:21-32 லூக் 16:22 |
| 33 | பள்ளத்தாக்கின் புல்பத்தைகள் அவனுக்கு இன்பமாயிருக்கும்; அவனுக்கு முன்னாக எண்ணிறந்த ஜனங்கள் போனதுபோல, அவனுக்குப் பின்னாக ஒவ்வொருவரும் அவ்விடத்துக்குச் செல்லுவார்கள். | யோபு 3:17 யோபு 3:18 |
| 34 | நீங்கள் வீணான ஆறுதலை எனக்குச் செல்லுகிறது என்ன? உங்கள் மறுமொழிகளில் உண்மைக்கேடு இருக்கிறது என்றான். | யோபு 16:2 |