| 1 | பழுதும் அவலட்சணமுமுள்ள யாதொரு மாட்டையாவது ஆட்டையாவது உன் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடவேண்டாம்; அது உன் தேவனாகிய கர்த்தருக்கு அவருவருப்பாயிருக்கும். | உபா 15:21 யாத் 12:5 லேவி 22:20-25 மல்கி 1:8 மல்கி 1:13 மல்கி 1:14 எபிரெ 9:14 1பேது 1:19 |
| 2 | உன் தேவனாகிய கர்த்தரின் கண்களுக்கு முன்பாக எந்தப் புருஷனாவது ஸ்திரீயாவது உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற வாசல்கள் ஒன்றில் அக்கிரமஞ்செய்து, அவருடைய உடன்படிக்கையை மீறி, | உபா 17:5 உபா 13:6-18 உபா 29:18 |
| 3 | நான் விலக்கியிருக்கிற வேறே தேவர்களையாவது சந்திரசூரியர் முதலான வானசேனைகளையாவது சேவித்து, அவைகளை நமஸ்கரிக்கிறதாகக் காணப்பட்டால், | உபா 4:19 2இரா 21:3 யோபு 31:26 யோபு 31:27 எரே 8:2 எசே 8:16 |
| 4 | அது உன் செவிகேட்க உனக்கு அறிவிக்கப்படும்போது, நீ அதை நன்றாய் விசாரிக்கக்கடவாய்; அது மெய் என்றும், அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் கண்டாயானால், | உபா 13:12-14 உபா 19:18 நீதி 25:2 யோவா 7:51 |
| 5 | அந்த அக்கிரமத்தைச் செய்த புருஷனையாவது ஸ்திரீயையாவது உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் சாகும்படி கல்லெறியக்கடவாய். | உபா 13:10 உபா 13:11 உபா 21:21 உபா 22:21 உபா 22:24 லேவி 24:14 லேவி 24:16 யோசு 7:25 |
| 6 | சாவுக்குப் பாத்திரமானவன் இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் கொலை செய்யப்படக்கடவன்; ஒரே சாட்சியினுடைய வாக்கினால் அவன் கொலை செய்யப்படலாகாது. | உபா 19:15 எண் 35:30 மத் 18:16 யோவா 8:17 யோவா 8:18 2கொரி 13:1 1தீமோ 5:19 எபிரெ 10:28 |
| 7 | அவனைக் கொலை செய்கிறதற்குச் சாட்சிகளுடைய கைகள் முந்தியும் எல்லா ஜனங்களுடைய கைகள் பிந்தியும் அவன்மேல் இருப்பதாக; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய். | உபா 13:9 அப் 7:58 அப் 7:59 |
| 8 | உன் வாசல்களில் இரத்தப்பழிகளைக்குறித்தும், வியாச்சியங்களைக்குறித்தும், காயம்பட்ட சேதங்களைக்குறித்தும், வழக்கு நேரிட்டு, நியாயந்தீர்ப்பது உனக்கு அரிதாயிருந்தால், நீ எழுந்து, உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து ஏற்படுத்தின ஸ்தானத்திற்குப்போய், | உபா 1:17 யாத் 18:26 1இரா 3:16-28 2நாளா 19:8-10 ஆகா 2:11 மல்கி 2:7 |
| 9 | லேவியரான ஆசாரியரிடத்திலும் அந்நாட்களில் இருக்கிற நியாயாதிபதியினிடத்திலும் விசாரிக்கவேண்டும்; நியாயம் இன்னதென்று அவர்கள் உனக்கு அறிவிப்பார்கள். | எரே 18:18 ஆகா 2:11 மல்கி 2:7 |
| 10 | கர்த்தர் தெரிந்துகொண்ட இடத்திலிருந்து அவர்கள் உனக்கு அறிவிக்கும் தீர்ப்புக்கு நீ இணங்கி, அவர்கள் உனக்கு விதிக்கிறபடி செய்யக் கவனமாயிருப்பாயாக. | மத் 22:2 மத் 22:3 |
| 11 | அவர்கள் உனக்கு அறிவிக்கும் தீர்ப்பை விட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமல், அவர்கள் உனக்கு உணர்த்தும் பிரமாணத்தின்படியும், உனக்குச் சொல்லும் நியாயத்தீர்ப்பின்படியும் செய்யக்கடவாய். | யோசு 1:7 மல்கி 2:8 மல்கி 2:9 ரோம 13:1-6 தீத் 3:1 1பேது 2:13-15 2பேது 2:10 யூதா 1:8 |
