இணை வசன வேதாகமம்

Click to Subscribe

ரோமர் 9

                   
புத்தகங்களைக் காட்டு
1எனக்கு மிகுந்த துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது;ரோம 1:9 2கொரி 1:23 2கொரி 11:31 2கொரி 12:19 கலா 1:20 பிலிப் 1:8 1தெச 2:5 1தீமோ 2:7 1தீமோ 5:21
2நான் சொல்லுகிறது பொய்யல்ல, கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன் என்று பரிசுத்த ஆவிக்குள் என் மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியாயிருக்கிறது.ரோம 10:1 1சாமு 15:35 சங் 119:136 ஏசா 66:10 எரே 9:1 எரே 13:17 புலம் 1:12 புலம் 3:48 புலம் 3:49 புலம் 3:51 எசே 9:4 லூக் 19:41-44 பிலிப் 3:18 வெளிப் 11:3
3மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாக வேண்டுமென்று விரும்புவேனே.யாத் 32:32
4அவர்கள் இஸ்ரவேலரே; புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும், நியாயப்பிரமாணமும், தேவாராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே;ரோம 9:6 ஆதி 32:28 யாத் 19:3-6 உபா 7:6 சங் 73:1 ஏசா 41:8 ஏசா 46:3 யோவா 1:47
5பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென்.ரோம 11:28 உபா 10:15
6தேவவசனம் அவமாய்ப் போயிற்றென்று சொல்லக்கூடாது; ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் இஸ்ரவேலரல்லவே.ரோம 3:3 ரோம 11:1 ரோம 11:2 எண் 23:19 ஏசா 55:11 மத் 24:35 யோவா 10:35 2தீமோ 2:13 எபிரெ 6:17 எபிரெ 6:18
7அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரானாலும் எல்லாரும் பிள்ளைகளல்லவே; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று சொல்லியிருக்கிறதே.லூக் 3:8 லூக் 16:24 லூக் 16:25 லூக் 16:30 யோவா 8:37-39 பிலிப் 3:3
8அதெப்படியென்றால், மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல, வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே அந்தச் சந்ததி என்றெண்ணப்படுகிறார்கள்.ரோம 4:11-16 கலா 4:22-31
9அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது: குறித்த காலத்திலே வருவேன், அப்பொழுது சாராள் ஒரு குமாரனைப் பெறுவாள் என்பதே.ஆதி 17:21 ஆதி 18:10 ஆதி 18:14 ஆதி 21:2
10இதுவுமல்லாமல், நம்முடைய பிதாவாகிய ஈசாக்கு என்னும் ஒருவனாலே ரெபெக்காள் கர்ப்பவதியானபோது,ரோம 5:3 ரோம 5:11 லூக் 16:26
11பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படிக்கு,ரோம 4:17 சங் 51:5 எபே 2:3
12மூத்தவன் இளையவனுக்கு ஊழியஞ்செய்வான் என்று அவளுடனே சொல்லப்பட்டது.ஆதி 25:22 ஆதி 25:23 2சாமு 8:14 1இரா 22:47
13அப்படியே, யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது.மல்கி 1:2 மல்கி 1:3
14ஆகையால் நாம் என்ன சொல்லுவோம்? தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா? சொல்லக்கூடாதே.ரோம 3:1 ரோம 3:5
15அவர் மோசேயை நோக்கி: எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன், எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் உருக்கமாயிருப்பேன் என்றார்.ரோம 9:16 ரோம 9:18 ரோம 9:19 யாத் 33:19 யாத் 34:6 யாத் 34:7 ஏசா 27:11 மீகா 7:18
16ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்.ரோம 9:11 ஆதி 27:1-4 ஆதி 27:9-14 சங் 110:3 ஏசா 65:1 மத் 11:25 மத் 11:26 லூக் 10:21 யோவா 1:12 யோவா 1:13 யோவா 3:8 1கொரி 1:26-31 எபே 2:4 எபே 2:5 பிலிப் 2:13 2தெச 2:13 2தெச 2:14 தீத் 3:3-5 யாக் 1:18 1பேது 2:9 1பேது 2:10
17மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என்னுடைய நாமம் பூமியில் எங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும், உன்னை நிலைநிறுத்தினேன் என்று பார்வோனுடனே சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது.ரோம 11:4 கலா 3:8 கலா 3:22 கலா 4:30
