இணை வசன வேதாகமம்

Click to Subscribe

ரோமர் 11

                   
புத்தகங்களைக் காட்டு
1இப்படியிருக்க, தேவன் தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிட்டாரோ என்று கேட்கிறேன், தள்ளிவிடவில்லையே; நானும் ஆபிரகாமின் சந்ததியிலும் பென்யமீன் கோத்திரத்திலும் பிறந்த இஸ்ரவேலன்.1சாமு 12:22 2இரா 23:27 சங் 77:7 சங் 89:31-37 சங் 94:14 எரே 31:36 எரே 31:37 எரே 33:24-26 ஓசி 9:17 ஆமோ 9:8 ஆமோ 9:9
2தேவன் தாம் முன்னறிந்துகொண்ட தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிடவில்லை. எலியாவைக்குறித்துச் சொல்லிய இடத்தில், வேதம் சொல்லுகிறதை அறியீர்களா? அவன் தேவனை நோக்கி:ரோம 8:29 ரோம 8:30 ரோம 9:6 ரோம 9:23 அப் 13:48 அப் 15:18 1பேது 1:2
3கர்த்தாவே, உம்முடைய தீர்க்கதரிசிகளை அவர்கள் கொலைசெய்து, உம்முடைய பலிபீடங்களை இடித்துப்போட்டார்கள்; நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன், என் பிராணனையும் வாங்கத்தேடுகிறார்களே என்று இஸ்ரவேலருக்கு விரோதமாய் விண்ணப்பம்பண்ணினபோது,1இரா 18:4 1இரா 18:13 1இரா 19:10-18 நெகே 9:26 எரே 2:30
4அவனுக்கு உண்டான தேவவுத்தரவு என்ன? பாகாலுக்குமுன்பாக முழங்காற்படியிடாத ஏழாயிரம்பேரை எனக்காக மீதியாகவைத்தேன் என்பதே.1இரா 19:18
5அப்படிப்போல இக்காலத்திலேயும் கிருபையினாலே உண்டாகும் தெரிந்துகொள்ளுதலின்படி ஒரு பங்கு மீதியாயிருக்கிறது.ரோம 11:6 ரோம 11:7 ரோம 9:27
6அது கிருபையினாலே உண்டாயிருந்தால் கிரியைகளினாலே உண்டாயிராது; அப்படியல்லவென்றால், கிருபையானது கிருபையல்லவே. அன்றியும் அது கிரியைகளினாலே உண்டாயிருந்தால் அது கிருபையாயிராது; அப்படியல்லவென்றால் கிரியையானது கிரியையல்லவே.ரோம 3:27 ரோம 3:28 ரோம 4:4 ரோம 4:5 ரோம 5:20 ரோம 5:21 உபா 9:4-6 1கொரி 15:10 கலா 2:21 கலா 5:4 எபே 2:4-9 2தீமோ 1:9 தீத் 3:5
7அப்படியானால் என்ன? இஸ்ரவேலர் தேடுகிறதை அடையாமலிருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ அதை அடைந்திருக்கிறார்கள்; மற்றவர்கள் இன்றையத்தினம்வரைக்கும் கடினப்பட்டிருக்கிறார்கள்.ரோம 3:9 ரோம 6:15 1கொரி 10:19 பிலிப் 1:18
8கனநித்திரையின் ஆவியையும், காணாதிருக்கிற கண்களையும், கேளாதிருக்கிற காதுகளையும், தேவன் அவர்களுக்குக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடியாயிற்று.ஏசா 29:10
9அன்றியும், அவர்களுடைய பந்தி அவர்களுக்குச் சுருக்கும் கண்ணியும் இடறுதற்கான கல்லும் பதிலுக்குப் பதிலளித்தலுமாகக்கடவது;சங் 69:22 சங் 69:23
10காணாதபடிக்கு அவர்களுடைய கண்கள் அந்தகாரப்படக்கடவது; அவர்களுடைய முதுகை எப்போதும் குனியப்பண்ணும் என்று தாவீதும் சொல்லியிருக்கிறான்.ரோம 11:8 ரோம 1:21 சங் 69:23 சகரி 11:17 எபே 4:18 2பேது 2:4 2பேது 2:17 யூதா 1:6 யூதா 1:13
11இப்படியிருக்க, விழுந்துபோகும்படிக்கா இடறினார்கள் என்று கேட்கிறேன், அப்படியல்லவே; அவர்களுக்குள்ளே வைராக்கியத்தை எழுப்பத்தக்கதாக அவர்களுடைய தவறுதலினாலே புறஜாதிகளுக்கு இரட்சிப்பு கிடைத்தது.எசே 18:23 எசே 18:32 எசே 33:11
