| 1 | தேவனுடைய நாமமும் உபதேசமும் தூஷிக்கப்படாதபடிக்கு, அடிமைத்தன நுகத்திற்குட்பட்டிருக்கிற வேலைக்காரர் யாவரும் தங்கள் எஜமான்களை எல்லாக்கனத்திற்கும் பாத்திரரென்று எண்ணிக்கொள்ளக்கடவர்கள். | உபா 28:48 ஏசா 47:6 ஏசா 58:6 மத் 11:9 மத் 11:30 அப் 15:10 1கொரி 7:21 1கொரி 7:22 கலா 5:1 |
| 2 | விசுவாசிகளாகிய எஜமான்களை உடையவர்கள், தங்கள் எஜமான்கள் சகோதரராயிருக்கிறதினாலே அவர்களை அசட்டைபண்ணாமல், நல்வேலையின் பலனைப் பெற்றுக்கொள்ளுகிற அவர்கள் விசுவாசிகளும் பிரியருமாயிருக்கிறபடியால், அவர்களுக்கு அதிகமாய் ஊழியஞ்செய்யக்கடவர்கள்; இந்தப்படியே போதித்துப் புத்திசொல்லு. | கொலோ 4:1 பிலேமோ 1:10-16 |
| 3 | ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல், வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவனானால், | 1தீமோ 1:3 1தீமோ 1:6 ரோம 16:17 கலா 1:6 கலா 1:7 |
| 4 | அவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கங்களையும் வாக்குவாதங்களையும் பற்றி நோய்கொண்டவனுமாயிருக்கிறான்; அவைகளாலே பொறாமையும், சண்டையும், தூஷணங்களும், பொல்லாத சம்சயங்களுமுண்டாகி, | 1தீமோ 1:7 1தீமோ 3:6 நீதி 13:7 நீதி 25:14 நீதி 26:12 அப் 8:9 அப் 8:21-23 ரோம 12:16 1கொரி 3:18 1கொரி 8:1 1கொரி 8:2 கலா 6:3 கொலோ 2:18 2தெச 2:4 2தீமோ 3:4 2பேது 2:12 2பேது 2:18 யூதா 1:10 யூதா 1:16 வெளிப் 3:17 |
| 5 | கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு. | 1தீமோ 1:6 1கொரி 11:16 |
| 6 | போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். | 1தீமோ 4:8 சங் 37:16 சங் 84:11 நீதி 3:13-18 நீதி 8:18-21 நீதி 15:16 நீதி 16:8 மத் 6:32 மத் 6:33 லூக் 12:31 லூக் 12:32 ரோம 5:3-5 ரோம 8:28 2கொரி 4:17 2கொரி 4:18 2கொரி 5:1 பிலிப் 1:21 எபிரெ 13:5 |
| 7 | உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம். | யோபு 1:21 நீதி 27:24 பிரச 5:15 பிரச 5:16 |
| 8 | உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம். | ஆதி 28:20 ஆதி 48:15 உபா 2:7 உபா 8:3 உபா 8:4 நீதி 27:23-27 நீதி 30:8 நீதி 30:9 பிரச 2:24-26 பிரச 3:12 பிரச 3:13 மத் 6:11 மத் 6:25-33 எபிரெ 13:5 எபிரெ 13:6 |
| 9 | ஐசுவரியாவன்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். | ஆதி 13:10-13 எண் 22:17-19 யோசு 7:11 2இரா 5:20-27 நீதி 15:27 நீதி 20:21 நீதி 21:6 நீதி 22:16 நீதி 28:20-22 ஏசா 5:8 ஓசி 12:7 ஓசி 12:8 ஆமோ 8:4-6 சகரி 11:5 மத் 13:22 மத் 19:22 மத் 26:15 யாக் 5:1-4 2பேது 2:15 2பேது 2:16 யூதா 1:11 |
| 10 | பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். | ஆதி 34:23 ஆதி 34:24 ஆதி 38:16 யாத் 23:7 யாத் 23:8 உபா 16:19 உபா 23:4 உபா 23:5 உபா 23:18 நியா 17:10 நியா 17:11 நியா 18:19 நியா 18:20 நியா 18:29-31 2சாமு 4:10 2சாமு 4:11 நீதி 1:19 ஏசா 1:23 ஏசா 56:11 எரே 5:27 எரே 5:28 எசே 13:19 எசே 16:33 எசே 22:12 மீகா 3:11 மீகா 7:3 மீகா 7:4 மல்கி 1:10 மத் 23:14 அப் 1:16-19 தீத் 1:11 வெளிப் 18:13 |
| 11 | நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு. | 2தீமோ 2:22 |
| 12 | விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கைபண்ணினவனுமாயிருக்கிறாய். | 1தீமோ 1:18 சகரி 10:5 1கொரி 9:25 1கொரி 9:26 2கொரி 6:7 2கொரி 10:3-5 எபே 6:10-18 1தெச 5:8 1தெச 5:9 2தீமோ 4:7 |
| 13 | நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பிரசன்னமாகும்வரைக்கும், நீ இந்தக் கற்பனையை மாசில்லாமலும் குற்றமில்லாமலும் கைக்கொள்ளும்படிக்கு, | 1தீமோ 5:21 |
| 14 | எல்லாவற்றையும் உயிரோடிருக்கச்செய்கிற தேவனுடைய சந்நிதானத்திலேயும், பொந்தியுபிலாத்துவின் முன்னின்று நல்ல அறிக்கையைச் சாட்சியாக விளங்கப்பண்ணின கிறிஸ்து இயேசுவினுடைய சந்நிதானத்திலேயும் உனக்குக் கட்டளையிடுகிறேன். | 1தீமோ 6:20 1தீமோ 4:11-16 1நாளா 28:9 1நாளா 28:10 1நாளா 28:20 கொலோ 4:17 |
| 15 | அந்தப் பிரசன்னமாகுதலை தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார். அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும், | 1தீமோ 1:11 1தீமோ 1:17 சங் 47:2 சங் 83:18 எரே 10:10 எரே 46:18 தானி 2:44-47 தானி 4:34 மத் 6:13 |
| 16 | ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென். | 1தீமோ 1:17 யாத் 3:14 உபா 32:40 சங் 90:2 ஏசா 57:15 யோவா 8:58 எபிரெ 13:8 வெளிப் 1:8 வெளிப் 1:17 வெளிப் 1:18 |
| 17 | இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கைவைக்கவும், | 1தீமோ 6:13 1தீமோ 1:3 1தீமோ 5:21 |
| 18 | நன்மைசெய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும், | 2நாளா 24:16 சங் 37:3 பிரச 3:12 லூக் 6:33-35 அப் 10:38 கலா 6:10 எபிரெ 13:16 1பேது 3:11 3யோவா 1:11 |
| 19 | நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு. | சங் 17:14 மத் 6:19-21 மத் 10:41 மத் 10:42 மத் 19:21 மத் 25:34-40 லூக் 12:33 லூக் 16:9 லூக் 18:2 லூக் 18:22 கலா 6:8 கலா 6:9 |
| 20 | ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு. | 1தீமோ 6:11 2தீமோ 2:1 |
| 21 | சிலர் அதைப் பாராட்டி, விசுவாசத்தைவிட்டு வழுவிப்போனார்கள். கிருபையானது உன்னோடேகூட இருப்பதாக. ஆமென். | 1தீமோ 6:10 1தீமோ 1:6 1தீமோ 1:19 2தீமோ 2:18 எபிரெ 10:1-12 |