| 1 | இப்படியானால், யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன? | ரோம 2:25-29 ஆதி 25:32 பிரச 6:8 பிரச 6:11 ஏசா 1:11-15 மல்கி 3:14 1கொரி 15:32 எபிரெ 13:9 |
| 2 | அது எவ்விதத்திலும் மிகுதியாயிருக்கிறது; தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே. | ரோம 3:3 ரோம 11:1 ரோம 11:2 ரோம 11:15-23 ரோம 11:28-23 ரோம 11:29-23 |
| 3 | சிலர் விசுவாசியாமற்போனாலுமென்ன? அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை அவமாக்குமோ? | ரோம 9:6 ரோம 10:16 ரோம 11:1-7 எபிரெ 4:2 |
| 4 | அப்படியாக்கமாட்டாது: நீர் உம்முடைய வசனங்களில் நீதிபரராய் விளங்கவும், உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடையவும் இப்படியாயிற்று என்று எழுதியிருக்கிறபடி, தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக. | ரோம 3:6 ரோம 3:31 ரோம 6:2 ரோம 6:15 ரோம 7:7 ரோம 7:13 ரோம 9:14 ரோம 11:1 ரோம 11:11 லூக் 20:16 1கொரி 6:15 கலா 2:17 கலா 2:21 கலா 6:14 |
| 5 | நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன்; நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப்பண்ணினால் என்ன சொல்லுவோம்? கோபாக்கினையைச் செலுத்துகிற தேவன் அநீதராயிருக்கிறார் என்று சொல்லலாமா? | ரோம 3:7 ரோம 3:25 ரோம 3:26 ரோம 8:20 ரோம 8:21 |
| 6 | அப்படிச் சொல்லக்கூடாது; சொல்லக்கூடுமானால், தேவன் உலகத்தை நியாயந்தீர்ப்பதெப்படி? | ஆதி 18:25 யோபு 8:3 யோபு 34:17-19 சங் 9:8 சங் 11:5-7 சங் 50:6 சங் 96:13 சங் 98:9 அப் 17:31 |
| 7 | அன்றியும், என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால், இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்? | ஆதி 37:8 ஆதி 37:9 ஆதி 37:20 ஆதி 44:1-14 ஆதி 50:18-20 யாத் 3:19 யாத் 14:5 யாத் 14:30 1இரா 13:17 1இரா 13:18 1இரா 13:26-32 2இரா 8:10-15 மத் 26:34 மத் 26:69-75 |
| 8 | நன்மை வரும்படிக்குத் தீமைசெய்வோமாக என்றும் சொல்லலாமல்லவா? நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்களென்றும் சிலர் எங்களைத் தூஷித்துச் சொல்லுகிறார்களே; அப்படிப் போதிக்கிறவர்கள்மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும். | மத் 5:11 1பேது 3:16 1பேது 3:17 |
| 9 | ஆனாலும் என்ன? அவர்களைப்பார்க்கிலும் நாங்கள் விசேஷித்தவர்களா? எவ்வளவேனும் விசேஷித்தவர்களல்ல, யூதர் கிரேக்கர் யாவரும் பாவத்திற்குட்பட்டவர்களென்பதை முன்பு திருஷ்டாந்தப்படுத்தினோமே. | ரோம 3:5 ரோம 6:15 ரோம 11:7 1கொரி 10:19 1கொரி 14:15 பிலிப் 1:18 |
| 10 | அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை; | ரோம 3:4 ரோம 11:8 ரோம 15:3 ரோம 15:4 ஏசா 8:20 1பேது 1:16 |
| 11 | உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை; | ரோம 1:22 ரோம 1:28 சங் 14:2-4 சங் 53:2 சங் 53:4 சங் 94:8 நீதி 1:7 நீதி 1:22 நீதி 1:29 நீதி 1:30 ஏசா 27:11 எரே 4:22 ஓசி 4:6 மத் 13:13 மத் 13:14 மத் 13:19 தீத் 3:3 1யோவா 5:20 |
| 12 | எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை. | யாத் 32:8 சங் 14:3 பிரச 7:29 ஏசா 53:6 ஏசா 59:8 எரே 2:13 எபே 2:3 1பேது 2:25 |
| 13 | அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனைசெய்கிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது; | சங் 5:9 எரே 5:16 மத் 23:27 மத் 23:28 |
| 14 | அவர்கள் வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருக்கிறது; | சங் 10:7 சங் 59:12 சங் 109:17 சங் 109:18 யாக் 3:10 |
| 15 | அவர்கள் கால்கள் இரத்தஞ்சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது; | நீதி 1:16 நீதி 6:18 ஏசா 59:7 ஏசா 59:8 |
| 16 | நாசமும் நிர்ப்பந்தமும் அவர்கள் வழிகளிலிருக்கிறது; |
| 17 | சமாதானவழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; | ரோம 5:1 ஏசா 57:21 ஏசா 59:8 மத் 7:14 லூக் 1:79 |
