| 1 | யோபு பிரதியுத்தரமாக: |
| 2 | நீங்கள் எந்தமட்டும் என் ஆத்துமாவை வருத்தப்படுத்தி, வார்த்தைகளினால் என்னை நொறுக்குவீர்கள்? | யோபு 8:2 யோபு 18:2 சங் 13:1 வெளிப் 6:10 |
| 3 | இப்போது பத்துதரம் என்னை நிந்தித்தீர்கள்; நீங்கள் எனக்குக் கடினமுகம் காண்பிக்கிறதினால் உங்களுக்கு வெட்கமில்லை. | ஆதி 31:7 லேவி 26:26 எண் 14:22 நெகே 4:12 தானி 1:20 |
| 4 | நான் தப்பிநடந்தது மெய்யானாலும், என் தப்பிதம் என்னோடேதான் இருக்கிறது. | யோபு 11:3-6 |
| 5 | நீங்கள் எனக்கு விரோதமாகப் பெருமைபாராட்டி, எனக்கு நிந்தையாக என்னைக் கடிந்துகொள்ளவேண்டும் என்றிருப்பீர்களாகில், | சங் 35:26 சங் 38:16 சங் 41:11 சங் 55:12 மீகா 7:8 செப் 2:10 சகரி 12:7 |
| 6 | தேவன் என்னைக் கவிழ்த்து, தம்முடைய வலையை என்மேல் வீசினார் என்று அறியுங்கள். | யோபு 7:20 யோபு 16:11-14 சங் 44:9-14 சங் 66:10-12 |
| 7 | இதோ, கொடுமை என்று கூப்பிடுகிறேன், கேட்பார் ஒருவரும் இல்லை; கூக்குரலிடுகிறேன், நியாயவிசாரணை இல்லை. | யோபு 10:3 யோபு 10:15-17 யோபு 16:17-19 யோபு 21:27 சங் 22:2 எரே 20:8 புலம் 3:8 ஆபகூ 1:2 ஆபகூ 1:3 |
| 8 | நான் கடந்துபோகக்கூடாதபடிக்கு அவர் என் பாதையை வேலியடைத்து, என் வழிகளை இருளாக்கிவிட்டார். | யோபு 3:23 சங் 88:8 புலம் 3:7 புலம் 3:9 ஓசி 2:6 |
| 9 | என்னிலிருந்த என் மகிமையை அவர் உரிந்துகொண்டு, என் சிரசின் கிரீடத்தை எடுத்துப்போட்டார். | யோபு 29:7-14 யோபு 29:20-14 யோபு 29:21-14 யோபு 30:1 சங் 49:16 சங் 49:17 சங் 89:44 ஏசா 61:6 ஓசி 9:11 |
| 10 | அவர் என்னை நான்கு புறத்திலும் நாசமாக்கினார், நான் அற்றுப்போகிறேன்; என் நம்பிக்கையை ஒரு செடியைப்போலப் பிடுங்கிப்போட்டார். | யோபு 1:13-19 யோபு 2:7 சங் 88:13-18 புலம் 2:5 புலம் 2:6 2கொரி 4:8 2கொரி 4:9 |
| 11 | அவர் தமது கோபத்தை என்மேல் எரியப்பண்ணினார்; என்னைத் தம்முடைய சத்துருக்களில் ஒருவனாக எண்ணிக்கொள்ளுகிறார். | உபா 32:22 சங் 89:46 சங் 90:7 |
| 12 | அவருடைய தண்டுப்படைகள் ஏகமாய் வந்து, எனக்கு விரோதமாய்த் தங்கள் வழியை உயர்த்தி, என் கூடாரத்தைச் சுற்றிப் பாளயமிறங்கினார்கள். | யோபு 16:11 ஏசா 10:5 ஏசா 10:6 ஏசா 51:23 |
| 13 | என் சகோதரரை என்னைவிட்டுத் தூரப்படுத்தினார்; எனக்கு அறிமுகமானவர்கள் எனக்கு அந்நியராய்ப் போனார்கள். | சங் 31:11 சங் 38:11 சங் 69:8 சங் 69:20 சங் 88:8 சங் 88:18 மத் 26:56 2தீமோ 4:16 |
| 14 | என் பந்துஜனங்கள் விலகிப்போனார்கள். என் சிநேகிதர் என்னை மறந்துவிட்டார்கள். | சங் 38:11 நீதி 18:24 மீகா 7:5 மீகா 7:6 மத் 10:21 |
| 15 | என் வீட்டு ஜனங்களும், என் வேலைக்காரிகளும், என்னை அந்நியனாக எண்ணுகிறார்கள்; அவர்கள் பார்வைக்கு நான் பரதேசியானேன். | யோபு 31:31 யோபு 31:32 சங் 123:3 |