| 12 | அங்கே உன் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்யும்படி நிற்கிற ஆசாரியனுடைய சொல்லையாகிலும், நியாயாதிபதியினுடைய சொல்லையாகிலும் கேளாமல், ஒருவன் இடும்புசெய்தால், அவன் சாகக்கடவன்; இப்படியே தீமையை இஸ்ரவேலிலிருந்து விலக்கக்கடவாய். | உபா 13:5 உபா 13:11 எண் 15:30 எஸ்றா 10:8 சங் 19:13 ஓசி 4:4 மத் 10:14 எபிரெ 10:26-29 |
| 13 | அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் அதைக் கேட்டு, பயந்து, இனி இடும்பு செய்யாதிருப்பார்கள். | உபா 13:11 உபா 19:20 |
| 14 | உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதில் குடியேறினபின், நீ: என்னைச் சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளையும் போல, நானும் எனக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்பாயானால்; | உபா 7:1 உபா 12:9 உபா 12:10 உபா 18:9 உபா 26:1 உபா 26:9 லேவி 14:34 யோசு 1:13 |
| 15 | உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து கொள்பவனையே உனக்கு ராஜாவாக வைக்கக்கடவாய்; உன் சகோதரருக்குள்ளிருக்கிற ஒருவனையே உன்மேல் ராஜாவாக எற்படுத்தக்கடவாய்; உன் சகோதரன் அல்லாத அந்நியனை ராஜாவாக ஏற்படுத்தக்கூடாது. | 1சாமு 9:15-17 1சாமு 10:24 1சாமு 16:12 1சாமு 16:13 2சாமு 5:2 1நாளா 12:23 1நாளா 22:10 1நாளா 28:5 சங் 2:2 சங் 2:6 |
| 16 | அவன் அநேக குதிரைகளைச் சம்பாதியாமலும் அநேக குதிரைகளைத் தனக்குச் சம்பாதிக்கும்படிக்கு ஜனங்களைத் திரும்ப எகிப்திற்குப் போகப்பண்ணாமலும் இருக்கக்கடவன்; இனி அந்த வழியாய் நீங்கள் திரும்பிப்போகவேண்டாம் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லியிருக்கிறாரே. | 1சாமு 8:11 2சாமு 8:4 1இரா 1:5 1இரா 4:26 1இரா 10:26-28 2நாளா 9:25 சங் 20:7 ஏசா 36:8 ஏசா 36:9 ஓசி 14:3 |
| 17 | அவன் இருதயம் பின்வாங்கிப் போகாதபடி அவன் அநேகம் ஸ்திரீகளைப் படைக்கவேண்டாம்; வெள்ளியும் பொன்னும் தனக்கு மிகுதியாய்ப் பெருகப்பண்ணவும் வேண்டாம். | ஆதி 2:24 2சாமு 3:2-5 1இரா 11:1-4 நெகே 13:26 மல்கி 2:15 மத் 19:5 |
| 18 | அவன் தன் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, அவனுடைய இருதயம் அவன் சகோதரர்பேரில் மேட்டிமை கொள்ளாமலும், கற்பனையைவிட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமலும், | 2இரா 11:12 |
| 19 | இந்த நியாயப்பிரமாணத்தின் எல்லா வார்த்தைகளையும், இந்தக் கட்டளைகளையும் கைக்கொண்டு, இவைகளின்படி செய்வதற்காகத் தன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருக்கும்படி கற்றுக்கொள்ளும்பொருட்டு, | உபா 6:6-9 உபா 11:18 யோசு 1:8 சங் 1:2 சங் 119:97-100 யோவா 5:39 2தீமோ 3:15-17 |
| 20 | அவன் லேவியராகிய ஆசாரியரிடத்திலிருக்கிற நியாயப்பிரமாண நூலைப்பார்த்து, தனக்காக ஒரு பிரதியை எழுதி, தன்னிடத்தில் வைத்துக்கொண்டு, தன் ஜீவனுள்ள நாளெல்லாம் அதை வாசிக்கக்கடவன்; இப்படிச் செய்வதினால், தானும் தன் குமாரரும் இஸ்ரவேலின் நடுவே தங்கள் ராஜ்யத்திலே நீடித்து வாழுவார்கள். | உபா 8:2 உபா 8:13 உபா 8:14 2இரா 14:10 2நாளா 25:19 2நாளா 26:16 2நாளா 32:25 2நாளா 32:26 2நாளா 33:12 2நாளா 33:19 2நாளா 33:23 2நாளா 34:27 சங் 131:1 சங் 131:2 ஏசா 2:12 தானி 5:20-23 ஆபகூ 2:4 2கொரி 12:7 1பேது 5:5 |