| 1 | அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும். | ரோம 4:20 1கொரி 4:10 2கொரி 12:10 எபே 6:10 2தீமோ 2:1 1யோவா 2:14 |
| 2 | நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்னையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன். | ரோம 14:19 1கொரி 9:19-22 1கொரி 10:24 1கொரி 10:33 1கொரி 11:1 1கொரி 13:5 பிலிப் 2:4 பிலிப் 2:5 தீத் 2:9 தீத் 2:10 |
| 3 | கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடவாமல்: உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தைகள் என்மேல் விழுந்தது என்று எழுதியிருக்கிறபடியே நடந்தார். | சங் 40:6-8 மத் 26:39 மத் 26:42 யோவா 4:34 யோவா 5:30 யோவா 6:38 யோவா 8:29 யோவா 12:27 யோவா 12:28 யோவா 14:30 யோவா 14:31 யோவா 15:10 பிலிப் 2:8 |
| 4 | தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது. | ரோம 4:23 ரோம 4:24 1கொரி 9:9 1கொரி 9:10 1கொரி 10:11 2தீமோ 3:16 2தீமோ 3:17 2பேது 1:20 2பேது 1:21 |
| 5 | நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்தும்படிக்கு, | ரோம 15:13 யாத் 34:6 சங் 86:5 1பேது 3:20 2பேது 3:9 2பேது 3:15 |
| 6 | பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ்செய்வாராக. | ரோம 15:9-11 செப் 3:9 சகரி 13:9 அப் 4:24 அப் 4:32 |
| 7 | ஆதலால் தேவனுக்கு மகிமையுண்டாக, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். | ரோம 14:1-3 மத் 10:40 மாற் 9:37 லூக் 9:48 |
| 8 | மேலும், பிதாக்களுக்குப்பண்ணப்பட்ட வாக்குத்தத்தங்களை உறுதியாக்கும்படிக்கு, தேவனுடைய சத்தியத்தினிமித்தம் இயேசுகிறிஸ்து விருத்தசேதனமுள்ளவர்களுக்கு ஊழியக்காரரானாரென்றும்; | ரோம 3:26 1கொரி 1:12 1கொரி 10:19 1கொரி 10:29 1கொரி 15:50 |
| 9 | புறஜாதியாரும் இரக்கம்பெற்றதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்துகிறார்களென்றும் சொல்லுகிறேன். அந்தப்படி: இதினிமித்தம் நான் புறஜாதிகளுக்குள்ளே உம்மை அறிக்கைபண்ணி, உம்முடைய நாமத்தைச் சொல்லி, சங்கீதம் பாடுவேன் என்று எழுதியிருக்கிறது. | 2சாமு 22:50 சங் 18:49 |
| 10 | மேலும், புறஜாதிகளே, அவருடைய ஜனங்களோடேகூடக் களிகூருங்கள் என்கிறார். | உபா 32:43 சங் 66:1-4 சங் 67:3 சங் 67:4 சங் 68:32 சங் 97:1 சங் 98:3 சங் 98:4 சங் 138:4 சங் 138:5 ஏசா 24:14-16 ஏசா 42:10-12 |
| 11 | மேலும், புறஜாதிகளே, எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே, எல்லாரும் அவரைப் புகழுங்கள் என்றும் சொல்லுகிறார். | சங் 117:1 |
| 12 | மேலும், ஈசாயின் வேரும் புறஜாதியாரை ஆளும்படிக்கு எழும்புகிறவருமாகிய ஒருவர் தோன்றுவார்; அவரிடத்தில் புறஜாதியார் நம்பிக்கை வைப்பார்கள் என்று ஏசாயா சொல்லுகிறான். | ஏசா 11:1 ஏசா 11:10 வெளிப் 5:5 வெளிப் 22:16 |
| 13 | பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக. | ரோம 15:5 எரே 14:8 யோவே 3:16 1தீமோ 1:1 |