12அவர்களுடைய தவறு உலகத்திற்கு ஐசுவரியமும், அவர்களுடைய குறைவு புறஜாதிகளுக்கு ஐசுவரியமுமாயிருக்க அவர்களுடைய நிறைவு எவ்வளவு அதிகமாய் அப்படியிருக்கும்.ரோம 11:15 ரோம 11:33 ரோம 9:23 எபே 3:8 கொலோ 1:27
13புறஜாதியாராகிய உங்களுடனே பேசுகிறேன்; புறஜாதிகளுக்கு நான் அப்போஸ்தலனாயிருக்கிறதினாலே என் இனத்தாருக்குள்ளே நான் வைராக்கியத்தை எழுப்பி, அவர்களில் சிலரை இரட்சிக்கவேண்டுமென்று,ரோம 15:16-19 அப் 9:15 அப் 13:2 அப் 22:21 அப் 26:17 அப் 26:18 கலா 1:16 கலா 2:2 கலா 2:7-9 எபே 3:8 1தீமோ 2:7 2தீமோ 1:11 2தீமோ 1:12
14என் ஊழியத்தை மேன்மைப்படுத்துகிறேன்.1கொரி 7:16 1கொரி 9:20-22 2தீமோ 2:10
15அவர்களைத் தள்ளிவிடுதல் உலகத்தை ஒப்புரவாக்குதலாயிருக்க, அவர்களை அங்கிகரித்துக்கொள்ளுதல் என்னமாயிராது; மரித்தோரிலிருந்து ஜீவன் உண்டானது போலிருக்குமல்லவோ?ரோம 11:1 ரோம 11:2 ரோம 11:11 ரோம 11:12
16மேலும் முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாயிருந்தால், பிசைந்தமா முழுவதும் பரிசுத்தமாயிருக்கும்; வேரானது பரிசுத்தமாயிருந்தால், கிளைகளும் பரிசுத்தமாயிருக்கும்.யாத் 22:29 யாத் 23:16 யாத் 23:19 லேவி 23:10 எண் 15:17-21 உபா 18:4 உபா 26:10 நெகே 10:35-37 நீதி 3:9 எசே 44:30 யாக் 1:18 வெளிப் 14:4
17சில கிளைகள் முறித்துப்போடப்பட்டிருக்க, காட்டொலிவமரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன்பங்காளியாயிருந்தாயானால்,சங் 80:11-16 ஏசா 6:13 ஏசா 27:11 எரே 11:16 எசே 15:6-8 மத் 8:11 மத் 8:12 மத் 21:43 யோவா 15:6
18நீ அந்தக் கிளைகளுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டாதே; பெருமைபாராட்டுவாயானால், நீ வேரைச் சுமக்காமல், வேர் உன்னைச் சுமக்கிறதென்று நினைத்துக்கொள்.ரோம 11:20 ரோம 3:27 1இரா 20:11 நீதி 16:18 மத் 26:33 லூக் 18:9-11 1கொரி 10:12
19நான் ஒட்டவைக்கப்படுவதற்கு அந்தக் கிளைகள் முறித்துப்போடப்பட்டதென்று சொல்லுகிறாயே.ரோம 11:11 ரோம 11:12 ரோம 11:17 ரோம 11:23 ரோம 11:24
20நல்லது, அவிசுவாசத்தினாலே அவைகள் முறித்துப்போடப்பட்டன, நீ விசுவாசத்தினாலே நிற்கிறாய்; மேட்டிமைச் சிந்தையாயிராமல் பயந்திரு.யோவா 4:17 யோவா 4:18 யாக் 2:19
21சுபாவக்கிளைகளை தேவன் தப்பவிடாதிருக்க, உன்னையும் தப்பவிடமாட்டார் என்று எச்சரிக்கையாயிரு.ரோம 11:17 ரோம 11:19 ரோம 8:32 எரே 25:29 எரே 49:12 1கொரி 10:1-12 2பேது 2:4-9 யூதா 1:5
22ஆகையால், தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடத்திலே கண்டிப்பையும், உன்னிடத்திலே தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருப்பாயானால் உனக்குத் தயவு கிடைக்கும்; நிலைத்திராவிட்டால் நீயும் வெட்டுண்டுபோவாய்.ரோம 2:4 ரோம 2:5 ரோம 9:22 ரோம 9:23 எண் 14:18-22 உபா 32:39-43 யோசு 23:15 யோசு 23:16 சங் 58:10 சங் 58:11 சங் 78:49-52 சங் 136:15-22 ஏசா 66:14
23அன்றியும், அவர்கள் அவிசுவாசத்திலே நிலைத்திராதிருந்தால் அவர்களும் ஒட்டவைக்கப்படுவார்கள்; அவர்களை மறுபடியும் ஒட்டவைக்கிறதற்கு தேவன் வல்லவராயிருக்கிறாரே.சகரி 12:10 மத் 23:39 2கொரி 3:16
