இணை வசன வேதாகமம்

Click to Subscribe

கொலோசேயர் 3

                   
புத்தகங்களைக் காட்டு
1நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.கொலோ 2:12 கொலோ 2:13 கொலோ 2:20 ரோம 6:4 ரோம 6:5 ரோம 6:9-11 கலா 2:19 கலா 2:20 எபே 1:19 எபே 1:20 எபே 2:5 எபே 2:6
2பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.கொலோ 3:1 1நாளா 22:19 1நாளா 29:3 சங் 62:10 சங் 91:14 சங் 119:36 சங் 119:37 நீதி 23:5 பிரச 7:14 மத் 16:23 ரோம 8:4-6 பிலிப் 1:23 1யோவா 2:15-17
3ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது.கொலோ 2:20 ரோம 6:2 கலா 2:20
4நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்.யோவா 11:25 யோவா 14:6 யோவா 20:31 அப் 3:15 கலா 2:20 2தீமோ 1:1 1யோவா 1:1 1யோவா 1:2 1யோவா 5:12 வெளிப் 2:7 வெளிப் 22:1 வெளிப் 22:14
5ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்யிச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.ரோம 6:6 ரோம 8:13 கலா 5:24 எபே 5:3-6
6இவைகளின்பொருட்டே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும்.ரோம 1:18 எபே 5:6 வெளிப் 22:15
7நீங்களும் முற்காலத்தில் அவர்களுக்குள்ளே சஞ்சரித்தபோது, அவைகளைச் செய்துகொண்டுவந்தீர்கள்.கொலோ 2:13 ரோம 6:19 ரோம 6:20 ரோம 7:5 1கொரி 6:11 எபே 2:2 தீத் 3:3 1பேது 4:3 1பேது 4:4
8இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்புவார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்.கொலோ 3:5 கொலோ 3:9 எபே 4:22 எபிரெ 12:1 யாக் 1:21 1பேது 2:1
9ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு,லேவி 19:11 ஏசா 63:8 எரே 9:3-5 செப் 3:13 சகரி 8:16 யோவா 8:44 எபே 4:25 1தீமோ 1:10 தீத் 1:12 தீத் 1:13 வெளிப் 21:8 வெளிப் 21:27 வெளிப் 22:15
10தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே.கொலோ 3:12 கொலோ 3:14 யோபு 29:14 ஏசா 52:1 ஏசா 59:17 ரோம 13:12 ரோம 13:14 1கொரி 15:53 1கொரி 15:54 கலா 3:27 எபே 4:24
11அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும், விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்.சங் 117:2 ஏசா 19:23-25 ஏசா 49:6 ஏசா 52:10 ஏசா 66:18-22 எரே 16:19 ஓசி 2:23 ஆமோ 9:12 மீகா 4:2 சகரி 2:11 சகரி 8:20-23 மல்கி 1:11 மத் 12:18-21 அப் 10:34 அப் 10:35 அப் 13:46-48 அப் 15:17 அப் 26:17 அப் 26:18 ரோம 3:29 ரோம 4:10 ரோம 4:11 ரோம 9:24-26 ரோம 9:30 ரோம 9:31 ரோம 10:12 ரோம 15:9-13 1கொரி 12:13 கலா 3:28 எபே 3:6
12ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு;கொலோ 3:10 எபே 4:24
13ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.ரோம 15:1 ரோம 15:2 2கொரி 6:6 கலா 6:2 எபே 4:2 எபே 4:32
14இவை எல்லாவற்றின்மேலும், பூரணசற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.கொலோ 2:2 யோவா 13:34 யோவா 15:12 ரோம 13:8 1கொரி 13:1-13 எபே 5:2 1தெச 4:9 1தீமோ 1:5 1பேது 4:8 2பேது 1:7 1யோவா 3:23 1யோவா 4:21
15தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்.சங் 29:11 ஏசா 26:3 ஏசா 27:5 ஏசா 57:15 ஏசா 57:19 யோவா 14:27 யோவா 16:33 ரோம 5:1 ரோம 14:17 ரோம 15:13 2கொரி 5:19-21 எபே 2:12-18 எபே 5:1 பிலிப் 4:7
16கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி;யோவா 5:39 யோவா 5:40 2தீமோ 3:15 எபிரெ 4:12 எபிரெ 4:13 1பேது 1:11 1பேது 1:12 வெளிப் 19:10
17வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.கொலோ 3:23 2நாளா 31:20 2நாளா 31:21 நீதி 3:6 ரோம 14:6-8 1கொரி 10:31
18மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள்.ஆதி 3:16 எஸ்தர் 1:20 1கொரி 11:3 1கொரி 14:34 எபே 5:22-24 எபே 5:33-24 1தீமோ 2:12 தீத் 2:4 தீத் 2:5 1பேது 3:1-6
19புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்துகொள்ளாதிருங்கள்.ஆதி 2:23 ஆதி 2:24 ஆதி 24:67 நீதி 5:18 நீதி 5:19 பிரச 9:9 மல்கி 2:14-16 லூக் 14:26 எபே 5:25 எபே 5:28 எபே 5:29 எபே 5:33 1பேது 3:7
20பிள்ளைகளே, உங்களைப் பெற்றாருக்கு எல்லாக்காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது.ஆதி 28:7 யாத் 20:12 லேவி 19:3 உபா 21:18-21 உபா 27:16 நீதி 6:20 நீதி 20:20 நீதி 30:11 நீதி 30:17 எசே 22:7 மல்கி 1:6 மத் 15:4-6 மத் 19:19 எபே 6:1-3
21பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்.சங் 103:13 நீதி 3:12 நீதி 4:1-4 எபே 6:4 1தெச 2:11 எபிரெ 12:5-11
22வேலைக்காரரே, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக்காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள்.கொலோ 3:20 சங் 123:2 மல்கி 1:6 மத் 8:9 லூக் 6:46 லூக் 7:8 எபே 6:5-7 1தீமோ 6:1 1தீமோ 6:2 தீத் 2:9 தீத் 2:10 பிலேமோ 1:16 1பேது 2:18 1பேது 2:19
23நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து,கொலோ 3:17 2நாளா 31:21 சங் 47:6 சங் 47:7 சங் 103:1 சங் 119:10 சங் 119:34 சங் 119:145 பிரச 9:10 எரே 3:10 1பேது 1:22
24எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.கொலோ 2:18 ஆதி 15:1 ரூத் 2:12 நீதி 11:18 மத் 5:12 மத் 5:46 மத் 6:1 மத் 6:2 மத் 6:5 மத் 6:16 மத் 10:41 லூக் 6:35 லூக் 14:14 ரோம 2:6 ரோம 2:7 ரோம 4:4 ரோம 4:5 1கொரி 3:8 1கொரி 9:17 1கொரி 9:18 எபே 6:8 எபிரெ 9:15 எபிரெ 10:35 எபிரெ 11:6
25அநியாயஞ்செய்கிறவன் தான் செய்த அநியாயத்துக்கேற்ற பலனை அடைவான்; பட்சபாதமே இல்லை.1கொரி 6:7 1கொரி 6:8 1தெச 4:6 பிலேமோ 1:18
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.