இணை வசன வேதாகமம்

Click to Subscribe

2கொரிந்தியர் 6

                   
புத்தகங்களைக் காட்டு
1தேவனுடைய கிருபையை நீங்கள் விருதாவாய்ப் பெறாதபடிக்கு, உடன் வேலையாட்களாகிய நாங்கள் உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.2கொரி 5:18-20 1கொரி 3:9
2அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்.ஏசா 49:8 ஏசா 61:2 எசே 16:8 லூக் 4:19 லூக் 19:42-44 எபிரெ 3:7 எபிரெ 3:13 எபிரெ 4:7
3இந்த ஊழியம் குற்றப்படாதபடிக்கு, நாங்கள் யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல், எவ்விதத்தினாலேயும், எங்களை தேவஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறோம்.2கொரி 1:12 2கொரி 8:20 மத் 17:27 மத் 18:6 ரோம 14:13 1கொரி 8:9-13 1கொரி 9:12 1கொரி 9:22 1கொரி 10:23 1கொரி 10:24 1கொரி 10:32 1கொரி 10:33
4மிகுந்த பொறுமையிலும், உபத்திரவங்களிலும், நெருக்கங்களிலும், இடுக்கண்களிலும்,2கொரி 2:17 2கொரி 7:11 அப் 2:22 ரோம 14:18 ரோம 16:10 1கொரி 9:11 1தெச 2:3-11 1தீமோ 2:15
5அடிகளிலும், காவல்களிலும், கலகங்களிலும், பிரயாசங்களிலும், கண்விழிப்புகளிலும், உபவாசங்களிலும்,2கொரி 11:23-25 உபா 25:3 ஏசா 53:5 அப் 16:23
6கற்பிலும், அறிவிலும், நீடிய சாந்தத்திலும், தயவிலும், பரிசுத்த ஆவியிலும், மாயமற்ற அன்பிலும்,2கொரி 7:2 1தெச 2:10 1தீமோ 4:12 1தீமோ 5:2 தீத் 2:7
7சத்தியவசனத்திலும், திவ்விய பலத்திலும்; நீதியாகிய வலதிடதுபக்கத்து ஆயுதங்களைத் தரித்திருக்கிறதிலும்,2கொரி 1:18-20 2கொரி 4:2 2கொரி 7:14 சங் 119:43 எபே 1:13 எபே 4:21 கொலோ 1:5 2தீமோ 2:15 யாக் 1:18
8கனத்திலும், கனவீனத்திலும், துர்க்கீர்த்தியிலும், நற்கீர்த்தியிலும்; எத்தரென்னப்பட்டாலும் நிஜஸ்தராகவும்,அப் 4:21 அப் 5:13 அப் 5:40 அப் 5:41 அப் 14:11-20 அப் 16:20-22 அப் 16:39-22 அப் 28:4-10 1கொரி 4:10-13
9அறியப்படாதவர்களென்னப்பட்டாலும் நன்றாய் அறியப்பட்டவர்களாகவும், சாகிறவர்கள் என்னப்பட்டாலும் உயிரோடிருக்கிறவர்களாகவும், தண்டிக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் கொல்லப்படாதவர்களாகவும்,அப் 17:18 அப் 21:37 அப் 21:38 அப் 25:14 அப் 25:15 அப் 25:19 அப் 25:26 1கொரி 4:9
10துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், தரித்திரர் என்னப்பட்டாலும் அநேகரை ஐசுவரியவான்களாக்குகிறவர்களாகவும், ஒன்றுமில்லாதவர்களென்னப்பட்டாலும் சகலத்தையுமுடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம்.2கொரி 2:4 2கொரி 7:3-10 மத் 5:4 மத் 5:12 லூக் 6:21 யோவா 16:22 அப் 5:41 அப் 16:25 ரோம 5:2 ரோம 5:3 ரோம 9:2 ரோம 12:15 ரோம 15:13 பிலிப் 4:4 1தெச 3:7-10 1தெச 5:16 எபிரெ 10:34 யாக் 1:2-4 1பேது 1:6-8 1பேது 4:13
11கொரிந்தியரே, எங்கள் வாய் உங்களோடே பேசத் திறந்திருக்கிறது, எங்கள் இருதயம் பூரித்திருக்கிறது.கலா 3:1 பிலிப் 4:15
12எங்கள் உள்ளம் உங்களைக்குறித்து நெருக்கமடையவில்லை, உங்கள் உள்ளமே எங்களைக்குறித்து நெருக்கமடைந்திருக்கிறது.பிரச 6:9 யோபு 36:16 நீதி 4:12 மீகா 2:7
13ஆதலால் அதற்குப் பதிலீடாக நீங்களும் பூரிப்பாகுங்களென்று, பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல, உங்களுக்குச் சொல்லுகிறேன்.1கொரி 4:14 1கொரி 4:15 கலா 4:19 1தெச 2:11 எபிரெ 12:5 எபிரெ 12:6 1யோவா 2:1 1யோவா 2:12-14 1யோவா 3:7 1யோவா 3:18 3யோவா 1:4
14அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?யாத் 34:16 லேவி 19:19 உபா 7:2 உபா 7:3 உபா 22:9-11 எஸ்றா 9:1 எஸ்றா 9:2 எஸ்றா 9:11 எஸ்றா 9:12 எஸ்றா 10:19 நெகே 13:1-3 நெகே 13:23-26 சங் 106:35 நீதி 22:24 மல்கி 2:11 மல்கி 2:15 1கொரி 5:9 1கொரி 7:39 1கொரி 15:33 யாக் 4:4
15கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?1சாமு 5:2-4 1இரா 18:21 1கொரி 10:20 1கொரி 10:21
16தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.யாத் 20:3 யாத் 23:13 யாத் 34:14 உபா 4:23 உபா 4:24 உபா 5:7 உபா 6:14 உபா 6:15 யோசு 24:14-24 1சாமு 7:3 1சாமு 7:4 1இரா 18:21 2இரா 17:33 2இரா 17:34 2இரா 21:4 2இரா 21:5 2இரா 23:5-7 2நாளா 33:4 2நாளா 33:5 எசே 36:25 ஓசி 14:8 செப் 1:5 மத் 6:24 1யோவா 5:20 1யோவா 5:21
17ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.2கொரி 7:1 எண் 16:21 எண் 16:26 எண் 16:45 எஸ்றா 6:21 எஸ்றா 10:11 சங் 1:1-3 நீதி 9:6 ஏசா 52:11 எரே 51:6 அப் 2:40 வெளிப் 18:4
18அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.சங் 22:30 எரே 3:19 எரே 31:1 எரே 31:9 ஓசி 1:9 ஓசி 1:10 யோவா 1:12 ரோம 8:14-17 ரோம 8:29-17 கலா 3:26 கலா 4:5-7 எபே 1:5 1யோவா 3:1 1யோவா 3:2 வெளிப் 21:7
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.