இணை வசன வேதாகமம்

Click to Subscribe

1யோவான் 5

                   
புத்தகங்களைக் காட்டு
1இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்; பிறப்பித்தவரிடத்தில் அன்புகூருகிற எவனும் அவரால் பிறப்பிக்கப்பட்டவனிடத்திலும் அன்புகூருகிறான்.1யோவா 2:22 1யோவா 2:23 1யோவா 4:2 1யோவா 4:14 1யோவா 4:15 மத் 16:16 யோவா 1:12 யோவா 1:13 யோவா 6:69 அப் 8:37 ரோம 10:9 ரோம 10:10
2நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறோமென்று அறிந்துகொள்ளுகிறோம்.1யோவா 3:22-24 1யோவா 4:21 யோவா 13:34 யோவா 13:35 யோவா 15:17
3நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.யாத் 20:6 உபா 5:10 உபா 7:9 உபா 10:12 உபா 10:13 தானி 9:4 மத் 12:47-50 யோவா 14:15 யோவா 14:21-24 யோவா 15:10 யோவா 15:14 2யோவா 1:6
4தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.1யோவா 5:1 1யோவா 3:9
5இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?1யோவா 5:1 1யோவா 4:15
6இயேசுகிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறவர்.யோவா 19:34 யோவா 19:35
7(பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;1யோவா 5:10 1யோவா 5:11 யோவா 8:13 யோவா 8:14
8பூலோகத்திலே) சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.1யோவா 5:7
9நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது; தேவன் தமது குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே.1யோவா 5:10 யோவா 3:32 யோவா 3:33 யோவா 5:31-36 யோவா 5:39-36 யோவா 8:17-19 யோவா 10:38 அப் 5:32 அப் 17:31 எபிரெ 2:4 எபிரெ 6:18
10தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான்; தேவனை விசுவாசியாதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால், அவரைப் பொய்யராக்குகிறான்.1யோவா 5:1 யோவா 3:16
11தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம்.1யோவா 5:7 1யோவா 5:10 யோவா 1:19 யோவா 1:32-34 யோவா 8:13 யோவா 8:14 யோவா 19:35 3யோவா 1:12 வெளிப் 1:2
12குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.1யோவா 2:23 1யோவா 2:24 யோவா 1:12 யோவா 3:36 யோவா 5:24 1கொரி 1:30 கலா 2:20 எபிரெ 3:14 2யோவா 1:9
13உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்.1யோவா 1:4 1யோவா 2:1 1யோவா 2:13 1யோவா 2:14 1யோவா 2:21 1யோவா 2:26 யோவா 20:31 யோவா 21:24 1பேது 5:12
14நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.1யோவா 3:21 எபே 3:12 எபிரெ 3:6 எபிரெ 3:14 எபிரெ 10:35
15நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்.நீதி 15:29 எரே 15:12 எரே 15:13
16மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே; மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன்.ஆதி 20:7 ஆதி 20:17 யாத் 32:10-14 யாத் 32:31-14 யாத் 32:32-14 யாத் 34:9 எண் 12:13 எண் 14:11-21 உபா 9:18-20 2நாளா 30:18-20 யோபு 42:7-9 சங் 106:23 எசே 22:30 ஆமோ 7:1-3 யாக் 5:14 யாக் 5:15
17அநீதியெல்லாம் பாவந்தான்; என்றாலும் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமுமுண்டு.1யோவா 3:4 உபா 5:32 உபா 12:32
18தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம்; தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத்தொடான்.1யோவா 5:1 1யோவா 5:4 1யோவா 2:29 1யோவா 3:9 1யோவா 4:6 யோவா 1:13 யோவா 3:2-5 யாக் 1:18 1பேது 1:23
19நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்.1யோவா 5:10 1யோவா 5:13 1யோவா 5:20 1யோவா 3:14 1யோவா 3:24 1யோவா 4:4-6 ரோம 8:16 2கொரி 1:12 2கொரி 5:1 2தீமோ 1:12
20அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.1யோவா 5:1 1யோவா 4:2 1யோவா 4:14
21பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக. ஆமென்.1யோவா 2:1
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.