| 18 | அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை, என்று எழுதியிருக்கிறதே. | ஆதி 20:11 சங் 36:1 நீதி 8:13 நீதி 16:6 நீதி 23:17 லூக் 23:40 வெளிப் 19:5 |
| 19 | மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம். | ரோம 3:2 ரோம 2:12-18 யோவா 10:34 யோவா 10:35 யோவா 15:25 1கொரி 9:20 1கொரி 9:21 கலா 3:23 கலா 4:5 கலா 4:21 கலா 5:18 |
| 20 | இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை. | ரோம 3:28 ரோம 2:13 ரோம 4:13 ரோம 9:32 அப் 13:39 கலா 2:16 கலா 2:19 கலா 3:10-13 கலா 5:4 எபே 2:8 எபே 2:9 தீத் 3:5-7 யாக் 2:9 யாக் 2:10 |
| 21 | இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது. | ரோம 1:17 ரோம 5:19 ரோம 5:21 ரோம 10:3 ரோம 10:4 ஆதி 15:6 ஏசா 45:24 ஏசா 45:25 ஏசா 46:13 ஏசா 51:8 ஏசா 54:17 ஏசா 61:10 எரே 23:5 எரே 23:6 எரே 33:16 தானி 9:24 அப் 15:11 1கொரி 1:30 2கொரி 5:21 கலா 5:5 பிலிப் 3:9 எபிரெ 11:4-40 2பேது 1:1 |
| 22 | அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை. | ரோம 4:3-13 ரோம 4:20-22 ரோம 5:1-11 ரோம 8:1 பிலிப் 3:9 |
| 23 | எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, | ரோம 3:9 ரோம 3:19 ரோம 1:28-32 ரோம 2:1-16 ரோம 11:32 பிரச 7:20 கலா 3:22 1யோவா 1:8-10 |
| 24 | இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்; | ரோம 4:16 ரோம 5:16-19 1கொரி 6:11 எபே 2:7-10 தீத் 3:5-7 |
| 25 | தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும், | அப் 2:23 அப் 3:18 அப் 4:28 அப் 15:18 1பேது 1:18-20 வெளிப் 13:8 |
| 26 | கிறிஸ்து இயேசுவினுடைய இரத்ததைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதாரபலியாக அவரையே ஏற்படுத்தினார். | உபா 32:4 சங் 85:10 சங் 85:11 ஏசா 42:21 ஏசா 45:21 செப் 3:5 செப் 3:15 சகரி 9:9 அப் 13:38 அப் 13:39 வெளிப் 15:3 |
| 27 | இப்படியிருக்க, மேன்மைபாராட்டல் எங்கே? அது நீக்கப்பட்டதே. எந்தப் பிரமாணத்தினாலே? கிரியாப்பிரமாணத்தினாலேயா? அல்ல; விசுவாசப்பிரமாணத்தினாலேயே. | ரோம 3:19 ரோம 2:17 ரோம 2:23 ரோம 4:2 எசே 16:62 எசே 16:63 எசே 36:31 எசே 36:32 செப் 3:11 லூக் 18:9-14 1கொரி 1:29-31 1கொரி 4:7 எபே 2:8-10 |
| 28 | ஆதலால், மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம். | ரோம 3:20-22 ரோம 3:26-22 ரோம 4:5 ரோம 5:1 ரோம 8:3 யோவா 3:14-18 யோவா 5:24 யோவா 6:40 அப் 13:38 அப் 13:39 1கொரி 6:11 கலா 2:16 கலா 3:8 கலா 3:11-14 கலா 3:24-14 பிலிப் 3:9 தீத் 3:7 |
| 29 | தேவன் யூதருக்குமாத்திரமா தேவன்? புறஜாதிகளுக்கும் தேவனல்லவா? ஆம் புறஜாதிகளுக்கும் அவர் தேவன்தான். | ரோம 1:16 ரோம 9:24-26 ரோம 11:12 ரோம 11:13 ரோம 15:9-13 ரோம 15:16-13 ஆதி 17:7 ஆதி 17:8 ஆதி 17:18 சங் 22:7 சங் 67:2 சங் 72:17 ஏசா 19:23-25 ஏசா 54:5 எரே 16:19 எரே 31:33 ஓசி 1:10 சகரி 2:11 சகரி 8:20-23 மல்கி 1:11 மத் 22:32 மத் 28:19 மாற் 16:15 மாற் 16:16 லூக் 24:46 லூக் 24:47 அப் 9:15 அப் 22:21 அப் 26:17 கலா 3:14 கலா 3:25-29 எபே 3:6 கொலோ 3:11 |
| 30 | விருத்தசேதனமுள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனமில்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாயும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே. | ரோம 3:28 ரோம 4:11 ரோம 4:12 ரோம 10:12 ரோம 10:13 கலா 2:14-16 கலா 3:8 கலா 3:20 கலா 3:28 கலா 5:6 கலா 6:15 பிலிப் 3:3 கொலோ 2:10 கொலோ 2:11 |
| 31 | அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை அவமாக்குகிறோமா? அப்படியல்ல; நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே. | ரோம 4:14 சங் 119:126 எரே 8:8 எரே 8:9 மத் 5:17 மத் 15:6 கலா 2:21 கலா 3:17-19 |