| 1 | பின்பு மோசே, இஸ்ரவேலின் மூப்பர்கூட இருக்கையில், ஜனங்களை நோக்கி: நான் இன்று உங்களுக்கு விதிக்கிற கட்டளைகளையெல்லாம் கைக்கொள்ளுங்கள். | உபா 4:1-3 உபா 11:32 உபா 26:16 லூக் 11:28 யோவா 15:14 1தெச 4:1 1தெச 4:2 யாக் 2:10 |
| 2 | உன் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திற்கு நீ போக யோர்தானைக் கடக்கும் நாளில், நீ பெரிய கல்லுகளை நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி, | உபா 6:1 உபா 9:1 உபா 11:31 யோசு 1:11 யோசு 4:1 யோசு 4:5-24 |
| 3 | உன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உனக்குக் கொடுக்கும் பாலும் தேனும் ஓடுகிற தேசத்திற்குள் பிரவேசிக்கும்படி நீ கடந்துபோனபின்பு, இந்த நியாயப்பிரமாண வார்த்தைகள் யாவையும் அவைகளில் எழுதக்கடவாய். | யோசு 8:32 எரே 31:31-33 2கொரி 3:2 2கொரி 3:3 எபிரெ 8:6-10 எபிரெ 10:16 |
| 4 | மேலும் நீங்கள் யோர்தானைக் கடந்தபோது, இன்று நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடி அந்தக் கல்லுகளை ஏபால் மலையிலே நாட்டி, அவைகளுக்குச் சாந்துபூசி, | உபா 11:29 உபா 11:30 யோசு 8:30-33 |
| 5 | அங்கே இருப்பாயுதம்படாத கற்களாலே உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டக்கடவாய். | யாத் 24:4 யோசு 8:30 யோசு 8:31 1இரா 18:31 1இரா 18:32 |
| 6 | நீ உன் தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்தை முழுக்கற்களாலே கட்டி, அதின்மேல் உன் தேவனாகிய கர்த்தருக்குச் சர்வாங்கதகனபலிகளையும், | லேவி 1:1-17 எபே 5:2 |
| 7 | சமாதானபலிகளையும் இட்டு, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் புசித்துச் சந்தோஷமாயிருந்து, | லேவி 3:1-17 லேவி 7:11-17 அப் 10:36 ரோம 5:1 ரோம 5:10 எபே 2:16 எபே 2:17 எபே 2:16 எபே 2:17 கொலோ 1:20 எபிரெ 13:20 எபிரெ 13:21 |
| 8 | அந்தக் கல்லுகளில் இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளையெல்லாம் துலக்கமாய் எழுதக்கடவாய் என்று கட்டளையிட்டான். | ஆபகூ 2:2 யோவா 16:25 2கொரி 3:12 |
| 9 | பின்னும் மோசே, லேவியராகிய ஆசாரியர்களும் கூட இருக்கையில், இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கி: இஸ்ரவேலே, கவனித்துக் கேள்; இந்நாளிலே உன் தேவனாகிய கர்த்தருக்கு ஜனமானாய். | உபா 26:16-18 ரோம 6:17 ரோம 6:18 ரோம 6:22 1கொரி 6:9-11 எபே 5:8 எபே 5:9 1பேது 2:10 1பேது 2:11 |
| 10 | ஆகையால் நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, இன்று நான் உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளின்படியும் அவருடைய கட்டளைகளின்படியும் செய்வாயாக என்று சொன்னான். | உபா 10:12 உபா 10:13 உபா 11:1 உபா 11:7 உபா 11:8 லேவி 19:2 மீகா 4:5 மீகா 6:8 மத் 5:48 எபே 4:17-24 1பேது 1:14-16 1பேது 4:1-3 |
| 11 | மேலும் அந்நாளிலே மோசே ஜனங்களை நோக்கி: |
| 12 | நீங்கள் யோர்தானைக் கடந்தபின்பு, ஜனங்கள் ஆசீர்வதிக்கப்படும்படி கெரிசீம் மலையில் சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமீன் என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும். | உபா 11:26-29 யோசு 8:33 யோசு 8:34 நியா 9:7 |
