| 1 | இக்கோனியா பட்டணத்திலே அவர்கள் இருவரும் யூதருடைய ஜெப ஆலயத்தில் பிரவேசித்து, யூதரிலும் கிரேக்கரிலும் திரளான ஜனங்கள் விசுவாசிக்கத்தக்கதாகப் பிரசங்கித்தார்கள். | அப் 13:51 |
| 2 | விசுவாசியாத யூதர்கள் சகோதரருக்கு விரோதமாகப் புறஜாதியாருடைய மனதை எழுப்பிவிட்டு, பகையுண்டாக்கினார்கள். | அப் 14:19 அப் 13:45 அப் 13:50 அப் 17:5 அப் 17:13 அப் 18:12 அப் 21:27-30 மாற் 15:10 மாற் 15:11 1தெச 2:15 1தெச 2:16 |
| 3 | அவர்கள் அங்கே அநேகநாள் சஞ்சரித்துக் கர்த்தரை முன்னிட்டுத் தைரியமுள்ளவர்களாய்ப் போதகம் பண்ணினார்கள்; அவர் தமது கிருபையுள்ள வசனத்திற்குச் சாட்சியாக அடையாளங்களும் அற்புதங்களும் அவர்கள் கைகளால் செய்யப்படும்படி அநுக்கிரகம்பண்ணினார். | அப் 18:9-11 அப் 19:10 1கொரி 16:8 1கொரி 16:9 |
| 4 | பட்டணத்து ஜனங்கள் பிரிந்து, சிலர் யூதரையும் சிலர் அப்போஸ்தலரையும் சேர்ந்துகொண்டார்கள். | மீகா 7:6 மத் 10:34-36 லூக் 2:34 லூக் 11:21-23 லூக் 12:51-53 யோவா 7:43 |
| 5 | இவர்களை அவமானப்படுத்தவும் கல்லெறியவும் வேண்டுமென்று, புறஜாதியாரும் யூதரும் அவர்கள் அதிகாரிகளும் அமளிபண்ணுகையில், | அப் 4:25-29 அப் 17:5 சங் 2:1-3 சங் 83:5 2தீமோ 3:11 |
| 6 | இவர்கள் அதை அறிந்து, லிக்கவோனியா நாட்டிலுள்ள பட்டணங்களாகிய லீஸ்திராவுக்கும் தெர்பைக்கும் அவைகளின் சுற்றுப்புறங்களுக்கும் ஓடிப்போய்; | அப் 9:24 அப் 17:13 அப் 17:14 அப் 23:12-22 2இரா 6:8-12 |
| 7 | அங்கே சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணினார்கள். | அப் 14:21 அப் 8:4 அப் 11:19 அப் 17:2 1தெச 2:2 2தீமோ 4:2 |
| 8 | லீஸ்திராவிலே ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் சப்பாணியாயிருந்து, ஒருபோதும் நடவாமல், கால்கள் வழங்காதவனாய் உட்கார்ந்து, | அப் 4:9 யோவா 5:3 யோவா 5:7 |
| 9 | பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு: | அப் 3:4 |
| 10 | நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்து நில் என்று உரத்த சத்தத்தோடே சொன்னான். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான். | அப் 3:6-8 அப் 9:33 அப் 9:34 ஏசா 35:6 லூக் 7:14 லூக் 13:11-13 யோவா 5:8 யோவா 5:9 யோவா 14:12 |
| 11 | பவுல் செய்ததை ஜனங்கள் கண்டு, தேவர்கள் மனுஷரூபமெடுத்து நம்மிடத்தில் இறங்கிவந்திருக்கிறார்கள் என்று லிக்கவோனியா பாஷையிலே சத்தமிட்டுச் சொல்லி, | அப் 8:10 அப் 12:22 அப் 28:6 |
| 12 | பர்னபாவை யூப்பித்தர் என்றும், பவுல் பிரசங்கத்தை நடத்தினவனானபடியினால் அவனை மெர்க்கூரி என்றும் சொன்னார்கள். | அப் 19:35 |
| 13 | அல்லாமலும் பட்டணத்துக்கு முன்னே இருந்த யூப்பித்தருடைய கோவில் பூஜாசாரி எருதுகளையும் பூமாலைகளையும் வாசலண்டையிலே கொண்டுவந்து, ஜனங்களோடேகூட அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தான். | அப் 10:25 தானி 2:46 |
| 14 | அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்துக்குள்ளே ஓடி, உரத்த சத்தமாய்: | அப் 14:4 1கொரி 9:5 1கொரி 9:6 |
