| 1 | அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் பிரதியுத்தரமாக: | யோபு 2:11 யோபு 4:1 யோபு 22:1 யோபு 42:7 யோபு 42:9 |
| 2 | ஞானவான் காற்றைப்போன்ற நியாயங்களைச் சொல்லி, தன் வயிற்றைக் கொண்டல்காற்றினால் நிரப்பி, | யோபு 11:2 யோபு 11:3 யோபு 13:2 யாக் 3:13 |
| 3 | பிரயோஜனமில்லாத வார்த்தைகளாலும், உபயோகமில்லாத வசனங்களாலும் தர்க்கிக்கலாமோ? | யோபு 13:4 யோபு 13:5 யோபு 16:2 யோபு 16:3 யோபு 26:1-3 மல்கி 3:13-15 மத் 12:36 மத் 12:37 கொலோ 4:6 1தீமோ 6:4 1தீமோ 6:5 |
| 4 | நீர் பயபக்தியை வீணென்று சொல்லி, தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறையப்பண்ணுகிறீர். | யோபு 4:5 யோபு 4:6 யோபு 6:14 சங் 36:1-3 சங் 119:126 செப் 1:6 ரோம 3:31 கலா 2:21 |
| 5 | உம்முடைய வாய் உம்முடைய அக்கிரமத்தைச் சொல்லிக்காட்டுகிறது; நீர் தந்திரமுள்ளவர்களின் நாவைத் தெரிந்துகொண்டீர். | யோபு 9:22-24 யோபு 12:6 மாற் 7:21 மாற் 7:22 லூக் 6:45 யாக் 1:26 |
| 6 | நான் அல்ல, உம்முடைய வாயே உம்மைக் குற்றவாளி என்று தீர்க்கிறது; உம்முடைய உதடுகளே உமக்கு விரோதமாகச் சாட்சியிடுகிறது. | யோபு 9:20 சங் 64:8 மத் 12:37 மத் 26:65 லூக் 19:22 |
| 7 | மனுஷரில் முந்திப் பிறந்தவர் நீர் தானோ? பர்வதங்களுக்குமுன்னே உருவாக்கப்பட்டீரோ? | யோபு 15:10 யோபு 12:12 ஆதி 4:1 |
| 8 | நீர் தேவனுடைய இரகசிய ஆலோசனையைக் கேட்டு, ஞானத்தை உம்மிடமாய்ச் சேர்த்துக்கொண்டீரோ? | யோபு 11:6 உபா 29:29 சங் 25:14 நீதி 3:32 எரே 23:18 ஆமோ 3:7 மத் 11:25 மத் 13:11 மத் 13:35 யோவா 15:15 ரோம 11:34 ரோம 16:25 ரோம 16:26 1கொரி 2:9-11 1கொரி 2:16-11 |
| 9 | நாங்கள் அறியாத எந்தக் காரியத்தை நீர் அறிந்திருக்கிறீர்? எங்களுக்கு விளங்காத எந்தக் காரியமாவது உமக்கு விளங்கியிருக்கிறதோ? | யோபு 13:2 யோபு 26:3 யோபு 26:4 2கொரி 10:7 2கொரி 11:5 2கொரி 11:21-30 |
| 10 | உம்முடைய தகப்பனைப்பார்க்கிலும் பெரிய வயதுள்ள நரைத்தோரும் விருத்தாப்பியரும் எங்களுக்குள் இருக்கிறார்களே. | யோபு 8:8-10 யோபு 12:20 யோபு 32:6 யோபு 32:7 உபா 32:7 நீதி 16:31 |
| 11 | தேவன் அருளிய ஆறுதல்களும், உம்மோடே சொல்லப்படுகிற மிருதுவான பேச்சும் உமக்கு அற்பகாரியமாயிருக்கிறதோ? | யோபு 5:8-26 யோபு 11:13-19 2கொரி 1:3-5 2கொரி 7:6 |
| 12 | உம்முடைய இருதயம் உம்மை எங்கே கொண்டுபோகிறது? உம்முடைய கண்கள் நெறித்துப்பார்க்கிறது என்ன? | பிரச 11:9 மாற் 7:21 மாற் 7:22 அப் 5:3 அப் 5:4 அப் 8:22 யாக் 1:14 யாக் 1:15 |