24சுபாவத்தின்படி காட்டொலிவமரத்திலிருந்து நீ வெட்டப்பட்டு, சுபாவத்திற்கு விரோதமாய் நல்ல ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்பட்டிருந்தால், சுபாவக்கிளைகளாகிய அவர்கள் தங்கள் சுய ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்படுவது அதிக நிச்சயமல்லவா?ரோம 11:17 ரோம 11:18 ரோம 11:30
25மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்.சங் 107:43 ஓசி 14:9 1கொரி 10:1 1கொரி 12:1 2பேது 3:8
26இந்தப்பிரகாரம் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள். மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபைவிட்டு விலக்குவார் என்றும்;ஏசா 11:11-16 ஏசா 45:17 ஏசா 54:6-10 எரே 3:17-23 எரே 30:17-22 எரே 31:31-37 எரே 32:37-41 எரே 33:24-26 எசே 34:22-31 எசே 37:21-28 எசே 39:25-29 எசே 40:1-48 ஓசி 3:5 யோவே 3:16-21 ஆமோ 9:14 ஆமோ 9:15 மீகா 7:15-20 செப் 3:12-20 சகரி 10:6-12
27நான் அவர்களுடைய பாவங்களை நீக்கும்போது, இதுவே நான் அவர்களுடனே செய்யும் உடன்படிக்கை என்றும் எழுதியிருக்கிறது.ஏசா 55:3 ஏசா 59:21 எரே 31:31-34 எரே 32:38-40 எபிரெ 8:8-12 எபிரெ 10:16
28சுவிசேஷத்தைக்குறித்து அவர்கள் உங்கள்நிமித்தம் பகைஞராயிருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளுதலைக் குறித்து அவர்கள் பிதாக்களினிமித்தம் அன்புகூரப்பட்டவர்களாயிருக்கிறார்கள்.ரோம 11:11 ரோம 11:30 மத் 21:43 அப் 13:45 அப் 13:46 அப் 14:2 அப் 18:6 1தெச 2:15 1தெச 2:16
29தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே.எண் 23:19 ஓசி 13:14 மல்கி 3:6
30ஆதலால், நீங்கள் முற்காலத்திலே தேவனுக்குக் கீழ்ப்படியாதிருந்து, இப்பொழுது அவர்களுடைய கீழ்ப்படியாமையினாலே இரக்கம் பெற்றிருக்கிறதுபோல,1கொரி 6:9-11 எபே 2:1 எபே 2:2 எபே 2:12 எபே 2:13 எபே 2:19-21 கொலோ 3:7 தீத் 3:3-7
31அவர்களும் இப்பொழுது கீழ்ப்படியாமலிருந்தும், பின்பு உங்களுக்குக் கிடைத்த இரக்கத்தினாலே இரக்கம் பெறுவார்கள்.ரோம 10:16 ரோம 11:15 ரோம 11:25
32எல்லார்மேலும் இரக்கமாயிருக்கத்தக்கதாக, தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார்.ரோம 3:9 ரோம 3:22 கலா 3:22
33ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!சங் 107:8-43 நீதி 25:3 எபே 3:18
34கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்?யோபு 15:8 யோபு 36:22 ஏசா 40:13 எரே 23:18 1கொரி 2:16
35தனக்குப் பதில்கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?யோபு 35:7 யோபு 41:11 மத் 20:15 1கொரி 4:7
36சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.1நாளா 29:11 1நாளா 29:12 சங் 33:6 நீதி 16:4 தானி 2:20-23 தானி 4:3 தானி 4:34 மத் 6:13 அப் 17:25 அப் 17:26 அப் 17:28 1கொரி 8:6 எபே 4:6-10 கொலோ 1:15-17 வெளிப் 21:6
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.