இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சகரியா 13

                   
புத்தகங்களைக் காட்டு
1அந்நாளிலே பாவத்தையும் அழுக்கையும் நீக்க, தாவீதின் குடும்பத்தாருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் திறக்கப்பட்ட ஒரு ஊற்று உண்டாயிருக்கும்.சகரி 12:3 சகரி 12:8 சகரி 12:11 யோபு 9:30 யோபு 9:31 சங் 51:2 சங் 51:7 ஏசா 1:16-18 எசே 36:25 யோவா 1:29 யோவா 19:34 யோவா 19:35 1கொரி 6:11 எபே 5:25-27 தீத் 3:5-7 எபிரெ 9:13 எபிரெ 9:14 1யோவா 1:7 1யோவா 5:6 1பேது 1:19 வெளிப் 1:5 வெளிப் 1:6 வெளிப் 7:13 வெளிப் 7:14
2அந்நாளிலே நான் விக்கிரகங்களின்பேரும் தேசத்தில் இராதபடிக்கு அழிப்பேன்; அவைகள் இனி நினைக்கப்படுவதில்லை; தரிசனம் சொல்லுகிறவர்களையும், அசுத்த ஆவியையும் தேசத்திலிருந்து போய்விடவும்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.யாத் 22:13 உபா 12:3 யோசு 23:7 சங் 16:4 ஏசா 2:18 ஏசா 2:20 எசே 30:13 எசே 36:25 எசே 37:23 ஓசி 2:17 ஓசி 14:8 மீகா 5:12-14 செப் 1:3 செப் 1:4 செப் 2:11
3இனி ஒருவன் தரிசனம் சொன்னால், அவனைப்பெற்ற அவன் தகப்பனும் அவன் தாயும் அவனை நோக்கி: நீ கர்த்தருடைய நாமத்தைக்கொண்டு பொய்பேசுகிறபடியால் நீ உயிரோடிருக்கப்படாது என்று சொல்லி, அவனைப்பெற்ற அவன் தகப்பனும் அவன் தாயும் அவன் தரிசனம் சொல்லும்போது அவனைக் குத்திப்போடுவார்கள்.யாத் 32:27 யாத் 32:28 உபா 13:6-11 உபா 18:20 உபா 33:9 மத் 10:37 லூக் 14:26 2கொரி 5:16
4அந்நாளிலே தரிசனம் சொல்லுகிற அவனவன் தான் சொன்ன தரிசனத்தினால் வெட்கப்பட்டு, பொய் சொல்லும்படிக்கு இனி மயிர்ப்போர்வையைப் போர்த்துக்கொள்ளாமல்,எரே 2:26 மீகா 3:6 மீகா 3:7
5நான் தரிசனம் சொல்லுகிறவன் அல்ல, நான் நிலத்தைப் பயிரிடுகிறவன்; என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை வேலைகொண்டான் என்பான்.ஆமோ 7:14 அப் 19:17-20
6அப்பொழுது ஒருவன் அவனை நோக்கி: உன் கைகளில் இருக்கிற இந்த வடுக்கள் ஏதென்று கேட்டால், என் சிநேகிதரின் வீட்டிலே காயப்பட்டதினால் உண்டானவைகள் என்பான்.1இரா 18:28 வெளிப் 13:16 வெளிப் 13:17 வெளிப் 14:11
7பட்டயமே, என் மேய்ப்பன்மேலும் என் தோழனாகிய புருஷன்மேலும் எழும்பு என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; மேய்ப்பனை வெட்டு, அப்பொழுது ஆடுகள் சிதறிப்போகும்; ஆனாலும் என் கரத்தைச் சிறுவர்மேல் திரும்பவைப்பேன்.உபா 32:41 உபா 32:42 ஏசா 27:1 எரே 47:6 எசே 21:4 எசே 21:5 எசே 21:9 எசே 21:10 எசே 21:28
8தேசமெங்கும் சம்பவிக்கும் காரியம் என்னவென்றால், அதில் இருக்கிற இரண்டு பங்கு மனுஷர் சங்கரிக்கப்பட்டு மாண்டுபோவார்கள்; மூன்றாம் பங்கோ அதில் மீதியாயிருக்கும்.சகரி 11:6-9 உபா 28:49-68 ஏசா 65:12-15 ஏசா 66:4-6 ஏசா 66:24-6 எசே 5:2-4 எசே 5:12-4 தானி 9:27 மல்கி 3:1 மல்கி 3:2 மல்கி 3:5 மல்கி 4:1-3 மத் 3:10-12 மத் 21:43 மத் 21:44 மத் 22:7 மத் 23:35-37 மத் 24:21 லூக் 19:41-44 லூக் 20:16-18 லூக் 21:20-24 லூக் 23:28-30 1தெச 2:15 1தெச 2:16 வெளிப் 8:7-12 வெளிப் 16:19
9அந்த மூன்றாம் பங்கை நான் அக்கினிக்குட்படப்பண்ணி, வெள்ளியை உருக்குகிறதுபோல அவர்களை உருக்கி, பொன்னைப் புடமிடுகிறதுபோல அவர்களைப் புடமிடுவேன்; அவர்கள் என் நாமத்தைத் தொழுதுகொள்வார்கள்; நான் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்பேன்; இது என் ஜனமென்று நான் சொல்லுவேன், கர்த்தர் என் தேவன் என்று அவர்கள் சொல்லுவார்கள்.சங் 66:10-12 ஏசா 43:2 1கொரி 3:11-13 1பேது 4:12
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.