| 14 | என் சகோதரரே, நீங்கள் நற்குணத்தினால் நிறைந்தவர்களும், சகல அறிவினாலும் நிரப்பப்பட்டவர்களும், ஒருவருக்கொருவர் புத்திசொல்ல வல்லவர்களுமாயிருக்கிறீர்களென்று நானும் உங்களைக் குறித்து நிச்சயித்திருக்கிறேன். | பிலிப் 1:7 2தீமோ 1:5 பிலேமோ 1:21 எபிரெ 6:9 2பேது 1:12 1யோவா 2:21 |
| 15 | அப்படியிருந்தும், சகோதரரே, புறஜாதியாராகிய பலி பரிசுத்த ஆவியினாலே பரிசுத்தமாக்கப்பட்டு, தேவனுக்குப் பிரியமான பலியாகும்படிக்கு, நான் தேவனுடைய சுவிசேஷ ஊழியத்தை நடத்தும் ஆசாரியனாயிருந்து புறஜாதிகளுக்கு இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனாகும்பொருட்டு, | எபிரெ 13:22 1பேது 5:12 1யோவா 2:12-14 1யோவா 5:13 யூதா 1:3-5 |
| 16 | தேவன் எனக்கு அளித்த கிருபையினாலே உங்களுக்கு ஞாபகப்படுத்தும்படிக்கு இவைகளை நான் அதிக தைரியமாய் எழுதினேன். | ரோம 15:18 ரோம 11:13 அப் 9:15 அப் 13:2 அப் 22:21 அப் 26:17 அப் 26:18 1கொரி 3:5 1கொரி 4:1 2கொரி 5:20 2கொரி 11:23 கலா 2:7 கலா 2:8 எபே 3:1 பிலிப் 2:17 1தீமோ 2:7 2தீமோ 1:11 |
| 17 | ஆதலால் நான் தேவனுக்குரியவைகளைக்குறித்து இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மேன்மைபாராட்ட எனக்கு இடமுண்டு. | ரோம 4:2 2கொரி 2:14-16 2கொரி 3:4-6 2கொரி 7:4 2கொரி 11:16-30 2கொரி 12:1 2கொரி 12:11-21 |
| 18 | புறஜாதியாரை வார்த்தையினாலும் செய்கையினாலும் கீழ்ப்படியப்பண்ணும்படிக்கு, அற்புத அடையாளங்களின் பலத்தினாலும், தேவ ஆவியின் பலத்தினாலும், கிறிஸ்துவானவர் என்னைக்கொண்டு நடப்பித்தவைகளைச் சொல்வதல்லாமல் வெறொன்றையும் சொல்ல நான் துணிவதில்லை. | நீதி 25:14 2கொரி 10:13-18 2கொரி 11:31 2கொரி 12:6 யூதா 1:9 |
| 19 | இப்படி எருசலேம் துவக்கிச் சுற்றிலும், இல்லிரிக்கம் தேசம்வரைக்கும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பூரணமாய்ப் பிரசங்கித்திருக்கிறேன். | அப் 14:10 அப் 15:12 அப் 16:18 அப் 19:11 அப் 19:12 2கொரி 12:12 கலா 3:5 எபிரெ 2:4 |
| 20 | மேலும் அவருடைய செய்தியை அறியாதிருந்தவர்கள் காண்பார்களென்றும், கேள்விப்படாதிருந்தவர்கள் உணர்ந்துகொள்வார்களென்றும் எழுதியிருக்கிறபடியே, | 2கொரி 10:14-16 |
| 21 | நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டாதபடிக்கு கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன். | ஏசா 52:15 ஏசா 65:1 |
| 22 | உங்களிடத்தில் வருகிறதற்கு இதினாலே அநேகந்தரம் தடைபட்டேன். | ரோம 1:13 1தெச 2:17 1தெச 2:18 |
| 23 | இப்பொழுது இந்தத் திசைகளிலே எனக்கு இடமில்லாதபடியினாலும், உங்களிடத்தில் வரும்படி அனேக வருஷமாய் எனக்கு மிகுந்த விருப்பம் உண்டாயிருக்கிறபடியினாலும், | ரோம 15:32 ரோம 1:10-12 1தெச 3:10 2தீமோ 1:4 |
