| 1 | நியாயப்பிரமாணத்தை அறிந்திருக்கிறவர்களுடனே பேசுகிறேன். சகோதரரே, ஒரு மனுஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணம் அவனை ஆளுகிறதென்று அறியாமலிருக்கிறீர்களா? | ரோம 6:3 |
| 2 | அதெப்படியென்றால், புருஷனையுடைய ஸ்திரீ தன் புருஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணத்தின்படியே அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள்; புருஷன் மரித்த பின்பு புருஷனைப்பற்றிய பிரமாணத்தினின்று விடுதலையாயிருக்கிறாள். | ஆதி 2:23 ஆதி 2:24 எண் 30:7 எண் 30:8 1கொரி 7:4 1கொரி 7:39 |
| 3 | ஆகையால், புருஷன் உயிரோடிருக்கையில் அவள் வேறொரு புருஷனை விவாகம்பண்ணினால் விபசாரியென்னப்படுவாள்; புருஷன் மரித்தபின்பு அவள் அந்தப் பிரமாணத்தினின்று விடுதலையானபடியால், வேறொரு புருஷனை விவாகம்பண்ணினாலும் விபசாரியல்ல. | யாத் 20:14 லேவி 20:10 எண் 5:13-31 உபா 22:22-24 மத் 5:32 மாற் 10:6-12 யோவா 8:3-5 |
| 4 | அப்படிப்போல, என் சகோதரரே, நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள். | ரோம 7:6 ரோம 6:14 ரோம 8:2 கலா 2:19 கலா 2:20 கலா 3:13 கலா 5:18 எபே 2:15 கொலோ 2:14 கொலோ 2:20 |
| 5 | நாம் மாம்சத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்கு ஏதுவான கனிகளைக் கொடுக்கத்தக்கதாக நம்முடைய அவயவங்களிலே பெலன்செய்தது. | ரோம 8:8 ரோம 8:9 யோவா 3:6 கலா 5:16 கலா 5:17 கலா 5:24 எபே 2:3 எபே 2:11 தீத் 3:3 |
| 6 | இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம். | ரோம 7:4 ரோம 6:14 ரோம 6:15 கலா 3:13 கலா 3:23-25 கலா 4:4 கலா 4:5 |
| 7 | ஆகையால் என்ன சொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமோ? அல்லவே, பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை; இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே. | ரோம 3:5 ரோம 4:1 ரோம 6:15 |
| 8 | பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்றுச் சகலவித இச்சைகளையும் என்னில் நடப்பித்தது. நியாயப்பிரமாணம் இல்லாவிட்டால் பாவம் செத்ததாயிருக்குமே. | ரோம 7:11 ரோம 7:13 ரோம 7:17 ரோம 4:15 ரோம 5:20 |
| 9 | முன்னே நியாயப்பிரமாணமில்லாதவனாயிருந்தபோது நான் ஜீவனுள்ளவனாயிருந்தேன்; கற்பனை வந்தபோது பாவம் உயிர்கொண்டது, நான் மரித்தவனானேன். | மத் 19:20 லூக் 10:25-29 லூக் 15:29 லூக் 18:9-12 லூக் 18:21-12 பிலிப் 3:5 பிலிப் 3:6 |
| 10 | இப்படியிருக்க, ஜீவனுக்கேதுவான கற்பனையே எனக்கு மரணத்துக்கேதுவாயிருக்கக்கண்டேன். | ரோம 10:5 லேவி 18:5 எசே 20:11 எசே 20:13 எசே 20:21 லூக் 10:27-29 2கொரி 3:7 |
| 11 | பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்று, என்னை வஞ்சித்து, அதினாலே என்னைக் கொன்றது. | ரோம 7:8 ரோம 7:13 |
| 12 | ஆகையால் நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான், கற்பனையும் பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயும் இருக்கிறது. | ரோம 7:14 ரோம 3:31 ரோம 12:2 உபா 4:8 உபா 10:12 நெகே 9:13 சங் 19:7-12 சங் 119:38 சங் 119:86 சங் 119:127 சங் 119:137 சங் 119:140 சங் 119:172 1தீமோ 1:8 |
