| 1 | இந்த மூன்றாந்தரம் நான் உங்களிடத்திற்கு வருகிறேன்; சகல காரியங்களும் இரண்டுமமூன்று சாட்சிகளுடைய வாக்கினால் நிலைவரப்படும். | 2கொரி 12:14 |
| 2 | நான் இரண்டாந்தரம் உங்களிடத்திலிருந்தபோது சொன்னதுபோல, இப்பொழுது தூரமாயிருந்தும் உங்களிடத்திலிருக்கிறவனாக, நான் மறுபடியும் வந்தால் தப்பவிடமாட்டேனென்று முன்பு பாவஞ்செய்தவர்களுக்கும் மற்ற எல்லாருக்கும் முன்னறிவித்து எழுதுகிறேன். | 2கொரி 1:23 2கொரி 10:1 2கொரி 10:2 2கொரி 10:8-11 2கொரி 12:20 1கொரி 4:19-21 1கொரி 5:5 |
| 3 | கிறிஸ்து எனக்குள்ளே பேசுகிறாரென்பதற்கு அத்தாட்சி தேடுகிறீர்களே; அவர் உங்களிடமாய்ப் பலவீனரல்ல, உங்களிடத்தில் வல்லவராயிருக்கிறார். | 2கொரி 10:8-10 |
| 4 | ஏனெனில் அவர் பலவீனத்தால் சிலுவையில் அறையப்பட்டிருந்தும், தேவனுடைய வல்லமையினால் பிழைத்திருக்கிறார்; அப்படி நாங்களும் அவருக்குள் பலவீனராயிருந்தும், உங்களிடமாய் விளங்கிய தேவனுடைய வல்லமையினால் அவருடனேகூடப் பிழைத்திருப்போம். | லூக் 22:43 லூக் 22:44 யோவா 10:18 1கொரி 15:43 பிலிப் 2:7 பிலிப் 2:8 எபிரெ 5:7 1பேது 3:18 |
| 5 | நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப்பாருங்கள். இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரென்று உங்களை நீங்களே அறியீர்களா? நீங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்களாயிருந்தால் அறியீர்கள். | சங் 17:3 சங் 26:2 சங் 119:59 சங் 139:23 சங் 139:24 புலம் 3:40 எசே 18:28 ஆகா 1:5 ஆகா 1:7 1கொரி 11:28 1கொரி 11:31 கலா 6:4 எபிரெ 4:1 எபிரெ 12:15 1யோவா 3:20 1யோவா 3:21 வெளிப் 2:5 வெளிப் 3:2 வெளிப் 3:3 |
| 6 | நாங்களோ பரீட்சைக்கு நில்லாதவர்களல்லவென்பதை அறிவீர்களென்று நம்புகிறேன். | 2கொரி 13:3 2கொரி 13:4 2கொரி 13:10 2கொரி 12:20 |
| 7 | மேலும் நீங்கள் ஒரு பொல்லாங்கும் செய்யாதிருக்கும்படியாக, தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணுகிறேன். நாங்கள் பரீட்சைக்கு நின்றவர்களென்று காணப்படும்பொருட்டல்ல, நாங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்கள்போலிருந்தாலும், நீங்கள் நலமானதைச் செய்யும்பொருட்டே விண்ணப்பம்பண்ணுகிறேன். | 2கொரி 13:9 1நாளா 4:10 மத் 6:13 யோவா 17:15 பிலிப் 1:9-11 1தெச 5:23 2தீமோ 4:18 |
| 8 | சத்தியத்திற்கு விரோதமாக நாங்கள் ஒன்றுஞ்செய்யக்கூடாமல், சத்தியத்திற்கு அநுகூலமாகவே செய்யக்கூடும். | 2கொரி 13:10 2கொரி 10:8 எண் 16:28-35 1இரா 22:28 2இரா 1:9-13 2இரா 2:23-25 நீதி 21:30 நீதி 26:2 மாற் 9:39 மாற் 16:17-19 லூக் 9:49-56 அப் 4:28-30 அப் 5:1-11 அப் 13:3-12 அப் 19:11-17 1கொரி 5:4 1கொரி 5:5 1தீமோ 1:20 எபிரெ 2:3 எபிரெ 2:4 |
| 9 | நாங்கள் பலவீனரும் நீங்கள் பலமுள்ளவர்களுமாயிருக்கையில், சந்தோஷப்படுகிறோம்; நீங்கள் நற்சீர் பொருந்தும்படிக்கும் விண்ணப்பம்பண்ணுகிறோம். | 2கொரி 13:8 2கொரி 11:30 2கொரி 12:5-10 1கொரி 4:10 |
| 10 | ஆனதால் இடித்துப்போட அல்ல, ஊன்றக்கட்டவே கர்த்தர் எனக்குக் கொடுத்த அதிகாரத்தின்படி, நான் உங்களிடத்தில் வந்திருக்கும்போது, கண்டிதம்பண்ணாதபடிக்கு, நான் தூரமாயிருந்து இவைகளை எழுதுகிறேன். | 2கொரி 2:3 2கொரி 10:2 2கொரி 12:20 2கொரி 12:21 1கொரி 4:21 |
| 11 | கடைசியாக, சகோதரரே, சந்தோஷமாயிருங்கள், நற்சீர் பொருந்துங்கள், ஆறுதலடையுங்கள்; ஏகசிந்தையாயிருங்கள், சமாதானமாயிருங்கள், அப்பொழுது அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்களோடேகூட இருப்பார். | லூக் 9:61 அப் 15:29 அப் 18:21 அப் 23:30 பிலிப் 4:4 1தெச 5:16 |
| 12 | ஒருவரையொருவர் பரிசுத்தமுத்தத்தோடு வாழ்த்துங்கள். | ரோம 16:16 1கொரி 16:20 1தெச 5:26 1பேது 5:14 |
| 13 | பரிசுத்தவான்களெல்லாரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். | ரோம 16:16 ரோம 16:21-23 பிலிப் 4:21 பிலிப் 4:22 பிலேமோ 1:23 பிலேமோ 1:24 எபிரெ 13:24 1பேது 5:13 2யோவா 1:13 3யோவா 1:14 |
| 14 | கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென். | எண் 6:23-27 மத் 28:19 யோவா 1:16 யோவா 1:17 ரோம 1:7 ரோம 16:20 ரோம 16:24 1கொரி 16:23 வெளிப் 1:4 வெளிப் 1:5 |