இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சகரியா 2

                   
புத்தகங்களைக் காட்டு
1நான் என் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, இதோ, தன் கையிலே அளவுநூல் பிடித்திருந்த ஒரு புருஷனைக் கண்டேன்.சகரி 1:18
2நீர் எவ்விடத்துக்குப் போகிறீர் என்று கேட்டேன்; அதற்கு அவர்: எருசலேமின் அகலம் இவ்வளவு என்றும் அதின் நீளம் இவ்வளவு என்றும் அறியும்படி அதை அளக்கிறதற்குப் போகிறேன் என்றார்.சகரி 5:10 யோவா 16:5
3இதோ, என்னோடே பேசின தூதன் புறப்பட்டபோது, வேறொரு தூதன் அவரைச் சந்திக்கும்படிப் புறப்பட்டு வந்தான்.சகரி 1:9 சகரி 1:13 சகரி 1:14 சகரி 1:19 சகரி 4:1 சகரி 4:5 சகரி 5:5
4இவனை அவர் நோக்கி: நீ ஓடி இந்த வாலிபனிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால்: எருசலேம் தன் நடுவிலே கூடும் மனுஷரின் திரளினாலும் மிருகஜீவன்களின் திரளினாலும் மதிலில்லாத பட்டணங்கள்போல் வாசஸ்தலமாகும்.எரே 1:6 தானி 1:17 1தீமோ 4:12
5நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.சகரி 9:8 சங் 46:7-11 சங் 48:3 சங் 48:12 ஏசா 4:5 ஏசா 12:6 ஏசா 26:1 ஏசா 26:2 ஏசா 33:21 ஏசா 60:18 ஏசா 60:19
6ஓகோ, நீங்கள் எழும்பி வடதேசத்திலிருந்து ஓடிவாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆகாயத்து நான்கு திசைகளிலும் உங்களை நான் சிதறப்பண்ணினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.ரூத் 4:1 ஏசா 55:1
7பாபிலோன் குமாரத்தியினிடத்தில் குடியிருக்கிற சீயோனே, உன்னை விடுவித்துக்கொள்.ஆதி 19:17 எண் 16:26 எண் 16:34 ஏசா 48:20 ஏசா 52:11 எரே 50:8 எரே 51:6 எரே 51:45 அப் 2:40 வெளிப் 18:4
8பிற்பாடு மகிமையுண்டாகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; உங்களைக் கொள்ளையிட்ட ஜாதிகளிடத்துக்கு என்னை அனுப்பினார்; உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்.சகரி 2:4 சகரி 2:5 சகரி 1:15 சகரி 1:16 ஏசா 60:7-14
9இதோ, நான் என் கையை அவர்களுக்கு விரோதமாக அசைப்பேன்; அதினால் அவர்கள் தங்கள் அடிமைகளுக்குக் கொள்ளையாவார்கள்; அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை அனுப்பினாரென்று அறிவீர்கள்.ஏசா 10:32 ஏசா 11:15 ஏசா 13:2 ஏசா 19:16
10சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.சகரி 9:9 சங் 47:1-9 சங் 98:1-3 ஏசா 12:6 ஏசா 35:10 ஏசா 40:9 ஏசா 42:10 ஏசா 51:11 ஏசா 52:9 ஏசா 52:10 ஏசா 54:1 ஏசா 61:10 ஏசா 65:18 ஏசா 65:19 ஏசா 66:14 எரே 30:19 எரே 31:12 எரே 33:11 செப் 3:14 செப் 3:15 பிலிப் 4:4
11அந்நாளிலே அநேகம் ஜாதிகள் கர்த்தரைச் சேர்ந்து என் ஜனமாவார்கள்; நான் உன் நடுவில் வாசமாயிருப்பேன்; அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை உன்னிடத்தில் அனுப்பினாரென்று அறிவாய்.சகரி 8:20-23 சங் 22:27-30 சங் 68:29-31 சங் 72:8-11 சங் 72:17-11 ஏசா 2:2-5 ஏசா 11:9 ஏசா 11:10 ஏசா 19:24 ஏசா 19:25 ஏசா 42:1-4 ஏசா 45:14 ஏசா 49:6 ஏசா 49:7 ஏசா 49:22 ஏசா 49:23 ஏசா 52:10 ஏசா 60:3-7 ஏசா 66:19 எரே 16:19 மல்கி 1:11 லூக் 2:32 அப் 28:28 1பேது 2:9 1பேது 2:10 வெளிப் 11:15
12கர்த்தர் பரிசுத்த தேசத்திலே யூதாவாகிய தமது பங்கைச் சுதந்தரித்து திரும்பவும் எருசலேமைத் தெரிந்துகொள்வார்.யாத் 19:5 யாத் 19:6 உபா 32:9 சங் 82:8 சங் 135:4 எரே 10:16 எரே 51:19
13மாம்சமான சகலமானபேர்களே, கர்த்தருக்கு முன்பாக மௌனமாயிருங்கள்; அவர் தமது பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து எழுந்தருளினார் என்று சொல் என்றார்.சங் 46:10 ஆபகூ 2:20 செப் 1:7 ரோம 3:19 ரோம 9:20
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.