இணை வசன வேதாகமம்

Click to Subscribe

யோபு 19

                   
புத்தகங்களைக் காட்டு
1யோபு பிரதியுத்தரமாக:
2நீங்கள் எந்தமட்டும் என் ஆத்துமாவை வருத்தப்படுத்தி, வார்த்தைகளினால் என்னை நொறுக்குவீர்கள்?யோபு 8:2 யோபு 18:2 சங் 13:1 வெளிப் 6:10
3இப்போது பத்துதரம் என்னை நிந்தித்தீர்கள்; நீங்கள் எனக்குக் கடினமுகம் காண்பிக்கிறதினால் உங்களுக்கு வெட்கமில்லை.ஆதி 31:7 லேவி 26:26 எண் 14:22 நெகே 4:12 தானி 1:20
4நான் தப்பிநடந்தது மெய்யானாலும், என் தப்பிதம் என்னோடேதான் இருக்கிறது.யோபு 11:3-6
5நீங்கள் எனக்கு விரோதமாகப் பெருமைபாராட்டி, எனக்கு நிந்தையாக என்னைக் கடிந்துகொள்ளவேண்டும் என்றிருப்பீர்களாகில்,சங் 35:26 சங் 38:16 சங் 41:11 சங் 55:12 மீகா 7:8 செப் 2:10 சகரி 12:7
6தேவன் என்னைக் கவிழ்த்து, தம்முடைய வலையை என்மேல் வீசினார் என்று அறியுங்கள்.யோபு 7:20 யோபு 16:11-14 சங் 44:9-14 சங் 66:10-12
7இதோ, கொடுமை என்று கூப்பிடுகிறேன், கேட்பார் ஒருவரும் இல்லை; கூக்குரலிடுகிறேன், நியாயவிசாரணை இல்லை.யோபு 10:3 யோபு 10:15-17 யோபு 16:17-19 யோபு 21:27 சங் 22:2 எரே 20:8 புலம் 3:8 ஆபகூ 1:2 ஆபகூ 1:3
8நான் கடந்துபோகக்கூடாதபடிக்கு அவர் என் பாதையை வேலியடைத்து, என் வழிகளை இருளாக்கிவிட்டார்.யோபு 3:23 சங் 88:8 புலம் 3:7 புலம் 3:9 ஓசி 2:6
9என்னிலிருந்த என் மகிமையை அவர் உரிந்துகொண்டு, என் சிரசின் கிரீடத்தை எடுத்துப்போட்டார்.யோபு 29:7-14 யோபு 29:20-14 யோபு 29:21-14 யோபு 30:1 சங் 49:16 சங் 49:17 சங் 89:44 ஏசா 61:6 ஓசி 9:11
10அவர் என்னை நான்கு புறத்திலும் நாசமாக்கினார், நான் அற்றுப்போகிறேன்; என் நம்பிக்கையை ஒரு செடியைப்போலப் பிடுங்கிப்போட்டார்.யோபு 1:13-19 யோபு 2:7 சங் 88:13-18 புலம் 2:5 புலம் 2:6 2கொரி 4:8 2கொரி 4:9
11அவர் தமது கோபத்தை என்மேல் எரியப்பண்ணினார்; என்னைத் தம்முடைய சத்துருக்களில் ஒருவனாக எண்ணிக்கொள்ளுகிறார்.உபா 32:22 சங் 89:46 சங் 90:7
12அவருடைய தண்டுப்படைகள் ஏகமாய் வந்து, எனக்கு விரோதமாய்த் தங்கள் வழியை உயர்த்தி, என் கூடாரத்தைச் சுற்றிப் பாளயமிறங்கினார்கள்.யோபு 16:11 ஏசா 10:5 ஏசா 10:6 ஏசா 51:23
13என் சகோதரரை என்னைவிட்டுத் தூரப்படுத்தினார்; எனக்கு அறிமுகமானவர்கள் எனக்கு அந்நியராய்ப் போனார்கள்.சங் 31:11 சங் 38:11 சங் 69:8 சங் 69:20 சங் 88:8 சங் 88:18 மத் 26:56 2தீமோ 4:16
14என் பந்துஜனங்கள் விலகிப்போனார்கள். என் சிநேகிதர் என்னை மறந்துவிட்டார்கள்.சங் 38:11 நீதி 18:24 மீகா 7:5 மீகா 7:6 மத் 10:21
15என் வீட்டு ஜனங்களும், என் வேலைக்காரிகளும், என்னை அந்நியனாக எண்ணுகிறார்கள்; அவர்கள் பார்வைக்கு நான் பரதேசியானேன்.யோபு 31:31 யோபு 31:32 சங் 123:3