| 13 | சாபங்கூறப்படும்பொருட்டு, ஏபால் மலையில் ரூபன், காத், ஆசேர், செபுலோன், தாண், நப்தலி என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும். | உபா 27:4 உபா 11:29 யோசு 8:33 |
| 14 | அப்பொழுது லேவியர் உரத்த சத்தமிட்டு இஸ்ரவேல் மனிதர் எல்லாரையும் பார்த்து: | உபா 33:9 உபா 33:10 யோசு 8:33 நெகே 8:7 நெகே 8:8 தானி 9:11 மல்கி 2:7-9 |
| 15 | கர்த்தருக்கு அருவருப்பான காரியமாகிய தொழிலாளிகளுடைய கைவேலையால் செய்யப்பட்டதும் வார்ப்பிக்கப்பட்டதுமான யாதொரு விக்கிரகத்தை உண்டுபண்ணி ஒளிப்பிடத்திலே வைக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; அதற்கு ஜனங்களெல்லாரும் பிரதியுத்தரமாக ஆமென் என்று சொல்லக்கடவர்கள். | உபா 28:16-19 ஆதி 9:25 1சாமு 26:19 எரே 11:3 |
| 16 | தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். | உபா 21:18-21 யாத் 20:12 யாத் 21:17 லேவி 19:3 நீதி 30:11-17 எசே 22:7 மத் 15:4-6 |
| 17 | பிறனுடைய எல்லைக்குறியை ஒற்றிப்போடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். | உபா 19:14 நீதி 22:28 நீதி 23:10 நீதி 23:11 |
| 18 | குருடனை வழிதப்பச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். | லேவி 19:14 யோபு 29:15 நீதி 28:10 ஏசா 56:10 மத் 15:14 வெளிப் 2:14 |
| 19 | பரதேசி திக்கற்றவன் விதவை ஆகிய இவர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். | உபா 10:18 உபா 24:17 யாத் 22:21-24 யாத் 23:2 யாத் 23:8 யாத் 23:9 சங் 82:2-4 நீதி 17:23 நீதி 31:5 மீகா 3:9 மல்கி 3:5 |
| 20 | தன் தகப்பன் மனைவியோடே சயனிக்கிறவன், தன் தகப்பனுடைய மானத்தைத் திறந்தபடியினாலே, சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். | உபா 22:30 ஆதி 35:22 ஆதி 49:4 லேவி 18:8 லேவி 20:11 2சாமு 16:22 1நாளா 5:1 எசே 22:10 ஆமோ 2:7 1கொரி 5:1 |
| 21 | யாதொரு மிருகத்தோடே புணர்ச்சி செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். | யாத் 22:19 லேவி 18:23 லேவி 20:15 |
| 22 | தன் தகப்பனுக்காவது தாய்க்காவது குமாரத்தியாகிய தன் சகோதரியோடே சயனிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். | லேவி 18:9 லேவி 20:17 2சாமு 13:1 2சாமு 13:8-14 எசே 22:11 |
| 23 | தன் மாமியோடே சயனிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். | லேவி 18:17 லேவி 20:14 |
| 24 | ஒளிப்பிடத்திலே பிறனைக் கொலைசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். | உபா 19:11 உபா 19:12 யாத் 20:13 யாத் 21:12-14 லேவி 24:17 எண் 35:31 2சாமு 3:27 2சாமு 11:15-17 2சாமு 12:9-12 2சாமு 13:28 2சாமு 20:9 2சாமு 20:10 |
| 25 | குற்றமில்லாதவனைக் கொலைசெய்யும்படி பரிதானம் வாங்குகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். | உபா 10:17 உபா 16:19 யாத் 23:7 யாத் 23:8 சங் 15:5 நீதி 1:11-29 எசே 22:12 எசே 22:13 மீகா 3:10 மீகா 3:11 மீகா 7:2 மீகா 7:3 மத் 26:15 மத் 27:3 மத் 27:4 அப் 1:18 |
| 26 | இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு நடவாதவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். | உபா 27:15 உபா 28:15-68 சங் 119:21 மத் 25:41 1கொரி 16:22 |