1என் சுவாசம் ஒழிகிறது, என் நாட்கள் முடிகிறது; பிரேதக்குழி எனக்கு ஆயத்தமாயிருக்கிறது.யோபு 19:17 2பரியாசம்பண்ணுகிறவர்கள் என்னிடத்தில் இல்லையோ? அவர்கள் செய்யும் அநியாயங்களை என் கண் பார்த்துக்கொண்டிருக்கிறது.யோபு 12:4 யோபு 13:9 யோபு 16:20 யோபு 21:3 சங் 35:14-16 மத் 27:39-44 3தேவரீர் என் காரியத்தை மேல்போட்டுக்கொண்டு, எனக்காகப் பிணைப்படுவீராக; வேறே யார் எனக்குக் கைகொடுக்கத்தக்கவர்?யோபு 9:33 ஆதி 43:9 ஆதி 44:32 நீதி 11:15 நீதி 20:16 எபிரெ 7:22 4நீர் அவர்கள் இருதயத்துக்கு ஞானத்தை மறைத்தீர்; ஆகையால் அவர்களை உயர்த்தாதிருப்பீர்.2சாமு 15:31 2சாமு 17:14 2நாளா 25:16 ஏசா 19:14 மத் 11:25 மத் 13:11 ரோம 11:8 1கொரி 1:20 5எவன் தன் சிநேகிதருக்குக் கேடாகத் துரோகம் பேசுகிறானோ, அவன் பிள்ளைகளின் கண்களும் பூத்துப்போகும்.யோபு 32:21 யோபு 32:22 சங் 12:2 சங் 12:3 நீதி 20:19 நீதி 29:5 1தெச 2:5 6ஜனங்களுக்குள்ளே அவர் என்னைப் பழமொழியாக வைத்தார்; அவர்கள் முகத்துக்குமுன் நான் அருவருப்பானேன்.யோபு 30:9 1இரா 9:7 சங் 44:14 7இதினிமித்தம் என் கண்கள் சஞ்சலத்தினால் இருளடைந்தது; என் அவயவங்களெல்லாம் நிழலைப்போலிருக்கிறது.யோபு 16:16 சங் 6:7 சங் 31:9 சங் 31:10 புலம் 5:17 8சன்மார்க்கர் இதற்காகப் பிரமிப்பார்கள்; குற்றமில்லாதவன் மாயக்காரனுக்கு விரோதமாக எழும்புவான்.சங் 73:12-15 பிரச 5:8 ஆபகூ 1:13 ரோம 11:33 9நீதிமான் தன்வழியை உறுதியாய்ப் பிடிப்பான்; சுத்தமான கைகளுள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான்.சங் 84:7 சங் 84:11 நீதி 4:18 நீதி 14:16 ஏசா 35:8-10 1பேது 1:5 1யோவா 2:19 10இப்போதும் நீங்கள் எல்லாரும் போய்வாருங்கள்; உங்களில் ஞானமுள்ள ஒருவனையும் காணேன்.யோபு 6:29 மல்கி 3:18 11என் நாட்கள் போயிற்று; என் இருதயத்தில் எனக்கு உண்டாயிருந்த சிந்தனைகள் அற்றுப்போயிற்று.யோபு 7:6 யோபு 9:25 யோபு 9:26 ஏசா 38:10 12அவைகள் இரவைப் பகலாக்கிற்று; இருளை வெளிச்சம் தொடர்ந்துவரும் என்று எண்ணச்செய்தது.யோபு 7:3 யோபு 7:4 யோபு 7:13 யோபு 7:14 யோபு 24:14-16 உபா 28:67 13அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும், பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்; இருளில் என் படுக்கையைப் போடுவேன்.யோபு 14:14 சங் 27:14 புலம் 3:25 புலம் 3:26 14அழிவைப்பார்த்து, நீ எனக்குத் தகப்பன் என்கிறேன்; புழுக்களைப் பார்த்து, நீங்கள் எனக்குத் தாயும் எனக்குச் சகோதரியும் என்கிறேன்.யோபு 21:32 யோபு 21:33 சங் 16:10 சங் 49:9 அப் 2:27-31 அப் 13:34-37 1கொரி 15:42 1கொரி 15:53 1கொரி 15:54 15என் நம்பிக்கை இப்போது எங்கே? நான் நம்பியிருந்ததைக் காண்பவன் யார்?யோபு 4:6 யோபு 6:11 யோபு 13:15 யோபு 19:10 16அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்; அப்போது தூளில் ஏகமாய் இளைப்பாறுவோம் என்றான்.யோபு 18:13 யோபு 18:14 யோபு 33:18-28 சங் 88:4-8 சங் 143:7 ஏசா 38:17 ஏசா 38:18 யோனா 2:6