இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சகரியா 1

                   
புத்தகங்களைக் காட்டு
1தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம் எட்டாம் மாதத்திலே இத்தோவின் மகனான பெரகியாவின் குமாரனாகிய சகரியாவுக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தை:சகரி 1:7 சகரி 7:1 எஸ்றா 4:24 எஸ்றா 6:15 ஆகா 1:1 ஆகா 1:15 ஆகா 2:1 ஆகா 2:10 ஆகா 2:20
2கர்த்தர் உங்கள் பிதாக்களின்மேல் கடுங்கோபமாயிருந்தார்.2இரா 22:16 2இரா 22:17 2இரா 22:19 2இரா 23:26 2நாளா 36:13-20 எஸ்றா 9:6 எஸ்றா 9:7 எஸ்றா 9:13 நெகே 9:26 நெகே 9:27 சங் 60:1 சங் 79:5 சங் 79:6 எரே 44:6 புலம் 1:12-15 புலம் 2:3-5 புலம் 3:42-45 புலம் 5:7 எசே 22:31 தானி 9:11 தானி 9:12 செப் 2:1-3 மத் 23:30-32 அப் 7:52
3ஆகையால் நீ அவர்களை நோக்கி: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: என்னிடத்தில் திரும்புங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது நான் உங்களிடத்துக்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.உபா 4:30 உபா 4:31 உபா 30:2-10 1இரா 8:47 1இரா 8:48 2நாளா 15:4 2நாளா 30:6-9 நெகே 9:28 ஏசா 31:6 ஏசா 55:6 ஏசா 55:7 எரே 3:12-14 எரே 3:22-14 எரே 4:1 எரே 25:5 எரே 35:15 புலம் 3:39-41 எசே 33:11 ஓசி 6:1 ஓசி 14:1 யோவே 2:12 மல்கி 3:7 லூக் 15:18-20 யாக் 4:8-10 எரே 12:15 எரே 29:12-14 எரே 31:18-20 ஓசி 14:4 மீகா 7:19 மீகா 7:20 லூக் 15:21 லூக் 15:22
4உங்கள் பிதாக்களைப் போலிராதேயுங்கள்; முந்தின தீர்க்கதரிசிகள் அவர்களை நோக்கி: உங்கள் பொல்லாத வழிகளையும், உங்கள் பொல்லாத கிரியைகளையும் விட்டுத் திரும்புங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூப்பிட்டார்கள்; ஆனாலும் எனக்குச் செவிகொடாமலும் என்னைக் கவனியாமலும் போனார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.2நாளா 29:6-10 2நாளா 30:7 2நாளா 34:21 எஸ்றா 9:7 நெகே 9:16 சங் 78:8 சங் 106:6 சங் 106:7 எசே 18:14-17 1பேது 1:18
5உங்கள் பிதாக்கள் எங்கே? தீர்க்கதரிசிகள் என்றென்றைக்கும் உயிரோடிருப்பார்களோ?யோபு 14:10-12 சங் 90:10 பிரச 1:4 பிரச 9:1-3 பிரச 12:5 பிரச 12:7 அப் 13:36 எபிரெ 7:23 எபிரெ 7:24 எபிரெ 9:27 2பேது 3:2-4
6இராமற்போனாலும், தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரருக்கு நான் கட்டளையிட்ட என் வார்த்தைகளும் என் தீர்மானங்களும் உங்கள் பிதாக்களிடத்தில் பலிக்கவில்லையோ? எங்கள் வழிகளின்படியேயும், எங்கள் கிரியைகளின்படியேயும் சேனைகளின் கர்த்தர் எங்களுக்குச் செய்ய நிர்ணயித்தபடியே எங்களுக்குச் செய்தாரென்று அவர்கள் திரும்பவந்து, சொன்னதில்லையோ என்று சொல் என்றார்.ஏசா 55:1
7தரியு அரசாண்ட இரண்டாம்வருஷம், சேபாத் மாதமாகிய பதினோராம் மாதம் இருபத்துநாலாந்தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை இத்தோவின் மகனான பெரகியாவின் குமாரன் சகரியா என்னும் தீர்க்கதரிசிக்கு உண்டாயிற்று; அவன் சொன்னது:
8இதோ, இன்று இராத்திரி சிவப்புக்குதிரையின்மேல் ஏறியிருந்த ஒரு புருஷனைக் கண்டேன்; அவர் பள்ளத்தாக்கில் இருக்கிற மிருதுச்செடிகளுக்குள்ளே நின்றார்; அவருக்குப் பின்னாலே சிவப்பும் மங்கின நிறமும் வெண்மையுமான குதிரைகள் இருந்தன.ஆதி 20:3 1இரா 3:5 யோபு 4:13 தானி 2:19 தானி 7:2 தானி 7:13
9அப்பொழுது நான்: என் ஆண்டவரே, இவர்கள் யாரென்று கேட்டேன்; என்னோடே பேசுகிற தூதனானவர்: இவர்கள் யாரென்று நான் உனக்குக் காண்பிப்பேன் என்று சொன்னார்.சகரி 1:19 சகரி 4:4 சகரி 4:11 சகரி 6:4 தானி 7:16 தானி 8:15 வெளிப் 7:13 வெளிப் 7:14