18ஆதலால் எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாயிருக்கிறார், எவனைக் கடினப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார்.ரோம 9:15 ரோம 9:16 ரோம 5:20 ரோம 5:21 எபே 1:6
19இப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம்பிடிக்கிறார்? அவர் சித்தத்திற்கு எதிர்த்து நிற்பவன் யார்? என்று என்னுடனே சொல்லுவாய்.ரோம 3:8 1கொரி 15:12 1கொரி 15:35 யாக் 1:13
20அப்படியானால், மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா?ரோம 2:1 மீகா 6:8 1கொரி 7:16 யாக் 2:20
21மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?ரோம 9:11 ரோம 9:18 நீதி 16:4 ஏசா 64:8 எரே 18:3-6
22தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும்,ரோம 9:17 ரோம 1:18 ரோம 2:4 ரோம 2:5 யாத் 9:16 சங் 90:11 நீதி 16:4 வெளிப் 6:16 வெளிப் 6:17
23தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபாபாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய், அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருந்தாரானால் உனக்கென்ன?ரோம 2:4 ரோம 5:20 ரோம 5:21 எபே 1:6-8 எபே 1:18-8 எபே 2:4 எபே 2:7 எபே 2:10 எபே 3:8 எபே 3:16 கொலோ 1:27 2தெச 1:10-12
24அவர் யூதரிலிருந்துமாத்திரமல்ல, புறஜாதிகளிலுமிருந்து நம்மை அழைத்திருக்கிறாரே.ரோம 8:28-30 1கொரி 1:9 எபிரெ 3:1 1பேது 5:10 வெளிப் 19:9
25அந்தப்படி: எனக்கு ஜனங்களல்லாதவர்களை என்னுடைய ஜனங்கள் என்றும், சிநேகிக்கப்படாதிருந்தவளைச் சிநேகிக்கப்பட்டவள் என்றும் சொல்லி அழைப்பேன்.ஓசி 1:1 ஓசி 1:2
26நீங்கள் என்னுடைய ஜனங்களல்லவென்று அவர்களுக்குச் சொல்லப்பட்ட இடத்திலே அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்னப்படுவார்கள் என்று ஓசியாவின் தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருக்கிறது.ஓசி 1:9 ஓசி 1:10
27அல்லாமலும் இஸ்ரவேல் புத்திரருடைய இலக்கம் சமுத்திரத்தின் மணலத்தனையாயிருந்தாலும், மீதியாயிருப்பவர்கள்மாத்திரம் இரட்சிக்கப்படுவார்கள் என்றும்;ஏசா 1:1
28அவர் நீதியோடே சீக்கிரமாய்த் தம்முடைய காரியத்தை நிறைவேற்றுவார்; கர்த்தர் பூமியிலே சீக்கிரமாகவே காரியத்தை நிறைவேற்றி முடிப்பார் என்றும் ஏசாயா இஸ்ரவேலரைக்குறித்துச் சொல்லுகிறான்.ஏசா 28:22 ஏசா 30:12-14 தானி 9:26 தானி 9:27 மத் 24:21
29அல்லாமலும் ஏசாயா முன்னே சொன்னபடி: சேனைகளின் கர்த்தர் நமக்குள்ளே ஒரு சந்ததியை மீதியாக வைக்காதிருந்தாரானால் நாம் சோதோமைப்போலாகி கொமோராவுக்கு ஒத்திருப்போம்.ஏசா 1:9 ஏசா 6:13 புலம் 3:22
30இப்படியிருக்க நாம் என்ன சொல்லுவோம்? நீதியைத் தேடாத புறஜாதியார் நீதியை அடைந்தார்கள்; அது விசுவாசத்தினாலாகும் நீதியே.ரோம 9:14 ரோம 3:5
31நீதிப்பிரமாணத்தைத் தேடின இஸ்ரவேலரோ நீதிப்பிரமாணத்தை அடையவில்லை.ரோம 9:30-32 ரோம 10:2-4 கலா 3:21 பிலிப் 3:6
32என்னத்தினாலென்றால், அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடினபடியால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள்.ரோம 4:16 ரோம 10:3 மத் 19:16-20 யோவா 6:27-29 அப் 16:30-34 1யோவா 5:9-12
33இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன்; அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று எழுதியிருக்கிறபடியாயிற்று.சங் 118:22 ஏசா 8:14 ஏசா 8:15 ஏசா 28:16 மத் 21:42 மத் 21:44 1பேது 2:7 1பேது 2:8
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.