இணை வசன வேதாகமம்

Click to Subscribe

உபாகமம் 16

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆபிப் மாதத்தைக் கவனித்திருந்து, அதில் உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கக்கடவாய்; ஆபிப் மாதத்திலே இராக்காலத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்.யாத் 12:2-20 யாத் 34:18 லேவி 23:5 எண் 9:2-5 எண் 28:16
2கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில், உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவின் பலியாகிய ஆடுமாடுகளைப் பலியிடுவாயாக.யாத் 12:5-7 எண் 28:16-19 2நாளா 35:7 மத் 26:2 மத் 26:17 மாற் 14:12 லூக் 22:8 லூக் 22:15 1கொரி 5:7
3நீ எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாளை நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் நினைக்கும்படி, பஸ்காப் பலியுடனே புளிப்புள்ள அப்பம் புசியாமல், சிறுமையின் அப்பமாகிய புளிப்பில்லா அப்பங்களை ஏழுநாள் வரைக்கும் புசிக்கக்கடவாய்; நீ தீவிரமாய் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்டபடியினால் இப்படிச் செய்யவேண்டும்.யாத் 12:15 யாத் 12:19 யாத் 12:20 யாத் 12:39 யாத் 13:3-7 யாத் 34:18 லேவி 23:6 எண் 9:11 எண் 28:17 1கொரி 5:8
4ஏழுநாள் அளவும் உன் எல்லைகளிலெங்கும் புளிப்புள்ள அப்பம் உன்னிடத்தில் காணப்படலாகாது; நீ முதல் நாள் சாயங்காலத்தில் இட்ட பலியின் மாம்சத்தில் ஏதாகிலும் இராமுழுதும் விடியற்காலம் வரைக்கும் வைக்கவேண்டாம்.யாத் 12:15 யாத் 13:7 யாத் 34:25
5உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக்கொடுக்கும் உன்னுடைய வாசல்களில் எதிலும் நீ பஸ்காவை அடிக்கவேண்டாம்.உபா 16:2 உபா 12:5 உபா 12:6
6உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, நீ எகிப்திலிருந்து புறப்பட்ட நேரமாகிய சாயங்காலத்திலே சூரியன் அஸ்தமிக்கிறபோது பஸ்காவை அடித்து,யாத் 12:6-9 எண் 9:3 எண் 9:11 மத் 26:20 எபிரெ 1:2 எபிரெ 1:3 எபிரெ 9:26 1பேது 1:19 1பேது 1:20
7உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொண்ட ஸ்தானத்திலே, அதைப் பொரித்துப் புசித்து, விடியற்காலத்திலே உன் கூடாரங்களுக்குத் திரும்பிப்போவாயாக.யாத் 12:8 யாத் 12:9 2நாளா 35:13 சங் 22:14 சங் 22:15
8நீ ஆறு நாளும் புளிப்பில்லாத அப்பம் புசிக்கவேண்டும், ஏழாம் நாள் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஆசரிக்கப்படும் நாளாயிருக்கும்; அதிலே யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.யாத் 12:15 யாத் 12:16 யாத் 13:7 யாத் 13:8 லேவி 23:6-8 எண் 28:17-19
9ஏழு வாரங்களை எண்ணுவாயாக; அறுப்பு அறுக்கத் தொடங்கும் காலமுதல் நீ அந்த ஏழு வாரங்களையும் எண்ணவேண்டும்.உபா 16:10 உபா 16:16 யாத் 23:16 யாத் 34:22 லேவி 23:15 லேவி 23:16 எண் 28:26-30 2நாளா 8:13 அப் 2:1 1கொரி 16:8 எபிரெ 2:1
10அவைகள் முடிந்தபோது வாரங்களின் பண்டிகையை உன் தேவனாகிய கர்த்தருக்கு என்று ஆசரித்து, உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததற்குத் தக்கதாய் உன் கைக்கு நேர்ந்த மனப்பூர்வமான காணிக்கையாகிய பகுதியைச் செலுத்தி,உபா 16:16 லேவி 5:7 லேவி 12:8 லேவி 25:26 எண் 31:28 எண் 31:37 நீதி 3:9 நீதி 3:10
11உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, நீயும், உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும், உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சந்தோஷப்பட்டு,உபா 16:14 உபா 12:7 உபா 12:12 உபா 12:18 ஏசா 64:5 ஏசா 66:10-14 ஆபகூ 3:18 ரோம 5:11 2கொரி 1:24 பிலிப் 4:4
12நீ எகிப்தில் அடிமையாயிருந்ததை நினைத்து, இந்தக் கட்டளைகளைக் கைக்கொண்டு இவைகளின்படி செய்யக்கடவாய்.உபா 16:15 உபா 15:15 புலம் 3:19 புலம் 3:20 ரோம 6:17 ரோம 6:18 எபே 2:1-3 எபே 2:11-3
13நீ உன் களத்தின் பலனையும் உன் ஆலையின் பலனையும் சேர்த்தபின்பு, கூடாரப்பண்டிகையை ஏழு நாள் ஆசரித்து,உபா 31:10 யாத் 23:16 யாத் 34:22 லேவி 23:34-36 எண் 29:12-40 2நாளா 5:3 2நாளா 7:8-10 2நாளா 8:13 எஸ்றா 3:4 நெகே 8:14-18 சகரி 14:16-18 யோவா 7:2
14உன் பண்டிகையில் நீயும், உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும் சந்தோஷப்படக்கடவீர்கள்;உபா 12:12 உபா 26:11 நெகே 8:9-12 பிரச 9:7 ஏசா 12:1-6 ஏசா 25:6-8 ஏசா 30:29 ஏசா 35:10 1தெச 5:16
15உனக்கு உண்டான எல்லா வரத்திலும் உன் கைகளுடைய எல்லாக் கிரியையிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்தபடியினால், கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஏழு நாளளவும் பண்டிகையை ஆசரித்துச் சந்தோஷமாயிருப்பாயாக.லேவி 23:36-42 எண் 29:12-38
16வருஷத்தில் மூன்று தரம் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், உன் ஆண்மக்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள்.யாத் 23:14-17 யாத் 34:22 யாத் 34:23 1இரா 9:25
17ஆனாலும் அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் வெறுங்கையோடே வராமல், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அருளிய ஆசீர்வாதத்திற்குத்தக்கதாக, அவனவன் தன் தன் தகுதிக்கு ஏற்றபடி காணிக்கையைக் கொண்டுவரக்கடவன்.உபா 16:10 லேவி 27:8 எஸ்றா 2:63 மாற் 12:41-44 2கொரி 8:12 2கொரி 9:6 2கொரி 9:7
18உன் தேவனாகிய கர்த்தர் உன் கோத்திரங்கள்தோறும் உனக்குக் கொடுக்கும் வாசல்களிலெல்லாம், நியாயாதிபதிகளையும் தலைவரையும் ஏற்படுத்துவாயாக; அவர்கள் நீதியுடன் ஜனங்களுக்கு நியாயத்தீர்ப்புச் செய்யக்கடவர்கள்.உபா 1:15-17 உபா 17:9 உபா 17:12 உபா 19:17 உபா 19:18 உபா 21:2 யாத் 18:25 யாத் 18:26 யாத் 21:6 1நாளா 23:4 1நாளா 26:29 2நாளா 19:5-11 சங் 82:2 சங் 82:3 ரோம 13:1-6
19நியாயத்தைப் புரட்டாதிருப்பாயாக; முகதாட்சிணியம்பண்ணாமலும், பரிதானம் வாங்காமலும் இருப்பாயாக; பரிதானம் ஞானிகளின் கண்களைக் குருடாக்கி, நீதிமான்களின் நியாயங்களைத் தாறுமாறாக்கும்.உபா 24:17 உபா 27:19 யாத் 23:2 யாத் 23:6-8 லேவி 19:15 1சாமு 8:3 1சாமு 12:3 யோபு 31:21 யோபு 31:22 நீதி 17:23 பிரச 7:7 ஏசா 1:17 ஏசா 1:23 ஏசா 33:15 எரே 5:28 எசே 22:12 மீகா 7:3 ஆபகூ 1:4 செப் 3:3-5 அப் 16:37 அப் 23:3
20நீ பிழைத்து, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நீதியையே பின்பற்றுவாயாக.உபா 25:13-16 மீகா 6:8 பிலிப் 4:8
21நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு உண்டாக்கும் பலிபீடத்தண்டையில் யாதொரு தோப்பையும் உண்டாக்கவேண்டாம்;யாத் 34:13 நியா 3:7 1இரா 14:15 1இரா 16:33 2இரா 17:16 2இரா 21:3 2நாளா 33:3
22யாதொரு சிலையையும் நிறுத்தவேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர் அதை வெறுக்கிறார்.யாத் 20:4 லேவி 26:1
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.