இணை வசன வேதாகமம்

Click to Subscribe

ரோமர் 8

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.ரோம 4:7 ரோம 4:8 ரோம 5:1 ரோம 7:17 ரோம 7:20 ஏசா 54:17 யோவா 3:18 யோவா 3:19 யோவா 5:24 கலா 3:13
2கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.ரோம 3:27 யோவா 8:36
3அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.ரோம 3:20 ரோம 7:5-11 அப் 13:39 கலா 3:21 எபிரெ 7:18 எபிரெ 7:19 எபிரெ 10:1-10 எபிரெ 10:14-10
4மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்.கலா 5:22-24 எபே 5:26 எபே 5:27 கொலோ 1:22 எபிரெ 12:23 1யோவா 3:2 யூதா 1:24 வெளிப் 14:5
5அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்.ரோம 8:12 ரோம 8:13 யோவா 3:6 1கொரி 15:48 2கொரி 10:3 2பேது 2:10
6மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்.ரோம 8:7 ரோம 8:13 ரோம 6:21 ரோம 6:23 ரோம 7:5 ரோம 7:11 ரோம 13:14 கலா 6:8 யாக் 1:14 யாக் 1:15
7எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது.ரோம 1:28 ரோம 1:30 ரோம 5:10 யாத் 20:5 2நாளா 19:2 சங் 53:1 யோவா 7:7 யோவா 15:23 யோவா 15:24 எபே 4:18 எபே 4:19 கொலோ 1:21 2தீமோ 3:4 யாக் 4:4 1யோவா 2:15 1யோவா 2:16
8மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்.ரோம 8:9 ரோம 7:5 யோவா 3:3 யோவா 3:5 யோவா 3:6
9தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.ரோம 8:2 எசே 11:19 எசே 36:26 எசே 36:27 யோவா 3:6
10மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்.யோவா 6:56 யோவா 14:20 யோவா 14:23 யோவா 15:5 யோவா 17:23 2கொரி 13:5 எபே 3:17 கொலோ 1:27
11அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.ரோம 8:9 ரோம 4:24 ரோம 4:25 அப் 2:24 அப் 2:32 அப் 2:33 எபே 1:19 எபே 1:20 எபிரெ 13:20 1பேது 1:21
12ஆகையால் சகோதரரே, மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்குக் கடனாளிகளல்ல.ரோம 6:2-15 சங் 116:16 1கொரி 6:19 1கொரி 6:20 1பேது 4:2 1பேது 4:3
13மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.ரோம 8:1 ரோம 8:4-6 ரோம 6:21 ரோம 6:23 ரோம 7:5 கலா 5:19-21 கலா 6:8 எபே 5:3-5 கொலோ 3:5 கொலோ 3:6 யாக் 1:14 யாக் 1:15
14மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.ரோம 8:5 ரோம 8:9 சங் 143:10 நீதி 8:20 ஏசா 48:16 ஏசா 48:17 கலா 4:6 கலா 5:16 கலா 5:18 கலா 5:22-25 எபே 5:9
15அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.யாத் 20:19 எண் 17:12 லூக் 8:28 லூக் 8:37 யோவா 16:8 அப் 2:37 அப் 16:29 1கொரி 2:12 2தீமோ 1:7 எபிரெ 2:15 எபிரெ 12:18-24 யாக் 2:19 1யோவா 4:18
16நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார்.ரோம 8:23 ரோம 8:26 2கொரி 1:22 2கொரி 5:5 எபே 1:13 எபே 4:30 1யோவா 4:13
17நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.ரோம 8:3 ரோம 8:29 ரோம 8:30 ரோம 5:9 ரோம 5:10 ரோம 5:17 லூக் 12:32 அப் 26:18 கலா 3:29 கலா 4:7 எபே 3:6 தீத் 3:7 எபிரெ 1:14 எபிரெ 6:17 யாக் 2:5 1பேது 1:4
18ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.மத் 5:11 மத் 5:12 அப் 20:24 2கொரி 4:17 2கொரி 4:18 எபிரெ 11:25 எபிரெ 11:26 எபிரெ 11:35 1பேது 1:6 1பேது 1:7
19மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது.ரோம 8:23 பிலிப் 1:20
20அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே,ரோம 8:22 ஆதி 3:17-19 ஆதி 5:29 ஆதி 6:13 யோபு 12:6-10 ஏசா 24:5 ஏசா 24:6 எரே 12:4 எரே 12:11 எரே 14:5 எரே 14:6 ஓசி 4:3 யோவே 1:18
21அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.2பேது 3:13
22ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.ரோம 8:20 மாற் 16:15 கொலோ 1:23
23அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்.ரோம 8:15 ரோம 8:16 ரோம 5:5 2கொரி 5:5 கலா 5:22 கலா 5:23 எபே 1:14 எபே 5:9
24அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன?ரோம 5:2 ரோம 12:12 ரோம 15:4 ரோம 15:13 சங் 33:18 சங் 33:22 சங் 146:5 நீதி 14:32 எரே 17:7 சகரி 9:12 1கொரி 13:13 கலா 5:5 கொலோ 1:5 கொலோ 1:23 கொலோ 1:27 1தெச 5:8 2தெச 2:16 தீத் 2:11-13 எபிரெ 6:18 எபிரெ 6:19 1பேது 1:3 1பேது 1:21 1யோவா 3:3
25நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்.ரோம 8:23 ரோம 2:7 ரோம 12:12 ஆதி 49:18 சங் 27:14 சங் 37:7-9 சங் 62:1 சங் 62:5 சங் 62:6 சங் 130:5-7 ஏசா 25:9 ஏசா 26:8 புலம் 3:25 புலம் 3:26 லூக் 8:15 லூக் 21:19 கொலோ 1:11 1தெச 1:3 2தெச 3:5 எபிரெ 6:12 எபிரெ 6:15 எபிரெ 10:36 எபிரெ 12:1-3 யாக் 1:3 யாக் 1:4 யாக் 5:7-11 வெளிப் 1:9 வெளிப் 13:10 வெளிப் 14:12
26அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.ரோம 15:1 2கொரி 12:5-10 எபிரெ 4:15 எபிரெ 5:2
27ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல்செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார்.1நாளா 28:9 1நாளா 29:17 சங் 7:9 சங் 44:21 நீதி 17:3 எரே 11:20 எரே 17:10 எரே 20:12 மத் 6:8 யோவா 21:17 அப் 1:24 அப் 15:8 1தெச 2:4 எபிரெ 4:13 வெளிப் 2:23
28அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.ரோம 8:35-39 ரோம 5:3 ரோம 5:4 ஆதி 50:20 உபா 8:2 உபா 8:3 உபா 8:16 சங் 46:1 சங் 46:2 எரே 24:5-7 சகரி 13:9 2கொரி 4:15-17 2கொரி 5:1 பிலிப் 1:19-23 2தெச 1:5-7 எபிரெ 12:6-12 யாக் 1:3 யாக் 1:4 1பேது 1:7 1பேது 1:8 வெளிப் 3:19
29தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன் குறித்திருக்கிறார்;ரோம 11:2 யாத் 33:12 யாத் 33:17 சங் 1:6 எரே 1:5 மத் 7:23 2தீமோ 2:19 1பேது 1:2 வெளிப் 13:8
30எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.ரோம 8:28 ரோம 1:6 ரோம 9:23 ரோம 9:24 ஏசா 41:9 1கொரி 1:2 1கொரி 1:9 எபே 4:4 எபிரெ 9:15 1பேது 2:9 2பேது 1:10 வெளிப் 17:14 வெளிப் 19:9
31இவைகளைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?ரோம 4:1
32தம்முடைய சொந்தக்குமாரனென்றும்பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?ரோம 5:6-10 ரோம 11:21 ஆதி 22:12 ஏசா 53:10 மத் 3:17 யோவா 3:16 2கொரி 5:21 2பேது 2:4 2பேது 2:5 1யோவா 4:10
33தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.ரோம 8:1 யோபு 1:9-11 யோபு 2:4-6 யோபு 22:6-30 யோபு 34:8 யோபு 34:9 யோபு 42:7-9 சங் 35:11 ஏசா 54:17 சகரி 3:1-4 வெளிப் 12:10 வெளிப் 12:11
34ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.ரோம 8:1 ரோம 14:13 யோபு 34:29 சங் 37:33 சங் 109:31 எரே 50:20
35உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும்,ரோம 8:39 சங் 103:17 எரே 31:3 யோவா 10:28 யோவா 13:1 2தெச 2:13 2தெச 2:14 2தெச 2:16 வெளிப் 1:5
36கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ. நாசமோசமோ, பட்டயமோ?சங் 44:22 சங் 141:7 யோவா 16:2 1கொரி 15:30 2கொரி 4:11
37இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.2நாளா 20:25-27 ஏசா 25:8 1கொரி 15:54 1கொரி 15:57 2கொரி 2:14 2கொரி 12:9 2கொரி 12:19 1யோவா 4:4 1யோவா 5:4 1யோவா 5:5 வெளிப் 7:9 வெளிப் 7:10 வெளிப் 11:7-12 வெளிப் 12:11 வெளிப் 17:14 வெளிப் 21:7
38மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும்,ரோம 4:21 2கொரி 4:13 2தீமோ 1:12 எபிரெ 11:13
39உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.எபே 3:18 எபே 3:19
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.