| 13 | தேவனுக்கு விரோதமாக உம்முடைய ஆவியை எழுப்பி உம்முடைய வாயிலிருந்து வசனங்களைப் புறப்படப்பண்ணுகிறீர். | யோபு 15:25-27 யோபு 9:4 ரோம 8:7 ரோம 8:8 |
| 14 | மனுஷனானவன் பரிசுத்தமாயிருக்கிறதற்கும், ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் நீதிமானாயிருக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்? | யோபு 9:2 யோபு 14:4 யோபு 25:4-6 1இரா 8:46 2நாளா 6:36 சங் 14:3 சங் 51:5 நீதி 20:9 பிரச 7:20 பிரச 7:29 யோவா 3:6 ரோம 7:18 கலா 3:22 எபே 2:2 எபே 2:3 1யோவா 1:8-10 |
| 15 | இதோ, தம்முடைய பரிசுத்தவான்களையும் அவர் நம்புகிறதில்லை; வானங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல. | யோபு 4:18 யோபு 25:5 ஏசா 6:2-5 |
| 16 | அநியாயத்தைத் தண்ணீரைப்போலக் குடிக்கிற மனுஷன் எத்தனை அதிகமாய் அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறான்? | யோபு 4:19 யோபு 42:6 சங் 14:1-3 சங் 53:3 ரோம 1:28-30 ரோம 3:9-19 தீத் 3:3 |
| 17 | உமக்குக் காரியத்தைத் தெரியப்பண்ணுவேன் என்னைக் கேளும்; நான் கண்டதை உமக்கு விவரித்துச் சொல்லுவேன். | யோபு 5:27 யோபு 13:5 யோபு 13:6 யோபு 33:1 யோபு 34:2 யோபு 36:2 |
| 18 | ஞானிகள் தங்கள் பிதாக்கள் சொல்லக் கேட்டு மறைக்காமல் அறிவித்ததையே நான் சொல்லுவேன். | யோபு 15:10 யோபு 8:8 சங் 71:18 சங் 78:3-6 ஏசா 38:19 |
| 19 | அவர்களுக்குமாத்திரம் பூமி அளிக்கப்பட்டது; அந்நியர் அவர்கள் நடுவே கடந்துபோக இடமில்லை. | ஆதி 10:25 ஆதி 10:32 உபா 32:8 யோவே 3:17 |
| 20 | துன்மார்க்கன் உயிரோடிருக்கிற நாளெல்லாம் துன்பத்தால் வாதிக்கப்படுகிறான்; பலவந்தம்பண்ணுகிறவனுக்கு அவன் வருஷங்களின் தொகை மறைக்கப்பட்டிருக்கிறது. | ரோம 8:22 பிரச 9:3 |
| 21 | பயங்கரமான சத்தம் அவன் காதுகளில் தொனிக்கிறது; அவன் சமாதானமாயிருக்கையில் பாழாக்கிறவன் அவன்மேல் வருவான். | யோபு 18:11 ஆதி 3:9 ஆதி 3:10 லேவி 26:36 2இரா 7:6 நீதி 1:26 நீதி 1:27 |
| 22 | இருளிலிருந்து திரும்பிவர அவனுக்கு நம்பிக்கையில்லாமல், பதிவிருக்கிறவர்களின் பட்டயத்துக்கு அவன் பயப்படுகிறான். | யோபு 6:11 யோபு 9:16 2இரா 6:33 ஏசா 8:21 ஏசா 8:22 மத் 27:5 |
| 23 | அப்பம் எங்கே கிடைக்கும் என்று அவன் அலைந்து திரிகிறான்; அந்தகாரநாள் தனக்குச் சமீபித்திருக்கிறதை அறிவான். | யோபு 30:3 யோபு 30:4 ஆதி 4:12 சங் 59:15 சங் 109:10 புலம் 5:6 புலம் 5:9 எபிரெ 11:37 எபிரெ 11:38 |