| 15 | மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனுஷர்தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்பவேண்டுமென்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம். | அப் 7:26 அப் 16:30 அப் 27:10 அப் 27:21 அப் 27:25 |
| 16 | சென்ற காலங்களில் அவர் சகல ஜனங்களையும் தங்கள்தங்கள் வழிகளிலே நடக்கவிட்டிருந்தும், | அப் 17:30 சங் 81:12 சங் 147:20 ஓசி 4:17 ரோம 1:21-25 ரோம 1:28-25 எபே 2:12 1பேது 4:3 |
| 17 | அவர் நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் தம்மைக்குறித்துச் சாட்சி விளங்கப்பண்ணாதிருந்ததில்லை என்றார்கள். | அப் 17:27 அப் 17:28 சங் 19:1-4 ரோம 1:19 ரோம 1:20 |
| 18 | இப்படி அவர்கள் சொல்லியும் தங்களுக்கு ஜனங்கள் பலியிடாதபடிக்கு அவர்களை அமர்த்துகிறது அரிதாயிருந்தது. | ஆதி 11:6 ஆதி 19:9 யாத் 32:21-23 எரே 44:16 எரே 44:17 யோவா 6:15 |
| 19 | பின்பு அந்தியோகியாவிலும் இக்கோனியாவிலுமிருந்து சில யூதர்கள் வந்து, ஜனங்களுக்குப் போதனைசெய்து, பவுலைக் கல்லெறிந்து, அவன் மரித்துப்போனானென்று எண்ணி, அவனைப் பட்டணத்துக்கு வெளியிலே இழுத்துக்கொண்டுபோனார்கள். | அப் 13:45 அப் 13:50 அப் 13:51 அப் 17:13 |
| 20 | சீஷர்கள் அவனைச் சூழ்ந்துநிற்கையில், அவன் எழுந்து, பட்டணத்திற்குள் பிரவேசித்தான். மறுநாளில் பர்னபாவுடனேகூடத் தெர்பைக்குப் புறப்பட்டுப்போனான். | அப் 20:9-12 2கொரி 1:9 2கொரி 1:10 2கொரி 6:9 வெளிப் 11:7-12 |
| 21 | அந்தப் பட்டணத்தில் அவர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, அநேகரைச் சீஷராக்கினபின்பு, லீஸ்திராவுக்கும் இக்கோனியாவுக்கும் அந்தியோகியாவுக்கும் திரும்பிவந்து, | மத் 28:19 |
| 22 | சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள். | அப் 15:32 அப் 15:41 அப் 18:23 ஏசா 35:3 1கொரி 1:8 1தெச 3:2-4 1தெச 3:13-4 1பேது 5:10 |
| 23 | அல்லாமலும் அந்தந்தச் சபைகளில் அவர்களுக்கு மூப்பர்களை ஏற்படுத்திவைத்து, உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள் விசுவாசித்துப் பற்றிக்கொண்ட கர்த்தருக்கு அவர்களை ஒப்புவித்தார்கள். | அப் 1:22 மாற் 3:14 1தீமோ 5:22 2தீமோ 2:2 தீத் 1:5 |
| 24 | பின்பு பிசீதியா நாட்டைக் கடந்து, பம்பிலியா நாட்டிற்கு வந்து, | அப் 13:13 அப் 13:14 அப் 15:38 |
| 25 | பெர்கே ஊரில் வசனத்தைப் பிரசங்கித்து, அத்தலியா பட்டணத்திற்குப் போனார்கள். |
| 26 | அங்கே கப்பல் ஏறி, தாங்கள் நிறைவேற்றின கிரியைக்காக தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டுப் புறப்பட்டு அந்தியோகியாவுக்கு வந்தார்கள். | அப் 11:19 அப் 11:26 அப் 13:1 அப் 15:22 அப் 15:30 கலா 2:11 |
| 27 | அவர்கள் அங்கே சேர்ந்தபொழுது சபையைக் கூடிவரச்செய்து, தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையும், அவர் புறஜாதிகளுக்கு விசுவாசத்தின் கதவைத் திறந்ததையும் அறிவித்து, | அப் 15:4-6 அப் 21:20-22 1கொரி 5:4 1கொரி 11:18 1கொரி 14:23 |
| 28 | அங்கே சீஷருடனேகூட அநேகநாள் சஞ்சரித்திருந்தார்கள். | அப் 11:26 அப் 15:35 |