16நான் என் வேலைக்காரனைக் கூப்பிடுகிறபோது அவன் எனக்கு உத்தரவு கொடான்; என் வாயினால் நான் அவனைக் கெஞ்சவேண்டியதாயிற்று.யோபு 1:15 யோபு 1:16 யோபு 1:17 யோபு 1:19
17என் சுவாசம் என் மனைவிக்கு வேறுபட்டிருக்கிறது; என் கர்ப்பத்தின் பிள்ளைகளுக்காகப் பரிதபிக்கிறேன்.யோபு 2:9 யோபு 2:10 யோபு 17:1
18சிறுபிள்ளைகளும் என்னை அசட்டைபண்ணுகிறார்கள்; நான் எழுந்தால், அவர்கள் எனக்கு விரோதமாய்ப் பேசுகிறார்கள்.யோபு 30:1 யோபு 30:12 2இரா 2:23 ஏசா 3:5
19என் பிராணசிநேகிதர் எல்லாரும் என்னை வெறுக்கிறார்கள்; நான் சிநேகித்தவர்கள் எனக்கு விரோதிகளானார்கள்.சங் 41:9 சங் 55:12-14 சங் 55:20-14
20என் எலும்புகள் என் தோலோடும் என் மாம்சத்தோடும் ஒட்டிக்கொண்டிருக்கிறது என் பற்களை மூடக் கொஞ்சம் தோல்மாத்திரம் தப்பினது.யோபு 30:30 யோபு 33:19-22 சங் 22:14-17 சங் 32:3 சங் 32:4 சங் 38:3 சங் 102:3 சங் 102:5 புலம் 4:8
21என் சிநேகிதரே, எனக்கு இரங்குங்கள், எனக்கு இரங்குங்கள்; தேவனுடைய கை என்னைத் தொட்டது.யோபு 6:14 ரோம 12:15 1கொரி 12:26 எபிரெ 13:3
22தேவனைப்போல நீங்களும் என்னைத் துன்பப்படுத்துவானேன்? என் மாம்சம் பட்சிக்கப்பட்டாலும் நீங்கள் திருப்தியற்றிருக்கிறதென்ன?யோபு 10:16 யோபு 16:13 யோபு 16:14 சங் 69:26
23ஆ, நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்; அவைகள் ஒரு புஸ்தகத்தில் வரையப்பட்டு,யோபு 31:35 ஏசா 8:1 ஏசா 30:8
24அல்லது என்றைக்கும் நிலைக்க அவைகள் கருங்கல்லிலே உளிவெட்டாகவும் ஈய எழுத்தாகவும் பதிந்தால் நலமாயிருக்கும்.யாத் 28:11 யாத் 28:12 யாத் 28:21 யாத் 32:16 உபா 27:2 உபா 27:3 உபா 27:8 எரே 17:1
25என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்.யோபு 33:23 யோபு 33:24 சங் 19:14 ஏசா 54:5 ஏசா 59:20 ஏசா 59:21 எபே 1:7
26இந்த என் தோல்முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்.சங் 17:15
27அவரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்; இந்த வாஞ்சையால் என் உள்ளிந்திரியங்கள் எனக்குள் சோர்ந்துபோகிறது.எண் 24:17 ஏசா 26:19
28காரியத்தின் மூலம் எனக்குள் கண்டுபிடிக்கப்படுகையில், நாம் ஏன் அவனைத் துன்பப்படுத்துகிறோம் என்று நீங்கள் சொல்லவேண்டியதாமே.யோபு 19:22 சங் 69:26
29பட்டயத்துக்குப் பயப்படுங்கள்; நியாயத்தீர்ப்பு உண்டென்கிறதை நீங்கள் அறியும்பொருட்டு, மூர்க்கமானது பட்டயத்தினால் உண்டாகும் ஆக்கினையை வரப்பண்ணும் என்றான்.யோபு 13:7-11 ரோம 13:1-4
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.