| 24 | இக்கட்டும் நெருக்கமும் அவனைக் கலங்கப்பண்ணி, யுத்தசன்னத்தனான ராஜாவைப்போல அவனை மேற்கொள்ளும். | யோபு 6:2-4 சங் 119:143 நீதி 1:27 ஏசா 13:3 மத் 26:37 மத் 26:38 ரோம 2:9 |
| 25 | அவன் தேவனுக்கு விரோதமாகக் கைநீட்டி, சர்வவல்லவருக்கு விரோதமாகப் பராக்கிரமம் பாராட்டுகிறான். | லேவி 26:23 சங் 73:9 சங் 73:11 ஏசா 27:4 தானி 5:23 மல்கி 3:13 அப் 9:5 அப் 12:1 அப் 12:23 |
| 26 | கடினக்கழுத்தோடும், பருத்த குமிழுள்ள தன் கேடயங்களோடும் அவருக்கு எதிராக ஓடுகிறான். | 2நாளா 28:22 2நாளா 32:13-17 |
| 27 | அவன் முகத்தைக் கொழுப்பு மூடியிருக்கிறது; அடிவயிறு தொந்திவிட்டிருக்கிறது. | யோபு 17:10 உபா 32:15 சங் 17:10 சங் 73:7 சங் 78:31 ஏசா 6:10 எரே 5:28 |
| 28 | ஆனாலும் பாழான பட்டணங்களிலும், குடிபோன கற்குவியலான வீடுகளிலும் வாசம்பண்ணுவான். | யோபு 3:14 யோபு 18:15 ஏசா 5:8-10 மீகா 7:18 |
| 29 | அவன் ஐசுவரியவானாவதுமில்லை, அவன் ஆஸ்தி நிலைப்பதுமில்லை; அப்படிப்பட்டவர்களின் செல்வம் பூமியில் நீடித்திருப்பதில்லை. | யோபு 20:22-28 யோபு 22:15-20 யோபு 27:16 யோபு 27:17 சங் 49:16 சங் 49:17 லூக் 12:19-21 லூக் 16:2 லூக் 16:19-22 யாக் 1:11 யாக் 5:1-3 |
| 30 | இருளுக்கு அவன் தப்புவதில்லை; அக்கினி ஜூவாலை அவனுடைய கிளையைக் காய்ந்துபோகப்பண்ணும்; அவருடைய வாயின் சுவாசத்தால் அற்றுப்போவான்; | யோபு 15:22 யோபு 10:21 யோபு 10:22 யோபு 18:5 யோபு 18:6 யோபு 18:18 மத் 8:12 மத் 22:13 2பேது 2:17 யூதா 1:13 |
| 31 | வழிதப்பினவன் மாயையை நம்பானாக; நம்பினால் மாயையே அவன் பலனாயிருக்கும். | யோபு 12:16 ஏசா 44:20 கலா 6:3 கலா 6:7 எபே 5:6 |
| 32 | அது அவன் நாள் வருமுன்னே அவனுக்குப் பூரணமாய்ப் பலிக்கும்; அவனுடைய கொப்புப் பச்சைகொள்வதில்லை. | யோபு 22:16 சங் 55:23 பிரச 7:17 |
| 33 | பிஞ்சுகள் உதிர்ந்துபோகிற திராட்சச்செடியைப்போலவும், பூக்கள் உதிர்ந்து போகிற ஒலிவமரத்தைப் போலவும் அவன் இருப்பான். | ஏசா 33:9 வெளிப் 6:13 |
| 34 | மாயக்காரரின் கூட்டம் வெறுமையாய்ப்போகும்; பரிதானம் வாங்கினவர்களின் கூடாரங்களை அக்கினி பட்சிக்கும். | யோபு 8:13 யோபு 20:1 யோபு 27:8 யோபு 36:13 ஏசா 33:14 ஏசா 33:15 மத் 24:51 |
| 35 | அப்படிப்பட்டவன் அநியாயத்தைக் கர்ப்பந்தரித்து அக்கிரமத்தைப் பெறுகிறான்; அவர்கள் கர்ப்பம் மாயையைப் பிறப்பிக்கும் என்றான். | சங் 7:14 ஏசா 59:4 ஏசா 59:5 ஓசி 10:13 கலா 6:7 கலா 6:8 யாக் 1:15 |