இணை வசன வேதாகமம்

Click to Subscribe

ரோமர் 6

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆகையால் என்னசொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே.ரோம 3:5
2பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்?ரோம 3:1-4
3கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?ரோம 6:16 ரோம 7:1 1கொரி 3:16 1கொரி 5:6 1கொரி 6:2 1கொரி 6:3 1கொரி 6:9 1கொரி 6:15 1கொரி 6:16 1கொரி 6:19 1கொரி 9:13 1கொரி 9:24 2கொரி 13:5 யாக் 4:4
4மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.ரோம 6:3 கொலோ 2:12 கொலோ 2:13 கொலோ 3:1-3 1பேது 3:21
5ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.ரோம 6:8-12 எபே 2:5 எபே 2:6 பிலிப் 3:10 பிலிப் 3:11
6நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.கலா 2:20 கலா 5:24 கலா 6:14 எபே 4:22 கொலோ 3:5 கொலோ 3:9 கொலோ 3:10
7மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே.ரோம 6:2 ரோம 6:8 ரோம 7:2 ரோம 7:4 கொலோ 3:1-3 1பேது 4:1
8ஆகையால் கிறிஸ்துவுடனேகூட நாம் மரித்தோமானால், அவருடனே கூடப்பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்.ரோம 6:3-5 2தீமோ 2:11 2தீமோ 2:12
9மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டு கொள்ளுவதில்லை.சங் 16:9-11 அப் 2:24-28 எபிரெ 7:16 எபிரெ 7:25 எபிரெ 10:12 எபிரெ 10:13 வெளிப் 1:18
10அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார்.ரோம 8:3 2கொரி 5:21 எபிரெ 9:26-28 1பேது 3:18
11அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.ரோம 8:18
12ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக.ரோம 6:16 ரோம 5:21 ரோம 7:23 ரோம 7:24 எண் 33:55 உபா 7:2 யோசு 23:12 யோசு 23:13 நியா 2:3 சங் 19:13 சங் 119:133
13நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.ரோம 6:16 ரோம 6:19 ரோம 7:5 ரோம 7:23 1கொரி 6:15 கொலோ 3:5 யாக் 3:5 யாக் 3:6 யாக் 4:1
14நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.ரோம 6:12 ரோம 5:20 ரோம 5:21 ரோம 8:2 சங் 130:7 சங் 130:8 மீகா 7:19 மத் 1:21 யோவா 8:36 தீத் 2:14 எபிரெ 8:10
15இதினால் என்ன? நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவஞ்செய்யலாமா? கூடாதே.ரோம 3:9
16மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?ரோம 6:13 யோசு 24:15 மத் 6:24 யோவா 8:34 2பேது 2:19
17முன்னே நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாயிருந்தும், இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம்.ரோம 1:8 1நாளா 29:12-16 எஸ்றா 7:27 மத் 11:25 மத் 11:26 அப் 11:18 அப் 28:15 1கொரி 1:4 எபே 1:16 பிலிப் 1:3-5 கொலோ 1:3 கொலோ 1:4 1தெச 1:2 1தெச 1:3 1தெச 3:9 2தெச 1:3 2தீமோ 1:3-5 பிலேமோ 1:4 2யோவா 1:4 3யோவா 1:3
18பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள்.ரோம 6:14 சங் 116:16 சங் 119:32 சங் 119:45 லூக் 1:74 லூக் 1:75 யோவா 8:32 யோவா 8:36 1கொரி 7:21 1கொரி 7:22 கலா 5:1 1பேது 2:16
19உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிறபிரகாரமாய்ப் பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்.ரோம 3:5 1கொரி 9:8 1கொரி 15:32 கலா 3:15
20பாவத்திற்கு நீங்கள் அடிமைகளாயிருந்த காலத்தில் நீதிக்கு நீங்கினவர்களாயிருந்தீர்கள்.ரோம 6:16 ரோம 6:17 யோவா 8:34
21இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தோன்றுகிற காரியங்களினாலே அக்காலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே.ரோம 7:5 நீதி 1:31 நீதி 5:10-13 நீதி 9:17 நீதி 9:18 ஏசா 3:10 எரே 17:10 எரே 44:20-24 கலா 6:7 கலா 6:8
22இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.ரோம 6:14 ரோம 6:18 ரோம 8:2 யோவா 8:32 2கொரி 3:17 கலா 5:13
23பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.ரோம 5:12 ஆதி 2:17 ஆதி 3:19 ஏசா 3:11 எசே 18:4 எசே 18:20 1கொரி 6:9 1கொரி 6:10 கலா 3:10 கலா 6:7 கலா 6:8 யாக் 1:15 வெளிப் 21:8
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.