| 16 | நான் என் வேலைக்காரனைக் கூப்பிடுகிறபோது அவன் எனக்கு உத்தரவு கொடான்; என் வாயினால் நான் அவனைக் கெஞ்சவேண்டியதாயிற்று. | யோபு 1:15 யோபு 1:16 யோபு 1:17 யோபு 1:19 |
| 17 | என் சுவாசம் என் மனைவிக்கு வேறுபட்டிருக்கிறது; என் கர்ப்பத்தின் பிள்ளைகளுக்காகப் பரிதபிக்கிறேன். | யோபு 2:9 யோபு 2:10 யோபு 17:1 |
| 18 | சிறுபிள்ளைகளும் என்னை அசட்டைபண்ணுகிறார்கள்; நான் எழுந்தால், அவர்கள் எனக்கு விரோதமாய்ப் பேசுகிறார்கள். | யோபு 30:1 யோபு 30:12 2இரா 2:23 ஏசா 3:5 |
| 19 | என் பிராணசிநேகிதர் எல்லாரும் என்னை வெறுக்கிறார்கள்; நான் சிநேகித்தவர்கள் எனக்கு விரோதிகளானார்கள். | சங் 41:9 சங் 55:12-14 சங் 55:20-14 |
| 20 | என் எலும்புகள் என் தோலோடும் என் மாம்சத்தோடும் ஒட்டிக்கொண்டிருக்கிறது என் பற்களை மூடக் கொஞ்சம் தோல்மாத்திரம் தப்பினது. | யோபு 30:30 யோபு 33:19-22 சங் 22:14-17 சங் 32:3 சங் 32:4 சங் 38:3 சங் 102:3 சங் 102:5 புலம் 4:8 |
| 21 | என் சிநேகிதரே, எனக்கு இரங்குங்கள், எனக்கு இரங்குங்கள்; தேவனுடைய கை என்னைத் தொட்டது. | யோபு 6:14 ரோம 12:15 1கொரி 12:26 எபிரெ 13:3 |
| 22 | தேவனைப்போல நீங்களும் என்னைத் துன்பப்படுத்துவானேன்? என் மாம்சம் பட்சிக்கப்பட்டாலும் நீங்கள் திருப்தியற்றிருக்கிறதென்ன? | யோபு 10:16 யோபு 16:13 யோபு 16:14 சங் 69:26 |
| 23 | ஆ, நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்; அவைகள் ஒரு புஸ்தகத்தில் வரையப்பட்டு, | யோபு 31:35 ஏசா 8:1 ஏசா 30:8 |
| 24 | அல்லது என்றைக்கும் நிலைக்க அவைகள் கருங்கல்லிலே உளிவெட்டாகவும் ஈய எழுத்தாகவும் பதிந்தால் நலமாயிருக்கும். | யாத் 28:11 யாத் 28:12 யாத் 28:21 யாத் 32:16 உபா 27:2 உபா 27:3 உபா 27:8 எரே 17:1 |
| 25 | என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். | யோபு 33:23 யோபு 33:24 சங் 19:14 ஏசா 54:5 ஏசா 59:20 ஏசா 59:21 எபே 1:7 |
| 26 | இந்த என் தோல்முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன். | சங் 17:15 |
| 27 | அவரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்; இந்த வாஞ்சையால் என் உள்ளிந்திரியங்கள் எனக்குள் சோர்ந்துபோகிறது. | எண் 24:17 ஏசா 26:19 |
| 28 | காரியத்தின் மூலம் எனக்குள் கண்டுபிடிக்கப்படுகையில், நாம் ஏன் அவனைத் துன்பப்படுத்துகிறோம் என்று நீங்கள் சொல்லவேண்டியதாமே. | யோபு 19:22 சங் 69:26 |
| 29 | பட்டயத்துக்குப் பயப்படுங்கள்; நியாயத்தீர்ப்பு உண்டென்கிறதை நீங்கள் அறியும்பொருட்டு, மூர்க்கமானது பட்டயத்தினால் உண்டாகும் ஆக்கினையை வரப்பண்ணும் என்றான். | யோபு 13:7-11 ரோம 13:1-4 |