10அப்பொழுது மிருதுச்செடிகளுக்குள்ளே நின்ற அந்தப் புருஷன் பிரதியுத்தரமாக: இவர்கள் பூமியெங்கும் சுற்றிப்பார்க்கக் கர்த்தர் அனுப்பினவர்கள் என்றார்.சகரி 1:8 சகரி 1:11 சகரி 13:7 ஆதி 32:24-31 ஓசி 12:3-5
11பின்பு அவர்கள் மிருதுச்செடிகளுக்குள்ளே நின்ற கர்த்தருடைய தூதனை நோக்கி: நாங்கள் பூமியெங்கும் சுற்றிப்பார்த்தோம்; இதோ, பூமிமுழுவதும் அமைதலும் அமரிக்கையுமாய் இருக்கிறது என்றார்கள்.சகரி 1:8 சகரி 1:10 சங் 68:17 சங் 103:20 சங் 103:21 மத் 13:41 மத் 13:49 மத் 24:30 மத் 24:31 மத் 25:31 2தெச 1:7 வெளிப் 1:1
12அப்பொழுது கர்த்தருடைய தூதன் மறுமொழியாக: சேனைகளின் கர்த்தாவே, இந்த எழுபது வருஷமாய் நீர் கோபங்கொண்டிருக்கிற எருசலேமின்மேலும் யூதா பட்டணங்களின்மேலும் எந்தமட்டும் இரங்காதிருப்பீர் என்று சொல்ல,சகரி 1:8 சகரி 1:10 சகரி 1:11 யாத் 23:20-23 ஏசா 63:9 எபிரெ 7:25
13அப்பொழுது கர்த்தர், என்னோடே பேசின தூதனுக்கு நல்வார்த்தைகளையும் ஆறுதலான வார்த்தைகளையும் பிரதியுத்தரமாகச் சொன்னார்.சகரி 1:14-16 சகரி 2:4-12 சகரி 8:2-8 சகரி 8:19-8 ஏசா 40:1 ஏசா 40:2 எரே 29:10 எரே 30:10-22 எரே 31:3-14 ஆமோ 9:11-15 செப் 3:14-20
14அப்பொழுது என்னோடே பேசின தூதன் என்னை நோக்கி: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நான் எருசலேமுக்காகவும் சீயோனுக்காகவும் மகா வைராக்கியம் கொண்டிருக்கிறேன்.சகரி 1:9 சகரி 1:13 சகரி 2:3 சகரி 2:4 சகரி 4:1
15நான் கொஞ்சங் கோபங்கொண்டிருந்தபோது அவர்கள் தங்கள் கேட்டை அதிகரிக்கத் தேடினபடியினால், சுகமாய் வாழுகிற புறஜாதிகள்பேரில் நான் கடுங்கோபங்கொண்டேன்.சகரி 1:2 சகரி 1:11 ஏசா 47:7-9 எரே 48:11-13 ஆமோ 6:1 வெளிப் 18:7 வெளிப் 18:8
16ஆகையால் மனஉருக்கத்தோடே எருசலேமினிடத்தில் திரும்பினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் ஆலயம் அதிலே கட்டப்படும்; எருசலேமின்மேல் அளவுநூல் பிடிக்கப்படும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூறு என்றார்.சகரி 2:10 சகரி 2:11 சகரி 8:3 ஏசா 12:1 ஏசா 54:8-10 எரே 31:22-25 எரே 33:10-12 எசே 37:24-28 எசே 39:25-29 எசே 48:35
17இன்னும் என் பட்டணங்கள் நன்மையினால் பரம்பியிருக்கும்; இன்னும் கர்த்தர் சீயோனைத் தேற்றரவு பண்ணுவார்; இன்னும் எருசலேமைத்தெரிந்துகொள்ளுவார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று பின்னும் கூறு என்றார்.நெகே 11:3 நெகே 11:20 சங் 69:35 ஏசா 44:26 ஏசா 61:4-6 எரே 31:23 எரே 31:24 எரே 32:43 எரே 32:44 எரே 33:13 எசே 36:10 எசே 36:11 எசே 36:33 ஆமோ 9:14 ஒபதி 1:20
18நான் என் கண்களை ஏறெடுத்துப்பார்த்தபோது, இதோ, நாலு கொம்புகளைக் கண்டேன்.சகரி 2:1 சகரி 5:1 சகரி 5:5 சகரி 5:9 யோசு 5:13 தானி 8:3
19அவைகள் என்னவென்று என்னோடே பேசின தூதனைக்கேட்டேன்; அதற்கு அவர்: இவைகள் யூதாவையும் இஸ்ரவேலையும் எருசலேமையும் சிதறடித்த கொம்புகள் என்றார்.சகரி 1:9 சகரி 1:21 சகரி 2:2 சகரி 4:11-14 வெளிப் 7:13 வெளிப் 7:14
20பின்பு கர்த்தர் எனக்கு நாலு தொழிலாளிகளைக் காண்பித்தார்.சகரி 9:12-16 சகரி 10:3-5 சகரி 12:2-6 உபா 33:25 நியா 11:16 நியா 11:18 1சாமு 12:11 நெகே 9:27 ஏசா 54:15-17 ஒபதி 1:21 மீகா 5:5 மீகா 5:6 மீகா 5:8 மீகா 5:9
21இவர்கள் என்ன செய்ய வருகிறார்களென்று கேட்டேன்; அதற்கு அவர்: ஒருவனும் தன் தலையை ஏறெடுக்கக்கூடாதபடி அந்தக் கொம்புகள் யூதாவைச் சிதறடித்ததே, அவைகளுக்குப் பயமுறுத்துகிறதற்கும், யூதாவின் தேசத்தைப் பாழாக்கத் தங்கள் கொம்பை எடுத்த ஜாதிகளுடைய கொம்புகளை விழத்தள்ளுகிறதற்கும் இவர்கள் வந்தார்கள் என்றார்.சகரி 1:19 தானி 12:7
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.