| 24 | நான் ஸ்பானியா தேசத்திற்குப் பிரயாணம்பண்ணுகையில் உங்களிடத்தில் வந்து, உங்களைக் கண்டுகொள்ளவும், உங்களிடத்தில் சற்றுத் திருப்தியடைந்த பின்பு, அவ்விடத்திற்கு உங்களால் வழிவிட்டனுப்பப்படவும், எனக்குச் சமயங்கிடைக்குமென்று நம்பியிருக்கிறேன். | ரோம 15:28 அப் 19:21 |
| 25 | இப்பொழுதோ பரிசுத்தவான்களுக்கு உதவிசெய்யுங்காரியமாக நான் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ண எத்தனமாயிருக்கிறேன். | ரோம 15:26-31 அப் 18:21 அப் 19:21 அப் 20:16 அப் 20:22 அப் 24:17 1கொரி 16:1-3 கலா 2:10 |
| 26 | மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ளவர்கள் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குள்ளே இருக்கிற தரித்திரருக்காகச் சில பொருள்சகாயம்செய்ய விருப்பங்கொண்டிருக்கிறார்கள்; | அப் 11:27-30 2கொரி 8:1-9 கலா 6:6-10 |
| 27 | இப்படிச்செய்வது நல்லதென்று எண்ணினார்கள்; இப்படிச் செய்கிறதற்கு அவர்கள் கடனாளிகளாயும் இருக்கிறார்கள். எப்படியென்றால், புறஜாதியார் அவர்களுடைய ஞானநன்மைகளில் பங்குபெற்றிருக்க, சரீரநன்மைகளால் அவர்களுக்கு உதவிசெய்ய இவர்கள் கடனாளிகளாயிருக்கிறார்களே. | ரோம 11:17 1கொரி 9:11 கலா 6:6 பிலேமோ 1:19 |
| 28 | இந்தக் காரியத்தை நான் நிறைவேற்றி, இந்தப் பலனை அவர்கள் கையிலே பத்திரமாய் ஒப்புவித்தபின்பு, உங்கள் ஊர் வழியாய் ஸ்பானியாவுக்குப் போவேன். | பிலிப் 4:17 கொலோ 1:6 |
| 29 | நான் உங்களிடத்தில் வரும்போது கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் சம்பூரணமான ஆசீர்வாதத்தோடே வருவேனென்று அறிந்திருக்கிறேன். | ரோம 1:11 ரோம 1:12 சங் 16:11 எசே 34:26 எபே 1:3 எபே 3:8 எபே 3:19 எபே 4:13 |
| 30 | மேலும் சகோதரரே, தேவசித்தத்தினாலே நான் சந்தோஷத்துடனே உங்களிடத்தில் வந்து உங்களோடு இளைப்பாறும்படியாக, | 2கொரி 4:5 2கொரி 4:11 2கொரி 12:10 1தீமோ 6:13 1தீமோ 6:14 2தீமோ 4:1 |
| 31 | யூதேயாவிலிருக்கிற அவிசுவாசிகளுக்கு நான் தப்புவிக்கப்படும்படிக்கும், நான் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குச் செய்யப்போகிற தர்மசகாயம் அவர்களால் அங்கிகரிக்கப்படும்படிக்கும், | அப் 21:27-31 அப் 22:24 அப் 23:12-24 அப் 24:1-9 அப் 25:2 அப் 25:24 1தெச 2:15 2தெச 3:2 |
| 32 | நீங்கள் தேவனை நோக்கிச் செய்யும் ஜெபங்களில், நான் போராடுவதுபோல நீங்களும் என்னோடுகூடப் போராடவேண்டுமென்று நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிமித்தமும், ஆவியானவருடைய அன்பினிமித்தமும், உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன். | ரோம 15:23 ரோம 15:24 ரோம 1:10-13 அப் 27:1 அப் 27:41-43 அப் 28:15 அப் 28:16 அப் 28:30 அப் 28:31 பிலிப் 1:12-14 |
| 33 | சமாதானத்தின் தேவன் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக. ஆமென். | ரோம 16:20 1கொரி 14:33 2கொரி 5:19 2கொரி 5:20 2கொரி 13:11 பிலிப் 4:9 1தெச 5:23 2தெச 3:16 எபிரெ 13:20 |