இணை வசன வேதாகமம்

Click to Subscribe

அப்போஸ்தலர் 20

                   
புத்தகங்களைக் காட்டு
1கலகம் அமர்ந்தபின்பு, பவுல் சீஷரைத் தன்னிடத்திற்கு வரவழைத்து, வினவிக்கொண்டு, மக்கெதோனியாவுக்குப் போகப்புறப்பட்டான்.அப் 19:23-41
2அவன் அந்தத் திசைகளிலே சுற்றி நடந்து, சீஷர்களுக்கு வெகுவாய்ப் புத்தி சொல்லி, கிரேக்கு தேசத்திலே சேர்ந்தான்.அப் 20:6 அப் 16:12 அப் 17:1 அப் 17:10
3அங்கே மூன்றுமாதம் சஞ்சரித்த பின்பு, அவன் கப்பல் ஏறி, சீரியா தேசத்துக்குப்போக மனதாயிருந்தபோது, யூதர்கள் அவனுக்குத் தீமைசெய்யும்படி இரகசியமான யோசனை கொண்டிருந்தபடியால், மக்கெதோனியா தேசத்தின் வழியாய்த் திரும்பிப்போகத் தீர்மானம்பண்ணினான்.அப் 20:19 அப் 9:23 அப் 9:24 அப் 23:12-15 அப் 25:3 எஸ்றா 8:31 நீதி 1:11 எரே 5:26 2கொரி 7:5 2கொரி 11:26
4பெரோயா ஊரானாகிய சோபத்தரும், தெசலோனிக்கேயரில் அரிஸ்தர்க்கும், செக்குந்தும், தெர்பையானாகிய காயுவும், தீமோத்தேயும், ஆசியா நாட்டாராகிய தீகிக்கும் துரோப்பீமும், ஆசியா நாடுவரைக்கும் அவனுக்கு வழித்துணையாய் வந்தார்கள்.ரோம 16:21
5இவர்கள் முன்னாகப்போய், துரோவாபட்டணத்திலே எங்களுக்காகக் காத்திருந்தார்கள்.அப் 16:8 அப் 16:11 2கொரி 2:12 2தீமோ 4:13
6புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களுக்குப்பின்பு நாங்கள் கப்பல் ஏறிப் பிலிப்பி பட்டணத்தை விட்டு ஐந்து நாளைக்குள்ளே துரோவாபட்டணத்துக்கு அவர்களிடத்தில் வந்து, அங்கே ஏழுநாள் தங்கியிருந்தோம்.அப் 16:12 பிலிப் 1:1 1தெச 2:2
7வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான்.யோவா 20:1 யோவா 20:19 யோவா 20:26 1கொரி 16:2 வெளிப் 1:10
8அவர்கள் கூடியிருந்த மேல்வீட்டிலே அநேக விளக்குகள் வைத்திருந்தது.அப் 1:13 லூக் 22:12
9அப்பொழுது ஐத்திகு என்னும் பேர்கொண்ட ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்திருந்து, பவுல் நெடுநேரம் பிரசங்கம்பண்ணிக்கொண்டிருக்கையில், மிகுந்த தூக்கமடைந்து, நித்திரை மயக்கத்தினால் சாய்ந்து, மூன்றாம் மெத்தையிலிருந்து கீழே விழுந்து, மரித்தவனாய் எடுக்கப்பட்டான்.யோனா 1:5 யோனா 1:6 மத் 26:40 மத் 26:41 மாற் 13:36
10உடனே பவுல் இறங்கிப்போய், அவன்மேல் விழுந்து, அவனை அணைத்துக்கொண்டு: கலங்காதிருங்கள், இவன் உயிர் இவனுக்குள் இருக்கிறது என்றான்.1இரா 17:21 1இரா 17:22 2இரா 4:34 2இரா 4:35
11பின்பு ஏறிப்போய், அப்பம் பிட்டுப் புசித்து, விடியற்காலமளவும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்து, பின்பு புறப்பட்டான்.அப் 20:7 அப் 20:9
12அந்த வாலிபனை அவர்கள் உயிருள்ளவனாகக் கூட்டிக்கொண்டுவந்து, மிகுந்த ஆறுதலடைந்தார்கள்.ஏசா 40:1 2கொரி 1:4 எபே 6:22 1தெச 3:2 1தெச 4:18 1தெச 5:11 1தெச 5:14 2தெச 2:16
13பவுல் ஆசோபட்டணம் வரைக்கும் கரைவழியாய்ப் போக மனதாயிருந்தபடியால், அவன் திட்டம் பண்ணியிருந்தபடியே, நாங்கள் கப்பல் ஏறி, அந்தப் பட்டணத்தில் அவனை ஏற்றிக்கொள்ளும்படி முன்னாக அங்கே போயிருந்தோம்.மாற் 1:35 மாற் 6:31-33 மாற் 6:46-33
14அவன் ஆசோ பட்டணத்திலே எங்களைக் கண்டபோது, நாங்கள் அவனை ஏற்றிக்கொண்டு, மித்திலேனே பட்டணத்துக்கு வந்தோம்.
