இணை வசன வேதாகமம்

Click to Subscribe

ரோமர் 5

                   
புத்தகங்களைக் காட்டு
1இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.ரோம 5:9 ரோம 5:18 ரோம 1:17 ரோம 3:22 ரோம 3:26-28 ரோம 3:30-28 ரோம 4:5 ரோம 4:24 ரோம 4:25 ரோம 9:30 ரோம 10:10 ஆபகூ 2:4 யோவா 3:16-18 யோவா 5:24 அப் 13:38 அப் 13:39 கலா 2:16 கலா 3:11-14 கலா 3:25-14 கலா 5:4-6 பிலிப் 3:9 யாக் 2:23-26
2அவர்மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம்.யோவா 10:7 யோவா 10:9 யோவா 14:6 அப் 14:27 எபே 2:18 எபே 3:12 எபிரெ 10:19 எபிரெ 10:20 1பேது 3:18
3அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து,ரோம 8:35-37 மத் 5:10-12 லூக் 6:22 லூக் 6:23 அப் 5:41 2கொரி 11:23-30 2கொரி 12:9 2கொரி 12:10 எபே 3:13 பிலிப் 1:29 பிலிப் 2:17 பிலிப் 2:18 யாக் 1:2 யாக் 1:3 யாக் 1:12 1பேது 3:14 1பேது 4:16 1பேது 4:17
4உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம்.ரோம 15:4 2கொரி 1:4-6 2கொரி 4:8-12 2கொரி 6:9 2கொரி 6:10 யாக் 1:12 1பேது 1:6 1பேது 1:7 1பேது 5:10
5மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.யோபு 27:8 சங் 22:4 சங் 22:5 ஏசா 28:15-18 ஏசா 45:16 ஏசா 45:17 ஏசா 49:23 எரே 17:5-8 பிலிப் 1:20 2தெச 2:16 2தீமோ 1:12 எபிரெ 6:18 எபிரெ 6:19
6அன்றியும், நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்.எசே 16:4-8 எபே 2:1-5 கொலோ 2:13 தீத் 3:3-5
7நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான்.யோவா 15:13 1யோவா 3:16
8நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.ரோம 5:20 ரோம 3:5 யோவா 15:13 எபே 1:6-8 எபே 2:7 1தீமோ 1:16
9இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.ரோம 5:1 ரோம 3:24-26 எபே 2:13 எபிரெ 9:14 எபிரெ 9:22 1யோவா 1:7
10நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.ரோம 8:7 2கொரி 5:18 2கொரி 5:19 2கொரி 5:21 கொலோ 1:20 கொலோ 1:21
11அதுவுமல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் நாம் தேவனைப்பற்றியும் மேன்மைபாராட்டுகிறோம்.ரோம 2:17 ரோம 3:29 ரோம 3:30 1சாமு 2:1 சங் 32:11 சங் 33:1 சங் 43:4 சங் 104:34 சங் 149:2 ஏசா 61:10 ஆபகூ 3:17 ஆபகூ 3:18 லூக் 1:46 கலா 4:9 கலா 5:22 பிலிப் 3:1 பிலிப் 3:3 பிலிப் 4:4 1பேது 1:8
12இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.ரோம 5:19 ஆதி 3:6
13நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது; நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது.ஆதி 4:7-11 ஆதி 6:5 ஆதி 6:6 ஆதி 6:11 ஆதி 8:21 ஆதி 13:13 ஆதி 18:20 ஆதி 19:4 ஆதி 19:32 ஆதி 19:36 ஆதி 38:7 ஆதி 38:10
14அப்படியிருந்தும், மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது; அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன்.ரோம 5:17 ரோம 5:21 ஆதி 4:8 ஆதி 5:5-31 ஆதி 7:22 ஆதி 19:25 யாத் 1:6 எபிரெ 9:27
15ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது.ரோம 5:16 ரோம 5:17 ரோம 5:20 ஏசா 55:8 ஏசா 55:9 யோவா 3:16 யோவா 4:10
16மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது.ஆதி 3:6-19 கலா 3:10 யாக் 2:10
17அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே.ரோம 5:12 ஆதி 3:6 ஆதி 3:19 1கொரி 15:21 1கொரி 15:22 1கொரி 15:49
18ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று.ரோம 5:12 ரோம 5:15 ரோம 5:19 ரோம 3:19 ரோம 3:20
19அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.ஏசா 53:10-12 தானி 9:24 2கொரி 5:21 எபே 1:6 வெளிப் 7:9-17
20மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.ரோம 3:19 ரோம 3:20 ரோம 4:15 ரோம 6:14 ரோம 7:5-13 யோவா 15:22 2கொரி 3:7-9 கலா 3:19-25
21ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.ரோம 5:14 ரோம 6:12 ரோம 6:14 ரோம 6:16
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.