| 13 | இப்படியிருக்க, நன்மையானது எனக்கு மரணமாயிற்றோ? அப்படியல்ல; பாவமே எனக்கு மரணமாயிற்று; பாவம் கற்பனையினாலே மிகுந்த பாவமுள்ளதாகும்படிக்கும், அது நன்மையானதைக்கொண்டு எனக்கு மரணத்தை உண்டாக்கினதினாலே, பாவமாகவே விளங்கும்படிக்கும் அப்படியாயிற்று. | ரோம 8:3 கலா 3:21 |
| 14 | மேலும், நமக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாயிருக்கிறது, நானோ பாவத்துக்குக் கீழாக விற்கப்பட்டு, மாம்சத்துக்குரியவனாயிருக்கிறேன். | லேவி 19:18 உபா 6:5 சங் 51:6 மத் 5:22 மத் 5:28 மத் 22:37-40 எபிரெ 4:12 |
| 15 | எப்படியெனில், நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன். | ரோம 14:22 லூக் 11:48 |
| 16 | இப்படி நான் விரும்பாததைச் செய்கிறவனாயிருக்க, நியாயப்பிரமாணம் நல்லதென்று ஒத்துக்கொள்ளுகிறேனே. | ரோம 7:12 ரோம 7:14 ரோம 7:22 சங் 119:127 சங் 119:128 |
| 17 | ஆதலால் நான் அல்ல, எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது. | ரோம 7:20 ரோம 4:7 ரோம 4:8 2கொரி 8:12 பிலிப் 3:8 பிலிப் 3:9 |
| 18 | அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மை செய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது நன்மை செய்வதோ என்னிடத்திலில்லை. | ஆதி 6:5 ஆதி 8:21 யோபு 14:4 யோபு 15:14-16 யோபு 25:4 சங் 51:5 ஏசா 64:6 மத் 15:19 மாற் 7:21-23 லூக் 11:13 எபே 2:1-5 தீத் 3:3 1பேது 4:2 |
| 19 | ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன். |
| 20 | அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது. |
| 21 | ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு பிரமாணத்தைக் காண்கிறேன். | ரோம 7:23 ரோம 6:12 ரோம 6:14 ரோம 8:2 சங் 19:13 சங் 119:133 யோவா 8:34 எபே 6:11-13 2பேது 2:19 |
| 22 | உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன். | ரோம 8:7 யோபு 23:12 சங் 1:2 சங் 19:8-10 சங் 40:8 சங் 119:16 சங் 119:24 சங் 119:35 சங் 119:47 சங் 119:48 சங் 119:72 சங் 119:92 சங் 119:97-104 சங் 119:111-104 சங் 119:113-104 சங் 119:127-104 சங் 119:167-104 சங் 119:174-104 ஏசா 51:7 யோவா 4:34 எபிரெ 8:10 |
| 23 | ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது. | ரோம 7:5 ரோம 7:21 ரோம 7:25 ரோம 8:2 பிரச 7:20 கலா 5:17 1தீமோ 6:11 1தீமோ 6:12 எபிரெ 12:4 யாக் 3:2 யாக் 4:1 1பேது 2:11 |
| 24 | நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? | ரோம 8:26 1இரா 8:38 சங் 6:6 சங் 32:3 சங் 32:4 சங் 38:2 சங் 38:8-10 சங் 77:3-9 சங் 119:20 சங் 119:81-83 சங் 119:131-83 சங் 119:143 சங் 119:176 சங் 130:1-3 எசே 9:4 மத் 5:4 மத் 5:6 2கொரி 12:7-9 வெளிப் 21:4 |
| 25 | நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஆதலால் நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலேயோ பாவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ்செய்கிறேன். | ரோம 6:14 ரோம 6:17 சங் 107:15 சங் 107:16 சங் 116:16 சங் 116:17 ஏசா 12:1 ஏசா 49:9 ஏசா 49:13 மத் 1:21 1கொரி 15:57 2கொரி 9:15 2கொரி 12:9 2கொரி 12:10 எபே 5:20 பிலிப் 3:3 பிலிப் 4:6 கொலோ 3:17 1பேது 2:5 1பேது 2:9 |