15அவ்விடம்விட்டு, மறுநாளிலே கீயுதீவுக்கு எதிராக வந்து,அப் 20:17 2தீமோ 4:20
16பவுல் கூடுமானால் பெந்தெகொஸ்தே பண்டிகைநாளிலே எருசலேமிலிருக்க வேண்டுமென்று தீவிரப்பட்டதினிமித்தம், தான் ஆசியாவிலே காலம்போக்காதபடிக்கு, எபேசு பட்டணத்தைக் கடந்து போகவேண்டுமென்று தீர்மானித்ததினால், மறுநாளிலே சாமுதீவு பிடித்து, துரோகில்லியோன் ஊர்த்துறையிலே தங்கி, மறுநாள் மிலேத்து பட்டணத்துக்கு வந்தோம்.அப் 20:13 அப் 18:21 அப் 19:21 அப் 21:4 அப் 12:13 அப் 24:17 ரோம 15:24-28
17மிலேத்துவிலிருந்து அவன் எபேசுவுக்கு ஆள் அனுப்பி, சபையின் மூப்பரை வரவழைத்தான்.அப் 20:28 அப் 11:30 அப் 14:23 அப் 15:4 அப் 15:6 அப் 15:23 அப் 16:4 1தீமோ 5:17 தீத் 1:5 யாக் 5:14 1பேது 5:1 2யோவா 1:1 3யோவா 1:1
18அவர்கள் தன்னிடத்தில் வந்துசேர்ந்தபொழுது, அவன் அவர்களை நோக்கி: நான் ஆசியாநாட்டில் வந்த முதல்நாள் தொடங்கி எல்லாக் காலங்களிலும் உங்களுடனே இன்னவிதமாய் இருந்தேன் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.அப் 18:19 அப் 19:1 அப் 19:10
19வெகு மனத்தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும், யூதருடைய தீமையான யோசனையால் எனக்கு நேரிட்ட சோதனைகளோடும், நான் கர்த்தரைச் சேவித்தேன்.அப் 27:23 யோவா 12:26 ரோம 1:1 ரோம 1:9 ரோம 12:11 கலா 1:10 எபே 6:7 கொலோ 3:24 1தெச 1:9 2பேது 1:1 வெளிப் 7:15
20பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்து வைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் உங்களுக்குப் பிரசங்கித்து, உபதேசம்பண்ணி,அப் 20:27 அப் 20:31 அப் 5:2 உபா 4:5 சங் 40:9 சங் 40:10 எசே 33:7-9 1கொரி 15:3 கொலோ 1:28
21தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக்குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதைக்குறித்தும், நான் யூதருக்கும் கிரேக்கருக்கும் சாட்சியாக அறிவித்தேன்.அப் 20:24 அப் 2:40 அப் 8:25 அப் 18:5 அப் 28:23 1யோவா 5:11-13
22இப்பொழுதும் நான் ஆவியிலே கட்டுண்டவனாய் எருசலேமுக்குப் போகிறேன்; அங்கே எனக்கு நேரிடுங்காரியங்களை நான் அறியேன்.அப் 19:21 அப் 21:11-14 லூக் 9:51 லூக் 12:50 2கொரி 5:14
23கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன்.அப் 9:16 அப் 14:22 அப் 21:4 அப் 21:11 யோவா 16:33 1தெச 3:3 2தீமோ 2:12
24ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.அப் 21:13 ரோம 8:35-39 1கொரி 15:58 2கொரி 4:1 2கொரி 4:8 2கொரி 4:9 2கொரி 4:16-18 2கொரி 6:4-10 2கொரி 7:4 2கொரி 12:10 எபே 3:13 1தெச 2:2 1தெச 3:3 2தீமோ 1:12 2தீமோ 3:11 2தீமோ 4:17 எபிரெ 10:34 எபிரெ 12:1-3
25இதோ, நான் உங்களுக்குள்ளே சஞ்சரித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கம்பண்ணினதைக் கேட்டவர்களாகிய நீங்களெல்லாரும் இனி என் முகத்தைப் பார்க்கமாட்டீர்களென்று அறிந்திருக்கிறேன்.அப் 20:38 ரோம 15:23
26தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்துவைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே,யோபு 16:19 யோவா 12:17 யோவா 19:35 ரோம 10:2 2கொரி 1:23 2கொரி 8:3 1தெச 2:10-12
27எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றையதினம் சாட்சிகளாக வைக்கிறேன்.அப் 20:20 அப் 20:35 அப் 26:22 அப் 26:23 2கொரி 4:2 கலா 1:7-10 கலா 4:16 1தெச 2:4
28ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.2நாளா 19:6 2நாளா 19:7 மாற் 13:9 லூக் 21:34 1கொரி 9:26 1கொரி 9:27 கொலோ 4:17 1தீமோ 4:16 எபிரெ 12:15
29நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும்.செப் 3:3 மத் 7:15 மத் 10:16 லூக் 10:3 யோவா 10:12 2பேது 2:1
30உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.மத் 26:21-25 1தீமோ 1:19 1தீமோ 1:20 2தீமோ 2:17 2தீமோ 2:18 2தீமோ 4:3 2தீமோ 4:4 2பேது 2:1-3 1யோவா 2:19 2யோவா 1:7 யூதா 1:4-16 வெளிப் 2:6
31ஆனபடியால், நான் மூன்று வருஷகாலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்குப் புத்தி சொல்லிக்கொண்டுவந்ததை நினைத்து விழித்திருங்கள்.மத் 13:25 மாற் 13:34-37 லூக் 21:36 2தீமோ 4:5 எபிரெ 13:17 வெளிப் 16:15
32இப்பொழுதும் சகோதரரே, நீங்கள் பக்திவிருத்தியடையவும், பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்தரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன்.அப் 14:23 அப் 14:26 அப் 15:40 ஆதி 50:24 எரே 49:11 யூதா 1:24 யூதா 1:25
33ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் வஸ்திரத்தையாகிலும் நான் இச்சிக்கவில்லை.எண் 16:15 1சாமு 12:3-5 1கொரி 9:12 1கொரி 9:15 1கொரி 9:18 2கொரி 7:2 2கொரி 11:9 2கொரி 12:14 2கொரி 12:17 1பேது 5:2
34நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூடி இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக்கைகளே வேலைசெய்தது.அப் 18:3 1கொரி 4:12 1தெச 2:9 2தெச 3:8 2தெச 3:9
35இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லா விதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான்.அப் 20:20 அப் 20:27
36இவைகளைச் சொன்னபின்பு, அவன் முழங்காற்படியிட்டு, அவர்களெல்லாரோடுங்கூட ஜெபம் பண்ணினான்.அப் 7:60 அப் 21:5 2நாளா 6:13 தானி 6:10 லூக் 22:41 எபே 3:14 பிலிப் 4:6
37அவர்களெல்லாரும் மிகவும் அழுது, என் முகத்தை நீங்கள் இனிப் பார்க்கமாட்டீர்களென்று அவன் சொன்ன வார்த்தையைக்குறித்து அதிகமாய்த் துக்கப்பட்டு,1சாமு 20:41 2சாமு 15:30 2இரா 20:3 எஸ்றா 10:1 யோபு 2:12 சங் 126:5 2தீமோ 1:4 வெளிப் 7:17 வெளிப் 21:4
38பவுலின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்து, கப்பல்வரைக்கும் அவனுடனே கூடப்போனார்கள்.அப் 15:3 அப் 21:5 அப் 21:16 1கொரி 16:11
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.